Monday 14 September 2009

தமிழன் வளர்த்த இந்த நாய்க்கு கூட இந்த காங்கிரஸ் கட்சியை பிடிக்கவில்லை!

தமிழன் வளர்த்த இந்த நாய்க்கு கூட இந்த காங்கிரஸ் கட்சியை பிடிக்கவில்லை!

ஏன் இந்த நாய்க்கு இருக்கும் கோபம் கூட என் தமிழ் மக்களுக்கு இல்லை!!!

33 ஆண்டாக எம்மால் நடத்தப்பட்ட போராட்டம் நடுத்தெருவில் நிற்கிறதே ஏன்?

உங்களுடன் எனக்குள் உதித்த சில சிந்தனைகளைப் பகிர்வதற்காக வந்துள்ளேன். தற்போது எம்முள் எழுந்துள்ள ஜனநாயக சிந்தனைக்கு நாம் புலம்பெயர் நாட்டில் எவ்வாறு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நான் ஒருவரையும் திடீரென்று ஒரு நேர்கோட்டில் வாருங்கள் என்று கட்டளையிடவில்லை. நடந்த பிழைகளையோ நீங்கள் அடைந்த துன்பங்களையோ மறக்கும்படியும் கூறவில்லை. ஆனால்


ஏன் இவை நடந்தன?


இவை நடந்ததற்கு யார் காரணம்?

இவற்றை இனி எவ்வாறு நடக்காமல் பார்ப்பது?


போன்றவற்றிற்கு விடை காணவேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் உள்ளோம் என்பதை முதலில் கூறவிரும்புகின்றேன். இதை ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் இதை அறியாமல் இருந்தால் மேலும் மேலும் நாம் அழிந்துவிடுவோம் என்பதையே கூறவிளைகிறேன்.

இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும், 1956 இல் தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தமது அதிருப்தியை பலவழிகளில் காட்ட முயன்று, அகிம்சைப் போராட்டங்கள் நடத்த முயன்றபோது அவர்கள் தாக்கப்பட்டார்கள். பின்பு தமிழ் அரசியல்வாதிகள் இளைஞர்களைத் திரட்டி போராட்டங்கள் ஆரம்பித்தனர். இவ்வாறு போராட்டங்களை ஆரம்பித்து வைத்த அரசியல்வாதிகள் அவ்விளைஞர்களை முன்னின்று வழிநடத்தாமல் இரட்டைவேடம் பூண்டார்கள். பின்பு ”சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்று நகைத்தார்கள். அதன்பின்பு ஆயுதத்தால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.


அதனைத்தொடர்ந்து பல இயக்கங்கள் உருவானது. அவர்களுக்குள் போட்டிகள் ஏற்பட்டு ஒரு தெருச்சண்டியனையும் பிச்சைக்காரனையும் சிறுகளவு எடுத்தவனையும் சுட்டு மரணதண்டனை கொடுத்துவிட்டு 32 இயக்கங்களுக்குள் யார் செய்தார்கள் என்று தெரியாமல் பிணத்தைச் சுற்றிநின்று நாம் வேடிக்கை பார்த்தோம். இவ்வாறு எல்லைகளை நோக்கி நீட்டியிருக்க வேண்டிய துப்பாக்கிகள் எமக்குள் நீட்டப்பட்டதற்கு யார் காரணம், யாருடைய அறியாமை காரணம் என்பதே எனது கேள்வி?

இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மை இனத்தவன் 61 ஆண்டாக ” தன்னைக் கடிக்கின்ற கொசுகூட தமிழ்க்கொசு என்று நினைத்தே அடிக்கின்றான்.


ஆனால் எம்மில் சிலர் இந்தக் கொசு அது இல்லை. அதோ இருக்கிறது தமிழ்கொசு என்று காட்டிக்கொடுக்கின்றான். சிங்களவனுக்குள்ளும் எல்லாப் போட்டிகளும் இருக்கின்றது.

ஆனால்

தமிழர்களை அழிப்பதில் யார் கூடஅழிப்பது என்ற போட்டியையே அவன் வைத்திருக்கின்றான் என்பதை நாம் உணர்கின்றோமில்லை.


இப்படிப்பட்ட உதாணங்களை எழுதி உங்களுக்கு இலங்கைப் பிரச்சனை என்ன என்று தெரியாதவர்களாக்க நான் எண்ணவில்லை.


இருப்பினும் 33 ஆண்டாக எம்மால் நடத்தப்பட்ட போராட்டம் நடுத்தெருவில் நிற்கிறதே! ஏன்?

இதுவே எனது கேள்வி இதற்கு மீண்டும் சிலர்மேல் பழிபோட்டுவிட்டு ஆபிரிக்க நாடுகளை நோக்கியும் நாம் புலம்பெயர நினைக்கப் போகின்றோமா என்பதே எனது ஆதங்கம்.

ஏனெனில் ஒரு சில சம்பவங்கள் என்னை வேதனையடைய வைத்துவிட்டன. உதாரணமாக

3 மாதம் தெருக்களை மறித்து சில பெரிய நாடுகளின் மத்தியில் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம்,

ஒன்றரை இலட்சம் பேர் பலி எங்களுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை.

ஆனால் அடுத்த சில மாதங்களில்

அதே நாடுகளில் தெருக்களை மறித்து கோயில் ஊர்வலங்கள், பெரிய அளவிலான கேளிக்கைக் கொண்டாட்டங்கள்.

இவைதான் எம்மை இக்கதிக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எம்மத்தியிலும் செல்லாக்காசு ஆக்கிய விடையங்கள்.


இவற்றை உணராமல் விடுவோமாயின் விரைவில் உலகில் ஒரு மதிப்பற்ற இனமாக மாறிவிடுவோம் என்பதே எனது வேதனை. ஒரு வீட்டில் இழப்பு ஏற்பட்டால் அவ்வீட்டார் ஒரு வருடத்திற்கு உண்ணாநிலை இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக வெள்ளையடித்து விழாக் கொண்டாடுவதில்லை என்பதையே நான் கூற விளைகின்றேன்.

சற்று சிந்தியுங்கள்!


ஐந்தறிவு படைத்த யானை தனது குட்டி காட்டில் இறந்துவிட்டால் 30 – 35 நாட்களுக்குள் மறக்காமல் அந்த இடத்திற்கு வந்து அதன்காரணத்தை யோசிக்குமாம்.


ஒரு சிறிய குருவிகூட தனது கூட்டை யாரும் பிரித்துவிட்டால் 3 நாட்களுக்கு அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி வந்து அதை ஆராயுமாம்.

ஆனால்

நாங்களோ 50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் ஒரே நாளில் கொல்லப்பட்டிருந்தும் ஏதும் தெரியாதது போல் கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக வெளிநாட்டில் இருந்து பூப்புனித நீராட்டுவிழாவிற்கும் திருமணவிழாவிற்கும் செத்தவீட்டிற்கும் என்று சென்று வருகிறோம்.


கேட்டால் அங்கு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறோம். ஆனால் எல்லாப் பிழைகளையும் ஒரு தலைமையிலே மட்டும் போட்டுவிட்டு, பிழை என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறோம். இப்படியான ஒரு போக்கையே நான் உங்களை யோசிக்கச் சொல்கிறேன்.

முட்கம்பிக்குள் இருக்கும் 3 இலட்சம் மக்களையும் கட்டுநாயக்கா விமானநிலையமூடாக வெளிநாடு ஒன்றிற்கு வர விடுவார்களாயின் நான் இதை உங்களிடம் கேட்கமாட்டேன். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று கூறினார்கள். எல்லா விதத்திலும் தமிழர்களைத் தரப்படுத்தி ஒதுக்கினார்கள். ஒற்றுமையாய் தம்முடன் இரு என்றார்கள். பின்பு தமக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்குக்கூட எம்மையே அடித்துத் துரத்தி உங்கள் இடம் வடக்கு, கிழக்கு அங்கு செல்லுங்கள் என்றார்கள். பின்பு அங்கும் வந்து அடித்தார்கள். நாம் திருப்பி அடிக்க முற்பட்டபோது, எம்மை ஆயுதத்தால் அழிக்க முடியாமற்போக, உங்களை உங்களாலேயே வெல்கிறோம் பார் என்று எம்மில் சிலரை வாங்கி, தற்காலிகமாக எம்மை வென்று நிற்கின்றார்கள். அத்துடன் நின்றுவிடாமல் இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையே என்று அவர்களே சொல்லி நகைக்கின்றார்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு மீண்டும் எமக்கு ஜனநாயகத்தைப் போதிக்க தமது நட்பு நாடுகளுடன் சேர்ந்து வகுப்பு எடுக்க முற்படுகின்றார்கள்.

இவர்களுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பதே எனது கேள்வி. நாம் ஒன்றிணைந்து ஒரு வழி சென்று, மேற்கண்ட தவறுகள் இனிமேல் நடக்காமல் எம்மையும் பாதுகாத்து எம் இனத்தையும் பாதுகாக்க ஒற்றுமைப்படுவோம்! அதற்கான வழிமுறைகளை ஆரம்பிப்பவர்களை அடையாளங்கண்டு, அனுசரணை வழங்குவோம்! சிந்தித்துச் செயலாற்றுவோம்!

அன்பார்ந்த தமிழ் பேசும் தமிழீழ மக்களே எமக்கு ஒரு விடிவு தேவை என்பதை எல்லோரும் உணர்கின்றோம். அதற்கு அடித்தளம் நாம் அனைவரும் இணைந்து செயற்படுவதே. அதை தனியே ஒரு அமைப்பு ஆரம்பித்து செயற்படுத்த முடியாது. அதில் மீண்டும் பிழைகள் வரச் சந்தர்ப்பமுண்டு.


ஆகவே நாம் நமக்குள் இணைந்து அதை ஒரு அமைப்பாக மாற்றி, அல்லற்படும் அந்த 3 இலட்சம் மக்களையும் மீட்டெடுத்து, விலை போகா ஜனநாயக வழியில் மீண்டும் நாம் இணைவோம் என்று எனது விருப்பத்தை உங்களிடம் கூறி, எனக்கு முதலாம் வகுப்புப் படிப்பித்த வாத்தியார், முதலாம் வகுப்பிற்கு தொடர்ந்தும் படிப்பிக்க, நான் பத்தாம் வகுப்பிற்கு முன்னேறிப் படித்தமாதிரி. நான் கூறிய சில துளியை வைத்து, நீங்கள் இன்னும் திறம்பட சிந்தித்துச் செயலாற்றுவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.

நிமல்

பசி: குறும்படம்

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

சிறையிலடைக்கப்பட்ட திச நாயகமும், வன்னி மக்களும்!!!

மக்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த பெரு நெருப்பு, காணொளி காட்சிப் பதிவு ஒன்றினுாடாக வெடித்துக் கிளம்பியுள்ளது. கால நீட்சியில், அவையாவும் மறக்கப்பட்டு விடுமென்று பேரினவாதம் எண்ணத் தலைப்படலாம். ஆனாலும் இனப்படுகொலைகள் ஏற்படுத்திய கொடூர வடுக்கள், விடுதலை உணர்வினை உயிர்ப்புடன் வாழவைக்கிறது.

தேசிய நல்லிணக்கமானது, இனத்துவ அடையாளங்களையும், பூர்வீக இனமொன்றின் அரசியல் பிறப்புரிமையினையும் சரணாகதியடையச் செய்து உருவாக முடியாது.

ஜனநாயகப் பூச்சுக்களால், தேசிய இனத்தின் அடியழித்தல் நிகழ்த்தப்படுவதை, கண்டும் காணாதது போல் நாடகமாடுபவர்கள், தேசியமென்பதும் அதற்கான விடுதலைப் போராட்டமென்பதும், மறுபார்வையற்ற போக்கில், ஸ்தாபிதம் உருவாக்கிய குருட்டுத்தனமென்று விளக்கமளிக்கிறார்கள்.

இந்த மறுபார்வைக்குள் பன்முகப் பார்வை, ஜனநாயகச் சொல்லாடல்கள், ஒடுக்கும் பிராந்திய வல்லாதிக்கத்தினை நோக்கிய சரணடைவு, பேசித் தீர்க்கலாமென்கிற பழைய இற்றுப்போன் புராணங்கள் என்பன அடங்கியிருக்கின்றன.

சிறீலங்காவின் படைக்கட்டமைப்போடு மட்டும் விடுதலைப்புலிகள் போராடினார்கள் என்பது போன்று இருக்கிறது இந்த குருட்டுத்தன விரிவுரையாளர்களின் பார்வை.

"வென்றால் சரித்திரம், தோற்றால் தரித்திரம்' என்பதல்ல மக்கள் போராட்டத்தின் சித்தாந்தம். மறு ஆய்வு, மீள்பரிசோதனை, சுயவிமர்சனம் என்பவை ஆரோக்கியமான அரசியல் தளமொன்றினை உருவாக்குமென்பது நிஜமானது.

ஆனாலும், வதை முகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கும் போராட்டத்தை விட, "தமிழினி' என்ன செய்கிறார். "கே பிக்கும் கி.பிக்கும்'' என்ன உறவு. பத்மநாதனிற்கு எதிராகச் சதி செய்வோர் பெயர்ப்பட்டியல் என்பவற்றில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் செயற்பாடுகள் தேவைதானா? வென்பதையிட்டு மக்கள் கவலை கொள்கிறார்கள்.

எரிகிற வீடு அணையுமுன்பாக, பிடுங்கிச் செல்ல வேண்டுமென்று சிலர் அவசரப்படுகிறார்கள்.

இவை தவிர, பழையனவற்றைத் தோண்டி எடுத்து புதிய விவகாரங்களை உருவாக்காமல், நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் சகல இன மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டுமென மகிந்தரும் அழைப்பு விடுக்கிறார்.

வதைமுகாமில் இலட்சக் கணக்கான தமிழ்மக்கள் அல்லல்படும்போது, யாழ் நகரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தத் தேர்தல் நடாத்தியவரல்லவா இந்த பெருந்தேசிய இன சனாதிபதி.

ஆதலால் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களின் உடலங்களைத் தோண்டி எடுக்க, முயற்சிக்க வேண்டாமென மகிந்தர் கூறுவது போலுள்ளது. அதைவிட, இன்னுமொரு முக்கிய அமைச்சர், முகாம் மக்களை அடைத்து வைத்திருப்பதற்காகக் கூறும் வியாக்கியானங்களையும் கேளுங்கள்.

அதாவது வதை முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்தால், தென்னிலங்கையில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அற்றுப்போய் விடுமாம். தமது பாதுகாப்பிற்கான உத்தரவாதம், தமிழ் மக்களை சிறையில் அடைப்பதால் உறுதிப்படுத்தப்படுகின்றதென சிங்களம் கூறும் விளக்கங்களை, சர்வதேசமும் ஏற்றுக் கொள்கிறதா?

ஊடகவியலாளர்களை கடத்துவதும், பின்னர் படுகொலை செய்து வீதியோரத்தில் வீசுவதும், இத்தகைய பாதுகாப்பு நியாயப்படுத்தலிற்கு உட்பட்டவைபோல் தெரிகிறது.

பத்தி எழுத்தாளர் திசநாயகம் அவர்களுக்கு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குவதன் ஊடாக, சிங்களத்தின் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதென, பெளத்த சிங்களப் பேரினவாதச் சக்திகள் ஆறுதலடைகின்றன.

ஆயினும், உலகெங்கும் இருந்து கிளம்பும் எதிர்ப்பலைகளையிட்டு சிங்களம் அதிர்ச்சியடையவில்லை. மகாவம்சக் கண்ணாடிக்கென்றொரு ஊடக சுதந்திரவரையறை உண்டு. இன ஒடுக்குமுறை குறித்து எழுதப்படும் எழுத்துக்களை, இக் கண்ணாடி, ஊடுருவிச் செல்ல அனுமதிக்காது.

எழுத்துச் சமராடிய திச நாயகத்தின் மாற்றுச் சிந்தனைகள், பேரினவாத ஊடக கட்டமைப்பிற்குள் உள் வாங்கப்படக்கூடிய கருத்துக்கள் அல்ல என்பதில், சிங்களம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆகவே, தமது போக்கிற்கு ஒத்திசைவாக இயங்க மறுக்கும் ஊடகத்தாரை, சிறையில் அடைப்பதைத்தவிர, வேறு மார்க்கம் மகிந்த சிந்தனையாளர்களுக்கு இருக்க முடியாது.

இந்த ஆண்டிற்கான சர்வதேச சுதந்திர ஊடகவியலாளர் என்கிற விருதினை திச நாயகத்திற்கு வழங்குவதோடு, உலக ஊடக அமைப்புக்களின் கடமையும் நிறைவு பெறுகிறது. அவரின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்து஼br />?ாறு அறிக்கை விடுவதோடு அமெரிக்காவின் ஜனநாயகக் கடமையும் முற்றுப்பெறும்.

சிங்களத்தின் சிறையில் மட்டுமல்ல, இடைத்தங்கல் முகாமில்கூட, தமிழ் மக்களின் உயிருக்கு உத்திரவாதமில்லையயன்பதை, எத்தனை காலத்திற்கு இந்த மேற்குலக ஜனநாயக ஜாம்பவான்கள் கூறிக்கொண்டிருக்கப் போகிறார்கள்.

83ஆம் ஆண்டு தமிழின அழிப்பில், நிர்வாணமாக, தனது இரு கைகளாலும் தலையைத் தாங்கி, அவமானமடைந்து குந்தியிருந்த அந்த தமிழ் இளைஞனின் புகைப்படம், உலகின் மனச்சாட்சியை உலுக்கியது.

அதைவிடக் கொடுமையான வக்கிரத்தின் உச்சப் படிநிலையை, அண்மையில் வெளியான, நாசிப் படுகொலைகள் போன்று அமைந்த கோரக் காட்சிகள், உலக மக்களின் பார்வைக்குச் சென்றடைந்தது.

30 இலட்சம் வியட்னாம் மக்களை, கம்யூனிசத்தின் பெயரால் கொன்றொழித்த உலக நாயகனிற்கும், இந்தக் காணொளி அதிர்ச்சியளித்ததாம். இனியாவது, வன்னிப்படுகொலைகளுக்கு, சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணையயான்று முன்னெடுக்கப்படவேண்டுமென இவர்களால் உறுதிபடக்கூற முடியுமா? சந்தேகந்தான்.

இந்தியா என்கிற பிராந்திய ஜனநாயக வல்லாதிக்கம், அதனையும் தடுத்து நிறுத்தப்படாத பாடுபடுமென்பதை நாம் புரிந்துகொள்வோம். ஆகவே சிங்களப் பேரினவாதச் செயற்பாட்டிற்கு எதிரான மாற்றுச் சிந்தனைகளும், கருத்துக்களுமே மக்களுக்கு இப்போது தேவை.

பிராந்திய வல்லரசுகள் தமது சந்தைப் போட்டிக்காகவும், கேந்திர ஆதிக்கத்திற்காகவும், ஒடுக்குமுறையாளனாகிய சிங்களத்தோடு உறவாடி, தமிழின அழிப்பிற்குத் தொடர்ந்தும் துணை போவார்கள்.

தற்போது உலகப் பொருளாதாரச் சீரழிவு உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரளயம், ஒடுக்குதலிற்கு உள்ளாக்கப்படும் மக்களின் போராட்டங்களை, இயங்குநிலைக்கு முன் தள்ளிச் செல்கிறது.

அந்த முற்போக்கான வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, தமிழ்மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தினை அதனோடு இணைத்துக்கொள்ள வேண்டும். எமக்காகப் பேசுபவர்கள், அறிக்கை விடுபவர்கள் எல்லோரும் எமக்காகப் போராட முன்வருவார்கள் என்கிற கற்பிதம் தவறானது.

ஒடுக்கப்படும் மக்களே அதனை உணர்ந்து கொள்வார்கள். அவர்களுடன் இணைந்து போராடுவதே விடுதலையைச் சாத்தியமாக்கும்.

-இதயச்சந்திரன்.

ஈழமுரசு (11.09.09)

பிரபாகரன் - சர்வதேசம்: யார் வலையில் யார்?

முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட அளவிற்கு அரசியல் ரீதியில் தமது கொள்கைகளை வகுத்துக்கொள்ளவில்லை என்றும் சர்வதேச அரசியலைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிப் போக்கினால்தான் இன்று அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் பல்வேறு வகையான வியாக்கியானங்களை விடுதலைப்புலிகளை ஆரம்பம் முதலே எதிராக விமர்சித்துவந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் எல்லா வெற்றிகளுக்கும் சாமரம் வீசிய பலரும்கூட அவர்களுடன் கூடிநின்று தற்போது தடம் மாறி தத்துவம் பேசத் தலைப்பட்டுவிட்டார்கள்.

இந்நிலையில், முப்பதாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்மக்களின் உரிமைகளுக்கும் அவர்களின் அரசியல் வாழ்வுக்கும் அவர்களது அபிலாஷைகளுக்கும் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு எத்தகைய நிலையில் இன்று தமது ஆயுதப்போராட்டத்தை மௌனித்திருக்கிறது? அது எவ்வாறான பொறுப்பை யாருக்கு வழங்கிச் சென்றிருக்கிறது என்பது தொடர்பான ஆழமான பார்வை அவசியமாகிறது.

சர்வதேசம் என்று தம்மைக் கூறி தம்மை உலக மக்களின் மனசாட்சியாகவும் நிரந்தர நீதிவான்களாகவும் காண்பித்துக்கொள்ளும் பன்னாட்டுச் சமூகம், ஈழப்போராட்டம் தனது உச்சத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வருட இறுதியில் நடந்துகொண்ட விதம், அனைவரும் அறிந்த ஆய்வுக்கு உட்படுத்தத் தேவையற்ற விடயம்.

ஒவ்வொரு நாடும் வன்னியில் இடம்பெற்ற பாரிய மனிதப்பேரவலத்துக்கு அறிக்கைகளில் அழுது வடித்ததே தவிர, செயல் ரீதியாக எதுவுமே செய்யத் துணியாத - செய்ய முடியாத - தன்நேச பின்னணி கொண்ட அரசியல் சிக்கலுக்குள் அந்நாடுகள் சிக்கிக்கிடந்தன.
மனச்சாட்சி உடைய சிறிய நாடு முதல் வல்லரசு வரை வரிசையில் நின்றவைகளில் ஒரு பகுதியினர் இந்தியாவை மீறி ஈழப்பிரச்சினையில் தலையிட்டு, விரிந்துகிடக்கும் அந்நாட்டின் வியாபாரச் சந்தைக்கு தம்மை வில்லனாக வரித்துக்கொள்ள விரும்பவில்லை. அதேவேளை, ஈழப்பிரச்சினையை நிரந்தரமாக பகைத்துக்கொள்வதன் மூலமும் சிறிலங்காவை ஆதரித்துக்கொள்வதன் மூலமும் தமக்குக் கிடைக்க கூடிய சகல ஆதாயங்களையும் உருவிக்கொள்வதில் இன்னோர் அணி நாடுகள் கவனமாகச் செயற்பட்டன.

தமது புகோள அரசியல் நலன் சார்ந்த பின்னணியை மட்டும் முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிநிரலுடன் ஈழப்பிரச்சினையைக் கையாளத்தொடங்கிய சர்வதேசத்தின் நோக்கங்கள், சிந்தனைகள் எப்போதுமே ஈழத்தமிழர் பிரச்சினையை நேரடியாகச் சந்திப்பதாக இருந்ததில்லை. தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு தருகிறோம் என்று வந்த நாடுகள் அனைத்துமே, “விபத்தில் அடிபட்டு தண்ணீர் தண்ணீர் என்று முனகியவனுக்கு புரியாணி வாங்கி தருகிறோம்” - என்று அருகே போய்நின்று ஆசை வார்த்தை காண்பிப்பதுபோல, முதலைக்கண்ணீர் வடித்துவிட்டு, தாம் வாரிச்சுருட்டுவதற்கு அங்கு என்ன கிடக்கிறது என்பதில் அவதானமாய் இருந்தனவே தவிர, தமிழர் பிரச்சினையின் உண்மையான வடிவத்தை உள்வாங்கிக்கொள்ள அவை தயாராக இருந்ததில்லை.

இதேவேளை, இந்தச் சர்வதேச சமூகம் தமக்குள் அடிக்கடி போட்டுக்கொண்ட அரசியல் கணக்குத்தான், ஈழத்தமிழர் பிரச்சினையையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் பயன்படுத்தி, தமது ஆதாயங்களை எவ்வளவுக்குப் பேரம் பேசிக்கொள்ளலாம் என்பது. இந்து சமுத்திரத்தின் ஆதிக்கப்பிடியை நாடி பிடித்துப்பார்த்து, அதற்கு ஈழத்தமிழர் பிரச்சினையைப் பகடைக்காயாக்கி உருட்டி விளையாடி தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலேயே சர்வதேசம் ஆரம்பம் முதல் ஒரேகுறியாக இருந்தது. இந்தத் திட்டத்தின் இன்னொரு வடிவத்தை ஈழப்போரின் இறுதிக்கட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த வருட இறுதியில் சர்வதேசம் இன்னொரு தடவை அரங்கேற்றிப் பார்த்தது.

தமது அரசியல் விடிவுக்காகப் போராடிய சிறுபான்மையினத்தின் முப்பதினாயிரம் போ் பெரும்பான்மையினத்தவர்களால் ஐந்து மாதத்தில் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களுக்காகப் போராடிய விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டது. இவை எவற்றையுமே தடுக்கவோ தட்டிக்கேட்கவோ நாதியற்ற ஈனப்பிறவிகளாக இருந்த நீங்கள், எமக்கு என்ன தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்.
அதாவது, இவ்வளவு காலமும் தமது அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திவந்த ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு பயங்கரமான போரைக் கட்டவிழ்த்துவிட்டபோது, விடுதலைப்புலிகளை இந்தத் தடவையும் பிரதான விளையாட்டுப் பொருளாக மாற்றி, தமது திட்டத்தின் இன்னோர் அம்பை எய்தது. சிங்களப்படைகளின் கொடூரம் தமிழர் தாயகத்தின் எட்டுத்திக்கும் எம ராச்சியம் நடத்திக்கொண்டிருந்தபோது, பிரபாகரனையும் அவரது படைகளையும் சிங்கள இராணுவத்திடம் சர்வதேசம் சரணடையக் கோரியது. அது நடக்காது போனதால், பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையுமாவது ஏதாவது ஒரு நாட்டுக்கு எடுத்துவிடவேண்டும் என்ற நோக்கில் இறுதிக்காலப்பகுதியில் நோர்வேயின் ஊடாக தூது அனுப்பிப் பார்த்தது. பின்னர், முன்றாம் தரப்பிடம் சரணடையக்கோரும் படிமுறையையும் கேட்டுப்பார்த்தது. அதாவது, விடுதலைபுலிகளை தற்போதைக்கு அடக்கிவைத்திருந்துவிட்டு தமது தேவைகள் ஏற்படும்போது மீண்டும் ஒரு தடவை சிறிலங்காவிற்குள் அவர்களை ஏவி விட்டு, தமது காரியங்களைச் சாதிக்கலாம் என்று தமது இராஜதந்திர காய்களை நகர்த்தி பார்த்தது. (எழுபதுகளில் ஜே.வி.பி.க்கு எதிராக சிறிலங்கா அரசு கங்கணம் கட்டி கொலைப்படலத்தை அரங்கேற்றியபோது, இதேநோக்கத்துடன்தான் அதன் அப்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்கவைக் காப்பாற்றி லண்டனுக்கு அனுப்பிவைத்த இந்தியா, சிறிலங்கா பிற்கால கட்டத்தில் தன்னுடன் முரண்டுபிடிக்க ஆரம்பித்தபோது, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சிறிலங்காவிற்குள் அவரை அனுப்பிவைத்தது.)

ஒட்டுமொத்தத்தில், தமது அரசியல் விளையாட்டுகளுக்கும் ஆளை ஆள் மறைமுகமாக மடக்குவதற்கும் பலம்வாய்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயன்படுத்தி ஆண்டாண்டு காலத்துக்கும் அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்பது சர்வதேசத்தின் தீராத கனவாகியிருந்தது. அவ்வாறு தாம் மேற்கொண்டுவரும்போது, தமது இந்த நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, விடுதலைப்புலிகளை காரணம் காண்பித்தே, ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டு போவது சர்வதேசத்தின் இன்னொரு மனக்கணக்காக இருந்துவந்தது.

இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளிவைத்தாற்போல், தமிழ்மக்களின் பிரச்சினையைத் தொடர்ந்தும் பகடைக்காயாக வைத்து தமது நலன்களை முன்னெடுத்துவந்த சர்வதேசத்தின் மிகப்பெரிய திட்டத்தை உடைத்து, இராஜதந்திரம் என்ற போர்வையில் அவர்கள் சிறிலங்காவுடன் பேணிவந்த உலக ஒழுங்கைச் சிதைத்து, தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், சர்வதேசத்தை பாரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.
விடுதலைப்புலிகளை முன்வைத்து தமது நீண்ட நிகழச்சிநிரலை அரங்கேற்றலாம் என்ற கனவுடன் பயணித்த சர்வதேசம், இந்த முடிவை எதிர்பார்க்கவேயில்லை. பன்னாட்டுச் சமூகம் இன்று திகைத்துப்போய் நிற்கிறது. விடுதலைப்புலிகளின் முடிவினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னமும் மீளவேயில்லை. மாற்றுத்திட்டத்தைத் தேடிக்கண்டுபிடிப்பதற்குக் கூட இன்று வழியின்றித் திண்டாடிக்கொண்டிருக்கிறது சர்வதேசம். இன்றையநிலையில், தமிழ்மக்களின் விடிவுக்கு நிச்சயம் பதில் கூறவேண்டிய கட்டாயநிலைக்குள் சர்வதேசம் விடுதலைப்புலிகளால் தள்ளபட்டிருக்கிறது என்பதும் இதிலிருந்து சர்வதேசம் தப்பவேமுடியாது என்பதும்தான் உண்மை.

நாளை நோர்வேயோ இன்னொரு நாடோ, இனியொரு நாட்டில் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அனுசரணை வழங்கப்போவதாக போய்நின்றால் -

“தமது அரசியல் விடிவுக்காகப் போராடிய சிறுபான்மையினத்தின் முப்பதினாயிரம் போ் பெரும்பான்மையினத்தவர்களால் ஐந்து மாதத்தில் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களுக்காகப் போராடிய விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் செய்த அரசு கைகளில் இரத்தக்கறையுடன் இன்றும் சுதந்திரமாக உலகவலம் வந்துகொண்டிருக்கிறது. இவை எவற்றையுமே தடுக்கவோ தட்டிக்கேட்கவோ நாதியற்ற ஈனப்பிறவிகளாக இருந்த நீங்கள், எமக்கு என்ன தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்” - என்று முகத்தில் காறி உமிழ்ந்தால், அதற்கு “ஆபத்பாந்தவர்களான” இந்த அனுரசரணையாளர்களிடம் என்ன பதில் இருக்கப்போகிறது?

ஆகவே, இன்றைய நிலையில், தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டிய கட்டாயநிலைக்குள் சர்வதேசம் தள்ளப்பட்டிருக்கிறது. இராஜதந்திரம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் ஒற்றைச்சொற்களின் ஊடாக ஈழத்தமிழர் விவகாரத்திற்குள் ஒளித்து ஓடி விளையாடித்திரிந்த சர்வதேசத்தின் நோக்கங்களும் திட்டங்களும் தோலுரித்துக்காட்டப்பட்டு அதற்கு தற்போது மிப்பெரிய பணி விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருக்கிறது. தான் கொடுத்த மருந்தைத் தானே உட்கொள்ளவேண்டிய திரிசங்குநிலைக்குள் பன்னாட்டு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. எதற்குமே தொலைநோக்குத் திட்டத்துடன் சிந்திக்கத் தொடங்கும் உலக அரசியல் வட்டத்தில், பன்னாட்டுச் சமூகம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்று பெற்றுக்கொடுக்காவிடின், அதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் அதற்கு மிகத்தெளிவாகத் தெரியும்.

அதாவது, தமிழ்மக்களுக்கான புதிய காவலாளிகளாக சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரவும் பகலும் துன்புறுத்தும் படையினர், எதிர்த்துப் பேசினால் துப்பாக்கியால் தாக்குதல்: முகாம் நிலை தொடர்பாக இளம் பெண் தகவல்

இரவும் பகலும் சிறிலங்காப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால் துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
"எதற்காக நாம் இவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள்" எனவும் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு முகாம் நிலைமைகள் தொடர்பாக சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.

போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் சீறிவரும் ஆட்டிலறிகளுக்கு மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.

போர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தரைப் படையினர் தெரிவிக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டோம். ஆனால் இப்போது இல்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" எனவும் சுகந்தினி தெரிவித்தார்.

வவுனியா முகாம்களில் உள்ள மூன்று லட்சம் இடம்பெயர்ந்த மக்களில் 5 வீதமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் சுகந்தினியின் சோகக் கதை போல பல கதைகள் இருக்க முடியும்.

தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் நிலை தொடர்பாகத் தெரிவித்த சுகந்தினி, "சாக்குளால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய கூடாரங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகளவு மக்கள் இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மலசலகூடங்கள் நிரம்பி வழிகின்றன. குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு உள்ளது. சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. ஊடகவியலாளர்கள் இந்த முகாம்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை" எனக் குறிப்பிட்டார்.

மெனிக் பாம் தடுப்பு முகாமில் உள்ள ஒருவர் முகாம் நிலை தொடர்பாக செல்லிடப்பேசி மூலமாக தெரிவிக்கையில், முகாமில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என முகாமில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார். முகாமுக்குள் கடத்திச் செல்லப்பட்ட செல்லிடப்பேசி ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்த அவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

"நாம் அங்கு முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாருக்கும் சொல்வதற்கு மக்கள் அஞ்சுகின்றார்கள். ஆனால் இது ஒரு சிறைச்சாலையாகவே இருக்கின்றது. இங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. அத்துடன் போதுமானளவு குடிநீரும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

தவிப்பு: குறும்படம்

பதினைந்து நிமிடங்களில், இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரமும் நிர்க்கதியும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிற படைப்பு 'தவிப்பு'. தமிழ்வேந்தனின் படைப்புலகம் தமிழ் மக்களின் அக்கறை சார்ந்து விரிந்திருக்கிறது. ஒளிப்பதி வும் குறும்படமும் அமைந் திருக்கிற விதம் கச்சிதம். பிரசாரம் இல்லாமல், வேதனையின் கீற்றுகள் வெளிப் படும்படியாக இருப்பது இயக்குநரின் திறமை!

இயக்கம்: வீ.மு.தமிழ்வேந்தன

9டி, பல்லவன் குடியிருப்பு, துரைப்பாக்கம், சென்னை97.


http://tamilthesiyam.blogspot.com/2009/03/blog-post_7505.html

Shared via AddThis

அந்த வலியை நாம் உணர்ந்துள்ளோம் - ஓவியர் புகழேந்தி

தமிழ்.வெப்துனியா.காம்: அவரைக் கூட நீங்கள் ஓவியமாகப் படைத்தீர்கள். அவர் அதைப் பார்த்தாரா?

ஓவியர் புகழேந்தி: பார்த்தார். எல்லா ஓவியங்களையும் பார்த்து கருத்து சொன்னவர், அந்த ஓவியத்தைப் பார்த்து மட்டும் கருத்து சொல்லவில்லை. அவர் கருத்து சொல்லும் வரை நானும் விடவில்லை. இதுதான் நடந்தது. எல்லா ஓவியத்தையும் பார்த்து, திலீபன் ஓவியத்தைப் பார்த்தார். கடைசி நேர திலீபனுடைய நிலையை வரைந்திருக்கிறீர்கள். எப்படி உங்களால் அதைப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே மக்களே கேட்டார்கள். எங்கள் திலீபன் அண்ணாவை எப்படி இவ்வளவு நுட்பமாக, அந்த கடைசி நேரத்தினுடைய உணர்வுகளை‌க் கொண்டு வந்திருக்கிறீர்களே என்று கேட்டார்கள். அதே வெளிப்பாட்டை அண்ணனும் கேட்டார்கள். நான் சொன்னேன் அப்பொழுது, ஈழத்திலே திலீபன் உண்ணாவிரதம் இருந்தால், நாங்கள் தமிழ்நாட்டிலே இருந்தோம். எங்கள் உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், உணர்வுகள் ஓரிடத்தில்தான் இருந்தது. என்னுடைய உணர்வுகள் எல்லாம் ஈழத்தில்தான் இருந்தது. அதனால் என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அதனால்தான் செய்ய முடிந்தது.

இதுமட்டுமல்ல, பல்வேறு வகையான ஈழம் குறித்த ஓவியங்களைப் பார்த்துவிட்டு மக்களும் கேட்டார்கள், போராளிகளும் கேட்டார்கள், அண்ணனும் கேட்டார், எப்படி இவ்வளவு நுட்பமாக எங்கள் வாழ்க்கையை வாழாத நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்களே எப்படி என்று கேட்டார்கள். உண்மையிலேயே நான் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் வீடுகள் அங்கு வீழுகின்ற போது அங்கே கேட்கின்ற கதறல்கள் எங்கள் காதுகளில் கேட்கின்றபோது அதை நான் உணர்ந்தேன். அதனால் நான் அனைத்து வகையான உணர்வுகளையும் பெற்றேன். அதனால்தான் என்னால் இப்படி செய்ய முடிந்தது. அதனால்தான் நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள் என்று நான் சொன்னேன். அதுதான் உண்மை. அந்த வலியை நாம் பெற்றிருக்கிறோம்.

25 ஆண்டுகளாக அந்த மக்கள் எவ்வளவு துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள் என்பதெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். அதனால்தான் அந்த ஓவியங்களை பார்த்து மக்கள் உணர்கிறார்கள் என்றால், அந்த வலியை நாம் உணர்ந்திருக்கிறோம். அதன் வெளிப்படாகத்தான் அந்த ஓவியத்தில் இருக்கிறது.

webdunia photo
WD
தமிழ்.வெப்துனியா.காம்: உங்களுக்கு ஈழப் பிரச்சனையில் ஈழ மக்கள் பட்ட துயரம், துன்பம் எல்லாம் உங்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தை, வலியை ஏற்படுத்தியது. இதுபோன்று, இதற்கு ஈடாகவோ அல்லது சற்று குறைவாகவோ, கூடுதலாகவோ வேறு எந்த சம்பவமாவது உலக ரீதியில் உங்களை பாதித்து இவ்வாறு ஓவியம் தீட்டுவதற்கு தூண்டுதலாக அமைந்துள்ளதா?

ஓவியர் புகழேந்தி: ஒரு உண்மையை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நான் இதை சொல்லி வருகிறேன். நம்முடைய பாரம்பரியத்தில் நமக்கென்று ஏற்கனவே இருந்த பல்வேறு உணர்வுகள், நாம் தமிழர், நம் மொழி தமிழ் மொழி என்ற உணர்வு நமக்கு இருந்தது. ஆனால், ஈழ விடுதலைப் போராட்டத்தை நான் ஓவியங்களில் பதிவு செய்த பிறகுதான், அது நமக்கு ஒரு உலகப் பார்வையைத் தந்தது. அந்த ஈழப் போராட்டம்தான் உலகத்தில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும், எந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற உலகப் பார்வையை, சர்வதேசப் பார்வையை நமக்கு கொடுத்தது.

ஆக, ஈழப் போராட்டம் என்ற ஒன்று இல்லாவிட்டால் உலகப் பார்வையே நமக்கு இருந்திருக்காது என்றுதான் நான் கருதுகிறேன். அந்த ஈழப் போராட்டம், உலகத்தில் எந்த மூலையில் மக்கள் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும், அந்த மக்கள் படுகின்ற துன்பங்களை, துயரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்கின்ற உந்துதலை எனக்கு கொடுத்தது.

அப்படி நான் தென் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்திருக்கிறேன். தென் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் நெல்சன் மண்டேலாவினுடைய வாழ்க்கையையும் நான் அதில் பதிவு செய்திருக்கிறேன். யாசர் அராஃபத்தினுடைய பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை பதிவு செய்திருக்கிறேன். அதேபோல்...
தமிழ்.வெப்துனியா: ஆனால், எல்லாவற்றிற்கும் தூண்டுதலாக அமைந்தது ஈழப் போராட்டமா?

webdunia photo
WD
புகழேந்தி: ஆமாம், என்னைப் பொறுத்தவரை அதன்பிறகுதான், உலகத்தில் எது நடந்தாலும் பார்க்கத் தூண்டியது. ஏனென்றால், நம்ம மக்கள் அடிபட்டு வலிக்கும் போது நாம கதறுகிறோம். அதேபோன்ற கதறுதல்தானே அடுத்தவர்களிடம் இருக்கும் என்கின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய அரசியல் பார்வை கூட, விடுதலைப் புலிகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒட்டியதாக ஏற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக அரசியல் ஏற்பட்டதா? அல்லது பள்ளி, கல்லூரி வாழ்க்கையிலேயே ஏற்பட்டதா?

புகழேந்தி: பள்ளி இறுதி முடிக்கும்போதே எனக்கு தமிழ் உணர்வு இருந்தது. எங்கள் குடும்பம் திராவிடர் இயக்க பின்னணியில் இருந்தது. எங்களுக்கெல்லாம் புகழேந்தி, மதிவாணன், பூங்கோதை என்ற பெயர்களை சூட்டியதெல்லாம் திராவிடர் இயக்கத்தினுடைய தாக்கம். ஒரத்தநாடு தொகுதி என்பது திராவிடர் இயக்கத்தின் மிக முக்கியமான கோட்டை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தது. அதன் அடிப்படையிலே நாங்கள் பாரதிதாசன் பாடல்கள், பாரதியார் போன்று தமிழ் கவிதையெல்லாம் அந்த காலத்தில் எங்களுடைய தந்தை எங்களுக்கு ஊட்டினார், சொல்லிக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பாரதிதாசன் பாடல்களையெல்லாம் நாங்கள் ஒப்பிப்பது உண்டு. அது ஒரு உணர்வை, தமிழ் உணர்வைக் கொடுத்தது. ஈழப் பிரச்சனை, ஈழப் போராட்டம் தமிழன் என்கின்ற உணர்வைக் கொடுத்தது.

தமிழ்.வெப்துனியா: கொழும்புவில் இருந்து ஈழத்திற்குச் செல்லும் போது அந்த உணர்வு எப்படி இருந்தது? சி்ங்கள மக்களையும் நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா?

புகழேந்தி: நான் முதன் முதலில் கொழும்புவில் போய்தான் இறங்கினேன். கொழும்புவில் போய் இறங்கிய பிறகு, நான் வந்திருக்கிற செய்தி அறிந்து பத்திரிக்கையாளர்களே வந்துவிட்டார்கள். யாருக்கும் தெரியாமல்தான் போகவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் செய்தி எப்படியோ பரவி பத்திரிக்கையாளர்கள் வந்தார்கள். வந்திருந்தவர்கள் தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள்தான். அவர்கள் உடனே நிறைய செய்தியைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், தயவு செய்து நான் திரும்பிப் போகும்வரை நேர்காணல்களை வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஏனென்றால், என்னுடைய நோக்கம் வேறு. அப்படியிருந்தும் அவர்கள் பத்திரிக்கைகளில் போட்டுவிட்டார்கள்.

அவர்கள் பல்வேறு செய்திகளைச் சொன்னார்கள். என்னதான் சமாதான காலமாக இருந்தாலும் அந்தவொரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுதே அந்த சமாதானத்தை உடைக்கின்ற பல்வேறு நிகழ்வுகளையெல்லாம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். எந்தவொரு புரிதல்களும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தம். புரிதலே இல்லாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டு வைத்துக்கொண்டு, கொழும்புவிலும் பதற்றம், வெவ்வேறு இடங்களிலும் பதற்றம் என்று நிலவிய சூழல். அந்தச் சூழலில் நாங்கள் ஒவ்வொரு இடமாக சென்று, மகிழுந்துவில்தான் நாங்கள் பயணம் செய்தோம்.

போகின்ற ஒவ்வொரு இடங்களிலும் பார்க்கின்ற பொழுது சிங்கள மக்கள் பகுதிகளையெல்லாம் கடந்து சென்றோம். மிகவும் ஒரு அழகான நாடு. நல்ல பசுமையாக இருக்கின்ற ஒரு சூழல். நிறைய நதிகள் ஓடுகின்ற பகுதியாக சிங்களப் பகுதி இருக்கின்றது. உண்மையிலேயே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. சில இடங்களில், புத்தளம் போன்ற பகுதிகளில் பயணம் செய்கின்ற போது, பல்வேறு பகுதிகள், தமிழ்ப் பகுதிகள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டதை என்னுடைய நண்பர் சொல்லிக் கொண்டே வந்தார். பிறகு வவுனியா சென்றடைந்தோம். புத்தளமே தமிழ்ப் பகுதிதான். ஆனால் அது கலப்பு அதிகம் உள்ள பகுதி. அதைக் கடந்து வவுனியா செல்லுகின்ற பொழுது முழுக்க அது தமிழ்ப் பகுதி.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிதான் வவுனியா. அந்தப் பகுதியை கடக்கும் பொழுதே, ராணுவ நடமாட்டம், காவல்துறை நடமாட்டம் என்று அதிகம் தெரிந்தது. வவுனியாவைத் தாண்டி ஓமந்தை. இதுதான் எல்லைப் பகுதி. தமிழீழப் பகுதியையும், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியையும், வவுனியாவும் தமிழீழம்தான். ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி என்று சொல்வதற்கு கூட தமிழ் மக்கள் தயாராக இல்லை. ராணுவத்தினுடைய ஆக்கிரமிப்புப் பகுதி என்று சொல்லுவார்கள். அந்தப் பகுதிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழீழப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி. அதுதான் செக்போஸ்ட் என்று சொல்லக்கூடிய அந்தப் பகுதி.

தமிழ்.வெப்துனியா: போகும் வழியில் ராணுவத்தினர் உங்கள் ஓவியத்தைப் பார்த்தார்களா?

புகழேந்தி: எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் வரைந்த ஓவியம் என்று சொன்னேன். ஆனால், பார்க்கணும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு ஓவியமாக எடுத்து பிரித்தார்கள். ஓவியங்களை சுற்றிதான் வைத்திருந்தேன். அங்கே போய்தான் காட்சிப்படுத்தணும்கிற நிலையில எல்லாவற்றையும் சுருட்டி வைத்திருந்தேன். அதை ராணுவத்தினர் பரிசோதிக்க வந்தார்கள். என்ன என்று கேட்டார்கள், பெயிண்ட்டிங்ஸ் Dont Open அப்படின்னு சொன்னேன். No we should check everything அப்படின்னாங்க. You can proceed என்று சொன்னேன். அதை எடுத்து பிரித்து பார்க்க ஆரம்பித்த உடனேயே ஆர்வத்தில் எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு என்ன இருக்கிறது என்பது புரிந்துவிட்டது. யார் செய்தது என்று கேட்டார்கள். நான்தான் செய்தேன் என்று சொன்னேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். சொன்னேன். ஒவ்வொரு ஓவியமாக பார்க்க ஆரம்பித்து பிறகு அதைப் பார்க்க மேலும் ராணுவத்தினர் வர ஆரம்பித்துவிட்டனர்.

webdunia photo
WD
இவர்கள் ஆர்வத்தில் பார்க்க வர ஆரம்பித்ததும் எனக்கு கொஞ்சம் பதட்டம் வந்துவிட்டது. ஏனென்றால், அதில் அண்ணன் படமெல்லாம் இருக்கிறது. அது தேவையில்லாத சிக்கலை உருவாக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அப்படி ஒவ்வொரு ஓவியமாகப் பிரித்துப் பார்க்கும் போது சொன்னேன், அழுக்காக்கி விடாதீர்கள். இதற்குப் பிறகும் அதைப் பார்க்காதீர்கள் என்று சொன்னேன். பிறகு அதிலிருந்த ஒருவர், பாவம் விட்டுவிடு என்று சொன்னார்.

உண்மையிலேயே அவர்கள் ஆர்வத்தில்தான் பார்க்கிறார்கள். அ‌தி‌ல் ஏதோ இருக்கிறது என்று அவர்கள் பார்க்கவில்லை. ஆனால், நமக்கு என்னன்னா, கீழே அண்ணன் படமெல்லாம் இருக்கிறது. தேவையில்லாமல் சிக்கலைக் கொடுக்குமே என்பது. பிறகு அவர்களே சுருட்ட ஆரம்பித்தார்கள். அப்புறம் நானே சுருட்டிக் கொள்கிறேன் என்று வாங்கி உள்ளே வைத்துவிட்டேன். பிறகு எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டோம்.

தமிழ்.வெப்துனியா: உங்களுடைய பேச்சில், முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கூட போனேன் என்று சொன்னீர்கள். நந்திக் கடல் பகுதி தாண்டி அந்த இடத்திற்கு சென்றிருப்பீர்கள். அங்கே எப்படி இருந்தது அந்த நேரத்தில்?

புகழேந்தி: உண்மையிலேயே முள்ளிவாய்க்கால், முள்ளியவலை அந்தப் பகுதியெல்லாம் நான் கண்காட்சி நடத்திய இடம்தான். மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதி போன்ற ஒரு பசுமையான சூழல், தென்னை மரங்கள் அழகாக இருந்தது. சண்டை இல்லாத காரணத்தினால், அதுவும் முக்கியமாக என்னவென்றால் மீள்கட்டமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். நிறைய மரங்கள் நட்டு, ஏனென்றால் நிறைய காடுகளை அழித்துவிட்டார்கள். குண்டுகளை போட்டு மரங்களை அழித்து, கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல், சுற்றுச்சூழலைப் பற்றி கவலையில்லாமல் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்ட நிலையில், புலிகள் மீள்கட்டமைப்பில் ஈடுபட்டு, வன வளத்துறை ஒன்று உருவாக்கி அதிகமான மரங்களை நட்டு வனத்தை பாதுகாக்கின்ற ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி நிறைய மரங்களை நட்டிருந்தார்கள். ஒரு பசுமையான சூழலை உருவாக்கியிருந்தார்கள். அந்தச் சூழலில்தான் நான் அந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றேன். அற்புதமான ஒரு இடம். நம்முடைய மக்கள் எவ்வளவு செழிப்போடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு மிகவும் உதாரணமாக இருக்கின்ற, புரிந்துகொள்வதற்கு ஒன்றாக இருக்கின்ற நிலையில் அங்கே நான் சென்றேன்.

அவர்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை, நம்முடைய வாழ்க்கை, இங்கே சராசரியான வாழ்க்கை என்பது அங்கே மிகவும் பின்தங்கிய வாழ்க்கை. பொருளாதார ரீதியாக, செழிப்போடு வாழ்ந்த மக்கள்தான் தமிழீழ மக்கள். அவர்கள் சுயமாக தங்களுடைய மண்ணில் உழைத்து, சம்பாதித்து செலவு செய்து வாழ வேண்டும் என்கின்ற உணர்வோடு இருக்கின்றவர்கள். அதைச் செய்தவர்கள். அப்படி அந்த மக்கள் நிறைய தொழில்கள் செய்து, விவசாயம் செய்து, பல்வேறு தோட்டங்களை உருவாக்கி, அவர்களுக்கென்று தனிப்பட்ட பொருளாதாரத்தை, மறுசீரமைப்பை கட்டமைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தச் சூழலில்தான் அந்த இடத்திற்குச் சென்றேன். பரந்த அளவில் ஒட்டுமொத்தமாக அழகான ஒரு நாட்டை அங்கே நீங்கள் பார்க்கலாம். அது முள்ளியவலை என்று அல்ல, அனைத்து இடங்களிலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அத்தனை இடங்களிலும் எந்த வேறுபாடும் இல்லாமல் கட்டமைத்திருந்தார்கள்.

அதற்கு ஒரு சின்ன உதாரணத்தை நான் சொல்ல வேண்டும். என்னுடைய கண்காட்சியை - என்னுடைய நிகழ்ச்சிநிரலை முதலில் திட்டமிட்டார்கள் - பல்வேறு இடங்களிலே நடத்துவது என்று திட்டமிட்டு பல்வேறு ஓவிய பயிலரங்குகளை நடத்தி, அந்த நிகழ்ச்சி நிரலை ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டிருந்தார்கள். அதன்படி நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், தமிழ்ச்செல்வனும், அவருடைய அரசியல் துணைப் பொறுப்பாளராக இருந்த சுதா மாஸ்டர் என்று சொல்லக் கூடிய தங்கன் அவர்களும் வந்தார்கள்.

அண்ணே என்ன செய்வீர்களோ தெரியாது, இரண்டு நாள் மன்னார் பகுதிக்கு வரணும் என்றார். நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே நெருக்கடியாக இருக்கிறதே, உங்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லையே, நான் எப்படி இரண்டு நாள் ஒதுக்குவது என்று சொன்னேன். என்ன செய்வீர்கள் என்று தெரியாதுண்ணே, மன்னாரில் இருந்த மக்கள் தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டார்கள். எங்களை நீங்கள் ராணுவத்துடனேயே தள்ளிவிட உத்தேசித்திருக்கிறீர்களா? யார் வந்தாலும் வன்னியோடு வைத்து அவர்களை நீங்கள் அனுப்பி விடுகிறீர்கள். எங்கள் மன்னார் என்ன செய்தது? ஏன் எங்கள் மன்னாரை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இல்லை ராணுவத்தோடு எங்களை நீங்கள் விட்டுவிடுகிறீர்களா? என்று கேட்டு கடிதத்தை எழுதிவிட்டார்கள்.

தலைவர் கூப்பிட்டு எங்களிடம் சொல்லிவிட்டார். புகழிடம் எப்படியாவது பேசி இரண்டு நாள் ஒதுக்கிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார் என்று கேட்டபொழுது, உண்மையிலேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்பு நியாயமானது என்று பட்டது. ஒன்றுமே சொல்லவில்லை, கவலையை விடுங்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் குறைத்துவிடுவோம், கொழும்புவில் ஒரு நாள் குறைத்துவிடுகிறேன். மன்னாரில் இரண்டு நாட்கள் கண்காட்சியை வைத்துவிடுங்கள் என்று சொல்லி மன்னாருக்கு இரண்டு நாட்களுக்கு திட்டமிட்டோம்.

யாழ்ப்பாணத்தில் 5 நாட்கள் நடக்க வேண்டிய கண்காட்சியை ஒரு நாள் குறைத்து 4 நாட்களாக்கிவிட்டு, நான் ஊருக்குத் திரும்பும்போது கொழும்புவில் ஒரு நாள் இருப்பதாகத் திட்டம். அதையும் தவிர்த்துவிட்டு இரண்டு நாட்களை ஒதுக்கி மன்னாரில் கண்காட்சி வைத்தோம். ஆக, அந்த மக்களுடைய உணர்வை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் மன்னாருக்குச் சென்ற பிறகுதான், மன்னார் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். அந்த மக்களுடைய வாழ்க்கை, அந்தப் பகுதி, மீன் பிடி தொழில், மடு தேவாலயம் இருக்கின்ற பகுதியை எந்த அளவிற்கு சிங்கள ராணுவம் சீரழித்திருக்கிறது என்பதையும் பார்த்தேன். எந்தவிதமான மின்சார வசதியும் இல்லாமல் அந்தப் பகுதி இருக்கிறது. படிக்கின்ற குழந்தைகள் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்து படிக்கிறார்கள். உண்மையிலேயே ஈழத்திற்கு நான் சென்றிருந்தபோது, மன்னாருக்குச் சென்றிருந்தபோதுதான் முழுமை பெற்றது கண்காட்சி. அந்த மக்களோடும், குழந்தைகளோடு நான் இருந்ததும், அவர்களோடு நான் நேரத்தை பகிர்ந்துகொண்டதும் எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

உண்மையிலேயே அங்கு செல்லாமல் வந்திருந்தால் தமிழீழ பயணம் முழுமை பெற்றிருக்காது என்றே நான் எழுதியிருப்பேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், தமிழீழத்தின் எந்தவொரு பகுதியையும் புலிகள் புறக்கணிக்கத் தயாராக இல்லை. எல்லோரையும், எல்லா பகுதிகளையும் சமமாக மதித்தார்கள். அந்த அளவிற்கு முக்கியத்தும் கொடுத்தார்கள். அதுவும் குறிப்பாக அண்ணன் பிரபாகரன் அவர்கள் எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். எல்லா பகுதிகளையும் ஒரே மாதிரியாக கட்டமைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார். அதற்காக வேலைத் திட்டங்களையும் செய்தார். அப்படி ஒட்டுமொத்த தமிழீழத்தையுமே ஒரு அழகான நாடாக, ஒரு மாதிரி நாடாக உருவாக்க வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருந்தார்.

தமிழ்.வெப்துனியா: மிக்க நன்றி. தமிழீழத்திற்கு சென்று வந்தது போன்று ஒரு உணர்வு இரு‌க்கிறது. நன்றி.

இலங்கை அரசின் அடுத்த குறி, உருத்ரகுமாரன்? "அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார் அமெரிக்க அதிகாரி"


குமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயோர்க்கில் இருந்து கொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது
இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் நிறுவனத்தாரின் வார இதழான ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மேற்கண்டவாறு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டிருப்பதாவது:-

கே.பி-'யை தலைவராக அறிவித்து பிரபாகரன் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத்தமிழர்களை தன் நாவன்மையால் வசீகரித்தவர் உருத்திரகுமாரன். 'இனி ஆயுதம் வேண்டாம்; அமைதிப் பேச்சு வார்த்தையே தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும்!' என்று கூறி இந்தியாவிடமும் நேசக்கரம் நீட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச கிரிமினல் கோர்ட்டிலும் இலங்கை அரசின் முகத்திரை கிழியக் காரணமாக இருந்தவரே இந்த உருத்திரகுமாரன். எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்!'' என்று அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

உருத்திரகுமாரனை உயிருடன் பிடிக்க இலங்கை அரசின் தீவிரவாதத் தடுப்புத் துறை பொலிஸார், இராணுவ அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றுள்ளது. கே.பி. ஸ்டைலில் அலேக்காக அவரை இலங்கைக்கு தூக்கிச் சென்று புலிகளின் சர்வதேசத் தொடர்புகளை விசாரிக்கத் திட்டமாம்.

'கே.பி.' மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்ததால், கடைசி காலகட்டங்களில் அன்ரன் பாலசிங்கத்தின் அபிமானத்தைப் பெற்ற உருத்திரகுமாரனைத்தான் பிரபாகரன் வெகுவாக நம்பி வந்தார். புலம்பெயர்ந்த நாடுகளின் ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியும் கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞரான உருத்திரகுமாரன் தன் கூர்மையான வாதத்திறனால் புலிகளின் மீது அமெரிக்க அரசு விதித்திருந்த தடையை நீக்கப் போராடியும் வந்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலை பற்றியும் ஆதாரங்களுடன் பேசி அவர்களை மசிய வைத்தார். இதில் தொடங்கி ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஒபாமா வரை தமிழ் ஈழம் பற்றி பேசுமளவு செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக கனடா, ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி விஜயம் செய்து நாடு கடந்த தமிழ் ஈழம் ஆதரவாக மக்களைத் திரட்டியும் வந்தார். இது இலங்கைக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்து வந்தது. உருத்ராவை எப்படியாவது பிடித்துப் போட்டுவிட்டால்... புலிகளே இல்லாமல் செய்து விடலாம் என்று கணக்குப் போட்ட இலங்கை அரசு அவரைக் கைது செய்ய தனிப்படையே அமைத்தது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், ''அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை...'' என்று கூறினார்கள். ''அமெரிக்கா ஒன்றும் மலேசியா இல்லை. இங்கு சட்டதிட்டங்களே வேறு. முதலில் ஓர் அமெரிக்க பிரஜையைக் கைதுசெய்ய சர்வதேச வாரண்ட் வேண்டும். அவர்மீது வழக்குப் பதிவாகி நீதிபதியின் தீர்ப்பு நகலை முதலில் தரவேண்டும். முக்கியமாக அந்நாட்டுடன் 'நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம்' (EXTRADITION TREATY) அமுலில் இருக்கவேண்டும். இலங்கையிடம் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு ஒப்பந்தமோ வாக்குறுதியோ இல்லை.

கே.பி. கைது வேறு கதை! அவர் இண்டர்போல் அமைப்பினால் தேடப்பட்ட சர்வதேசக் குற்றவாளி. ஆகவே, மூன்று நாடுகளைக் கடந்து கடத்திப் போக முடிந்தது. எங்களுக்குத் தெரிந்த வரை உருத்திரகுமாரன் மீது எவ்வித வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை கைது செய்வதானால் முதலில் எங்கள் அனுமதி பெறவேண்டும். அமெரிக்காவின் தனிமனித சுதந்திரம் மிகவும் போற்றப்படக் கூடியது!'' என்று கூறினார்கள்.

உருத்திரகுமாரனின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசே கூட மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தாலும், அவர் மீது தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இவ்வளவுக்கும் நியூயோர்க் மாநகரில் பிரபாகரன் படம், புலிக்கொடி ஏந்தி பத்தாயிரம் ஈழத்தமிழர்களை வைத்துப் பேரணியைப் நடத்தியவர் உருத்திரகுமாரன்.

உருத்திரகுமாரனையும் சேர்த்து நான்கு தலைவர்களை இலங்கை அரசு 'கைது' செய்யத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் லண்டனில் வாழும் அடேல் பாலசிங்கம், கலிபோர்னியாவில் வாழும் ஜெயந்தா டொனால்டு ஞானக்கோன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள காஸ்ட்ரோ ஆதரவாளரான நெடியவன்.

அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி அடேல், பல்வேறு குழுக்களாக உள்ள தமிழ் ஈழத் தலைவர்களை தனது அன்பினால் தாயைப்போல் உரிமையுடன் கண்டித்து ஒருங்கிணைத்தார். லண்டனில் எந்த ஆர்ப்பாட்டம் என்றாலும் முதலில் நிற்பார். இவரது சக்தி வெள்ளையர்களை புலிகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஞானக்கோன் ஒரு விமான பைலட். முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர். கலிபோர்னியாவில் வாழும் இவர் புலிகளுக்கு ஆயுத விநியோக முகவர் என்று கூறுகிறது இலங்கை அரசு. லக்ஷ்மன் கதிர்காமர் கொலையிலும் இவரை வளைத்துப்போடப் பார்க்கிறது. ஆனால், எதற்கும் அஞ்சாதவர் ஞானக்கோன். ''என்னைப் பிடிப்பதற்குள் அவர்களைத் தீர்த்து விடுவேன். அமெரிக்காவில் உயிரை காப்பாற்றிக் கொள்ளக் கொன்றால் குற்றமில்லை!'' என்று சிரிக்கிறார் அவர்.

இலங்கையில் விழுந்த பிணக் குவியல்களையும், நிகழ்ந்த பட்டினிச் சாவுகளையும் கண்டு கொதித்ததோடு... பிஞ்சுக் குழந்தைகளை வதைமுகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததை அமெரிக்காவில் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்தவர் உருத்திரகுமாரன். கழிப்பிடம் இல்லாத பெண்களும், கஞ்சி இல்லாத குழந்தைகளையும் கண்டு அமெரிக்க அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான 'சனல்-4' வெளியிட்ட பயங்கரமான காட்சிகளைக் கண்டு உலகமே அதிர்ந்தது. அதே சனல், எப்படி அப்பாவி மக்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் என்றும் காட்டியது. ஐக்கிய நாடுகள் இந்த வீடியோக்களை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடுப்பாகிப்போன இலங்கை அரசு, கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் உருத்திரகுமாரனை போட்டுத் தள்ளவும் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

'என் தந்தை யாழ் மாநகரின் மேயராக இருந்தவர். எனக்கு அந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள பிணைப்பை என்ன பயமுறுத்தினாலும் போக்கி விட முடியாது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் உலகம் முழுவதும் இப்போது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது. என்னை அவர்கள் அழிக்கப் பார்ப்பது உண்மைதான்! என் உயிரைப்பற்றி கவலைப்படுகிறவன் இல்லை நான். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பற்றித் தான் கவலைப்படுகிறேன்'' என்று நறுக்கென்று இதற்கு பதில் தருகிறார் உருத்திரகுமாரன்.
-

தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை அரசு


வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹனவுக்கு பிரித்தானியா விஸா வழங்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தனிப்பட்ட ரீதியில் விஸாவுக்கு விண்ணப்பித்ததால் தான் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது பிரித்தானியத் தூதரகம்.

ஆனால் அவருக்கு விஸா நிராகரிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ரோகித போகொல்லாகம. எது எவ்வாறாயினும், இது சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பது உண்மை. இலங்கை அரசாங்கத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அண்மைக் காலமாக இராஜதந்திர உறவுகள் சீராக இருக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற விவகாரத்திலும், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்ற விவகாரத்திலும், மனித உமைகளைப் பேண வேண்டும் என்பதிலும் பிரித்தானியா அடிக்கடி ஆலோசனைகளையும் கருத்துகளையும் கூறி வந்தது.

உதவி கேட்டுக் கைநீட்டுவதையும் உபதேசம் செய்தால் உதறித் தள்ளுவதையும் வழக்கமாகக் கொண்ட இலங்கை அரசுக்கு இது பிடிக்கவில்லை.

அதுமட்டுமன்றி, பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கே.பியின் பேட்டி ஒளிபரப்பானது, இராணுவத்தினரால் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காட்சி ஒளிபரப்பானது, வவுனியா தடுப்பு முகாம் அவலங்கள் படம் பிடிக்கப்பட்டமை என்பன பிரித்தானியா மீது இலங்கைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அரசின் செயற்பாடுகள் மீது பிரித்தானியாவுக்கு இருந்து வந்த வெறுப்பு சட்டமா அதிபர் மொகான் பீஸ் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா போன்றோருக்கு விஸா வழங்க மறுக்கும் அளவுக்கு விரிவடைந்தது.

இந்த நிலையில் பிரித்தானிய விஸாவைப் பெறாத ஒரு தமிழ்ப் பெண்ணை தூதரக அதிகாகள் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் இலங்கை அரசுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை பாரதூரமான தொரு குற்றம் போலவே இலங்கை அரசு அணுகியிருந்தது.

இதுபற்றி பிரித்தானியத் தூதரகத்திடம் கண்டனம் தெரிவித்ததுடன் விளக்கம் கோரியது வெளிவிவகார அமைச்சு.

இதன் தொடர்ச்சியாகவே பாலித கோஹனவுக்கு விஸா வழங்க பிரித்தானியா மறுத்திருக்கிறது.

இந்த விடயத்தில் எந்த அரசியல் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்தப்படவில்லை என்று பிரித்தானியா தெரிவித்திருந்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை. இலங்கை அரசுக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மைக் காலத்தில் இலங்கை அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளை சர்வதேச சமூகம் மதிப்புடன் நடத்தவில்லை.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு விஸா வழங்க கனடா மறுத்திருந்தது. ஆளும் கட்சி எம்.பியான அர்ஜுன ரணதுங்கவுக்கு விஸா வழங்க பிரித்தானியா மறுத்தது.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஜப்பானில் சாதாரண பயணி போல நடத்தப்பட்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டார்.

இப்படியான சம்பவங்கள் இலங்கை அரசுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருபுறத்தில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த அரசு என்று பெருமைப்படும் அரசாங்கம் உலகமே தமக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்துடன் இருந்தது. ஆனால் அதற்கு மாறான உபசரிப்புகள் கிடைப்பதால் அரசாங்கம் திக்குமுக்காடத் தொடங்கியிருக்கிறது.

புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கு ஆதரவு கொடுத்த சில நாடுகள் இப்போது அதற்குத் துணைவரத் தயாராக இல்லை.காரணம் இலங்கை அரசின் போக்கில் அந்த நாடுகள் அதிருப்தியடைந்திருக்கின்றன.

மனித உமை விவகாரங்களில் இலங்கை அரசு சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தத் தவறி விட்டது.

இதன்காரணமாக சர்வதேச சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பாலித கோஹனவுக்கு விஸா மறுக்கப்பட்ட விவகாரம் சாதாரணமானதொன்றல்ல.

வெளிவிவகார அமைச்சருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அமைச்சின் செயலாளர்.

பொதுவான இராஜதந்திர நடைமுறைகளின்படி அவருக்கு விஸா வழங்குவதற்கு எந்த விசாரணைகளும் தேவைப்படாது.

பனிப்போர் காலத்தில் துருவங்களாக இயங்கிய நாடுகளும், இந்தியா - பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இராஜதந்திரிகளுக்கே இப்படியான சிக்கல்களை கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கின்றன.

இலங்கைக்கு இது புதியதொரு அனுபவம். இலங்கையின் வெளிவிவகார செயலாளருக்கு விஸா மறுக்கப்பட்டதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இது கையாளப்பட்டிருக்கலாம்.

சனல் 4 விவகாரத்தில் பிரித்தானியாவுடன் இலங்கை அரசாங்கம் முட்டி மோத முனைந்தது, யுனிசெப் பிரதிநிதியை வெளியேற்றும் உத்தரவு போன்றன இலங்கைக்கு புதிய சிக்கல்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மனிதஉமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சயான தீர்வைக் காண முயற்சிப்பதுமே சர்வதேச அரங்கில் இலங்கை அரசைக் காப்பாற்றும் என்பது உறுதியாகியிருக்கிறது.

ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்ற போக்கில் உறுதியாக இருக்கிறது அரசு.

எந்தவொரு வெளிநாட்டு நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று கூறிக் கொண்டு சர்வதேசத்துடன் மோதுவது இலங்கை அரசுக்கு இராஜதந்திர ரீதியில் மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

அத்துடன் சர்வதேச நிதியுதவிகளை இழக்கின்ற நிலையும் ஏற்படலாம்.

இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் வர்த்தகச் சலுகை நீடிப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கூட தடைப்படும் ஆபத்தை உருவாக்கலாம்.

அரசாங்கத்தின் போக்கில் மாற்றங்கள் தென்படாத வரையில் சர்வதேசத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

பிடிவாதப் போக்குடன் இருக்கும் அரசு வரட்டுக் கௌரவத்துக்காக சர்வதேசத்துடன் மோதத் துணிவது சாதாரண மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் 49% வீத பங்குகள் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமா? : ஜே.வி.பி.யின் லங்கா இரிதா பத்திரிகை தகவல்


விடுதலைப்புலிகள் இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் பல அரச நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானிடம் இருந்து இலங்கை ரெலிகொம் பங்குகளை மலேசியத் தமிழரான ஆனந்த கிருஷ்ணனின் மெக்ஷீஸ் நிறுவனம் அதிக விலையில் கொள்வனவு செய்திருந்தது.

இந்தக் கொள்வனவு தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக ஜே.வி.பி. மாத்திரமல்லாது, தொழிற்சங்கங்களும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன. ஆனந்த கிருஷ்ணனின் மெக்ஷீஸ் நிறுவனம், இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் 49 வீத பங்குகளை கொள்வனவு செய்துள்ளது.

மெக்ஷீஸ் நிறுவனத்தை ரெலிகொம் பங்குகளை பெறும் கொடுக்கல் வாங்கல்களுக்காக இலங்கைக்கு அழைத்து சென்றவர்கள், ஜனாதிபதிக்கு நெருக்கமான ரொஷான் காரியபெரும மற்றும் பிரியந்த காரியபெரும ஆகிய இருவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறிது காலத்தில் மெக்ஷீஸ் நிறுவனம் இவர்கள் இருவரையும் நீக்கி விட்டு, அதன் இலங்கை பிரதிநிதியாக திவயின பத்திரிகையின் அரசியல் செய்தியாளர் மனோஜ் அபேவீரவை நியமித்தது. தற்போது மனோஜ் அபேவீரவே மெக்ஷீஸ் நிறுவனத்திற்கான இலங்கையின் அனைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மெக்ஷீஸ் தொலைபேசி நிறுவனம் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரான இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஆனந்த கிருஷ்ணன், மலேசிய நாட்டின் இரண்டாவது நிலையில் இருக்கும் மிகப் பெரிய செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA