Wednesday 9 September 2009

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், ராகுல்காந்தியை எதிர்த்து சுவரொட்டி! காவல்த்துறை நள்ளிரவில் அகற்றம்

விருதுநகர், நாகர்கோயில்இ திருநெல்வேலில், மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் இராகுல் காந்திக்கு எதிராகவும், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
அதை அப்பகுதி காவல்த்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இதனிடையே நேற்று இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.




சிங்களவன் கொட்டமடக்க எம் தலைவர் பெயர் சொல்லி புறப்படுவோம்.


என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா......? எனது குரல் புரிகிறதா..?

வணக்கம் எனது இரத்த, இன, மொழி பேசுகின்ற உறவுகளே. இங்கு எங்களை விட்டு தூரப் போய்க் கொண்டே இருக்கிறீர்களோ? தெரியவில்லை உங்களைப் பிணைத்திருக்கும் பாசக்கயிறுகளையா?

அல்லது உங்களைச் சுற்றி ஏற்பட்ட மாய வலைகளையா?

என்பது எங்களுக்கு விளங்கவில்லை என் தமிழ் உறவுகளே.
உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.


எதிர்காலம் பற்றிய பல கனவுகளுடன் சிறகடித்த எமது தேசியம் நசுக்கப்பட்டு இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கையில் நீங்கள் எங்கு நோக்கி பயணப்படுகிறீர்கள் என்பதில் ஒரு தெளிவின்மை காணப்படுகின்றது. எங்கே எங்கள் மாவீரர்களையும் வீரர்களையும் தேசத்தின் விடுதலைக்காக உழைத்த இன்னோரன்னரையும் பழித்துரைத்த புத்திஜீவிகளே வணக்கம்.






இப்போ நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறீர்கள்?

உங்களை நினைக்கும் போது சில சந்தர்ப்பங்களில் எரிச்சல் தான் வருகிறது. உங்களை நீங்களே புத்திஜீவிகள் என்றழைத்துக் கொண்டு உங்களுக்கு நீங்களே அடைமொழிகளையும் பட்டங்களையும் பெற்று சமுதாயத்தில் உங்களை மனிதர்களாக நிலை நிறுத்த முயற்சி செய்யும் பெருமக்களே! உங்களை ஒரு கணம் வணங்குகின்றேன்.

முடிந்தால் என் தாய்நாட்டுக்காக எதையாவது செய்யுங்கள் அல்லது வாய்மூடி அமைதியாகி விடுங்கள். உங்களைப் போன்றோரால் தான் எங்கள் தாய்த்திருநாட்டுக்கு இந்த நிலை. உங்கள் மேதாவித்தனத்தாலும், கோழைத் தனத்தாலும் என் தாய் நாட்டை இன்னோரன்னவனுக்கு தாரை வார்க்க நீங்கள் எடுக்கும் பெரும் முயற்சி அப்பட்டமாக தெரிகிறது. அதனைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கமுடியாது.

உங்களால் வெறும் அரசியல் மட்டும் தான் செய்யமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கிடையில் தலைமைக்கான போட்டிகள். பண ஆசைகள் காட்டி கொடுப்புகள் எனத் தொடரும் இழுபறிகள்.

நாங்கள் இழந்தது போதும் உங்களால் தான் எங்களது கட்டுப்பாட்டு நிலங்களை நாம் இழந்தோம். அந்த சந்தர்ப்பத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.


தற்போதும் நீங்கள் நல்லவற்றை செய்வதாக எண்ணிப் பிறநாடுகளுக்கு எங்களைப் பிடிக்காமல் போக போராட்டம் தான் காரணம் என தப்பான அபிப்பிராயங்களை மீண்டும் நிறுவ முயற்சி செய்கிறீர்கள். உங்களிடம் கேட்பது ஒன்று தான்.

போராட்டம் என்பது வெளிநாடுகளில் வசதியாக வாழ்ந்து கொண்டு கூட்டங்கள், ஒன்று கூடல், விழாக்கள் என நடத்துவதல்ல. அல்லது வெளிநாடுகளில் வாழும் மக்களுக்காக மட்டுமல்ல. தாயகத்தில் வாழும் எம் இரத்த உறவுகளுக்கும், தாய்நாட்டைப் பெற்றுக் கொள்ளவும் தான் ஆயுதம் தூக்கினோம். அதிலிருந்து நீங்கள் தூரப் போய் இருக்கலாம். ஆனால் விலகி இருக்க முடியாது. எப்படியும் ஒரு வகையில் நீங்கள் பிணைக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

அல்லது நீங்கள் அகிம்சை வழி என்று சொல்லிக் கொண்டிருக்க, உங்களுக்கு ஆட்டிக் அல்லது அந்தாட்டிக்காவில் கூட ஒரு சிறு குடிசை கூட இந்த உலகு உங்களுக்கு வழங்காது. நாங்கள் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டியவர்களல்ல. எங்களுக்கான நாட்டுக்காக நாங்கள் உரிமையுடன் உணர்வுடன் போராடுவோம் இறுதிவரை.

இறுதிவரை என்பது தனி ஒருவனின் வீர மரணம் அல்ல. இந்த உலகின் மரணம் மட்டும் இந்தப் பூமி வாழும் வரை எங்கள் நிலங்களை நாங்கள் யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாது. எனவே எமது மக்களுக்கு இப்படியான சல சலப்புகளை ஏற்படுத்தி அவர்களை பிளவு படுத்தி சிங்களவனின் இன வெறி அழிப்பிற்கு துணை போகாதீர்கள். தனி ஒருவன் என்ற பதத்தை வைத்து தப்பான அபிப்பிராயத்தை வளர்க்க வேண்டாம்.

தாயகப் போரையும் சம நேரத்தில் கொண்டு செல்வதால் மட்டுமே எங்களின் உரிமையை நாள்கள் பெற்று சரியான இடத்தில் சரியான விதத்தில் எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து வலுச் சேர்க்க வேண்டுமே ஒழிய காலை வாராதீர்கள். சொந்த நாட்டுப் பிரச்சனையைவைத்து அரசியல் ஆதாயமோ அல்லது பணத்தையோ சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள்.


களத்தில் நிற்கும் போராளிகளுக்கு வலுச்சேருங்கள். அவர்களுக்கு பின்பலமாக நீங்கள் இருந்து செயற்பட வேண்டும் என்பதே எங்கள் அவா.

இது வரை காலமும் நீங்கள் வளங்கிய ஆதரவையும் தனி நாட்டுக் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க உங்களின் ஆத்மபலம் எங்களுக்கு வேண்டும்.

அதனைத் தொடர்ந்தும் எங்களுக்கு நல்குவீர்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம்.

உங்களில் ஒரு பகுதியினர் மட்டும் கூட்டம் கூடி பேசுவதால் பயனில்லை. எல்லாத் தமிழ் உறவுகளையும் ஒன்று சேருங்கள். எங்களை எல்லா தமிழர்களையும் ஒன்றிணைக்கும் வண்ணம் அமைப்புக்களையும் சங்கங்களையும் அந்தந்த நாடுகளிலேயே அமையுங்கள்.

மதத்தால் நிறத்தால் வேறுபட்டு இருக்கம் எமது சமூக கட்டமைப்பை தமிழீழம் என்ற ஒன்றுக்காக தனி நாட்டுக்கான கட்டமைப்புக்களை கட்டும் விதமாக அமையுங்கள். அவை மதங்களைத் தாண்டி எமது இனத்திற்கான சேவையைப் புரியட்டும். அதற்கு உதவி செய்யுங்கள். உருவாக்குங்கள். அந்த உன்னதமான ஓரணிதிரண்ட புலம் பெயர் தாயக மக்களின் கோரிக்கைகளை சர்வதேசத்தின் முன் வையுங்கள். உங்களின் உறுதியான நிலைப்பாட்டை சர்வதேசம் எங்கும் பிரச்சாரப்படுத்துங்கள்.

வெறுமனே நாங்கள் யூதர்களைப் போல, எனச் சொல்லி நப்பாசை படாதீர்கள். யூதர்களை இந்த உலகில் இருந்து பிரித்துப் பார்க்க முடியா வண்ணம் அவர்கள் ஒன்றித்து போய் இருக்கிறார்கள். நாங்கள் அப்படி இருக்கிறோமா? மற்ற சமூகங்கள், நாடுகள் எங்களில் தங்கி நிற்கின்றனவா? என்பதை யோசியுங்கள். அப்படி ஒரு உயர்ந்த நிலையில் தமிழன் இருக்கும் போது, இந்த உலக பொருளாதாரம் சரிந்துவிடும் என்னும் நிலை வரும் போது தான் எங்களை இந்த உலகம் கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்படும்;.

அதற்காக அந்தந்த நாடுகளில் நீங்கள் தனிப்பட்டு அல்லாமல் எல்லாமே மக்கள் சொத்துக்களாக கூட்டிணைந்து விமான சேவை, கப்பற்துறை, தொலை தொடர்புத் துறை தொலைக்காட்சி, வானொலிப் பணிகள் என இன்னோரன்ன பணிகளைக் கட்டியெழுப்புங்கள். எங்களுக்கான நிலங்கள் மீட்கப்படும் போது அவற்றை தாய் நாட்டுக்கு கொண்டு வர முடியும். அப்படி ஒனறிணையும் பட்சத்தில் எங்களது நிதி எங்களிடம் இருக்கும்; அவற்றை யாரும் சுரண்டி விட முடியாது. மக்களின் நிதி மக்களிடம் இருக்கும். அவற்றை வைத்து வேண்டுமானால் நாங்கள் சந்திரனையும் விலைக்கு வாங்கலாம். மற்றவர் எல்லாம் அதன் பின் தூசு தான் எமக்கு.

அதை விட்டு வெறுமனே தமிழர்களை மட்டும் குறிவைத்து உங்கள் வியாபாரங்களை பெருக்கி அதை வைத்து சீரில்லாத இலங்கையில் முதலீட்டையோ அல்லது உங்கள் வீட்டு வாசலையோ கட்டி கொண்டாடுங்கள். யுத்த பூமியில் உங்கள் ஒரு சேமிப்பையும் காண முடியாது. உங்கள் வாழ் நான் பூராகவும் உழைத்ததும் உண்டதும் தான் மிச்சமாக இருக்கும்;. வேறெதுவும் மிச்சமிருக்காது. எனவே எங்கள் பாரம்பரீயத்துடன், எங்களின் சந்ததிக்காக எதையாவது அறிவு பூர்வமாக செய்யுங்கள். அது எல்லா வழிகளிலும் எல்லா இன மக்களையும் கவரும். அல்லது சார்ந்து இருக்கும் வண்ணம் அமையுங்கள். எங்களுக்கென தனி பரப்புரையை செய்யுங்கள். அதையெல்லா ஊடகங்கள் வாயிலாகவும் செய்ய முயற்சியுங்கள். அதன் மூலம் நீங்கள் அடைய விரும்பும் இலக்கை எட்டலாம்.

அதை விட்டுவிட்டு ஒவ்வொருவரும் தனித்து மக்களைப் பிரித்து என்ன செய்கிறீர்கள். யாருக்காக செய்கிறீர்கள் என்பதை யோசித்து செயற்படுங்கள். இதற்கு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் விதிவிலக்காக முடியாது. மக்களின் துயர் துடைக்க வேண்டிய வேலைகளை உடனடியாக செய்யுங்கள். பருவ மழை பெய்ய முன்பே நாளுக்கு 100பேர் வீதம் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மரண சடங்குகளுக்கா நீங்கள் உதவி செய்யப்போகிறீர்கள்?

நாளுக்கு நாள் காணாமல் போகும் மக்களின் தொகை சிங்களவனுக்கு மட்டுமே தெரியும். குடும்பங்களை விட்டுப் பிரிந்து இருக்கும் மக்களின் தொகையை கூட்டிப்பாருங்கள். விளங்கும். எவ்வளவு மக்களை நாம் இழந்திருக்கிறோம் என்பதை, அவர்களிடம் கணக்குகள் இருக்கின்றனவா என்பது கூட கேள்விக் குறிதான். அப்படி இருப்பின் ஏன் சர்வதேச செஞ்சிலுவைகள் கூட இத்தனை ஆயிரம் உறவுகளைப் பற்றிப் பதிவைக் கூட இணைத்து வைக்க முடியவில்லை. எல்லா முகாம்களும் ஒரு சில கிலோமீற்றர் பரப்பளவுக்குள் தான் காணப்படுகின்றன?

வன்னியில் 480,000 மக்கள் வாழ்ந்தார்கள். இன்று 330,000 கூட கணக்கிலில்லை. அதிலும் பல குளறு படிகள். மிகுதி மக்கள் எங்கே என்பதை யாரும் இது வரை வாய்திறக்கவில்லை. ஏன்? சர்வதேசத்தின் கதவுகளில் தட்டவேண்டியது யார்?

தமிழ் எம்பிக்கள் வாய் கிழியக் கத்துவதுடன் சரி. அவர்களே என்ன செய்வது என்ற நிலை அல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த வழியை பின் பற்றுவது என்பதில் அவர்களுக்குள் நிறைய ஐயப்பாடுகள் எழுகின்றன போலும். எனவே இதற்கான தீர்வினை நீங்களே எடுக்க வேண்டும் எங்களுக்கான எந்த அரைகுறை தீர்வையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இவ்வளவு காலமும் போராடினோம். அதே போல் அந்த மக்களின் சொந்த நிலமல்லாத காட்டு நிலங்களில் அவர்களைக் குடியேற்றுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் தமிழர் நிலங்களை, சிங்களவன் சூறையாடுவதற்கு நாங்களே வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்களாவோம்.


எனவே அவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதற்காக பாடுபடுங்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிது யார்? ஐ. நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ, சீனாவோ, ரஷ்யாவோ இல்லை. புலம் பெயர் வாழ் மக்கள் நீங்கள் தானே!


அதை விட்டு விட்டு களியாட்டங்களையும் நிகழ்வுகளையும் நடத்துவதால் யாருக்கு லாபம்?


கைது செய்யப்பட்ட போராளிகளின் பட்டடியல் 20,000 தை தாண்டிவிடும் போல் உள்ளது. ஆனால் உண்மையை அறிய கூடக் உங்களாலோ சர்வதேசத்தாலோ முடியவில்லை. அதற்கு நீங்கள் வலுச் சேர்கலாமா?


எங்கள் மக்கள் என்ன ஆடு மாடுகளா?


சிங்களவன் காலால் உதைத்து விரட்ட, வெறி கொண்ட வேங்கைக் கூட்டம் கைகால்கள் கட்டப்பட்டு சிங்களவன் கால்பட்டு சாவதா?


நிராயுதபாணியாக துப்பாக்கிக் குண்டுகளுக்கு நாளுக்கு நாள் இரையாக நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கிறீர்கள்.

நாங்கள் சீறும் வேங்கைக் கூட்டம் என்பதை நாங்கள் நரூபித்திருக்கிறோம். இருந்தும் ஏமாந்தோம். அதற்கு நீங்களும் ஒரு காரணம் எல்லோரையும் நம்பி எங்கள் உறவுகளை நட்டாற்றில் விட்டுவிட்டீர்களே?


எங்களது கைகளையும் கால்களையும் அவிழ்த்து விட்டு, எந்த சிங்களவனாவது எங்களுக்கு எதிரே துப்பாக்கியை நீட்டட்டும் பார்க்கலம்;.

எமது மக்கள் போரில் வீழ்ந்து கொண்டிருக்க உணர்வுள்ள எல்லா மக்களையும் பிழையாக வழி நடாத்தினீர்களோ என்பது பெருத்த சந்தேகம்.

உண்மையில் நீங்கள் எல்லோரும் பொம்மைகளோ என்ற சந்தேகம்


தற்போதய நிலையில் பலர் பல நாடுகளுக்கு பொம்மைகள் தான். ஏனெனில் சுயமாக தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை.

எனது கடந்த மடலுக்கு பல அபிப்பிரயா பேதங்கள் எழுந்தன. இருந்தும் அதற்கு நாம் மதிப்பளித்தோம். ஏனெனில் சில நேரங்களில் எங்களின் முடிவுகள் தவறாக போய்விடலாம்; என்பதை அமைதியாக உங்களின் கபடி ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் ஆட்டம் என்னவோ ரசிக்கும் படி அமையவில்லை என்பது உண்மை. உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் பல விடயத்தைப் போட்டு உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.


உங்களுக்கு அதீத தெளிவை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனாலும் உங்களை பிழையாக பிறர் வழிடத்தா வண்ணம் காப்பாற்ற, போராளிகளாகிய எமக்கு கட்டாய கடமையாக இருக்கிறது இப்போ. எல்லாம் பரகசியமாக தான் இருக்கிறது. அதை வைத்தத் தான் இலங்கை இராணுவம் தங்கள் நிகழ்ச்சி நிரலை அமைத்து இருக்கிறது. ஆனாலும் எங்கள் கட்டமைப்புகளை சிதைக்க இந்த சின்னப்பயல் சிங்களவனால் முடியாது என்பதை நீங்கள் புரிந்த கொள்ளவேண்டும்;.

மாற்றுக்கருத்துடையவர்களே உங்களை இரு கரம் நீட்டி அழைக்கிறோம்.


உண்மையில் நீங்கள் ஈழம் என்ற தாய் நாட்டை நேசிக்கும் ஒரவராக இருந்தால் உங்கள் அபிப்பிராய பேதங்களை மறந்து சிதறடிக்கும் சிந்தனை கொண்ட சிங்களவனை சிதறடிக்க ஒன்றிணையுங்கள். அது உங்களால் முடியும்.



உங்கள் சக்தியை நீங்களே துர்ப்பிரயோகம் செய்கிறீர்கள் என்பதை கொஞ்சம் யோசியுங்கள். புரிவது போலிருந்தால் உங்கள் கைகளையும் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த நவீன உலகம் நிச்சயம் எங்களை ஏற்றுக் கொள்ளும்.

எங்களுக்கு என்ன எனப் பருவகால விடுமுறையை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கும் பலரை பல முகங்களில் காணலாம். உண்மையில் உங்களுக்காக வெட்கப்டவோ வேதனைப்படவோ முடியவில்லை. ஏனெனில் நீங்கள் உங்களின் உண்மையான சுய முகங்களை சமுதாயத்திற்கு இப்போதுதான் காட்டுகிறீர்கள்.


இப்படி எங்களுக்கு ஒரு வீழ்ச்சி இல்லாவிட்டால் உங்களை போன்ற பச்சோந்திகளை நிச்சயம் அடையாளம் காண்பது என்பது கொஞ்சம் சிரமமான காரியம். கும்பலில் கோவிந்தா போட்டு விட்டு நீங்கள் உங்கள் பாட்டில் போய்விட்டீர்கள். ஆனால் இப்போ எல்லா முகங்களையும் அடையாளம் காணமுடியுமென நினைக்கின்றேன்.

தற்போது ஈழத்தில் நாலாங் கட்ட ஈழப் போர் தோல்வியில் முடிந்து இருக்கிறதொழிய நீங்கள் எண்ணுகிறது போல் அல்லாமல் மீண்டும் பெரும் போர் தொடரப் போகிறது. அதை நீங்கள் காணத்தான் போகிறீர்கள். அதில் நாம் தோற்க முடியாது ஏனெனில் நாம் வெற்றிப் பரம் பரை. முதுகில் குத்துவது சிங்களவனுக்கு பழக்கமாகிப் போயிருக்கலாம். அதற்காக நாம் நெடுக முதுகைக் காட்டமுடியாது.

தற்போது எங்கள் படையணிகள் மரபு நிலையிலிருந்து கெரில்லா நிலைக்க மாற்றம் பெற்ற இருக்கின்றனவே ஒழிய எங்களை அழிப்பதென்பது முடியாத காரியம்; எனவே எங்கள் தலைமையின் தொடர்புகள் அற்று இருப்போரும், குழப்பத்தில் இருப்போரும் நீங்கள் சுய கட்டுப்பாட்டுடனும் ஓர் திடமான நம்பிக்கையுடனும் போராட்டத்தை தொடருங்கள். உங்களுக்கான இலக்கை தீர்மானித்து அதனை வெற்றிகொள்ள உங்களுக்கேற்ற வழிகளை பின்படுத்துங்கள்.

நீங்களும் உடைந்து எங்களின் அணிகளையும் சிதைக்காமல் செயற்படுங்கள். எதிரிக்கு இனி நீங்கள் சிம்மசொப்பனமான இருக்கப் போகிறீர்கள். நாளடைவில் நீங்கள் எங்கள் எல்லோருடனும் இணையும் காலம் வரும்;. எனவே தாக்கிவிட்டுத் தப்பிக்கும் கெரில்லா முறையை பின்பற்றுங்கள். அதை இந்த சிங்களவன் எந்த நாட்டைவைத்து அடக்குவானென்று பார்க்கலாம்;. எனவே நீங்கள் எல்லோரும் கெரில்லாவாக மாற வேண்டிய சந்தர்ப்பம் இது என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்பகிறேன்.



பிரபலமான எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூடி புலிகளைத் தோற்கடித்த பின் அல்லது அழித்தபின் என்ற தோரணைகளில் தங்கள் கட்டுரைகளை வரைகிறார்கள். அவர்களுக்கு காலம் சிறந்த பாடத்தைக் கொடுக்கும். புலிகளை அழிக்கவோ தோற்கடிக்கவோ இந்த உலகால் கூட முடியாது.

தோற்பது என்பதைக் கூட நாங்கள் தான் தீர்மானிக்கமுடிமே ஒழிய எதிரி அல்ல. போரில் நாங்கள் தோற்று இருந்தால் இன்று அல்ல என்றும் தமிழர்களுக்கு என்று விடிவு காலம் பிறக்கப்போவதில்லை. அந்த விடிவை சுபீட்சமான வாழ்வை தமிழருக்கு புலிகள் கொடுத்தார்கள். மீண்டும் கொடுப்பார்கள். அதற்கான காலத்தை நாங்கள் ஒன்றிணைந்து கனியவைப்போம்.

சென்ற போரில் எல்லாவற்றையும் இழந்து வெறுமையாக முகாம்களில் வாழும் மக்களை எவ்வளவு சுலபமாக மறந்து விட்டீர்கள் என்பது பெரும் வேதனை. வெளியில் இருக்கும்; எந்த ஒரு தமிழனையும் விட உண்மையான தமிழர்கள் என நெஞ்சு நிமிர்த்திக் கூறிய பெருமையை பெற்றார்கள்.

அந்த மக்களுக்கு. “எனது தாய்மார்களே! என்னருமைத் தந்தைகளே! உடன் பிறவா எனது சகோதரர்களே! சகோதரிகளே! வீரர்களே! என்வீராங்களைகளே! உங்களை ஆரத்தழுவ முடியவில்லை. என்பதை எண்ணி எனது நெஞ்சம் வெடித்துவிடும்.


உங்கள் தலை வணங்கா குணத்திற்காக மீண்டும் மீண்டும் பிறந்தாலும் உஙகளுக்காக இந்த உலகத்தையே எதிர்த்தாகினும் போரிட்டு சாவோம். அதுவே உங்களுக்காக நாங்கள் தருகின்ற உன்னதமான பரிசு. அது ஈழம் என்ற ஒன்று தான். இது உங்களுக்கு விரைவில் கிடைக்க எங்களுக்கு மாவீரர் உதவி புரிவார்;


உலகெல்லாம் வாழும் தமிழர்களே நீங்கள் தமிழர்களாக இருந்தால் அந்த மக்களுக்கு உணவு உடை உறையுளைக் கொடுங்கள். அதை விட்டு உங்கள் உறவுகளை மறக்கும் அளவிற்கு உங்கள் மனங்கள் என்ன மாசடைந்து விட்டனவா?

கற்கள் கூட பெறுவதைத் திரும்பக் கொடுக்குமாம். உங்களால் ஏன் முடியவில்லை. ஈழப்பிரச்சனையைக் காரணம் காட்டி வைத்து பிழைப்பாயும் பாதுகாப்பாயும் தேடிய எனது உறவுகளே இயன்ற மட்டும் நீங்கள் வசதியான வாழ்வில் கட்டுண்டது எப்படி?

உங்கள் தாய்வயிற்றை உங்களால் மறந்து விடத்தான் முடியுமா? எனவே அந்த மக்களின் வாழ்விற்கு வாழ்வாதாரத்திற்கு சொந்த நிலங்களில் குடியேற உண்மையாக உழையுங்கள். அல்லது வணங்காமண் கப்பலில் வந்த பொருட்களை வைத்து அரசியல் செய்யும் சிங்களவர்களுக்கு முண்டு கொடுக்காதீர்கள். இதை வைத்து அரசியல் செய்யும் தென்னிந்திய ஆட்சியாளர்களின் அன்புப் பரிசுகள் அந்த மக்களைச் சென்று அடைவதில்லை.

அவை பத்திரிகை விளம்பரங்களைத் தான் அதிகம் ஆக்கிரமிக்கின்றன. சில நேரம் சிங்களவனின் கோரப்பசியை சில நேரம் ஆற்றலாம். எனவே உங்கள் மக்களை நீங்கள் கைதூக்கி விடுங்கள். அவற்றை நீங்கள் எந்த வழியில் செய்தாலும் அவை அவர்களை அடைவதை உறுதிப்படுத்துங்கள்.

வணங்காமண். மக்களை சென்றடைய செஞ்சிலுவை சங்கம் முட்டுக்கல்லாக இருப்பதாக தகவல். எனவே நாங்கள் எங்ளை நம்புவோம். பிறரை தூர ஒதுக்குவோம்.


அது துறைமுகத்தில் கிடப்பது பான்கிமூனுக்கு கூடத் தெரியவில்லை. இன்னமும். மாயை உலகைப் பின்பற்றாதீர்கள். எங்கள் உணவுகளை கைப்பற்றிய இந்தியா அதை இதுவரை எங்கள் மக்களிடம் சேர்க்கவும் இல்லை. அதற்கான தனது நல்லெண்ணத்தை கூட வாய்திறந்து செய்ய முன் வரவில்லை.

ஆனால் இந்தியாவிலிருந்து அவர்கள் சாப்பாடு அனுப்பப்போகிறார்கள் என்பது மட்டும் விளம்பரமாக சொல்ல நா கூசவில்லை. வன்னிக்கு 200,000 மக்களுக்க 2,000பேர் தான் என சொல்லி உணவு அனுப்பும் போது இந்தியாவும் சர்வதேசமும் ஆமாப்போட்டவர்கள்தான். ஏன் தற்போதும் முகாம்களுக்கு மேலே ஹெலியில் பறக்கும் போது கூட அங்கு சாக்கடைகளும் வாய்க்கால்களும் நாற்றமெடுக்குமே. அது கூட அவர்களுக்கு மணக்கவில்லை போல் தெரிகிறது. ஏனெனில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் அறிந்து கொள்ளும் மார்க்கமாகவில்லை.

அறிந்தும் அறியாதவர்களாக நடிப்பவர்களை எப்படிப் பின்பற்றுவார்கள். திறக்காத கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்காதீர்கள். உடைத்துத் திறவுங்கள். சரியான நேரத்தில் சரியான எதுவும் சரியாக எதுவும் அமைந்து விடுவதில்லை. எனவே உங்களைக் கண்டு கொள்ளத் தவறுபவர்களின் காலை நக்கிக் கொண்டு இருப்பதை விடுத்து அனுசரிப்பவர்களுக்கு சமனாக நடவுங்கள்.



மேற்குலகம் என்ற மாயைக்குள் உங்களைக் கட்டிப் போட நடக்கும் சதிக்குள் சிக்கி விடாதீர்கள்.

அதிலும் அமெரிக்கா என்ற சந்தர்ப்பவாதிகளையும்

இந்தியா என்ற பச்சோந்தி நாட்டையும் விட்டு விட்டு வேண்டுமானால்

சீனாவுடன் ரஷ்யா, இஸ்ரேல் என எல்லா நாடுகளுடனும் உங்களின் கரங்களை பலப்படுத்துங்கள்.

அது ஆசியப்பிராந்தியத்தில் ஓர் புது மாற்றத்தைக் கொண்டு வரும். வெறுமனே இந்தியாவை நம்பியோ அல்லது இந்தியாவுக்கு பயந்தோ இருந்து விடாதீர்கள். இந்தியா என்பது பல பேரரசுகளை உள்ளடக்கிய நாடுதான். அதில் தமிழ் பேரரசுகள் மூன்று.

இப்போது தான் தமிழனுக்கு என்று ஓர் அரசு இல்லாமல் போனால் நாங்கள் பல நாடுகளில் இருந்தும் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லாமல் எங்கள் சொந்த நிலங்களையே இழந்து கொண்டு இருக்கிறோம்;.

வெள்ளையன் எங்களை ஒற்றுமை வரக் கூடாது என்பதற்காகவே பல மாதங்களை உருவாக்கி கொடுத்து இருக்கிறான். நன்றியோடு நடந்து கொள்கிறோம்.. ஆனால் அவர்கள் எங்களை சீரழித்ததை பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை.

அசோக சக்கரவர்த்தி பல நாடுகளில் வென்று மாபெரும் சாம்ராச்சியத்தை உருவாக்கி அதற்கு ஏற்ற மக்களை பிளவு படுத்தாமல் தனது ஆட்சியை கொண்டு போகவே தேர்ந்தெடுத்த மதம் தான் புத்த மதம். அதை அவனுக்கு கீழே இருந்த எல்லோரும் பின் பற்றினார்கள். தமிழனுக்கு பயந்த தேவநம்பிய தீசனும் தானாக சரணடைந்து பெற்று கொண்ட புத்தமதம். பிறந்த நாட்டில் ஒளிந்து விட்து. ஆனால் அதை வைத்து புனையப்பட்ட கதையை வைத்து இன்று சிங்கள மக்களைக் கட்டிவைத்து ஓரணியில் திரட்டி வைத்திருக்கிறார்கள் தமிழனுக்கெதிராக.

இப்போது தாய் நாட்டில் எட்டப்பன் வேலை பார்த்து முடிந்து வெளி நாடுகளில் வாழும் தமிழர்களை குறிவைத்து நகர்கிறது புலனாய்வு வேலைகள். அதில் சிக்கி விடாதீர்கள். அமெரிக்கா சிங்களவனைக் கட்டுப்படுத்த தங்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்ள ஒரு பகடைக் காயாகவே எங்களைப் பயன்படுத்தியது. பயன்படுத்தும் அதைத் தான் இந்தியாவும் பிராந்திய நலன் என்று சொல்லிக் கொண்டு செய்கிறது. எங்களின் கட்டுப்பாட்டு நிலைகளில் சூறையாடி இன்னும் 10,000துக்கு மேற்பட்ட துருப்புகளை பல காரணங்களைக் கூறி கொண்டு போர் நடைபெற்ற நிலத்தில் இந்தியா நிறுத்தியிருக்கிறது.

சிங்களவன் காட்டுகின்ற மயானங்களுக்கும் விகாரைகளுக்கும் வரைபடம் கீறி காட்டிக் கொடுக்க அவர்கள் வரவில்லை. எங்களை அழித்து மீண்டும் எழ முடியாமல் அங்கு சிங்களவனையும் குடியேற்றி தனது ஆதிக்கத்தை செலுத்த எல்லா வழிகளையும் இந்தியா முயலுகின்றது. அதற்கு போட்டியாக பல சீனா முகாங்கள் வவுனியாவில் தென்பட தொடங்கியிருக்கிறது. இது எப்படியும் இந்தியாவுக்கு உறுத்தலான விடயம். ஆனால் உங்களின் விளையாட்டுக்களை எங்களின் நிலங்களுக்கு அப்பால் வைத்து கொள்ள சொல்லி வைக்க வேண்டியது எங்களின் கடமை.

அதே போல் தமிழ் முஸ்லிம் பிரச்சனைகளைக் கூறி அரசியல் நடாத்தும் பரதேசிகளுக்கு ஒன்றை சொல்லி வைக்க வேண்டும். இந்த தமிழ் முஸ்லிம் பிரச்சனையை சீரான முறையில் தொடக்கி வைத்து அவசரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தது என்னவோ இந்தப் பேரினவாத சிங்கள அரசுதான். இன்று அரசியலில் ஊன்றி இருக்கும் பலர் அதற்கு காரணம் யாழ்ப்பாண முஸ்லிம்களை பற்றி கண்ணீர் விடும் முதலைகளே.

உண்மையான காரணங்களை மக்களுக்கு சொல்ல விளையுங்கள். அதன் மூலம் இன மத நல்லிணக்கத்தைக் கொண்டு வந்து ஆராச்சிகளை செய்யுங்கள். மக்களை பகடைகளாக்கி அரசியல் ஆதாயத்திற்காக எதையும் பேசாதீர்கள்.

பல கோடிகளை அடித்து கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து இயக்க மரபை மீறி அதற்காகவே புலிகளோடு போரிட்டு புறமுதுகிட்டு ஒரு சிலருடன் இந்த முஸ்லிம்களின் வாழ்க்கையில் சந்தோசத்தைப் பறித்து முஸ்லிம் இனப் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த கருணா அதே முஸ்லிம் இனத்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஓடிப்போய் கலதாரி உல்லாச விடுதியில் கூட வந்தவரையும் விட்டு விட்டு ஓடிப்போன வரலாறு உண்டு;.

இப்போது எல்லாம் அவர் சொன்னார் நான் செய்தேன் என தலைவர் மீது கரி பூசும் கருணா முஸ்லிம்கள் பணத்தை கொள்ளை அடித்து அனுப்பி அதிக வரி அறவிட்ட பெருமையை தேடிக்கொண்டார். ஒரே நேரத்தில் இப்போது முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம்களிடம் அவர் பறித்த பணம் உயிர்கள் எல்லாம் இப்போது அரசியல் செய்வதற்காக சேர்த்த சொத்துக்கள் தான்.

நல்லவர்களை இந்த உலகம்; அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் தீயவர்களை எளிதில் பின்பற்றி விடுவார்கள். அதே போல் TRO மூலம் பணம் முகாம்களுக்கு வழங்கப்படவில்லை எனச் சொல்லும் முகாம்களுக்கான அமைச்சர் றிசாட் பதியுதீன் அரசு சாப்பாட்டுக்கே பிச்சை எடுக்கும் போது முகாம் வாழ் தமிழ் மக்களுக்கு பணத்தை அவர், மன்னாரில் கழுதை மேய்த்து கொண்டு வந்து கொடுத்தாரோ என்பது சந்தேகம்;

தனது சொந்தங்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் முகாம் மக்களின் வாழ்வாதாரங்களை கட்டி எழுப்புகிறேன் என சொல்லி வீதிகள் முகாம்கள் மற்றும் கட்டுமானங்கள் எல்லாவற்றையும் கொடுத்து கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு இருக்கும் ஒருவர் புனர் நிர்மானம் பற்றி பேசுகிறார்.

ஹக்கீமுடன் உள்ள பிணக்குகளுக்கு முஸ்லிம் தமிழ் பிரச்சனைகளை காரணம் காட்டி அந்த மக்களின் வேதனைகளில் குளிர் காய என ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்கள் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை பிளந்து அதற்கு ஒவ்வொரு முஸ்லிம் பெயர்களை வைத்து இயக்கிக் கொண்டு மத வாத அரசியல் செய்கிறார்கள். இவர்கள் பேரில் இருந்த ஆயதங்களைத்தான் தற்போது ஆயத ஒப்படைப்பு என கிழக்கில் பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கொடுத்தெல்லாம் என்னவோ ஒல்லாந்தர் காலத்தில் வந்தவை. ஆனால் அவர்களிடம் தங்கமுலாமிடப்பட்ட நவீன ஆயதங்களில் எதுவுமே வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்.

இதை முஸ்லிம் தலைமை புரிந்து கொண்டு தமிழ் மக்களோடு இணைந்து தாங்கள் அரசியல் நடவடிக்கைகளை கொண்டு செல்லும் போது தங்களுக்கான இட ஒதுக்கீடடையாவது பெற்றுக் கொள்ளலாம். அல்லது அரசின் பசப்பு வார்த்தைகளில் மயங்கினால் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற கூறி சிங்களம் இந்த முஸ்லிம் மக்களையும் ஒரு சிறுபான்மையினமே அல்லாமல் அவர்களை மதம் மொழி மற்றம் நிகழ்வுகள் கொண்டு போய் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுவர்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் இடப்பெயர்வு தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை உண்டு பண்ணி அரசக்கு பலம் சேர்த்தது. பின்னைய முஸ்லிம் படுகொலைகள் மட்டக்களப்பில் கட்டவிழ்த்து விட்டு நிரந்தர முறுகல் நிலையை கருணா ஏற்படுத்தி இப்போது அரசுடன் தான் அவர் இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழ் மக்கள் மேல் சீற்றம் கொள்ளாமல் அது ஒரு தனி நபரின் பிழையான வரலாற்று பிழை என்பதை எமது இயக்கம் ஏற்றுக் கொள்கிறது. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது.



இருந்தும் எங்களோடு தோள் கொடுத்து போராடிய இறுதியாக ஆனந்தபுர சண்டையில் ஒரு கனரக இயந்திர சுடுகலனுக்கு சூட்டாளராக கடமையாற்றி வீரச்சாவைத் தழுவிய என் தாய் நாட்டின் விடுதலைக்கு உழைத்த முஸ்லிம் வீரனுக்காக வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த இடத்தில்.

ஆனாலும் அவரும் எங்கள் போராட்டத்தில் அவரைப் போன்ற பலருடன் நினைவுகூரத்தக்கவர்; அவரும் எங்கள் மாவீரச் செல்வங்களில் ஒருவர்.


அதே போல் ஈழத்திற்காக உயிர் கொடுத்த முஸ்லிம் சகோதரர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூருகின்றோம்; இனங்களுக்கிடையில் பிணக்கை ஏற்படுத்த நினைக்கும் சதிகாரர்களைத் தோற்கடிப்போம்.

பல ஆரம்பகாலப் போராளிகளில் முஸ்லிம்களின் பங்கும் அதிகம் இருந்தன. பின்னைய நாட்களில் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்குகள் அவர்களைப் போராட்டத்திலிருந்து பிரித்து செல்ல வழி வகுத்தது என்பதை இப்போதைய பல அரசியல் முஸ்லிம் தலைமைகளும் தலைவர்களும் ஏற்றுக் கொள்வார்.


எனவே இப்போதைய அரசியலைக் கொண்டு செல்லும் அவர்கள் உணர வேண்டும். கசப்புணர்வுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கின்றன. அவற்றை மறந்து ஒன்றிணையும் வண்ணம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

“நல்லூரில நல்ல சனமப்பா அத எல்லா வெளிநாட்டுக்காரர்களும் பார்த்தவை. அதற்கு உதவிய டக்ளஸ் தொலைக்காட்சிக் காரர் கஸ்டப்பட்டு ஹெலிகொப்டர் எல்லாம் கொண்டு வந்து அசத்திப்போட்டினம். வாய் பிளந்து பார்த்த எங்கட சனத்துக்கு ஒன்று சொல்ல வேணும்.

யாழ்ப்பாணத்துச் சனம் சண்டை நடக்கேக்கைக்குள்ளயே ஒரு கொடி பிடிச்சதும் இல்லை. வாய் திறந்து கதைச்சதும் இல்லை. இப்பையும் முகாம் சனத்திண்ட சொந்தங்கள் யாழ்ப்பாணத்தில இல்ல எல்லாரும் வேற்றுக் கிரகத்திலிருந்து குடியேறினவை. அவைக்கு டக்ளஸ் மாமா தான் சாப்பாடு தண்ணீர் எல்லாம் கொண்டு போய்க் குடுத்து இவ்வளவு காலமும் காப்பாத்தினவர். அதால அவரக்கு எத்தினை கப்பல் ஓடுது என்டு தெரியுமா? அமைச்சர்கள் தான் கப்பல் ஓட்டவேண்டுமென்ற யாழ்ப்பாணத்திற்கு ஒரு எழுதாத சட்டம் இருக்குதுங்கோ.

அதால ஏ9 பாதையால போற சாமானுக்கு கொஞ்சம் விலை கூட. ஏனென்றால் இப்ப றோட் கொஞ்சம் நல்லாப் போடுறாங்கள் இராணுவ பாவனைக்காக. அதால விலை கூட. கப்பலால்தான் பாதுகாப்பாக கொண்டு போகலாம்.

மக்களை ஒரு மாயைக்குள்ள தள்ளி விட வேண்டும் எண்டதை இந்தியாவின்ர கை போல வடிவா செய்யும். இப்ப சங்கரியாரும் வந்து இருக்கிறார். அவர் தான் மக்களைக் காப்பாத்த வேண்டுமாம்; எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆதாயத்துக்காக இவர்கள் என்னவும் செய்வார்கள். அதை இவர்களின் கடந்த கால அரசியலே சொல்லும். மக்கள் சொல்லத்தேவையில்லை. மக்களை சுதந்திரமாக கதைக்கக் கூட விடுறாங்கள் இல்லை. பிறகு எப்படி? சாப்பாடு நிம்மதியான நித்திரை எல்லாம்;.

இன்னும் வெள்ளை வான் எல்லாம் கலர் வானாக மாறி சமாதானத்தில ஓடின நிறுவனங்களின் பேரில் ஓடுது. மக்களெல்லாம் இப்ப நிறுவனங்களைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கு.

அதே மாதிரி யாழ்ப்பாண மக்கள் பெரிசா வன்னிச் சனத்தை கவனிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தான் போராடப் பிறந்தவர்கள். மற்றவர்களெல்லாம் குளிர்காயப் பிறந்தவை. இப்பவும் யாழ்ப்பாணச் சனத்தை கேளுங்கோ சாமான் விலை கொஞ்சம் 2000, 3000 ரூபாவில இருந்து 300, 400 குறைஞ்சு இருக்கு. அது அந்த சனத்திக்கு போதும். அது தான் இவ்வளவு காலமும் போராடிப் பெற முயற்சி செய்தாங்கள். இப்ப அதே யாழ்ப்பாணத்தில டக்ளஸ் மாமா கெண்டு வந்து தாரார்.

இதைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப் படவேண்டாம். ஏனெனில் வெளிநாடுகளில் எல்லாம் ஊர்வலம் போராட்டம் என நடந்த வேளை இலங்கையில எந்த இடத்திலையும் எந்தப் போராட்டமும் நடக்கயில்லை. அதைப் பற்றி எங்கட சனம் கவலைப்படவுமில்லை. ஏனெனில் தங்கள் சுக துக்கங்களை மட்டும் கவனிக்கும் நிலையில் மாற்றம் பெற்று வருகிறது தமிழினம் அதையும் மீறி யாராவது கிளர்ந்தெழுந்தால் அவையை சிறப்பாக கவனிக்க எங்கட தமிழ் இயக்கங்கள் சம்பளம் வேண்டிக்கொண்டு இருக்குதுகள். அதால வாய்பொத்தி கண்ணை மூடித்தான் நடக்க வேண்டியிருக்கு சனத்திற்கு.

அண்டை நாட்டு இரத்த உறவுகள் தீக்குளித்தனரே. போராட்டங்கள் நடந்தனவே. நாங்கள் என்ன செய்தோம். என எங்கட மக்கள் கொஞ்சமேனும் சிந்தித்தார்களா? என்பது கேள்விக்குறி தான். கரும்புலிகள் வாழும் தேசத்தில்தான் இப்படியும் இருக்கிறார்கள் என்பதையிட்டு வேதனைப்படுகின்றேன்.

எமது தென்னிந்திய உறவுகளே


உங்களின் எழுச்சி நிட்சயம் எமக்கான தனிநாட்டைப் பெற்றுத் தரும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே கால மாற்றத்திற்கேற்ப நீங்களும் உங்களது ஆதரவை யாருக்கு எப்போ செயய்வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். ஆனாலும் எங்களை கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டீர்கள்.

இந்த கருணாநிதியை நம்பி எனும் போது, ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. வயது போகப் போக தனது இரத்த உறவுகளைக் கூட மறக்கும் அளவுக்கு அறளை பெயர்ந்து விட்டது என எண்ணத் தோன்றுகிறது.

இந்திய அரசியலை எப்படி சினிமா ஆட்டிப் படைக்கிறதோ அதைப் போல் தமிழ் நாட்டு அரசியலை ஒரு சிலரின் கையில் அல்லவா கொடுத்திருந்து அடிமைகளாவே வாழப்பழகி விடடீர்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இது எமது ஆதங்கம் தான். இருந்தும் உங்களின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை என்பது ஆட்சியாளர்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கை அல்ல. எங்களுக்காக குரல் கொடுத்த, உயிர் கொடுத்த உறவுகளுக்கு எங்களின் அன்பை தெரிவித்துக் கொள்கின்றோம்.


தீக்குளித்த தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கத்தை இந்த வேளையில் தெரிவித்துக் கொண்டு எங்கள் புனிதப் பொரில் உங்களின் பங்கு அளப்பெரியது.
அது தீக்குளித்தல் என்ற ஓர் மரணமாக மாறக் கூடாது. உங்கள் உன்னத வேள்வியை பாதை மாற்றி புதுப் பொலிவுடன் போராடப் புறப்படுங்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்.

ஏனெனில் இராணுவ கட்டுப்பாhட்டில் நிதமும் எங்கள் போராளிகள் உயிரைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் உறவுகள் அற்ற தெய்வப்பிறவிகள் அல்ல உங்களுடன் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களில் ஒருவர் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

கைதுகள் காணாமல் போதல்களை மூடி மறைத்த அரசுக்கு ஒர சில வீடியோ காட்சிகள் மண்டையைக் குடைய வைத்து இருக்கின்றன. ஆனாலும் அது கூட ஏதோ துரதிஸ்டமாகவே வெளிவந்திருக்கிறது. அதைவிடப் பெரியபாடு கொலைகளை நிதமும் செய்யும் அரசுக்கு இந்த ஒரு சின்ன விடயம். ஆனாலும் எப்படி வந்தது என்பதை அறிகிறது அரசு.

வெளியிட்டவர்களைக் கண்டு பிடித்தால் எப்படியும் அவர்களை கொண்டு புதைத்து விடுவார்கள். அவர்களை விட எங்கள் இந்த அரசின் ஊது குழல்கள் கேட்கும் கேள்விகள் ரசிக்கத்தக்கவை எப்படிப் பேட்டி எடுத்தனீங்கள் எப்படி படம் பிடிச்சனீங்கள் போக முடியாத இடங்களில் எப்படி போனீர்கள் அதனால் உதல்லாம் சுத்தப் பொய் என அரசுக்கு தங்கள் நன்றியை தங்களின் சார்பில் தெரிவிக்கின்றன சுரணையில்லாமல் போரில் கொல்லப்படுதல் என்பது சாதாரண விடயம் ஆனல் பொது மக்களை இளம் சமுதாயத்தை கொலை செய்வது என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொள்கிறதா?

அல்லது நேரில் கண்டால் கூட நம்பமாட்டார்களா? ஏனெனில் இங்கு எல்லாம் அப்பட்டமாக தெரிந்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது வரை அவை வெறும் வாய்வார்த்தைகளுடனும் சிறிய கண்டனங்களுடனும் காணாமல் போய்விடும். சிங்களவன் தொடர்ந்து அழிப்பில் தன் கவனத்தை செலுத்துவான்.



இவற்றுக்கெல்லாம் சர்வதேசம் என்ன சொல்லப் போகின்றது. இவவ்ளவு கொலைகள் நடந்த இடத்தில் இந்த ஒரு வீடியோவுக்குத்தான் நடவடிக்கையா?


அதை நினைக்கவே முடியாது எல்லாவற்றையும் வானத்திலிருந்து படம் பிடித்த சர்வதேசம் வெறும் சவக்கிடங்குகளை மட்டும் படம் பிடித்த்தாக போட்டு இருப்பது தங்கள் அரசியல் நலனே தான். இன்று அரசியல் கேள்வி கேட்பவர்கள் கூட நாளை அரசுக்கு சார்பாக வாய்திறப்பார்கள்.


அவர்கள் நீதிபற்றி கதைக்கக் கூடியவர்களுமல்ல. நீதி இலங்கையில் இருக்கக் கூடியதுமல்ல. அக்சன் பாம் நிறுவனக் கொலைகள் கூட ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இராணுவத்திற்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. வடக்கு கிழக்கு இணைப்பு என தங்களுக்கு சார்பான விடயங்களுக்கு தமிழனுக்கு எதிரான தீர்ப்புகள் என்றால் சிங்களவர் முன்னின்று வழங்குவார்.

ஒன்றை இந்த சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சிங்களவனல்லாத ஒருவன் அரசாளமுடியாது. ஏனைய மத இனத்திற்கு முன்னுரிமை அளிக்கமுடியாது. ஏனைய விடயங்கள் கூடத் தங்களின் அடிவருடிகளுக்கு தான் வழங்கப்படும் என்பதே. இதில் எங்களுக்கு எங்கே நீதியை சர்வதேசம் பெற்றுத் தரப் போகிறது. அதை எதிர்பார்க்கவும் முடியாது.

என் அருமைப் போராளிகளே! முன்னாள் போராளிகளே!


உங்களை இந்த இடத்தில் நான் அடையாளப் படுத்த விரும்புகின்றேன். ஏன், அறை கூவியும் அழைக்கின்றேன். மாவீரர்களால் திட்டமாக எழுந்து நின்ற எங்களின் தேசம் அது எங்களின் மாவீரச் செல்வங்களின் வீரத்தால் ஏக்கத்தால் என் தலைவன் வழி காட்டலில் உதித்த தேசம். அதில் உங்களின் பங்கும் நிட்சயம் இருக்கும். நீங்கள் மௌனமாய்ப் போவது ஏனோ!

என்னால் மறக்கவே முடியாது இந்தப் போராட்டத்தை, ஏன் இதிலிருந்து மீளக் கூட நான் விரும்பவில்லை. உண்மையில் நாம் மனதால் உடலால் ஊனப்பட்டு விட்டோம் என்பதே உண்மைதான். அதற்கு உங்களால் தான் மருந்திட முடியும். ஒருவனுக்கு நண்பன் எப்படியோ அதே போல் உயிருள்ளவரை போராட்டத்தை காதலித்துத்தான் எங்கள் தேசத்திற்காக உயிரைக் கொடுத்தார்கள். இத்தனை ஆயிரம் பேர். நீங்கள் மட்டும் எப்படி இதிலிருந்து விலகிவிட முடியும். ஒரு போராளிக்கு உண்மையான ஓய்வு என்பது அவனது மரணத்தில் என்பதுதான் நாங்கள் நன்றாகவே கற்றிருக்கிறோம்.

எங்கள் வீடுகளில் இருந்து எல்லோரும் எல்லாவிதமாகவும் இந்தப் போராட்டத்தில் இணைந்தோம். அப்பா அம்மாவுடன் சண்டை பிடித்து காதலன் காதலிகளை உதறி சகோதரர்களை பிரிந்து இந்த நாட்டை நாங்கள் நேசித்தோம் என்பதை யாராலும் மறக்கமுடியுமா?

என்றுமே எங்கள் பயிற்சி ஆசான் எங்கள் கண்முன்னே வந்து வழி நடத்துவதில்லையா? எப்போதும் எம் தலைவனின் ஆணை ஆழ் மனதில் ஒலித்துக் கொண்டிருப்பதில்லையா?


அந்த ஒவ்வொரு ஓசைகளும் களமுனைகளில் வெறி பிடித்த எதிரிகளை பந்தாடுவதில்லையா?


அங்கே இந்த உலகத்தில் உள்ள மிகப் பெரும் விளையாட்டுப் போரை நாங்கள் ரசிப்பதில்லையா?


சாத்திரங்கள், இதிகாசங்கள் கூட போரில் தான் கொலைகள் என்பது தர்மம் என்பதை ஏற்றுக் கொள்கின்றன. அதை நாங்கள் ரசித்து செய்வதில்லையா?

ஏன் சக போராளியை பார் இன மொழி வேறுபாடின்றி நீங்கள் நேசித்தது இல்லையே?


அங்கே உங்களுக்கு நிச்சயம் இந்தப் போராட்டப் பாதையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் சம்பவங்கள் என்பவற்றை கொண்டிருக்கிறோம். அவை எங்கள் வாழ் நாள் பூராகவும் மனதை நெருடிக்கொண்டே இருக்கின்றன. எத்தனை வித்துடல்கள் எத்தனை விழுப்புண்கள் எத்தனை கோரங்கள் எல்லாம் கண்டோம் எப்படி மறக்கமுடியும். சதைகளாக பிண்டங்களாக சாக வீரனின் குருதியிலே குளித்ததுண்டா? கள முனைகளிலே கதறி அழுததுண்டா? ஏனென்று தனிமை உங்களை கொல்வதில்லை. இவற்றை எல்லாம். நான் எனது வாழ்க்கையில் கண்டிருக்கிறேன்.

ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக கதைகள் பேசி ஒன்றாக விளையாடி ஒன்றாக உறங்கி ஒன்றாகப் போருக்குப் போய் ஒன்றாக மாவீரராக முடியவில்லையே என்று மனம் புழுங்கி அழுகிறேன்.

எல்லாம் இந்த என் தாய்நாட்டுக்கான போராட்டத்திற்காக உரிமையோடு கேட்கிறேன். உங்களை எங்களில் இருந்து அந்நியப்படுத்த எத்தனை சதிகள் அதற்கு நீங்களும் பலியாவதா? வட்டுவாகல் கடந்து என்னை எண்ணி நானே அழுது தீர்த்து இருக்கிறேன். என்னைப் போல் எத்தனை ஆயிரம் உள்ளங்கள் அழுது இருக்கும். அதில் உங்களில் எல்லோருமே கண்ணீர் விட்டு அழுது இருப்பீர்கள்.

உங்கள் வீரம் உங்களின் உழைப்பு இந்த தேசத்தைக் கட்டி எழுப்ப உங்களால் மட்டுமே முடியும். அதிலும் நான் மீண்டும் எங்கள் போராட்ட வரலாற்றில் 20வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டு இருக்கிறோம். அதை உடைத்து எறிய உங்களால் முடியும். அதற்காக உறவுகளை மீண்டும் இந்தப் போராட்டம் அறை கூவி அழைக்கிறது. அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என எண்ணுகிறேன். அதிலும் முன்னாள் போராளிகள் எல்லோரும் உங்கள் ஆற்றல் மிக்க தோள்களை இந்த நாட்டுக்காக கொடுக்க முன்வாருங்கள்.



சிங்களவனுக்கு எல்லா வழிகளிலும் நாம் எதிரியாய் இருப்போம். எல்லா நாடுகளிலும் உங்களின் நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து அதன் மூலம் எமக்கு பலம் சேருங்கள்.

இது தாயக மற்றும் புலம் பெயர் இந்நாள், முந்நாள் போராளிகளுக்கானது. நீங்கள் அனைத்து நாட்டையும் மீட்க வாருங்கள். தாயகத்திலுள்ள அதுவும் சரணடைந்த மற்றும் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து எல்லோருமே கூண்டோடு அழிவதை விடுத்து உங்களை உங்களால் காப்பாற்ற முடியாவிட்டாலும் மற்றவரைக் காப்பாற்ற முயலுங்கள். அது எங்களின் பாதையை விரைவு படுத்தும்;.

இலக்கின்றி பயணப்படாமல் உங்களுக்கான கட்டளைகள் வரும் வரை காத்திருங்கள். தன்னிச்சையான முடிவுகள் பலர் பலரை இல்லாமல் அழித்து கொண்டு இருக்கிறது. அத்தோடு எங்களின் கையிருப்பு ஆயுதங்களை காட்டிக் கொடுக்காதீர்கள். அல்லது ஒப்படைக்காதீர்கள்.

ஏனெனில் ஒரே ஒரு துப்பாக்கிக்காக பல உயிர்களைக் கொடுத்த வரலாற்றில் வந்தவர்கள் நாம். அதை மறந்து கண்டபடி உங்கள் தேவைகளுக்கோ சமுதாய சீர் கேடுகளுக்கோ அல்லது பிழையான வழியில் உங்களையும் ஆயதங்களையும் பாவிக்காதீர்கள். சக மக்களுக்காக உழையுங்கள். ஏனைய போராளிகளையும் ஆயுதங்களையும் காப்பாற்ற முயலுங்கள். அது வரை பொறுமையாய் இருக்க வேண்டியது எல்லோரதும் கட்டாயத் தேவை இதை நீங்கள் நன்கு உணர்ந்து நடக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

ஆயுதங்களை தெய்வமாகப் போற்றி வாழும் வரை எங்களுக்கு தோல்விகள் இல்லை. என்பதை மனதில் கொள்ளுங்கள். சிங்களவனின் கொட்டமடக்கும் வேலைக்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அந்த வேலைக்காக நாமெல்லோரும் ஆவலாய்க் காத்திருப்போம். அல்லது உங்கள் வழிகளில் சிங்களவனைத் தாக்குங்கள்.

வெறுமனே பயிர் செய்து சாப்பிட்டு கல்வி கற்று சீதனம் வேண்டி கலியாணம் செய்து பின் பிள்ளைகள் பெற்று அவர்களுக்கு சொத்துத்தேடி என வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் குண்டுச் சட்டிக்குள் ஓட்டாமல் இந்தப் பரந்த உலகிலே எங்களுக்கு என நாடு வேண்டும் எனப் புறப்பட்டு பல அதிசயங்களையும் கண்டு பிடிப்புக்களையும் பெருமைகளையும் ஏற்படுத்தியவர்கள் மீண்டும் அதைக் காலத்திற்கு போய்விடமுடியாது.

முன்பெல்லாம் எங்கள் அரிய கண்டுபிடிப்புகள் இடியப்பம், புட்டு, தோசை, இட்டலி, ரொட்டி கஞ்சி பலகாரங்கள் என வாய்க்கு உரிசியானவற்றை மட்டும் தான் தேடி வைத்தோம். இப்போ அப்படியல்ல. எங்களின் நாடு அது ஈழம். அதற்காக நிறையவே பாடுபட்டு உருவாக்கியிருக்கிறோம். எல்லாமே வீண்போகா. அவை மீண்டும் புத்துயிர் பெறும். அவை தனக்காகத் தோன்றியவை அல்லது உங்களைப் போன்றோரால் தான் உருவாக்கப்பட்டவை. அவற்றை மீளக் கட்டி எழுப்பவோம்.

எங்கள் நாகரிகம் பழக்கவழக்கம் மொழி, போராட்டம் என்பவற்றை இந்த உலகுக்கு பரப்புவோம். அதற்கு நீங்களும் உறுதுணையாய் இருங்கள் என அன்போடும் உரிமையோடும் அழைக்கிறேன். சிங்களவனின் சிங்கம் பற்றிய கற்பனையை உடைத்து அசிங்கமாக்காமல் ஓயமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அவர் வடை சுட்டு விற்றுவந்தார். அதே ஊரில் இருந்த காக்கைக்கு சரியான பசி பட்டினி. உணவு பாட்டி கொடுக்கவில்லை. பதிலக்கு காக்கை சுள்ளி பொறுக்கிக் கொடுத்து அதற்காக ஒரு வடையைப் பெற்றுக் கொண்டது. பின் அதை உண்ண எண்ணிக் கொண்டு பறந்து போனது. நகர எல்லையில் நரிக்குணம் படைத்த ஒரு சிங்கம் இதைக்கண்டு விட்டது.


காக்கையை அணுகி காக்கை காக்கை என்ககு அந்த வடையைத் தருகிறாயா? என நயமாகக் கேட்டது. காக்கை கொடுக்கவில்லை. சிங்கம் சூழ்ச்சியாகக் கேட்டது உனக்கு நன்றாக ஆடவருமாம் ஒரு நடனம் ஆடிக் காட்டு பார்க்கலாம் என்றது. காக்கையும் மயங்கிப் போய் தத்திக் காட்டியது. பின் நன்றாகப் பாடவருமே என்ற ஆசை காட்டியது. காக்கைக்கு கண்மணி இழந்த குறைக்கு வாய்திறந்து பாட்டுப் பாடியது அந்தோ பரிதாபம். வடையும் போய்விட்டது. சிங்கம் வயிராற முடியாவிட்டாலும் ருசியாற வடையை உண்டது. காக்கை ஏமாத்தப்பட்டு பறந்து போனது.

மீண்டும் ஒரு நாள் காக்கை அதே போல் பாட்டியிடம் வேலை செய்து வடையை பெற்ற கொண்டது. இந்த முறையும் காட்டு எல்லையில் சிங்கத்தை சந்திக்கவேண்டிய துரதிஸ்டம் ஏற்பட்டது. காக்கை மனதுக்குள் எண்ணிக் கொண்டது. இம்முறை ஏமாறுவதில்லை என்று. சிங்கமும் ருசி பட்ட எண்ணத்தில் மீண்டும் தனது நரித்தனத்தைக் காட்டியது.


காக்கை காக்கை ஒரு நடனம் ஆடு என்றது. காக்கையும் அதற்கு ஏற்றாற்போல் நடனம் ஆடிக் காட்டியது. பாடும் படி கேட்க சிங்கத்தின் காதுக்குள் கட்டெறும்பு போவது போன்று கரகரத்த குரலில் வடையைக் கவனமாக காலில் பற்றி பிடித்தபடி கரைந்தது. சிங்கம் ஏமாந்ததால் பாடிக் கொண்டே ஆடு என்றது காக்கை. கவனமாக மரப் பொந்தில் வைத்து விட்டு கத்திக் கரைந்தது. காக்கைகள் பலவாகின. கூட்டமாக கூடிய காக்கைகள் சிங்கத்தின் சினம் தீர கொத்தி காட்டை விட்டே துரத்தின. பின் நிமிர்வோடு அந்த வடையை பங்கு போட்டு உண்டு மகிழ்ந்தன. நாமும் நவீன காக்கையாக இருப்போம். சிங்களவனின் சிங்க ஆசையை இந்த நாட்டை விட்டுத் துரத்துவோம். அனுதாபிகளாக அல்லாமல் பங்காளிகளாக முன் வாருங்கள்.

எங்களின் மக்களுக்காக நாங்கள் அவர்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துன்பங்களை பகிர்ந்து கொள்ளுவோம். சிங்களவனுக்கு எதிர் காலத்தில் பரிசளிப்போம். அதற்காக நாங்கள் எங்களை கட்டியெழுப்புவோம். எந்த நாடுகளில் எங்கள் உறவுகள் இருந்தாலும் அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்க ஏற்ப எல்லாத் துறையிலும் ஒன்றிணைந்து எங்கள் நாட்டுக்கான கட்டுமானங்களை செய்யுங்கள். அதனால் உங்களை அந்த நாடுகள் பொருளாதாரத்தால் கூட ஒதுக்கிவிடமுடியாது. பின்னாளில் அது எங்கள் நாட்டுக்கான கட்டுமானங்களை விரைவாக முன்னேற்ற உதவும்.

அதற்காக வியாபார ரீதியில், கல்வி ரீதியில் என எல்லாத் துறையையும் கட்டியெழுப்புங்கள். தனி ஒருவனால் முடியாதது கூட்டு முயற்சியால் முடியும். இதனால் சிங்களவன் எங்களுக்கு சர்வதேசத்தில் வீசும் வலைகளை நாம் அறுத்தெறிவோம். எங்கள் தேசிய சொத்துக்களை பாதுகாத்து எங்கள் நாட்டுக்கு கொண்டு வருவோம்.

உங்கள் பங்களிப்பு எங்களை வளர்த்துவிடும் என்பதை நீங்களும் அறிவீர்கள். எனவே உங்களின் ஏகோபித்த ஆதரவை நல்கி நிற்கின்றோம். வரும் நாட்களில், எங்களின் பயணப்பாதை மாறலாம். ஆனால் இலக்கு ஒன்று தான்.

சிங்களவன் கொட்டமடக்க எம் தலைவர் பெயர் சொல்லி புறப்படுவோம். புயலாக.

நன்றி.

தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்.


புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
படையப் புலனாய்வு
தமிழீழம்
அரவிந்தன்.

வன்னிச் சிறுவர்களுக்கு நியூசிலாந்து பால்மா கொடுக்க நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மறுப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் தமது உயிருக்காகப் பயந்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு
எதிராக எதிவித செயல்களிலும் ஈடுபடாததோடு நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கையயும் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என நியூசிலாந்து தொலைக்காட்சி சேவை நேற்று சனிக்கிழமை கூறியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு விளையாடச் செல்வதற்கு முன்னர் நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்போது உலக அமைதி மற்றும் நீதி ஒக்லாண்ட் (Global Peace and Justice Auckland- GPJA) அமைப்பினரும் இருந்துள்ளனர். இப்பேச்சின்போது, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாடும் தமிழர்களின் மனிதாபிமான பிரச்சனைகளை உலகுக்கு வெளிக்காட்ட உதவி செய்ய வேண்டும் எனக் கேட்கப்பட்டனர்.

இதற்கு அவர்களும் அரசியல் சார்பானது தவிர மற்றவித நடவடிக்கைகளுக்கு தாம் உதவுவதாகவும் சம்மதித்திருந்தனர். எனவேதான் நியூசிலாந்து அணி இலங்கைக்கு சென்றபோது நியூசிலாந்தில் எதுவித எதிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெறவில்லை.

இந்தச் சந்திப்பின் முடிவாக ஃபொன்ரெரா, வேர்ல்ட் விஷன் மற்றும் நியூசிலாந்து தமிழ் அமைப்புகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, முகாம்களிலுள்ள மக்களின் மனித உரிமை சிக்கல்களை வெளிப்படையாக, அடையாளப்படுத்திக் காட்டும் முகமாக அவர்களுக்கு விநியோகிப்பதற்கான பால் மாவை, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையிலுள்ள ஃபொன்ரெராவிலிருந்து வேர்ல்ட் விஷனுக்கு(WORLD VISION) கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மேலாளர் இந்நிகழ்வில் தமது அணியினரைப் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை. தமது அணியினரின் உயிர் பாதுகாப்பு பயம் காரணமாகவே தாம் அதை மறுத்ததாக அவர் கூறுகிறார். இதனால் GPJA ஆனது நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளது. சர்வதேச சமூகம் இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டுவிட்டது என்ற மனோநிலையில் இருக்கின்ற நியூசிலாந்து தமிழ் அமைப்புக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக GPJA அறிவித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து, Aotea Square இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் GPJA உம் பங்குபற்றுகிறது. முள் வேலியால் அடைக்கப்பட்ட தடுப்பு முகாம் போன்ற மாதிரியொன்று குவீன் வீதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த முள்வேலி முகாமுக்கு வெளியே கிரிக்கெட் வீரர்கள் தமது வாய்களை ரேப்பினால் மூடி ஒட்டியபடி விளையாடுவதுபோல அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் நியூசிலாந்தில் தமிழர்கள் போராடுவார்கள் எனத் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்தன.
http://appaa.com/index.php?option=com_cont...6&Itemid=59

சம்பந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! பாரிஸ் ஈழநாடு


பழுத்த அரசியல்வாதியும், சிறந்த சிந்தனையாளரும், தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உயர்திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் எழுதும் திறந்த மடல்.

ஐயா!

கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சிந்தனைத் தெளிவுடனும் இலட்சிய வேட்கையுடனும் ஈழத் தமிழர்களின் அரசியல் இலக்கோடு இணைந்து செயற்பட்ட தங்களது புனிதமான அரசியல் பயணம் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தது என்பதில் பெருமை கொள்கின்றோம்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது மாறாத ‘தமிழீழத் தாயக’ இலட்சியத்திற்கு நேர்மையாக இருந்து அரசியல் தளத்தில் தாங்கள் ஆற்றிய பங்கு பெருமைக்குரியவை என்பதில் சந்தேகம் கிடையாது. சிங்கள தேசத்தின் பேரினவாத அரசியலாளர்களை எதிர்கொண்டு, தாங்கள் வேங்கை போலக் கர்ச்சித்த வீரத்தைக் கண்டு நாம் மகிழாத பொழுதில்லை.

சாபங்களுக்குட்பட்ட ஈழத் தமிழர்கள் துரோகிகள் துணையோடு தோற்கடிக்கப்படும் வரை நீங்கள் நேர் பாதையில் மட்டுமே பயணித்தீர்கள். அல்லது அவ்வாறு மட்டும்தான் பயணிக்க முடியும் என்ற வரையறைக்குள் மட்டுமே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டீர்கள். அப்போது, விடுதலைப் புலிகள் பலத்தோடு களத்தில் நின்றார்கள். அந்தப் பலம் உங்கள் பாதையையும் செப்பனிட்டுத் துணை நின்றது.

விடுதலைப் புலிகளின் களமுனைத் தோல்வியும், இழப்புக்களும் உங்களைப் போலவே எங்களையும் பலவீனப்படுத்திவிட்டது என்பதில் மாறுபாடு கிடையாது. நிமிர்ந்து நின்ற நீங்களும் நாங்களும் அந்த ஒரு சில நாட்களில் நிலை குலைந்து தடுமாறித்தான் போய்விட்டோம். ஆனாலும், தலைவனின் கட்டளை எங்களை மீண்டும் நிமிர வைத்தது. நாம் முன்னரை விடவும் அதிக வேட்கையுடன் நிமிர்ந்து நிற்கின்றோம். எங்கள் தலைவன் எங்களுக்கு வழங்கிய அந்தத் திமிருடன் சிங்களத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றோம்.

ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பிளவு படுத்திப் பார்க்க முடியாத சக்திகளாக நாங்களும் நீங்களுமே எஞ்சி இருக்கின்றோம். சிங்கள தேசத்தால் கட்டுப்படுத்த முடியாத, கைகளுக்கு எட்டாத தூரத்தில் விடுதலைப் புலிகளின் அதே இலட்சியத்துடன் புலம் பெயர் தேசத்தில் நாங்கள் தற்போது உங்களுக்குப் பலமாக எழுந்து நிற்கின்றோம், துணிந்து நிற்கின்றோம் என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள்.

தமிழீழத்து மக்கள் இப்போது துப்பாக்கி முனையில் மவுனிக்க வைக்கப்பட்டுள்ளனர். நிர்ப்பந்தச் சிறைகளில் முடங்கிக் கிடக்கின்றனர். ஐந்து தமிழர்களுக்கு ஒரு படையினன் என்ற கணக்கில் சிங்களப் படை வீக்கம் பெற்றுள்ள நிலையில் தமிழர்கள் வாய் திறந்து பேசுவது சாத்தியமே இல்லை. அவர்கள் பேச மாட்டார்கள் என்பதனால், அவர்கள் மீண்டும் அடிமைகளாகிவிட்டார்கள், சிங்களத்தின் கொடுமைகளைச் சகிக்கப் பழகிவிட்டார்கள் என்று முடிவு கட்டிவிட முடியாது. நீங்களும் அவர்களது மவுனத்தின் அர்த்தத்தை யாழ் மாநகரசபைத் தேர்தலில் நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். அவர்கள் மவுனமாக இருந்தே வாக்களின்ன மறுத்துத் தமது தீர்மானத்தை நன்றாகவே சிங்கள தேசத்திற்கும், உலக நாடுகளுக்கும் ஏன் உங்களுக்கும், எங்களுக்கும் கூட உறைக்க உணர்த்தியுள்ளார்கள். அவர்கள் வாக்களிக்க மறுத்ததன் மூலம் உங்களை நிராகரிக்கவில்லை. தங்களை உரைத்துக் காட்டியுள்ளார்கள். மூவின மக்களால் நிறைக்கப்பட்ட வவுனியாவும் ஒரு தெளிவான முடிவை நமக்கு அறிவித்துத்தான் இருக்கிறார்கள்.

ஆம், தமிழீழ இலட்சியத்திலிருந்து அவர்கள் திரும்பிச் செல்லப்போவதில்லை. அவர்கள் உங்களிடமும், எங்களிடமும், உலக நாடுகளிடமும் அதைத்தான் மீண்டும் சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான எமது போராட்டங்களும் இப்போது மீண்டும் புலம்பெயர் தேசங்களில் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்து விட்ட்ன. மேற்குலகின் பல நாடுகள் சிங்களத்தின் கொடூரங்களை நன்றாகவே புரிந்துகொண்டுள்ளன. சிங்கள தேசத்தின் மீதான அவற்றின் கண்டனங்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. தமிழீழத்துக் கரு புலம்பெயர் தமிழர் கருவறையில் மெல்ல வளர ஆரம்பித்து விட்டன. அதைப் பெற்றெடுக்கும் புறச் சூழலும் அகச் சூழலும் நன்றாகவே கனிந்து வருகின்றது.

நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் வவுனியா iதை முகாமிலிருந்து எமது மக்களை விடுவித்தேதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்போதோ உருவாக்கப்பட்டு விட்டது. அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பொறுப்பை புலம் பெயர் தேசத்து எங்களிடம் விட்டு விடுங்கள். சிங்களத்துச் சிறைகளில் வாடும் எம் தமிழ் உறவுகளை இப்படியே விட்டுவிட்டு வாழாதிருக்கமாட்டோம். உலக நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டிக்கொண்டே, சிங்களத்தின் கொரூரங்களை அம்பலப்படுத்தியபடி அவர்களையும் சிறை மீட்போம். அதனையும் எங்களிடம் விட்டுவிடுங்கள்.

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மட்டுமே மவுனிக்க வைக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தை மவுனிக்க வைக்கும் உரிமை எங்களுக்கும், உங்களுக்கும் கிடையாது. அது ஈழத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முடிவு. தேர்தல் களத்தில் உங்களுக்கு ஆணை வழங்கிய எமது சொந்தங்கள் அதை மீளப் பெறும்வரை யாராலும் இலட்சியத்தை மாற்றி அமைக்கவோ, அதில் சமரசம் செய்யவோ யாருக்கும் உரிமை கிடையாது. உங்களுக்கும் எங்களுக்கும் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியையே மக்கள் வழங்கியுள்ளார்கள்.

சிங்கள தேசத்தின் மீதான எமது மக்களின் அக்கினிப் பார்வையை திசை மாற்ற முயற்சிக்காதீர்கள். அது உங்களையும் சுட்டெரித்துவிடும். புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களின் போராட்டமே உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. எம்மைப் பயங்கரவாதிகளாக அறிவித்தவர்கள் கூட எமது பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார்கள். எமக்காக சிங்கள தேசத்துடன் வாதிட்டார்கள். சிங்கள தேசம் துகில் உரியப்பட்டு, அம்மணமாகக் கூனி நிற்கின்றது. ராஜபக்ஷக்கள் மேற்குலக நாடுகளுக்குப் பயணம் செய்ய அச்சப்பட்டு அத்தனை பயண நிரல்களையும் ரத்தாக்கிவிடுகிறார்கள்.


இந்த நிலையில் அந்த அசுரர்களிடம் எதை யாசிக்கச் சென்றீர்கள்? கேட்பதைக் கொடுப்பவன் சிங்களவனானால், தந்தை செல்வா போர்க் களத்தைத் திறந்துவிட்டுச் சென்றிருப்பாரா? போர்க்களத்தில் அத்தனை கொடுமைகளையும் புரிந்த திமிர்கொண்ட சிங்களத் தலைவனிடம் எப்படி ஐயா உங்களால் கைகுலுக்க முடிந்தது?

புலிகள் அழிந்துவிட்டார்கள் என சிங்கள அரசு திரும்பத் திரும்பச் சொல்வதை நீங்களும் நம்பி விட்டீர்களா? தமிழர்களை மீண்டும் ஒரு முறை விற்றுப் பிழைக்கலாம் என்று நீங்களுமா முடிவு செய்து விட்டீர்கள்?

வேண்டாம் ஐயா! வரலாறு மீண்டும் ஒருமுறை திரும்பி வராது. இது புலிகளின் காலம் என்பதனால் வைத்த குறி தப்பாது! தமிழீழம் நோக்கிய ஈழத் தமிழர்களின் பாதையில் நீங்களும், நாங்களும் பணியாளர்கள் மட்டுமே. தலைவர்கள் தமிழீழ மக்கள் மட்டுமே. விதியை மாற்ற நீங்கள் முயற்சி செய்யாதீர்கள்! விதி உங்களை மாற்றிவிடும்.

:இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையை

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை ஆட்சேபம்

அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் வி உருத்திரகுமாரனுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் பாலித கோஹன, இது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தில், தமது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றின் நடவடிக்கை குறித்து அமெரிக்க அரசாங்கம் சட்டநடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

அண்மையில், உருத்திரகுமாரன் உட்பட்ட அமெரிக்காவில் வாழும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் ரொபட் ஒ பிளக்கை சந்தித்த வவுனியா முகாம்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியமையை அடுத்தே இந்த கருத்தை பாலித கோஹன வெளியிட்டுள்ளார்.

ரொபட் ஓ பிளக்கின் இந்த நடவடிக்கை குறித்து அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெவ் பேச்சாளரை 21 ஆம் திகதிக்கு முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: இலங்கையின் இறுதி உத்தரவு - பான் கீ மூன் கண்டனம்


ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உயர் அதிகாரியும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளருமான ஜேம்ஸ் எல்டர் வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இலங்கையின் இறுதி முடிவு, பான் கீ மூன் கண்டனம்
இலங்கையின் இறுதிமுடிவு இதுதான் என இலங்கை தனக்கு அறிவித்துள்ளது என்று யுனிசெவ் அமைப்பின் தென்னாசி யாவிற்கான பேச்சாளர் சர கிறோவ், "சி.என்.என்" செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் இந்த அறிவிப்பால் யுனிசெவ் அமைப்பு ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளது என்று அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் பெமெமன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் எல்டரால் வெளியிடப்பட்ட அறிக்கை புலிகளுக்கு ஆதரவாக அமைந்தது. அந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்தது.

ஜேம்ஸ் எலல்டர் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கவில்லை என அவர் மீது இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

யுனிசெப் பேச்சாளரை வெளியேற்றும் இலங்கை அரசாங்கம் முடிவு. பான் கீ மூன் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை வெளியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

செயலாளர் பான் கீ மூன் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே எல்டர் வெளியேற்றப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து பான் கீ மூன் விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமே பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஜேம்ஸ் எல்டரின் விடயத்தில் குறைக்கான முடியாது என்பதே பான் கீ மூனின் கருத்தாகும்.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பாரிய சேவைகளை செய்து வரும் ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் தம்முடன் இணங்கிக்கொண்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்தும் பான் கீ மூன் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் பேனர்கள்:கொந்தளிக்கும் காங்கிரசார்

நடிகர் விஜய், சமீபத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்வார் என்று தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. ஆனால், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் உள்ளிட்ட பல முனைகளிலும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த திட்டத்தை அவர் "கை' விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

அரசியலில் ஈடுபடுவது தொடர்பான தன் முடிவை விஜய் இன்னும் அறிவிக்காத நிலையில், அவரை ராகுல் காந்திக்கு இணையான தலைவராக வர்ணித்து, கோவையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை நகரம் முழுவதும் நடிகர் விஜய்யை வானளாவப் புகழும் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. ஒரு பேனரில், திருப்பாச்சி நினைச்சா, காங்கிரஸ் ஆட்சி' என்ற வாச கமும், மற்ற பேனர்களில் "விஜய்னா வில்லு, காங்கிரஸ்...' என்ற வாசகங்களும் இருந்தன.

காங்கிரஸ் என்பதற்குக் கீழே இருந்த வார்த்தை, வெள்ளை ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டிருந்தது. விஜய் நினைத்தால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும் என்பதைப்போல, வாசகங்கள் இருந்ததைப் பார்த்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப் படைந்துள்ளனர்.

வால்பாறை எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மகன் விஷ்ணு, இந்த "பிளக்ஸ்' பேனர்களை கோவை நகர வீதிகளில் வைத்துள்ளார். சட்டக் கல்லூரி மாணவரான இவரை, திடீரென மேடையேற்றி, முன்னிலைப்படுத்துவதில் வாசன் கோஷ்டியினரே கோவை தங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

அது மட்டுமின்றி, ஸ்டாலினுடன் இருப்பதுபோலவும், ஸ்டாலின் கை கொடுப்பது போலவும் போஸ்டர் அடித்து, கோவை நகரில் பல இடங்களில் ஒட்டியதிலும் காங்கிரசாருக்கு கடும் அதிருப்தி. இதெல்லாம் போதாதென்று, இப்போது நடிகர் விஜய்யை முன்னிலைப் படுத்தி, இவர் பிளக்ஸ் பேனர்களை வைத்திருப்பது, காங்கிரசாரின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

யுனிசெஃப் அதிகாரி வெளியேறியே ஆகவேண்டும்: சிறிலங்கா பிடிவாதம்

கடும் அழுத்தங்கள் மற்றும் அனைத்துலக நிர்ப்பந்தங்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) பேச்சாளர் சிறிலங்காவை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் என்று அரசு நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இதனை அடுத்து ஐ.நா.வின் மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் எதிர்வரும் 21 ஆம் நாளுக்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும்.

யுனிசெஃப்பின் சிறிலங்காவுக்கான பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்ட சிறிலங்கா அரசு, அவரது விசா பத்திரத்தை நேற்று முன்நாளுடன் இரத்துச் செய்திருந்தது.

எனினும் பின்னர் அவர் வேண்டிக் கொண்டதன் அடிப்படையில் 21 ஆம் நாள் வரை அவர் நாட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பரப்புரை நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஜேம்ஸ் எல்டர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார் என அரசு கூறியது.

அரசின் இந்த முடிவை யுனிசெஃப் அமைப்பு கடுமையாகக் கண்டித்திருந்தது. ஜேம்ஸ் எல்டர் தொடர்ந்தும் சிறிலங்காவில் தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்று அது வலியுறுத்தி இருந்தது.

ஜேம்ஸ் எல்டரை வெளியேற்றும் சிறிலங்கா அரசின் முடிவால் நாம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என்பதுடன் அதிருப்தியும் அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார் யுனிசெஃப் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ஆன் வெனுமான்.

எனினும் இந்த வெளியேற்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நோக்குடன் யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன. அரசின் முடிவு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என யுனிசெஃப் நேற்று முன்நாள் திங்கட்கிழமை எதிர்பார்ப்பு வெளியிட்டிருந்தது.

அப்படி இல்லையேல் இந்த விவகாரத்தை தாம் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டம் வரைக்கும் எடுத்துச் செல்லப் போவதாக யுனிசெஃப் அமைப்பின் பிராந்திய தகவல் தொடர்பு தலைமை அதிகாரி சாரா குரோவ் எச்சரித்திருந்தார்.

ஆனால், சிறிலங்கா அரசு தனது முடிவில் தீர்மானமாக இருக்கின்றது. அத்துடன், நாட்டை விட்டு வெளியேறுமாறு எல்டருக்கு சட்ட ரீதியான கடிதமும் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

எல்டரை வெளியேற்றும் முடிவில் சிறிலங்கா உறுதியாக இருக்கின்றது என்பதை சாரா குரோவ் இன்று உறுதிப்படுத்தினார்.

உதவி வழங்கும் நாடுகளும் அமைப்புக்களும் சிறிலங்காவுக்கு எதிராக ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது: 'த கார்டியன்'


சிறிலங்கா அரசின் நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு எதிராக உதவி வழங்கும் நாடுகளும் உதவி அமைப்புக்களும் ஓரே அணியில் திரண்டு நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரித்தானியாவின் புகழ்மிக்கதும் செல்வாக்குமிக்கதுமான நாளேடான 'த கார்டியன்' தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த த கார்டியனின் ஆசிரியர் தலையங்கம் வருமாறு:

கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த போரால் ஏற்பட்ட மனித விளைவுகளைச் சமாளிப்பதற்கான சிறிலங்கா அரசின் முயற்சிகள் வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளன.

உயர் அளவான படைத்துறைச் செலவீனங்கள், சுற்றுலாத்துறையின் வருமான வீழ்ச்சி, பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், தேய்ந்துபோன வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஆழிப்பேரலை என்ற பேரில் நிலைமையை மேலும் மோசமாக்க வந்த இயற்கைப் பேரனர்த்தம் அனைத்தும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை கீழ்நிலைக்குத் தள்ளியுள்ளன.

கட்டுமானங்களைத் திருத்துவதற்கான பணிகள், பொருளாதாரத்தின் மீட்டுருவாக்கம், இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் குடியமர்ந்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கான அத்தியாவசிய வசதிகளை வழங்குவது, இயல்பு நிலையை ஏற்படுத்தி அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது ஆகியவற்றை அனைத்துலக உதவிகள் இன்றிச் செய்வதற்கு சிறிலங்கா அரசிடம் வளங்கள் ஏதுமில்லை.

போர் முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் முன்பாகவே, சண்டையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தணிப்பதற்கான தயார் நிலையுடனும் அக்கறையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிறிலங்காவில் இருந்தன.

ஆனால், தமது படைத்துறை நடவடிக்கைகளில் தலையிடாமல் இருங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள் என்று தெரிவித்ததன் மூலம் சிறிலங்கா அதிகாரிகள் அனைத்துலக நிறுவனங்களைச் செயற்படாமல் தமது நீண்ட கரங்களால் கட்டிப்போட்டனர்.

சிறிலங்கா அரசின் இத்தகைய நடத்தை போரில் வெற்றியடைந்த பின்னர் மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தூரதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடைபெறவில்லை.

நாட்டின் வடபகுதியை அணுகுவதற்கு கொழும்பு இப்போதும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக சண்டை நடந்த பகுதிகளுக்கும், இடம்பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் செல்வதற்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பு முகாம்களை தடங்கல்கள் ஏதுமற்ற வகையில் கையாள்வதற்கு அனைத்துலக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடும் நோக்குடன், போர் முடிவடைந்த ஒரு வாரத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கொழும்பு வந்தார்.

பதிலாக, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களின் நிலையை- குறிப்பாக மழை காலத்தில் நிலைமையைச் சமாளிப்பதற்குத் தேவையான பொருட்களை ஐ.நா. நிறுவனங்கள் எடுத்து வருவதற்குக்கூட இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

வாராந்தம் இல்லை எனில் நாளாந்தம் மாற்றப்படும் விதிமுறைகளால் ஏனைய தொண்டு நிறுவனங்கள்கூட தடைகளைச் சந்தித்தன. அரசின் உத்தரவை அடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் சில அலுவலகங்கள் கூட மூடப்பட்டன.

சுயாதீன ஊடகவியலாளர்கள் அந்தப் பகுதிக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலாக, முகாம்களில் உள்ள மக்களை வெளியே விடுவதில் உள்ள தாமதம் மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதில் காட்டப்படும் தாமதம் என்பன குறித்து எங்கிருந்து விமர்சனங்கள் எழுந்தாலும் அரசு கடும் சீற்றத்துடன் எதிர்வினையாற்றுகிறது.

சிறிலங்காவின் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், அந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மேற்கொண்ட கீழ்மட்ட அணுகுமுறை புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இப்போது, ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை சிறிலங்கா அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளார்கள். முகாம்களில் நிலைமை பருவ மழையை அடுத்து மிக மோசமான துன்பமாகிவிடும் என்று அவர் கருத்துத் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு அரசுக்கு உதவிகள் வேண்டும். ஆனால், அது எப்படிப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை யாரும் கண்காணிக்கக்கூடாது. அதேநேரம் உதவிகளைக் கொடுக்கும் பணியை யார் செய்கிறார்களோ அவர்களும் கொடுமைப்படுத்தப்படுவார்கள்.

இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத, நியாயமற்ற நடத்தைக்கு எதிராக உதவி வழங்கும் நாடுகளும் அமைப்புக்களும் ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அந்த ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்


ஈழத் தமிழர்கள் பன்றிக் காய்ச்சல் வைரசுக்குப் பயப்பிடுகிறார்களோ இல்லையோ 'இந்தியா' என்ற வார்த்தையை அச்சத்துடனேயே நோக்குகிறார்கள்.

சமூக, கலாச்சார, அரசியல் பின்னணியில் இந்தியாவை ஆழமாக நேசித்த தமிழினம் இந்தியாவால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காந்தி, நேரு, இந்திரா காந்தி என்று பல இந்தியத் தலைவர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்துப் பெருமைப்பட்ட ஈழத் தமிழர்களை தற்போது காந்தியின் படம் கூட அச்சமூட்டுகின்றது.

இந்தியா என்ற தேசத்தில் ஈழத் தமிழர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பும், நம்பிக்கையும், நேசமும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. தற்போது ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருப்பது இந்தியா குறித்த அச்சம் மட்டுமே.

தற்போதும், இந்தியாவைத் தவிர்த்துவிட்டு ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நிரந்தரமான தீர்வு எதனையும் காண முடியாது என்று சிலர் கூறுவதும், நம்புவதும் கூட இந்த அச்சத்தினால் மட்டுமே.

பார்ப்பனிய சிந்தனையையும், வடக்கின் மேலாதிக்க மனப் பான்மையையும் எதிர்த்து உருவான திராவிடர் கட்சிகள் அண்ணாவின் காலத்திற்குப் பின்னால் பெரும் கொள்ளைக் கூட்டங்களாகவே மாறிவிட்டது. ஊழல் அரசியலில் தமது சுயத்தைத் தொலைத்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள் டெல்லியின் பிடியில் தம்மை அடமானம் வைத்துவிட்டு, அவர்களின் விருப்பங்களை மட்டுமே பிரதி பலிப்பவர்களாக மாற்றம் பெற்று விட்டனர்.



பேரறிஞர் அண்ணாவால் கட்டி எழுப்பப் பட்ட இனமான உணர்வு ஆட்சி அதிகாரத் திற்கான சமரசப் பொருளாக மாற்றம் பெற்றுவிட்டது. தமிழக மக்களின் உணர்வு களும் விருப்பங்களும் தமிழக அரசியல்வாதிகளால் விலைக்கு வாங்கப்படும் அளவுக்கு மலிவானதாக மாற்றம் பெற்றுவிட்டது.
அதனால், ஈழத் தமிழர்களின் அவலங்கள் எவையும் தமிழகத்தில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அப்படி ஏற்படும் நிலையிலும், டெல்லியால் அது கண்டு கொள்ளப்படப் போவதும் இல்லை.


முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் பின்பும் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்று நம்பினால் அதைவிடவும் ஒரு முட்டாள்த்தனம் இருக்கப் போவதில்லை.
டெல்லி அரசியலில் பலம் வாய்ந்த பாகமாக அங்கம் வகிக்கும் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஈழத் தமிழர்களுக்காகத் தமது வசதி வாய்ப்புக் களை இழக்கத் துணியப் போவதில்லை. டெல்லிப் பிரம்மாக்களும் ஈழத் தமிழர்களுக்கான எந்த நல்லதையும் இதுவரை செய்யவும் இல்லை. இனிமேலும் செய்யப் போவதும் இல்லை.

எம்மில் பலர் இந்தியாவின் ஈழத் தமிழர்கள் மீதான முன்னைய அக்கறைகளைக் 'கருணை' என்ற கண்ணோhட் டத்தில் இப்போதும் நினைவு கூருகிறார்கள்.

அமெரிக்கா - ரஷ்யா என்ற இரு துருவப் பனிப் போர் காலத்தில், சிங்கள அரசு அமெரிக்கா பக்கம் சாய்வதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே எண்பதுகளின் காலப் பகுதியில் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியா ஈழத் தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குவது போல, தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அள்ளி வழங்கியது.

அன்றைய காலத்தில், திட்டமிட்டு, ஈழத் தமிழ் இளைஞர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, பல பிரிவுகளாக்கிய பெருமையும் இந்தியாவைச் சேர்ந்திருந்தது.

ஈழத் தமிழர்களை ஒன்று படுத்தி வென்றெடுக்க வேண்டிய விடுதலைப் போராட்டத்தை தனது நோக்கத்திற் காகப் பல்வேறு ஆயுதக் குழுக்களை உருவாக்கியதன் மூலம் தமிழீழ இளைஞர்களின் நோக்கத்தையே இந்தியா சிதைத்தது.

அதற்குப் பின்னரும் கூட, இந்த ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைந்து விடக் கூடாது என்பதில் இந்திய அரசு மிகக் கவனமாகவே நடந்து கொண்டது.

தமது கட்டுக்குள் அடங்க மறுத்த விடுதலைப் புலிகளை ஏனைய ஆயுதக் குழுக்கள் மூலம் நிர்மூலமாக்கும் திட்டத்தையும் அரங்கேற்றியது.

ஆக மொத்தத்தில், ஈழத் தமிழ் இளைஞர்களின் சிங்கள எதிர்ப்புணர்வை இந்தியா தனக்குச் சாதகமாக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது பிராந்திய வல்லாதிக்க விரிவாக்கத்திற்காக மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொண்டது. இனவாத அமைப்பாக மாற்றம் பெற்றிருந்தாலும் ஜே.வி.பி. இந்தியா குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து நூறு வீதம் சரியானதே.


'இலங்கையில் நடைபெற்று முடிந்த அத்தனை அழிவுகளுக்கும் இந்தியாவே காரணம்' என்று ஜே.வி.பி. கூறிய கருத்தை யாராலும் நிராகரித்துவிட முடியாது.
'ஈழத் தமிழர்கள் பிளவுபடாத இலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக வாழவேண்டும்' என்ற இந்திய சிந்தனை உண்மையாக இருந்திருந்தால் இலங்கைத் தீவில் இந்த அளவுக்கு இரத்த ஆறு ஓட வேண்டி இருந்திருக்காது. இலங்கையில் இரண்டு இனங்களுக்கிடையே பிணக்குகள் உருவாகவும், அவை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக விரிவடைந்ததற்கும் இந்தியப் பின்னணியே காரணமாக இருந்ததை மறுத்துவிட முடியாது.

இந்தியப் பின்னணியுடன் இணைத்து ஈழத் தமிழர்களை அச்சத்துடன் நோக்கிய சிங்கள இனம், தமது சுய பாதுகாப்புடனான துவேசத்தை வளர்த்துக் கொண்டது. அந்த இந்தியப் பின்னணி குறித்த அச்சம் சிங்கள வர்கள் மத்தியில் எழுவதற்கு ஈழத் தமிழர்களின் இந்தியா சார்ந்த நம்பிக்கையே காரணமாக அமைந்தது.

இதனைப் பயன்படுத்தியே இந்தியா தனது காய்களை நகர்த்தியது. காலத்திற்குக் காலம் தமிழர்களைப் பலி கொடுத்துத் தனது காரியங்களை நிறைவு செய்தது.


விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கி, ஈழத் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்குத் தேவையான அத்தனை வளங் களையும் சிறிலங்காவிற்கு அள்ளி வழங்கிய இந்தியா, இறுதிப் போர் நடந்த காலப் பகுதியில், அவலத்தை எதிர் கொண்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முயன்ற நாடுகளையும் தடுத்து நிறுத்தியது.

அதற்கும் அப்பால், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை மிகக் கொடூரமாக அதி பயங்கர கனரக ஆயுதங்களால் கொன்று, போர்க் குற்றம் புரிந்த சிங்கள அரசை மேற்குலகின் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றிய ஈனச் செயலையும் புரிந்து தமிழீழ மக்களின் இறுதி நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்தது.
இத்தனை கொடூரங்களுக்கும், இத்தனை துரோகங் களுக்கும் பின்னரும் இந்தியா தன் நிலையை மாற்றிக் கொள்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
முள்ளிவாய்க்கால் முதல், வவுனியா முள்வேலி முகாம் வரை ஈழத் தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக மேற்குலகு கொண்டுள்ள அக்கறையில் ஒரு துளி அளவாவது இந்தியா கொள்ளவில்லை.

இந்த உண்மைகளிலிருந்து நாம் தெளிவு பெற வேண்டும். இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழர்களது துயரங்களைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமானால், ஈழத் தமிழர்கள் தமது இந்தியா சார்ந்த நினைவுகளிலிருந்து விடுபட வேண்டும்.


பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது கூர்மையடைந்து வரும் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியை சிங்கள அரசு தனக்குச் சார்பானதாக மாற்றியது போலவே, ஈழத் தமிழர்களும் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சார்பானதாக்கிக் கொள்ளவேண்டும்.

'ஈழநாடு'

காந்தியும், நேருவும் இன்றைக்கு இருந்திருந்தால் ஈழம் மலர்ந்து இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சிறுபான்மையான இசுலாமியர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று சின்னா சொல்ல. அப்படி எல்லாம் இல்லை என்று காந்தியும், நேருவும், மற்ற அரசியல் தலைவர்களும் எவ்வளவு உத்திரவாதம் கொடுத்தும் நில்லேன் என்று தனி நாடாக போகின்றோம் என்று அடம் பிடித்து நின்ற சின்னாவால் தனி நாடாக பாக்கிட்த்தானம் மலர்ந்தது.

இப்படி ஒரு பிரிவினை பிறக்கப்போகிறது என்ற பேச்சுகள் எழுந்த உடனேயே வடக்கிலே கலவரம் தலைவிரித்தாடியது. கடைசியாக சரி போய் சேருங்கள் என்று காந்தியின் தலைமையில் முடிவு எட்ட நேருவும் அதை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தார்.

அந்த பிரிவினையும் ஈழம் போல் இரத்த பிரிவினையாகத்தான் இருந்தது. ஆனால் அன்றைக்கு தனி நாடு கேட்ட மக்களின் மீது இப்படி காந்தியின் தலைமையில் உள்ள அரசியலர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடவில்லை.
மாறாக அந்த பயத்தை போக்கும் விதத்திலும் நம்பிக்கையும் பிறக்கும் விதத்திலும் நடந்து காட்டியும், மேலும் நடந்து காட்டவும் முற்பட்டார்கள்.

ஒன்றாகவே இருந்து பிரச்சனைகளை கொண்டு நகருவதற்கு பதில் பிரிந்து நிம்மதியாக இருக்கலாம் என்ற முன்னோசனை அவர்களுக்கு இருந்தது.

மேலும் நம்பிக்கை இல்லாத இடத்தில் இனியும் நம்பகமாக நடந்து காட்டினாலும் அவர்கள் நம்புவதற்கு இல்லை என்று தெளிவாக பாக்கிட்த்தானத்தை தனியாக செல்ல அனுமதித்தார்கள் அந்த பழுத்த அனுபவம் உள்ள அரசியலர்கள்.

ஆனால் இன்றைக்கோ ஈழம் மலர்ந்தால் இந்தியாவுக்கு தீங்கு என்று எவனோ சொன்ன ஆரூடத்தை கையில் வைத்துக்கொண்டு வரிசையாக அரிதாரம் பூசி கதகளையை ஆடி நிற்கிறது அதே பேராயத்தில் வந்த அரசியலர்கள்.

அன்றைக்கு நேருவுக்கும், காந்திக்கும் இந்தியாமீது கொண்ட நம்பிக்கையை இன்றைய அரசியலர்கள் கொள்ள பயம் கொள்வதேன் என்று விளக்குவார்களா.

இலங்கையில் அவர்களது மண்ணில் விளைந்த பிரிவினை. அதை சிங்களர்களாவே விதைத்தார்கள், அவர்களாகவே தான் அறுவடை செய்யவேண்டும். இதில் இந்தியாவுக்கு என்ன பங்கு இருக்க முடியும். தனது மூக்கை ஏன் இப்படி தானா கொண்டு நுழைக்கவேண்டும்.

பிறகு மூக்கறுபட்ட சூர்ப்பனகை போல் ஓலமிட்டு இப்படி ஒட்டு மொத்த தமிழர்களையும் அழித்து, மூக்கறு பட்டதிற்கு பழி தீர்த்துக்கொண்டோம் என்று பெருமையாக ஏன் சொல்லவேண்டும்.

மூக்கை நுழைத்தது இந்தியாவின் தவறு, அப்படி நுழைத்தற்கு தான் மூக்கறு பட்டீர்கள், பிறகு ஏன் குய்யோ முறையோ என்று ஏன் கதர வேண்டும்.

ஒரு வேளை காந்தியும், நேருவும் இன்றைக்கு இந்திய அரசியலை கட்டுப்படுத்தும் நிலையில் இருந்திருந்தால், ஒன்றாக இருக்க முடியாவிட்டால் தனியாக இருந்துவிட்டு போங்கள் என்று தான் தைரியமாக முடிவு எடுத்து வாழ்த்தி அனுப்பி இருப்பார்கள். இப்படி முதுகில் குத்தும் செயல்கள் எல்லாம் செய்திருக்க மாட்டார்கள் அந்த மாவீரர்கள்.

ஏன் இப்போது சீனா வடக்கில் தனது இரணுவத்தை உள்ளே நுழைத்து பொப்பொபே அடி காட்டுகிறதே போய் காட்டவேண்டியது தானே உங்கள் இந்திய வீரத்தையும் சூரத்தையும். எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால் போட்டு அடியோ அடி என்று அடிப்பார்கள். அடி விழும் என்று இருந்தால் எல்லை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது, இராணுவம் வந்தால் என்ன, விமான படை வந்தால் என்ன. எல்லை நன்றாக பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை விடுவார்கள் இந்த மானம் கெட்ட பேராய அரசியலர்கள்.

Panimalar

பிபிசியின் கபடம் - இலங்கைக் கொலைகளை மூடி மறைக்க உதவுகிறதா?


உலகத்தில் மிக மோசமான செய்தி இரட்டடிப்பு இலங்கையில் கடந்த பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் இலங்கை முன்னணி வகிக்கின்றது. இலங்கை அரசிற்கு எதிராக செய்தி வெளியிடும் செய்தி நிறுவனங்கள் இலங்கையிற் செயற்பட முடியாமற் பண்ணப் படும் என்று இலங்கை பகிரங்கமாகவே அறிவித்தது. ராயட்டர் செய்தி நிறுவனம் இலங்கை அரசு கொடுக்கும் செய்திகளை மட்டுமே தெரிவிக்கின்றது. வன்னி வதை முகாம்களில் நடக்கும் வன்முறைகளை கற்பழிப்புக்களை வெளியிட்டதற்காக சனல்-4 இன் செய்தியாளர் கைது செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டார். அத்துடன் சனல்-4 தன் இலங்கைச் செயற்பாட்டை முடிக்கவில்லை. எங்கு செய்து இரட்டடிப்பு செய்யப் படுகிறதோ அங்கிருந்து செய்திகளைக் கொண்டுவருவதுதான் சிறந்த ஊடகத்தின் கடமை. தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை இதிலிருந்து பிபிசி தவறிவிட்டது.

யூதர்கள் கையில் பிபிசி?
மார்கரெட் தச்சரின் ஆட்சிக்கு முன்னர் பிபிசியில் சிறந்த முற்போக்குச் சிந்தனையுடைய ஊழியர்கள் பிபிசியில் இருந்தனர். மத்தியகிழக்கு போரில் இஸ்ரேலின் பல அட்டூழியங்களை பிபிசி வெளிக் கொணர்ந்தது. அப்போது பிபிசி இடது சாரிப் போக்குடையது சோவியத் சார்பானது என்ற குற்றச் சாட்டுக்கள் பிபிசி மீது சுமத்தப் பட்டது. இப்போது பிபிசியில் சுமத்தப் படும் குற்றச் சாட்டு அது யூதர்களின் கையில் விழுந்து விட்டது என்பதாகும். அது உண்மையா? அமெரிக்க சி.என்.என் பிபிசி ஆகியன தமக்கு எதிரானவை என் உணர்ந்துதான் அரபு மக்கள் அல்ஜசீரா தொலைக் காட்சியை ஆரம்பித்தனர் என்றும் கூறப் படுகிறது.

பிபிசியின் கபடம்.
நேற்று பிபிசியானது, சனல்-4 தொலைக்காட்சியின் தமிழர்களை நிவாணமாக்கி கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டு சுட்டுக் கொல்லும் காணொளி தொடர்பாக பிரித்தானியத் தூதுவர் நிஹால் ஜயசிங்கவைப் பேட்டி கண்டது. பொதுவாக சர்ச்சைக்குரிய விடயங்களைப் இப்படிப் பேட்டி காணும் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் பேட்டி காணுவதை வழக்கமாக எல்லா தொலைக்காட்சி செய்திச் சேவைகளும் வழக்கமாகிக் கொண்டுள்ளன. ஆனால் நிஹால் ஜயசிங்கவைப் பேட்டி காணும் போது பிபிசி அதைச் செய்யாதது ஏன்?
இலங்கையின் இனக் கொலையைப் பற்றி அறிந்தவர்களையோ அல்லது குறிப்பிட்ட காணொளியை வெளிக் கொண்டு வந்த ஊடக அமைப்பைச் சேர்ந்தவர்களையோ ஏன் பேட்டி காணவில்லை? இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு பெருந்தொகையைச் செலவிடுவதை நாம் அறிவோம்.

பேட்டி காணும் போது முதற் கேள்விக்கு ஏற்கனவே மனப் பாடம் செய்துவைந்திருந்து ஒப்புவிக்கும் மூன்றாம் வகுப்புப் மாணவன் போல் தன் பதிலை ஒப்புவித்தார். இது இலங்கை அரசிற்கு தனது பரப்புரையை மேற்கொள்ள பிபிசி மேடை அமைத்துக் கொடுக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

குறித்த காணொளி என்று, எப்போது, எங்கு எவரால் பதியப் பட்டது, கொல்வது யார், கொல்லப் படுவது யார் என்பது தெரியாதென்று நிஹால் ஜயசிங்க பதிலளித்தார். பிபிசி செய்தியாளர் அதில் உள்ளவர்கள் இலங்கை இராணுவம் போல் உடையணிந்துள்ளனரே என்று கேட்டதற்கு விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம் போல் உடையணிந்து செயற்படுவது எல்லோரும் அறிந்த விடயம் என்றார் நிஹால் ஜயசிங்க.

ஊடகங்களை சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்தால் இது தொடர்பான பிரச்சனை எழாது என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிஹால் ஜயசிங்க அங்கு பிரித்தானியாவின் டெய்லி ரெலிகிறாf இனதும் மெயில் ஒன் சண்டேயினதும் பத்திரிகையாளர்களை அங்கு தான் அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகையாளர்கள் அங்கு அனுமதிக்கப் படுவதில்லை என்பது உண்மையில்லை என்றும் புரட்டினார். டெய்லி ரெலிகிறாf இனதும் மெயில் ஒன் சண்டேயினதும் இலங்கை அரசுடன் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை பிரித்தானியா வாழ் தமிழர்கள் நன்கு அறிவர். இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு பெருந்தொகையைச் செலவிடுவதை நாம் அறிவோம்.

பானையில் இருந்தது அகப்பையில் வந்தது -
தமிழர் சரித்திரம் முடிந்துவிட்டதாம்!
இன்னொரு மனித உரிமை தொடர்பான விசாரணை சம்பந்தமான கேள்விக்கு பதிலளிக்கையில் கேள்விக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இலங்கையில் தமிழ்ர்களின் சரித்திரம் முடிந்து விட்டது என்றார் நிஹால் ஜயசிங்க. பின்னர் தன்னைத் திருத்திக் கொண்டு விடுதலைப் புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டதென்றார்.

விலைபோகும் ஊடகத்துறையினால் விபரீதமாகும் தமிழர் நிலை?

தமிழீழப் போராட்டமும் தமிழ் ஊடகங்களும்:
விலைபோகும் ஊடகத்துறையினால் விபரீதமாகும் தமிழர் நிலை?

அச்சு ஊடகம் இயற்கை விதியாய் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று கேட்பு ஊடகமாகவும், காட்சி ஊடகமாகவும் வளர்ந்துள்ளது. '' நகர்ப் புலவர் பேசும் உரையை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்'' - எனும் பாரதியின் கனவு அதனினும் அதிகப் பாய்ச்சல் பெற்று புவிக்கோளம் தாண்டி அண்டவெளியின் அருகிருந்து கேட்குமாறும் வளர்ச்சி பெற்றுள்ளது.

''நவீன நாகரீகத்தில் முக்கிய சின்னங்களிலொன்று பத்திரிக்கை தொழில்'' என்றான் பாரதி. ஆனால் தற்கால ஊடகங்கள் அவை எவ்வடிவத்தினதாயினும், அதன் இயங்குதளம் எதுவாகிலும் மேற்கூறிய பேற்றிற்கு உரியவாறு உள்ளனவா? எனில் ஐயமே!,

தமிழர் வாழ்வின் இருள் கிழித்து பெரு நெருப்பாகத் தோன்றிய தமிழ்த் தேசியத்தின் எழுத்துக்களை, கருத்துக் கருவிகளை ஏந்தி படைவகுத்தவை தமிழரின் ஊடகங்கள்தான். சமூகப் படிநிலைகளை தகர்த்தெறிந்து சமத்துவ, பாலியல் ஓர்மைப்பண்பு, புரான பொருளியல் வாழ்வு என பல தளங்களில் இயங்கிய தமிழ் ஊடகங்கள் தாய்தேசத்தின் குரலாய் ஒலித்ததுவும் மறக்கப்பட முடியாதவை ஆனால் இன்று போராட்டம் ஓர் புதிய பரிமாணத்தை எட்டியுள்ள இவ் இக்கட்டான சூழலில் தமிழ் ஊடகங்களின் நிலை என்னவாக உள்ளது?

''ஊடகச் சுதந்திரமே எல்லா வகையான சுதந்திரத்திற்கும் அடிப்படையான ஒன்றாகும். சமுதாய நியதி, மனித நேயம், சமூக நல்லுணர்வுகள், பொருளாதார மேம்பாடு தேச விடுதலை தாய்மொழிக்கல்வி இவற்றின் வளர்ச்சியில் ஊடகச் சுதந்திரம் பங்கு பெறுகின்றது''.

மேற்காணும் வரையறைக்குள் இன்றைய ஊடகச் சுதந்திரம் பங்காற்றுகிறதா? நுகர்வுப் பொருளாக சந்தை மதிப்பை மட்டுமே இலக்காக கொண்டு அதாவது வியாபார நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் ஊடகங்கள் தமது இலாப நோக்கிற்காக மட்டுமே ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துகின்றன. வளர்க்கின்றன. First Press Commission '' பொது அதிகாரத்தின் எந்த வகையான தலையீடும் இல்லாமல் கருத்துக்களை கொண்டிருக்கவும் செய்திகளைப் பெறவும், அச்சிட்டும், வெளியிடவும் கருத்துரைக்கவும் காட்சிப்படுத்தவும் இருக்கின்ற சுதந்திரம் ஊடகச் சுதந்திரம்'' என வரையறுத்தது. மானிடவியல்.

சமகாலத்தில் நாம் நோக்கினால் பெரும்பாலான ஊடகங்கள் எவ்வகை ஊடகமாயினும் அதிகாரத்தின் தலையீடுகளையும், தமது தன்னல நோக்கத்திற்காக பொதுக்கருத்தை உருவாக்க ஊடகத்தை பயன்படுத்துவதையும் நாம் கண்முன்னே காணமுடியும் .

உதாரணமாக 2009 மே 19 திகதிக்கு பின்னரான தமிழ் ஊடகத்துறையின் செயற்பாடுகளை அவதானித்து வருவோர்க்கு இது நன்குபுலப்படும் விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லமை சிதைக்கப்பட்டதும் தமிழூடகங்கள் தமிழீழ தேசியத்தலைமை சார்ந்து தத்தமது கருத்துக் கணிப்பை வெளியிட்டதும், அதன் தொடர் நிகழ்வாக இன்றும் ஒரு பொதுக்கோட்பாடு இன்றி செயற்பட்டு வருவதும் வேதனைக்குரியதே இதில் தன்னல நோக்கிற்காக பொதுக்கருத்தை உருவாக்கும் முயற்சியாக தமிழ் தேசிய தலைமை சார்ந்த கருத்துக்கள் வெளியானதும், அதில் அதிகாரத்தின் தலையீட்டால் சில ஊடகங்கள் , ஏற்புடமையில்லா செய்திகளை உருவாக்கி வெளியிட்டு வருவதையும் அவதானிக்கலாம். பெரும்பாலும் கருத்துருவாக்கங்கள் ஊடகங்களின் மனப்போக்கு, பணப்போக்கு சார்ந்து உள்ளனவேயன்றி சமூக யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இல்லை. இவ்வகையான கருத்துக்கணிப்புகள் பல நேரங்களில் பண்பாட்டு, மொழி, இன வரையறைகளுக்கு எதிராகவும் தேசிய விடுதலைக்கு எதிராகவும் திணிக்கப்படுகின்றன.

குறிப்பாக பல்வகை ஊடகங்களை இயக்குகின்ற நிறுவனங்கள் அதாவது அச்சு ஊடகம், கேட்பு ஊடகம், காணொளி ஊடகம் வலைப்பதிவு இணையங்கள் என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் எதேச்சதிகாரப் போக்கோடு இயங்குகின்றன. தமக்காக மக்களேயன்றி மக்களுக்காக தாம் இல்லை எனும் ஆணவப்போக்கில் செய்திகளை, கருத்துக்களை உருவாக்கி பரப்புகின்றன. செய்திகளைத் தருவது எனும் நிலைமாறி செய்திகளை உருவாக்கி பரப்புகின்றன. இப்போக்கு தமிழ் சமூகத்திற்கு அச்சுறுத்தலையே உண்டு பண்ணியுள்ளது. தகவல் யுகம் என அழைக்கப்படும் தற்காலம் ஊடக ஏகபோகத்திற்கு அடிகோலிவிட்டது.

மேலும் செய்திகளை முந்தித்தருவது எனும் வியாபாரப் போட்டியில் சமூகப்பாதுகாப்பிற்கும், சமூக ஒற்றுமைக்கும் எதிராக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக முள்ளிவாய்காலில் முடிவுற்ற யுத்தம் அங்கு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை பல சர்வதேச, ஆங்கிலத் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இதன் பாரதூர விளைவுகளை ''பொறுப்பற்றதனம் '' என இன்றும் பல ஊடகங்கள் கண்டித்து வருவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
தமிழீழப் போராட்டமும் தமிழ் ஊடகங்களும்

சிங்கள இனவெறியாட்டத்தின் கோர முகம் மறைத்து அதன் ''உலக ஊதுகுழலாக'' விளங்கியமையாலேயே ''இந்து'' பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் சிங்கள அரசின் உயரிய விருதான ''ஸ்ரீலங்க ரத்னா'' பெற்றார். ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப்பின் தமிழகத்தின் தமிழ் ஊடகங்கள் கனத்த மௌனம் காத்தன. இயல்பில் மனித நெஞ்சில் சுரக்கவேண்டிய மனிதாபிமான ஈரம் கூட ஈழத்தமிழ்மக்களின் இன்னல்கண்டு சுரக்கவில்லை-மிக முக்கியமாக ஐ.நா.மன்றம் உள்ளிட்ட சர்வதேச மனிதநேய அமைப்புகள் இலங்கை நிலைவரம் சார்ந்து கதுத்துரைக்கும் போது. இருண்ட கண்டமாக தமிழர்களின் பூர்வீகத்தாயகம் பலிபீடமாக மாறிய பின்பும்கூட இனவாத அரசின் பயங்கரவாதத்திற்கு எதிராக, மனித உரிமைகளுக்கு ஆதரவாக பணியாற்றியிருக்க வேண்டிய ஊடகங்கள் அக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருந்தன. முள்ளிவாய்க்காலில் நடந்த நரபலிகளை குண்டு வீசி அப்பாவிக் குழந்தைகளை கொன்றபோதும், ஏ-9 நெடுஞ்சாலையை மூடி பொருளாதார முற்றுகைக்குள் தமிழர் தேசத்தையே திறந்தவெளி சிறைக்கூடமாக்கி தமிழர்களைப் பட்டினிப்போட்டுக் கொன்ற ஈனச்செயலை உரியவாறு கண்டித்து மனித நேயக் கடன் கூட ஆற்றாமல் தமிழ் ஊடகங்கள் ''ஊடகத் தர்மம்'' காத்தன.

''நடுநிலையான தமிழ் ஊடகங்கள்'' எனக் கூறப்படும் சில ஊடகங்களில் 2002 தொடக்கம் 2009 மே 19 வரையிலான காலகட்டத்தில் ஆய்வு நோக்கில் தமிழீழப் போராட்டச் செய்திகளைப் பார்த்தால் அதன் நடுநிலைமையும் நமக்கு ஐயத்தையே ஏற்படுத்தி இருந்தது. அடிப்படை மனிதாபிமானத்தால் எழும் இரக்கம் கூட தன் சொந்த இனத்தின் மீது பல ஊடகங்களுக்கு இல்லாமல் போனது ''வரலாற்று சோகமே''.

தங்கள் வாழ்வை அர்ப்பணித்து சமூக மாற்றங்களுக்கு கடனாற்றும் நபர்களையும், இயக்கங்களையும் உதாசீனம் செய்து அவர்களைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்து மாற்று சமூகத்திற்கான முன்னெடுப்புகளை முனைமழுங்கச் செய்கின்றன

மொழிக்கொலை, பண்பாட்டுச் சீரழிவு, சமூக வன்முறை, நுகர்விய கலாச்சாரம் விற்பனை முதன்மை போன்ற நச்சுவேர்கள் கிளைபரப்பி நிற்கும் ஊடக உலகின் ஊடாக இருள் கிழித்தெழும் வான் கதிராக நம்பிக்கை தரும் நல்ல ஊடகங்களும் தமிழில் காணப்படுகின்றன.


தொலைக்காட்சி அலைவரிசைகளில் பல முன்னணித் தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் தேச விடுதலையின் குரலாக தமிழ்தேசியத்துக்கான மாற்று ஊடகமாகி வளர்ந்து வருகின்றது.


இதழியல் துறையில் இலத்திரனியல் துறையில் இணைய உலகில் பல இதழ்களின் எதிரணியில் கொள்கை களத்தில் சமூக அக்கறையோடு, வரும் தலைமுறையில் தேசியத்தை நோக்கிய வாழ்விற்கு கடனாற்றும் வண்ணம் புதிய தமிழர் இதழ்கள் அணிவகுக்கின்றன.
இந்த மாற்றங்கள் தமிழ் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கி வருகையில் தமிழகத்தில் மீண்டும் சிங்கள அரசின் கையாலாகாத்தனம் மீண்டும் அரங்கேறுகிறது

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படத்துக்கு விடுதலைப்புலிகள் பணம் கொடுத்தனர்’, ‘தமிழ் திரையுலகத்தினர் பலரும் புலிகளிடம் பணம் பெற்றார்கள்’ என சிறீலங்கா அரசு முன்வைத்த ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் இப்போது , தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது .

அத்துடன் ராஜீவ் காந்தி கொலை சார்ந்த சில விவரங்களை சிங்கள அரசு வெளியிடப் போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவரான கே.பி-யின் வாக்குமூலமாக வெளியாகப் போகும் அந்த விவரங்கள், தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கப் போவதாகவும் பொய்யான தகவல்களை, கொழும்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள்.எழுதி வருகின்றனர்

ஆரம்பத்தில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியும் எழுதியும் வந்த ஊடகங்கள் பின் முள்ளிவாய்க்காலுடன் தமிழர்களின் தலைவிதியே மாறியுள்ளதாகவும் கற்பிதங்களை கூறி வந்தன .

தமிழருக்கு எதிராக தொடர்ந்து வரும் சர்வதேச சதி வலைப்பின்னலின் விளைவால் மலேசியாவில் கைது செய்து சிறீலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட கேபி பற்றி கொழும்பின் ஊடகங்கள் அது தமிழ் ஆங்கில சிங்கள ஊடகங்கள் என்ற வேறுபாடின்றி ஊகங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறான போலியான கற்பனைகள் கலந்து நியம்பாதி நிழல்பாதி என வெளிவரும் இக்கருத்துரைப்புக்களை குறிப்பாக புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் தலைப்புச்செய்தியாக வெளியிட்டு மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை நிலைகுலையச்செய்தே வருகின்றன.

கொள்கைப் பற்றோ இலட்சிய உறுதியோ இல்லா இவ் ஊடகங்கள் தாமே முதலில் செய்திகளை வெளியிட்டோமென்கின்ற பெருமிதத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் தவறினையே செய்து வருகின்றனர். இதை யாரவது சுட்டிக்காட்டினால் ஊடக தர்மம் என ஒரு உருப்படாத வார்த்தையினை சுட்டிக்காட்ட முனைகின்றனர் . உண்மையில் சிறீ லங்காவிலிருந்து வெளிவரும் கணிசமான சிங்கள ஆங்கில ஏன் தமிழ் ஊடகங்கள் எல்லாம் தேசிய வாதம் என்ற போர்வையில் இனவாதத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டு மேலும் மேலும் ஊடக வாயிலாக தமிழ்ர்களை அச்சுறுத்தி வருகையில் வருகையில் தமிழ் ஊடகங்கள் மேற்சொன்னவர்களின் கருத்துக்களை கட்டுரைகளை தமது ஊடகங்களில் முதன்மைகுடுத்தி வெளியிடுவதானது வருந்தத்தக்கது. உண்மையில் இந்த நிலை மாற வேண்டும் தமிழ் தேசியம் காப்பாற்றப்படுவதற்கு ஏற்ற வகையில் தமிழ் ஊடகங்கள் பணி புரிதலே அவர்கள் தமிழ் இனத்துக்கு செய்யும் கடமையாகும்.


சிங்கள ஊடகங்கள் புலிகள் பயங்கரவாதிகள் கேபி அது சொன்னார் இது சொன்னார் என்று ஊகங்களை வெளிப்படுத்தும் போது அதை நாமும் எமது ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்த்து தமிழினத்தினதும் விடுதலைப்புலிகளினதும் நியாங்களை வெளிப்படுத்தும் ஆக்கங்களையும் கட்டுரைகளையும் வெளிப்படுத்தி சோர்வு நிலையில் இருக்கும் தமிழர்களைநிமிரவைக்க வேண்டியதும் எமது கடமையாகிறது நீதி, நிர்வாகம் போன்றே நற்சமூக வடிவாக்கத்தில் ஊடகமும் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. என்பதை நாம் மறக்கக்கூடாது
கே.பி., இப்போது சிங்கள அரசின் பாதுகாப்புப் படையின் விசாரணையில் எப்படி இருக்கிறார் என்கிற விவரம் முழுமையாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் கே.பி-யிடம் எக்கச்சக்கமான கையெழுத்துகள் வாங்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. அதோடு அவருடைய வாக்குமூலமாகச் சொல்லும்படி சில விவரங்களைப் பதிவு செய்கிற வேலையையும் சிங்கள அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளை ராஜீவ் கொலை வழக்கில் கே.பி-க்கு மிக முக்கியப் பங்களிப்பு இருப்பதாகவும், கொலை சம்பவம் நடந்தபோது கே.பி. பெங்களூரில் இருந்ததாகவும் இந்திய உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. சந்தேகிக்கிறது.

2002-ம் ஆண்டு கே.பி-யை வளைப்பதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நியூஸிலாந்து போனார்கள். ஆனாலும் அவர்களால் கே.பி-யை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இப்போது சிங்கள அரசிடம் சிக்கி இருக்கும் கே.பி-யை ராஜீவ் கொலை குறித்த விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பக் கோரி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது . ஆனால், அதைச் செய்யாமல் ராஜீவ் கொலைச் சதி குறித்த கேள்விகளை சிங்கள அரசுக்கு முறைப்படி அனுப்பி வைத்து, ஆதார பூர்வமாக பதில் வாங்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்கள அரசு ராஜீவ் கொலை விவகாரத்தில் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டும், பேசியும் வந்த தமிழகத் தலைவர்கள் பலரையும் பழிவாங்க முனைகிறது!” …

”ராஜீவ் கொலைச்சதியில் சம்பந்தப்பட்ட இந்தியர்கள் யார் யார்?

கொலைத் திட்டத்தை நிறைவேற்ற பண உதவி செய்தது யார்?

ராஜீவ் கொலை செய்யப்படப் போகிற தகவல் யார் யாருக்கெல்லாம் தெரியும்?
இதுபோன்ற கேள்விகளுக்கு கேபியிடமிருந்து விடை காண முயல்கிறது சி.பி.ஐ.! அதன்படி, ராஜீவ் கொலையாகப் போகும் தகவல் தமிழகத் தலைவர்கள் சிலருக்கு முன்கூட்டியே தெரியும் எனச் சொல்லியும், அத்தகையவர்களின் பட்டியலை வெளியிட்டும் தமிழகத்தில் பீதியைக் கிளப்புகிற திட்டத்தை சிங்கள அரசு கையில் எடுத்துவிட்டது. புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தலைவர்கள் யார் என்பதைகவனத்தில் எடுத்தே இது அமையக்கூடும்!”.இதை உண்மையாக்குவதுபோல் சுப்பிர மணியசுவாமியின் தகவலும் ஊடகங்களூடக வெளிவந்துள்ளன

ராஜீவ் கொலை குறித்து சந்திராசாமி மற்றும் சுப்பிர மணியன் சுவாமியிடம் விசாரிக்கும்படி ஜெயின் கமிஷன் சொன்னதே… அவர்களிடம் விசாரணை நடந்ததா? ஈழ எழுச்சியைத் தடுக்கிற விதமாக ராஜீவ் கொலை விவகாரம் குறித்து கே.பி. சொன்னதாக சிங்கள அரசு எதை வேண்டுமானாலும் பரப்பிக் கொள்ளட்டும்! மடியில் கனமிருப்பவர்கள்தானே பயப்பட வேண்டும்?” என நிதானமாகச் சொன்னார் நெடுமாறன்.

, ”சிங்கள அரசின் வெறித்தாண்டவ இன அழிப்புக் கோரங்கள் இப்போது வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இன அழிப்புத் துயருக்கு இந்திய அரசு தொடர்ந்து துணையாக நின்றது. உலக சமூகமே இந்திய, இலங்கை அரசுகளின் மேல் கடுமையான கோபத்தில் இருக்கிறது. அந்தக் கோபத்தைத் திசை திருப்பும் விதமாகத்தான் கே.பி-யிடம் ராஜீவ் கொலை குறித்து விசாரிக்கப் போவதாக இப்போது மத்திய அரசு பரபரப்பு காட்டுகிறது. கே.பி-யின் வாக்குமூலமாக பழிச் செய்திகள் பரப்பப்பட்டாலும், அதனைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். ஈழத்துக்காக எழுகிற குரல்களை எல்லாம் மிரட்டி அடக்க நினைக்கும் சதித்திட்டம் ஒருபோதும் ஈடேறாது!” எனக் கொந்தளித்தார் வைகோ.

வாக்கு வங்கி, கோஷ்டி அரசியல், பரஸ்பர பழிதீர்ப்பு என்பதெல்லாம் தாண்டி இன்னும் எதற்கெல்லாம் ராஜீவ்காந்தியின் ஆன்மாவை இழுத்துக்கொண்டே இருப்பார்களோ..?!என்ற ஏக்கம் ஒருபுறமிருக்க ....

உலகமயம், பெரு முதலாளியம், நுகர்வியச் சீர்கேடு. தன்னல உந்துதல் போன்றவை அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் இதற்கு மாற்றாக சமூக அறச்சிந்தனையோடு தேசிய அடையாளத்தைக் காப்பாற்றும் பணிகளுக்கான அர்ப்பனிப்போடு ஊடகங்கள் உலா வரவேண்டும். அதிலும் தேசிய இனச்சுரண்டல், அண்டை தேசிய இன வன்மம் மற்றும் உரிமை மறுப்பு, தன்னல முதன்மையில் மக்களை அடகு வைக்கும் அரசியல் தலைமைகள், கொள்கை வழி நெறிப்படுத்தப்படாத படிநிலை ஒடுக்கு முறையை விரும்பி வரவேற்கும் கட்சிப் பற்றாளர்கள், பணம், பதவி, பகட்டு இவற்றை இறுதி இலக்காக்கொண்டு வளரும் தலைமுறை என இருள்சூழ்ந்து நலிவுற்று இருக்கும் தமிழ்ச் சமூகத்தில் மண்ணுரிமை, வாழ்வுரிமை, அற அரசியல் உரிமை இவற்றை நெஞ்சில் ஏந்தி வரப்போகும் சந்ததியினருக்கான சமஉரிமைச் சமூகத்திற்காய் தமிழ்த் தேசத்திற்கான களம் தமிழ் ஊடகங்கள். உடைக்க வேண்டும் என உரிமையுடன் வேண்டுகின்றோம்

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA