Wednesday 19 August 2009

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உலகத் தமிழர் பிரகடனம் வெளியீட்டு நிகழ்ச்சி

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கு தடைவிதித்திருப்பதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன, நாம் அண்ணன் வைகோ அவர்களைத் தொடர்புகொண்டு இதுபற்றிக் கேட்டபோது...

இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. இலங்கையில் சிங்கள அரசின் வெறியாட்டத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மருந்து இல்லாமல் நாள்தோறும் நூற்றுகணகாணவர்கள் உயிர் இழக்கின்றனர்.

மேலும் போராளிகள் எனக் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. உலகம் கண்டிராத மாபெரும் அவலம் இலங்கை மண்ணில் நடந்து வருகிறது. சிங்கள இனவெறி படுகொலையில் இருந்து தப்பிய ஈழத் தமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த 6.5 கோடி தமிழர்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்தில் அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் சந்திந்திராத வெங்கொடுமைகளுக்கும் பேரிழப்புகளுகும் ஆளாகியிருகிறார்கள். இந்த இழி நிலையை நாம் மாற்றி அமைக வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டு எடுக்கும் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களை செய்வதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் அணியாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னோகி நகர்த்த முடியும். அதனால் உலகத் தமிழர் பிரகடனத்தை சர்வதேச சமுதாயத்தின் முன் வெளியிடுவதற்காக வரும் 20ம் தேதி நாம் ஒன்று கூடுகிறோம்.


இவ்வாறு அந்த செய்தி குறிப்பில்...

எப்பொழுதுமே ஈழத்தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் தான்


ஈழத் தமிழரின் இன்றைய நிலைமை மிகக் கவலைக்குரியதாகியுள்ளது என்று சொல்லுவதைவிட கேள்விக்குரியதாகியிருக்கின்றது என்று சொன்னால் சாலப்பொருந்தும். சர்வதேசத்திடமிருந்தாவது நீதி கிடைக்கும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயமும் பாதகமாகவே அமைந்து விடுகின்றது. இவை தற்செயலாகவோ அல்லது ஈழத்தமிழரின் பிரச்சினை தொடர்பான புரிதல் இல்லாததினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை என்பதனை, அண்மையில் நடந்த பத்மநாதன் அவர்களின் கைதும் அவர் உடனடியாகவே இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட சம்பவமும் தெளிவுபடுத்துகின்றது.

கடந்த மே மாத நடுப்பகுதியில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்தேறிய துயரச் சம்பவங்கள் இன்னும் மனதை வாட்டிவதைக்கும் நிலையில், இவ்வாறான சதிச் செயல்கள் சர்வதேசத்தின் மீதுள்ள சிறுநம்பிக்கையையும் இல்லாமற் செய்துவிட்டிருக்கின்றது.

இவ்வளவு இழப்புக்களின் பின்னரும் தமது பொறுமையினைக் கடைப்பிடித்துவரும் தமிழர் தரப்பின் நியாயப்பாட்டினை சர்வதேசம் உணர்ந்துகொள்ளத் தவறி வருகின்றது.

ஆயுதங்களைக் கைவிட்டு அரசியல் இராஐதந்திர ரீதியாக ஈழ விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்க முனைந்த தமிழினத்தின் தலைமையை அழித்தொழிப்பதற்கு சிங்கள அரசு மேற்கொண்டுவரும் சதி முயற்சிகளுக்கு சர்வதேசம் வழங்கிய, வழங்கிவரும் ஆதரவுகளையிட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களும் அதிருப்தியும், மிகுந்த கோபமும் அடைந்திருக்கின்றனர்.

சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் மிகத் தெளிவு பெற்றிருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஏனெனில், அவ்விடயத்தினை அவர்கள் தந்திரமாகக் கையாளும் முறையிலிருந்து அவர்களின் தெளிவுத்தன்மையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இலங்கை இனப்பிரச்சனையில் தமிழர்களின் நியாயத்தன்மையினைப் புரிந்துகொண்டுள்ள போதிலும், தத்தமது நாடுகள் சார்ந்த, தனிப்பட்ட செயற்பாடுகள் சார்ந்த - பிராந்திய வல்லாதிக்கம், பழிவாங்கல் நடவடிக்கைகள்,வர்த்தகப் போட்டிகள், கொள்கைவகுப்புகள் என பெயர்குறிப்பிடப்படும் சுயநல நோக்கங்களை முன்னிட்டு அவர்களின் எதிர்மறையான முன்னகர்வுகள் அமைகின்றன. சிங்கள அரசும் அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியத்தினைக் கையாண்டுவருகின்றது.

ஆனால் இவையெல்லாம் சிங்கள அரசின் கொடுமையான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் ஓர் இனத்திற்கு எதிராக இழைக்கப்படும் துரோகம் என்பதை இந்தச் சர்வதேசம் உணராமல் இருப்பதானது, இந்த உலகத்தில் "மனிதநேயம்" என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற மனநிலைக்கு ஒவ்வொரு தமிழனையும் கொண்டுசெல்கின்றது. இவ்வாறான நிலை தொடருமானால் அதன் விளைவுகளாக தமிழர்களின் பொறுமை சீர்குலைக்கப்படுவதுடன், அரசியல் ரீதியான அகிம்சைவழிப் போராட்டம் மீதுள்ள நம்பிக்கையையும் இல்லாமற் செய்துவிடும் என்பதுவே எதிர்கால யதார்த்தம்.



இழப்புக்களும், துரோகங்களும் தமிழினத்திற்குப் புதியதொன்றுமில்லை. தியாகங்களினூடு வளர்ந்த ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் இவ்வாறான இழப்புக்கள், துரோகங்களைக் கண்டு துவண்டுவிடப் போவதுமில்லை.

ஆயினும், சர்வதேசத்தின் இவ்வாறான எதேச்சைத்தனமான போக்கிற்கும், சிங்கள அரசு மேற்கொண்டுவரும் சதிவேலைகள் மற்றும் விஷமப் பிரச்சாரங்களிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயம் தமிழர்கள் முன் காத்திருக்கின்றது.


இது எவ்வாறு சாத்தியப்படும்?

01] சுயநலங்களைத் துறந்து, கருத்து வேற்றுமைகளை மறந்து உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அனைவரும் "நாம் தமிழர்" என்ற ஒரே குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒன்றிணையவேண்டும்.

02] விடுதலைப் போராட்டத்திற்கு வழிகாட்டும்,நெறிப்படுத்தும் தலைமையை, கே.பி அவர்களின் கைதிலிருந்து பெற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறான ஒரு தவறு மீண்டும் நிகழ்ந்துவிடாதபடி மிகவும் செயற்றிறன் மிக்கதாகவும் அனைத்து மக்களினதும் ஏகோபித்த ஆதரவு பெற்றதானதாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

03] "எமது விடுதலைப் போராட்ட உணர்வினை எந்தச் சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்பதனைச் சர்வதேசத்திற்குத் தெட்டத் தெளிவாக வலியுறுத்தி உணர்த்தவேண்டும். அதற்கான வழிமுறைகளாக எமது எதிர்காலப் போராட்டங்கள் காத்திரமானதவையாகவும் காட்டமானவையாகவும் அமையவேண்டும்.

04] இலங்கையரசின் சதிவேலைகளை முறியடிக்கும் வகையிலான கட்டமைப்புக்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் உருவாக்கப்படல் வேண்டும்.

05] உலகம் முழுவதுமுள்ள வேற்றினத்து ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களையும், முக்கிய பிரமுகர்களையும் இயன்றவரைக்கும் எதிர்காலப் போராட்டங்களில் இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுவதுடன் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடனும் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தவும் தமிழர்களின் நிலைப்பாடுகள் குறித்த கருத்துக்களைத் தெரியப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக்கொள்ளப்படவும் வேண்டும்.

06] தமிழ் ஊடகங்களின் பங்களிப்புகள் முற்றுமுழுவதுமாக பெறப்படுவதுடன் இயன்றளவுக்கு வேற்றுமொழி ஊடகங்களின் ஆதரவையும்,பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.இவற்றின் மூலம் தமிழர்களின் அவலங்களும், போராட்டத்தின் நியாயப்பாடுகளும் சர்வதேசத்திற்கு வெளிக்கொணரப்படல் வேண்டும்.

07] தமிழர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே தம்மால் இயன்ற பங்களிப்பினை ஏதாவது வகையிலேனும் செய்வதற்கு முன்வரவேண்டும். ஒதுங்கி நிற்கும் மனப்பான்மையைக் களைந்து நானும் ஒரு "விடுதலைப் போராளி" என்ற போராட்ட உணர்வுடன் இனவிடுதலைக்காக உழைக்க ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும்.

இவ்வாறான காத்திரமான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிங்கள அரசினதும், சர்வதேசத்தினதும் எதேச்சைத்தனமான நடவடிக்கைகளையும், சிங்கள அரசின் எல்லைகடந்த அத்துமீறல்களையும்,சதிவேலைகளையும் முறியடிக்கலாம்.

தற்போது தமிழர்களின் போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையான விடயமே. ஆனால், ஏன் பின்னடைவைச் சந்தித்தது? அதற்கான காரணங்கள் எவை? என ஆராய்ந்து பார்ப்போமானால், சிங்கள அரசின் பொய்ப் பரப்புரைகளும், சர்வதேச நாடுகள் பலவற்றின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நேரடியான மற்றும் மறைமுகமான நடவடிக்கைகளும் பின்னடைவுக்கான காரணங்களில் முக்கிய பங்கு வகிப்பதனைத் தெரிந்துகொள்ள முடியும்.

போராட்டத்தின் தொடக்க காலகட்டத்திலிருந்து பெரும் தடைக்கற்களாக இவையே இருந்து வந்துள்ளன. இன்றும் இவையே பெரும் தடையாக இருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் துயரச் சம்பவம், அடைபட்டுக்கிடக்கும் வன்னி மக்களின் அவலம் என அனைத்தினையும் மூடிமறைத்து, இப்போது கே.பி அவர்களின் கைது மூலம் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தினை நசுக்கும் சதி முயற்சியையும் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது சிங்கள அரசு. இவற்றை சர்வதேசம் கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. சர்வதேசத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் அனைத்துலக நாடுகள் மீதிருந்த நம்பிக்கையை முற்றாக இழந்த நிலையில் கடுஞ்சினத்திற்கும் ஆளாகியிருக்கின்றனர் தமிழர்கள்.


பொறுமையின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழினம் தனது போராட்ட வழிமுறையினை மாற்றியமைக்க முற்படலாம். கே.பி அவர்களின் கைதின் பிற்பாடு அம்மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளன.

இனி அமையப்போகும் தமிழர் தலைமையும் , தமிழர்களின் பொறுமையின் எல்லையும்தான் எதிர்காலத்தில் தமிழர் தரப்பின் போராட்ட வடிவங்களை நிர்ணயிக்கப்போகின்றன.

ஆனாலும்... சில சமயங்களில் பொறுமையாக பொறுத்திருப்பது, எதிர்காலத்தில் சாதகமான அல்லது பாதகமான விளைவுகளைத் தரலாம். ஆகவே, உலக நியதி மாற்றங்களை அவதானித்து தமிழர் பிரச்சனையில் இரு வேறுபட்ட கோட்பாடுகளுடன் மாறிவரும் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளின் நகர்வுகளை கருத்தில் கொண்டு தமிழர்களினது போராட்ட நகர்வுகளும் அமைவது அவசியமாகின்றது.

தமிழர் விடயத்தில் ஓரளவு ஆதரவுக் கொள்கையினை கடைப்பிடித்து வரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா,கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் நடுநிலைமையில் நிற்கும் நாடுகளையும் நமது பக்கம் மாற்றி அவற்றின் முற்றுமுழுதான ஆதரவினைப் பெறுவதும், எதிராக செயற்படும் நாடுகளின் எதிரான நிலைப்பாட்டை மாற்றி அவர்களினதும் ஆதரவினை பெற்றுக்கொள்ளுவதும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் போராட்ட முன்னகர்வுகளின் குறியாக அமைதல் வேண்டும்.

தமிழர்களின் பொறுமையென்பது அவர்களது பொறுமைக்கும், இராஐதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சைவழிப் போராட்டத்திற்கும் மதிப்பளித்து அவர்களுக்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதுமாக சர்வதேசம் எவ்வாறு செயற்படும்? என்ற விடயத்திலேயே தங்கியுள்ளது. மாறாக அவர்கள் காக்கும் பொறுமையை அவர்களின் பலவீனம் எனக் கருதி அவர்களின் போராட்டங்களை மேலும் நசுக்க சிங்களமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து சர்வதேசமும் முயலுமானால் அதன் விளைவுகளை சிங்களத்தோடு சேர்ந்து சர்வதேசமும் அனுபவிக்க நேரிடும்.

இனிமேல் அமையப்போகும் தமிழர் தலைமையைப் பொறுத்தவரையில்... அவர்கள் தமிழர்களை நெறிப்படுத்துபவர்களாகவும், ஒருங்கிணைப்பவர்களாகவும், போராட்டத்தினை நமது தேசியத்தலைவரின் சிந்தனைக்கமைய வழிநடத்துபவர்களாகவும் மாத்திரமே அமையவேண்டும் என்பது பெரும்பாலான தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.




ஏனெனில்,
ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் தமது "தலைவர்" என்ற உன்னத ஸ்தானத்தினை தேசியத் தலைவர் அதிமேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளார்கள்.

எப்பொழுதுமே ஈழத்தமிழினத்தின் தலைவர் அவர்தான்

என்ற அனைத்துத் தமிழர்களின் விருப்பத்தினையும் மதித்து தமது போராட்டத்தினை முன்னெடுக்க இனிவரும் தலைமையை ஏற்பவர்கள் முன்வருவார்களானால் உலகத்தமிழர்கள் அனைவரினதும் பூரண ஆதரவு அவர்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இதன்மூலம் நமது தாயக விடுதலைப் போராட்டப் பாதையில் கருத்து வேற்றுமைகளின்றி ஓரணியாக உறுதியுடன் பயணிக்க முடியும். எதிரிகளின் சவால்களை முறியடிக்கவும் இயலும்.

சிங்களம் அப்பாவித் தமிழர்கள் மீதான தனது அடக்குமுறைகளை அடக்கும்வரைக்கும், சர்வதேசம் தனது இரட்டை வேடத்தினைக் கலைத்து ஈழத் தமிழர்களுக்கான நீதியினைக் கொடுக்கும்வரைக்கும் தாயக விடுதலைக்கான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை எவ்வகையிலும் தடுக்கவோ, அழிக்கவோ முடியாது.


தமிழர்களின் போராட்டம் உருவானதற்கான அடிப்படைக் காரணங்களையும் , அவர்களது நியாயத்தன்மையையும் புரிந்துகொண்டு தமிழருக்கான தீர்வு முன்வைக்கப்படவேண்டும். ஆனால் ஆரம்பம் முதல் இறுதியாக வன்னி அவலம் வரைக்கும் ஏற்பட்ட துயர வடுக்களோடு சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை தமிழருக்கு உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில்

"தமிழீழம்" ஒன்றே ஈழத் தமிழரின் தீர்வாக அமையும் என்பதையும் அந்த இலட்சியத்தினை அடையும் வரைக்கும் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஓயாது என்பதையும் நாம் எமது போராட்டங்களினூடாக சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் புரியவைப்போம்!



பருத்தியன்

அகதி முகாமகளில் தமிழர்களுக்கு மற்றொரு முள்ளிவாய்க்கால் அவலம்: சர்வதேசம் இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?: சுரேஸ் பா.உ. கேள்வி


முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் அவலத்தைத வேடிக்கை பார்த்த சர்வதேச சமுகம் இன்னும் சில தினங்களில் வவுனியா அகதி முகாம்களில் இடம்பெறப்போகும் ஆயிரக்கணக்கான மரணங்களையும் வேடிக்கை பார்க்கப் போகின்றதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பா. உ. சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

வவுனியா அகதி முகாம்களில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு ஐ.நா.வே காரணமென அரசு குற்றஞ்சாட்டுகின்றது. அப்படியானால் இந்த அரசு ஐ.நா.வைக் கேட்டுவிட்டா வன்னியிலிருந்து மக்களை வெளியேற்றியது.அல்லது ஐ.நா.வைக் கேட்டுவிட்டா வவுனியா முகாம்களில் அடைத்து வைத்தது. அல்லது ஐ.நா.விடம் அந்த முகாம்களின் பொறுப்பை ஒப்படைத்ததா? என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இனிவரப்போகும் பருவப்பெயர்ச்சி மழையின் அனர்த்தத்திலிருந்து முகாம்களிலுள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலுள்ள பாடசாலைகள் வைத்தியசாலைகளில் அந்த மக்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாக இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது:

ஆகஸ்ட் 14 ல் பெய்த கடும் மழையினால் பல கூடாரங்களும், மலசல கூடங்களும் மூழ்கிவிட்டதுடன், அழிவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

300 க்கும் அதிகமான குடும்பங்கள் ஒன்றுகூடி வலயத்தின் பிரதான வாயிலை நோக்கி எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் வன்முறைகளற்ற விதத்தில் தமது துன்பத்தை வெளிப்படுத்தியதாகவும் தமது எதிர்ப்பை சத்தமிட்டு வெளிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்தால் நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும். முகாமைத்துவத்தை மேற்கொள்ள முடியாமல் பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலைமைக்கு அது இட்டுச் செல்லும் என்றும் அந்த அறிக்கைக் குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முட்கம்பி வேலியால் சூழப்பட்டுள்ள முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது விருப்பத்திற்கு மாறாக குற்றவாளிகள் போன்று அவர்கள் வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கைது செய்யப்படுவார்கள்?


இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல் காண்பித்தல் ஆகியவை 1967ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் நடத்திய ஈழம் எழும் மாநாட்டு தொடர்பாக திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கொடுத்த நெருக்கடிகளைத் தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும், தனி ஈழம், பேசுவோர் மீதும் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. வருகிற இருபதாம் திகதி உலகத் தமிழர் பிரகடனத்தை வெளியிடவும் சென்னையில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தவும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை தீர்மானித்திருக்கிற நிலையில் அவசர அவசரமாக இன்றைய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினால் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா. பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பிரபாகரன் படமோ, பேனர்களோ, கொண்டு வந்தாலே அதை வைத்தே இத்தலைவர்களைக் கைது செய்து விட முடியும்.

ஆனால் தடை செய்யப்பட்ட ஒன்றையல்லாது ஈழம் குறித்துப் பேசுவது எவ்வாறு தவறு ஆகும் என்று ஈழ ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் மீண்டும் இலங்கை அரசுக்கு ஆதரவாக மீண்டும் ஒரு முறை ஈழ ஆதரவாளர்களை தமிழக அரசு ஒடுக்கத் தயாராகி விட்டது என்பது தெரிகிறது.

பிரபாகரன் என பெயர் வைத்தால் கைது செய்ய முடியுமா?


ஆகஸ்ட் 15 அன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சோனியாகாந்தியின் படமும் காங்கிரஸ் கொடியும் எரிக்கப்பட்டுக் கிடந்தது. காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் இறையாண்மை கெட்டு விட்டதாகவும் எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் திமுகவிற்கு அழுத்த்ம கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பருதிவாணனைகாவற்துறையினர் நேற்றுக் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பருதிவாணன், தமிழர் கழக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். தமிழ் உணர்வாளர் கூட்டங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுபவர் பருதிவாணன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் என பெயர் வைத்தால் கைது செய்ய முடியுமா? ‐ வைகோ :

நேற்று புரசைவாக்கத்தில் பெரியார் திராவிடர் கழத்தின் பிரமாண்டப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கோவையில் இராணுவ வாகனத்தை தாக்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய வைகோ உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவரான பிரபாகரனை ஆதரித்தும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA