Thursday 20 August 2009

போராளியின் மடல்...!


புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர் – போராளியின் மடல்.


"அன்பிற்குரிய "இனிய தமிழீழ பெரு மக்களே".

"உங்களுக்கு தெரிந்த "சிறிய அறிமுகத்துடன்,தகவல்",

த‌மிழீழ உருவாக்க‌ம்!...

இல‌ங்கை அர‌சின், ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் த‌மிழ் அட‌க்குமுறையால் த‌ந்தை செல்வா உட்ப‌ட்டோர் அகிம்சை வ‌ழியில் போராடி "த‌மிழீழமே" தீர்வு என்றார்க‌ள். அவ‌ர்க‌ளின் அகிம்சை வ‌ழி ப‌ய‌ன‌ளிக்க‌வில்லை.

அதன் பின் தமிழீழத்தின் தேசிய தலைவர் அவர்களால், இப்போராட்டம் ஆயுதபோராட்டமாகியது. சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை, கொடுமைகள், சித்திரவதைகளை கண்டு தலைவர் அவர்கள் பொறுக்கமுடியாமல் "கிளர்ந்தெழுந்தார். தமிழ் மக்களின் விடிவிற்காகவும், சுதந்திரத்திற்காகவும் இடையான தடை கற்களை உடைக்க ஆரம்பித்தார்.(இது தவறா).

மகாபாரதத்தில் கூறப்பட்டவற்றை ஆழமாக சிந்தியுங்கள். யோசியுங்கள். தர்மம், நீதிக்கு எதிராக இருப்பவர்கள், எவராயினும் அழிக்கப்படவேண்டியவர்கள். (அது கூட பிறந்தவர்களாயினும்) இந்த கூற்று தவறு என்றால், கடவுள் தவறானவர். தவறான கடவுளை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள். (நீங்கள் வணங்குவதால் கடவுள் தவறானவர் இல்லை). ஆகவே, இந்த தமிழீழத்திற்கான போர் தவறில்லை.



ஒரு கண‌ம், சிந்தியுங்கள் வசதியான நல்ல குடும்பத்தில் பிறந்த தலைவருக்கு என்ன தலையெழுத்தா?

16 வயதிலிருந்து தலைமறைவாக இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க. கேட்டால் சொல்பார்கள், அவர் அங்கு சொகுசாகதான் வாழ்ந்தார் என்று. நான் ஒன்று கூறுகிறேன், உலகில் உள்ள மற்ற தலைவர்கள் போல் அவர் சொகுசாக வாழவில்லை. அவர் நல்லா இருந்தால்தான் நாங்கள் நல்லா இருக்க முடியும்.


அண்மை காலத்தில் இலங்கை இராணுவம் வெளியிட்ட வன்னியில் இருந்து எடுத்த புகைப்படங்கள் என்று.

நீங்கள் சிந்தியுங்கள், கஷ்டப்பட்ட குடும்பதில் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு பெரிய ஹொட்டலில் போய் சாப்பிட்டு, அல்லது சுற்றுலா தளங்களுக்கு ஒரு முறை சென்றிருந்தாலும், புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எடுத்து அதை பாதுகாப்பார்கள். இதற்காக இவர்கள் தினமுமா?, அல்லது சிலவேளைகளிலோ இப்படி சொகுசாக வாழ்பவர்கள் என்று கருதமுடியுமா?



உங்கள் சிறு வயது பிள்ளைகளுக்கு மிக வேண்டப்பட்டவர்கள், விலை உயர்ந்த சிறு விளையாட்டு பொருள் ஒன்றை அன்பளிப்பு அளித்தால், உங்களால் தடுக்க முடியுமா? இக் குழந்தை சிறு வயதில் எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் வாழும் இந்த குழந்தைக்கு இது ஒன்று கிடைத்தால் சொகுசா?.

பிறந்தநாளே கொண்டாடாத குழந்தை ஏதேனும் ஒரு முறை அமைதியான சந்தர்ப்பத்தில் சிலரின் விருப்பங்களுக்கு அமைய ஒரு முறை கொண்டாடினால் சொகுசா? இப்படியான குழந்தையின் வாழ்க்கையை சொகுசு வாழ்க்கை என்பவர்களை எப்படி கூறுவது?

சிந்தியுங்கள்!...

ஆரம்பகாலத்தில் தலைவர் அவர்கள், அப்போதைய யாழ்.மேயராக இருந்த அல்பிரைட்டை கொன்றாராம். இது மாபெரும் குற்றமாம், ஒரு இனத்தில் பிறந்து அதே இனத்தை காட்டிக் கொடுத்தும், உயிர் பலி எடுப்பதை அங்கீகரித்து, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன். ஒரு தகுதியான பொறுப்பில் இருக்க முடியுமா? இவ்வாறானவர்கள் வாழ தகுதியானவர்களா? இதை அல்பிரைட்டுக்கு வேண்டியவர்கள், தலைவரை தப்பாக பிரச்சாரம் செய்தார்கள்.(சுயநலத்திற்காக)

இதே, போல் ஒவ்வொரு தொடர்சம்பவங்களும். சிலர் தாமும் தமிழருக்காக போராடுகிறோம் என்பார்கள். போராடுபவர்கள் நல்ல விதமாக போராடினால் யாராக இருந்தாலும் வரவேற்போம். அதை விட்டு விட்டு இப் போராட்டத்தை அரசியலாக்குவது,வியாபாரம்,பதவி,பணம்,பெண் என்று கட்டு கோட்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வது, அவர்களிடம் பேசிப்பார்த்தார்கள் முடியவில்லை, போராட்டத்திற்கும் தடை கற்களாக இருந்தார்கள். என்ன செய்வது, நீங்களே கூறுங்கள். இப்படியானவர்களுக்கு துதிபாடுகிறவர்களும், இவர்களின் நட்பை வைத்திருந்த சில அரசியல்வாதிகளும், மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் இவர்கள் மரணத்தை தப்பு என்கிறார்கள்.

உண்மையில் நீங்கள் இதை விட்டு விட்டு இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எவ்வளவு வேதனைகள், இழப்புகள் என்பதை அந்த பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்து பாருங்கள். எல்லோராலும் எதிர்த்து போராட முடியாது. ஆனால் போராட முடிந்தவர்கள் போராடாமல் இருப்பதே மா பெரும் தவறு.

இப்படி நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும், மிகமோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மனநிலையில் இருந்து பாருங்கள். உண்மையான வலி புரியும். இவர்கள் என் உறவினர்கள் இல்லை என்று நினைப்பதை விட்டு விட்டு, (இப்போது உறவினர்களாக இருந்தாலே சில சமயங்களில் சில பேருக்கு வலிப்பதில்லை) தனக்கு தான் கஷ்டம் வந்தால்தான் புரியுதே தவற, அப்படியே தனக்கு வந்தாலும் சிலர் திரும்பவும் வரக்கூடாது என்பதற்காக ஒதுங்குகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு.

உங்களையே மீண்டும் இது தாக்கும் மற்றும், உங்கள் குழந்தைகள் என அடுத்த சந்ததியினரையும் தாக்கும். இப்படி எவ்வளவு காலத்திற்கு அடிமையாக இருப்பீர்கள். அடிமையாக இருப்பதை விட, உயிரை விடுவது மேல். உயிரை விட துணிந்தால் ஏன் வீணாக உயிரை விட வேண்டும். உயிரை விட துணிந்த நீங்கள் அதை பிரயோசனமாக அதுவும் நமது நாட்டிற்காகவும், எம் மக்களுக்காகவும் விட்டால் எவ்வளவு பெரும் நன்மை. அடுத்த சந்ததியினராவது நிம்மதியாக வாழ்பார்கள். அல்லது அவர்களும் உங்களை போல ஒவ்வொரு நாளும் பயத்திலும், நிம்மதியில்லாமலும் வாழவேண்டிவரும்.

மற்றும், நீலன்திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், அமிர்தலிங்கம் போன்ற அறிவு தலைவர்களை எல்லாம் புலிகள் கொன்றுவிட்டார்கள் என்கிறார்களே. அந்த அறிவாளிகள் தங்கள் அறிவை என்ன செய்தார்கள். எதிரிக்கு அடகு வைத்தார்கள். தன் இனத்திற்காக செய்திருந்தால் எவ்வளவோ நன்மை அதை விட்டு விட்டு இனத்திற்கு ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தார்கள். தமிழ் மக்களின் பாதுகாவலர்களான புலிகளையும் அழிக்க திட்டமிட்டார்கள், பிரச்சாரம் செய்தார்கள். தங்களின் சுயநல சுகபோக வாழ்க்கைக்காக. இப்படி எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள்.

சிந்தியுங்கள், சிங்கள தலைவர்கள் அவர்கள் இனத்திற்காக ஒற்றுமையுடன் குரல் கொடுப்பது போல இவர்களும் கொடுத்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இதற்கு எதிர் மாறாகவே இவர்கள் இருந்தார்கள் தவற, என்ன செய்தார்கள். லக்ஸ்மன் கதிர்காமர் சந்திரிக்காவிற்கு மிகவும் வேண்டியவராக இருந்ததும் வெளிநாட்டமைச்சராகவும் இருந்தார். நீலன் திருச்செல்வம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் செல்வாக்கோடு இருந்தார். இவ்வளவு காலமாக என்ன செய்தார்கள். கேட்டால் புலி தடையாக இருந்தது என்பார்கள்.


புலி நல்லதுக்கு தடையாக இருந்ததில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களால் புலிகளை மீறி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய உண்மையான மனம் இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை, சிங்கள இனவாதமும் விட்டுயிருக்காது அப்படியானால் ஏன் இவர்களுடன் கைகோர்ப்பான்.

மற்றும், ராஜீவ் காந்தி கொலை மாபெரும் தவறு என்கிறார்கள். ராஜீவ் அமைதி ஒப்பந்த காலத்தில் அவரின் அமைதி படை இலங்கையில் என்ன செய்தது.

பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை எடுத்த‌து, கொடும் சித்திரவதை, பாலியல் வல்லுறவு, சொத்துக்கள் சூறையாடல் அழிப்பு என எவ்வளவோ நாசம் பண்ணினது, ஒரு ராஜீவ் இறந்ததிற்கு இவ்வளவு துடிக்கிறார்ககளே.

அங்கு அவ்வளவுபேர் இறந்ததிற்கும், அக் கொடுமைகளுக்கும் என்ன பதில் சொல்வார்கள்.

இப்ப அதனால் எவ்வளவு பிரச்சினை என்கிறார்கள். இருந்திருந்தால், அப்பவே அழித்திருப்பார்கள், அப்ப அழித்திருந்தால் இப்படியான சம்பவம் உலகிற்கு தெரிந்திருக்காது. தமிழ் இனத்தின் அழிப்பும் அவ்வளவாக தெரிந்திருக்காது. ஆனால் இப்ப தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கிறது. முழு உலகத்தின் கவனத்திற்கும் வந்திருக்கிறது. மற்றும் முழு தமிழ் இனமும் கிளர்ந்து நிற்கிறது. இது எவ்வளவு பெரிய வெற்றி. ஆனால் எம் இனத்திற்கு இந்தியா மாபெரும் தவறு இழைத்து விட்டது. தனக்கு தானே மண் அள்ளிக் கொட்டி விட்டது. மற்றும் இந்தியாவின் இச்செயலை தமிழீழ மக்கள் மறக்க மாட்டார்கள்.

இந்தியாவில் மேலிடத்தில் இருக்கும் சில முக்கிய பகை உணர்வு தலைவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம். அதனால் ஒட்டு மொத்த இந்தியாவை இவ்வளவு அழிவிற்கும் பின் நாங்கள் எதிரியாக நினைக்கவில்லை. உண்மை நட்பு நாடாக இருக்கவே விரும்புகிறோம். அதுவே இந்தியாவினது பாதுகாப்பிற்கும் உகந்தது.

இப்ப இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் தூர நோக்கு பார்வை குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவும் இத் தவறை ஒரு நாள் உணர்வார்கள்.அப்போது இவ் அழிவுக்கு என்ன பதில் சொல்வார்களோ.

புலிகள் இராணுவ பலத்தை மட்டுமே நம்பினார்கள், அரசியல் போக்கை மறந்து விட்டார்கள், வெளிநாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்றார்கள். உண்மையில் புலிகள் அரசியல் சம்பந்த நடவடிக்கைகள் எடுத்தார்கள். வெளிநாடுகளுடன் தொடர்புகளை ஏற்ப்படுத்தினார்கள் ஆனால், வெளிநாடுகள் விலை பேசுவதாக அமைந்தது, சில விடயங்கள் இந்தியாவுக்கு பாதகமான விடயமாகவும் இருந்தது.


எங்கள் தலைவர் எதற்கும் விலை போகமாட்டார். நம்பினவர்களை ஏமாற்றவும் விரும்பமாட்டார். அப்படி பல காரணங்களால் சரிவரவில்லை. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தார்கள். உலக நாடுகள் தங்கள் சுயநலத்தை கருத்திற் கொண்டே அரசியல் நடத்தினார்கள். தமிழ் இனத்தின் உணர்வு, சுதந்திரம், கெளரவம் கண்ணுக்குத் தெரியவில்லை. என்பதே உண்மை.

ஒரு கண‌ம் சிந்தியுங்கள், பல ஆயிரம் மாவீரர்களின் தமிழீழ கனவை அழிக்கலாமா? தலைவர் இதை எப்படி செய்வார்? மாவீரர்களை நீங்கள் சாதாரணமாக பார்க்காதீர்கள். ஒவ்வொரு மாவீரனும் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். இள வயதில் நாட்டுக்காக எந்த சுகபோக வாழ்க்கையும் அனுபவிக்காமல், நாட்டுக்காகவே சந்தோஷ்மாக வீரமரணமடைந்தார்களே, நீங்கள் சிந்தியுங்கள் உங்கள் எல்லோராலும் அப்படி முடியுமா?

அந்த தலைவன் வளர்த்த இந்த மாவீரர்களாளேதான் முழு உலகிற்கும் தமிழ் இன பெருமை தெரியவந்தது. இல்லையென்றால் ஆரம்பகாலம் போல் அடிமையாக, உணர்வற்று பயந்து வாழ்ந்தவர்களாகவே இருப்பீர்கள்.

அவர்களின் தியாகத்தினால் நீங்கள் இன்று கெளரவத்துடன் ஓரளவேனும் வாழ்கிறீர்கள். மாவீரர்களை உங்களில் ஒருவை போல் நினையுங்கள், அதன் புனித தன்மை தெரியும். அது புரிந்தால் "நீங்களும் உணர்வுள்ள, வீரமும், மானமும் கொண்ட சோர்ந்து போகாத வீர தமிழ் மகன் ஆவீர்கள்".


எமது போராட்டத்தில் தலைவர் அவர்கள் சில தவறுகள் செய்திருப்பதாக கூறுகிறார்கள். எங்களுக்கு பாதகமாக அமைந்தவற்றை கூறினார்கள்.

ஆனால் அம் முடிவுகள் அந்நேரத்தில் நிச்சயமாக சரியானதாகவே எடுக்கப்பட்டது. போராட்டத்தில் வெற்றி, தோல்வி வருவது சகஜம், அதற்காக தவறு என்று அர்த்தமில்லை.

தலைவர் அவர்கள் ஒரு முடிவை தீர்க்க தரிசனமாகவே எடுப்பார். எடுத்த பின் அதைப் பற்றி மனச்சஞ்சலங்கள் கொள்வதில்லை. ஒரு முடிவு எடுத்தால் எப்பவும் தெளிவுடனே இருப்பார். மற்றவர்கள் போல் அடிக்கடி குழப்பிக் கொண்டிருப்பதில்லை. இதில் இருந்து அவரின் மன உறிதியை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் போல் இருந்திருந்தால் தனி மனிதராக இவ்வளவு கால போராட்டத்தை வழி நடத்தியிருக்க முடியாது. இது உண்மை.

எமது போராட்டத்தில் தற்சமயம் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கிறது. அதை தோல்வி என்று மட்டும் பார்க்காமல், வேறு வழிகளிலும் சிந்தியுங்கள்.
கடைசியாக நடந்த வன்னிப்போரில் இலங்கை இராணுவத்திற்கும், புலிகளுக்கும் நடந்த போராக நிச்சயம் இல்லை.


இது புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர். எந்த உதவியின்றி தனியே நின்ற புலிகளும், 20 உலக நாடுகளின் துணையுடன் நின்ற இலங்கை அரசும்.

அதாவது உலக நாடுகளின் முப்படைகளுக்குரிய ஆயுதம், புலனாய்வுத் தகவல்கள், ராடர்கள், பயிற்சி, இராணுவம், இராணுவ வல்லுனர்கள், மருத்துவங்கள், இராணுவ உபகரணங்கள், பணபலம், பதவிபலம் என்று நிறைய ஒன்று சேர்ந்து வன்னிப்போர் முனையில் குவித்தார்கள்.

இது மட்டுமில்லாமல் விலை போனவர்களும், துரோகிகளாகியவர்களும் இப் போரில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு இருந்தும் உலக நாடுகளால் புலிகளுடன் எவ்வளவு காலம் போரிட்டார்கள் என்று யோசியுங்கள்.

அவ்வளவு காலம் போரிட்டதும் இல்லாமல், கடைசியிலும் முடியாமல் கோழைத்தனமாகவும், நயவஞ்சகத்துடனும் தடை செய்யப்பட்ட நச்சுக்குண்டுகள், எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், மயக்கக்குண்டுகள் என்பவற்றையும் வீசினார்கள். அவற்றை வீசியும் புலிகளும், மக்களும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தார்கள் என்று யோசியுங்கள்.

புலிகள் இன்னும் போராடி இருப்பார்கள். ஆனால் சிலர் கூறினார்கள் புலிகள் ஏன் பெரிதாக சண்டை பிடிக்கவில்லை எல்லாவற்றையும் இழந்தார்கள். வெளியில் இருந்து பார்பவர்களுக்கு புரியாது.

ஏனெனில் இலங்கை அரசு போர்பகுதியில் செய்தியாளர்களையும், தொண்டு நிறுவனங்களையும் அனுமதிக்கவில்லை,

உண்மையில் புலிகள் அங்கு முழு பலத்துடன் போரிட்டார்கள். சிந்தித்து பாருங்கள் ஒரு நாள் போருக்கு எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டு இருக்கும் இம் மாபெரும் போரில். ஆனால் புலிகள் பல மாதக்கணக்கில் நடந்த போரை தாக்குப்பிடிக்க எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று அவர்களின் ஆயுதக் கப்பல்கள் வரமுடியாமல் போனதால் ஆயுத சப்ளை குறைந்து விட்டது. அதனால் தலைவர் அவர்கள் நடக்கவிருந்த இன்னும் பல ஆயிரக்கணக்கான உயிர் இழப்புக்களை தடுப்பதற்காகவும் ஆயுதங்களை மெளனிக்கச் செய்தார்.

உண்மையில் புலிகள் பலத்தை உலக வல்லரசு மற்ற இதர நாடுகளின் இராணுவ வல்லுனர்கள் நன்கு கணித்திருப்பார்கள். என்பதே உண்மை. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்த "கிருஸ் ரையன்" போன்றவர்களும் புலிகளின் பலத்தை ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

புலிகளைப் போல் சிறிய நிலப்பரப்பில் குறைந்த வளங்களுடன் உலக நாடுகளுடன் இவ்வளவு காலம் போரிட்டு அப் படைகளுக்கு பாரிய இழப்புகள்(இலங்கை அரசு அறிவித்தது கடைசி போரில் 6500 இராணுவம் பலி, 25000 ற்கு மேற்பட்டோர் காயம் என்றார்கள். ஆனால் உண்மையில் எவ்வளவு இருக்கும் யோசியுங்கள்). ஏற்படுத்த உலகத்தில் எந்த இராணுவத்தாலும் நிச்சயமாக முடியாது. தடை செய்யப்பட்ட குண்டுகளின் மத்தியில் போய் நின்று பார்த்தால் தான் புரியும். அப் போரின் கணம்.

தற்போது தமிழ் மக்கள் தலைவர் அவர்கள் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று குழம்பியிருக்கிறார்கள்.

இதில் அதாவது தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களும், ஆயிரக்கணக்கான போராளிகளும் மரணித்தவேளையில் அவர்கள் மரணிக்கும் போது தான் மட்டும் தப்பிப்பது சரியில்லை என நினைத்தும்,

தான் இருப்பதால் தான் உலக நாடுகள் ஒரு தீர்வு தராமல் இருப்பதாகவும் கருதி போரிட்டு வீரமரணம் அடைந்திருந்தாலும்,

அல்லது தான் வீரமரணம் அடைந்தால் இவ்வளவு கால போராட்டம் வீணாகிவிடும் என்றும், உலக நாடுகளிற்கு தெரியாமல் இருப்பதற்காகவும்,

கடைசி நேரத்தில் தலைமறைவாக இருந்தாலும். இதில் எந்த முடிவையும் தலைவர் அவர்கள் எடுத்திருந்தாலும், நிச்சயமாக போற்றுதலுக்குரியவராவார்.(எப்பவும்)

அந்த மாமனிதனின் விலை பேசமுடியாத உறுதிபடைத்த இலட்சியத்தையுடைய அவரின் மனதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. அவர் எப்பவும் எந்த துயரத்திலும் மனம் தளராத உறுதிபடைத்தவர். எப்போதும் தெளிவாகவே இருப்பவர், அதனால் அவர் அந்த நேரத்தில் நிச்சயமாக உறுதியான ஒரு முடிவை எடுத்திருப்பார். ஆகவே நீங்கள் எல்லோரும் தலைவனின் இலட்சியத்தை அடைவதற்காக, ஒன்று பட்டு கருத்து வேறுபாடுகளை இப்போதாவது மறந்து ஒற்றுமையுடன் தமிழ் இனம் சுயகெளரவத்துடன், தலை நிமிர்ந்து, உரிமையுடன் நிம்மதியாக வாழ உலக நாடுகளின் மனதில் இடம்பிடிக்க கூடியவாறும், அதனால் "தமிழ் தனி அரசு" அமைய பாடுபட உறுதிமொழி எடுத்துகொள்வோமாக.

இவ் அமைதி வழிப்போராட்டம் எச்சந்தர்ப்பத்திலும் வன்முறைகளற்றதாக இருக்க மிக முக்கிய கண்காணிப்புடன் செயற்படுங்கள். தீயசக்திகளும் தூண்டிவிடக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள்.

இப் போராட்டத்தில் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற பதவிப்போட்டிகளை இச்சந்தர்ப்பத்திலாவது தமிழர்களாகிய நீங்கள் நீக்கிவிடுங்கள்.

தமிழ் இனம் தலைநிமிராமல் இப் பதவி, பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். நீங்கள் மட்டும் எத்தனை நாட்கள் வாழுவீர்கள். வாழவிடுவார்கள்,

சிந்தியுங்கள். தயவுசெய்து அளவுக்கதிகமான ஆசைகள், பொறாமைகள், போட்டிகளை தள்ளிவையுங்கள். நீங்கள் அவர் பக்கம், இவர் பக்கம் என்றில்லாமல் நியாயத்துடன், வழிதவறாதவர்களுடன் உங்களின் உண்மையான மனச்சாட்சிபடி நில்லுங்கள். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள்.

எதிரி எங்களை அழிக்க எவ்வளவு இரகசியமாக, திட்டங்களை உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் தீட்டினான். அவனை விட புத்திசாலிகள் நீங்கள். ஏன் உங்களால் முடியவில்லை. முக்கியமாக முகாம் மக்களின் நிலையை ஒரு கண‌ம் சிந்தியுங்கள். ஏனோ தானோ என்று இல்லாமல், அவலங்களை உங்கள் அவலங்களாக எண்ணிப் பாருங்கள். இவர்களை வெளியே எடுப்பது புலம்பெயர் தமிழ் மக்களாகிய உங்கள் கையில் உள்ளது.

புலிகளால்தான், இவ்வளவு இழப்பு என்பவர்கள், இப்ப அவர்களுக்கு எந்த தடையும் தற்சமயம் இல்லை. இப்ப இவர்களது பேச்சு இலங்கை அரசிடம் எவ்வளவுக்கு எடுபடுகிறது என்பதை பார்ப்போம். தமிழ் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகு எப்படி தங்களால் உடனடியாக செய்யமுடியும் என்பார்கள். சரி இப்போராட்டத்திற்கு முன் இவர்கள் என்ன செய்து எதை பெற்றுக்கொடுத்தார்கள். ஆகவே எல்லாவ‌ற்றையும் உணர்ந்து செயற்படவேண்டிய காலம் இது.

எங்கள் போராட்டம் வெறும் ஆயுதபோராட்டத்தில் மட்டும் இருக்கவில்லை. புலிகள் ஆரம்பகாலங்களில் அகிம்சை வழியிலும், பேச்சுவார்த்தை வழிகளிலும் ஈடுபட்டார்கள். அவை திருப்திதரவில்லை, ஏமாற்றமாகவே இருந்தது.

உதாரணமாக திலீபன் அண்ணாவின் அகிம்சை போராட்டம். அவரின் தியாகம் காந்தியின் தேசத்திற்கே அகிம்சையை உணர்த்தியது. அப்படி நடந்தும் ஏதும் கிடைக்கவில்லை. அதன் பின் ஆயுத போராட்டம் உச்சம் பெற்றது. எம் போராட்டத்தை எதிரி தவறு என்றாலும், எம் இனத்தவர்களும் அல்லவா. இலங்கையில் எத்தனையோ சிங்களவர்களுக்கு இடையில் போட்டி கட்சி, குழுக்கள் உள்ளது. ஆனால் தமிழனுக்கு எதிராக என்றால் ஒன்று சேருகிறார்கள். இங்கு அப்படியா, எம் இனத்தவர்கள் சிலர், எதிரி பக்கம் செல்கிறார்கள். எவ்வளவு வேதனை. உயிருக்காக எப்பவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

ஆகவே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் உலக அரங்கில் எம் உணர்வுகளை உரத்து ஒலிக்க செய்வதுடன், எம் சுயஉரிமையை பெற்றுக்கொள்வதுடன் "தமிழ் அரசை" நிறுவ உறுதி பூண்டு நிற்போமாக.

என் அன்பான இன்னொரு வேண்டுகோள், தமிழர்கள் எல்லோரும் (முக்கியமாக குழந்தைகளுக்கு) மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை குழந்தைப் பருவத்திலே நிச்சயமாக கற்று அறிந்து கொள்ளவையுங்கள். அவை ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் மிக முக்கியமானவை. அவற்றை மேலோட்டமாக பார்க்காமல் அதில் இருப்பவற்றை ஆழ்ந்து சிந்தியுங்கள். அத்துடன் எமது தாயக வரலாற்றை முக்கியமாக அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருங்கள். தெரியாத பலவிடயங்களை தெரிவியுங்கள்.

எனவே சோர்ந்து போகாமல் எமது அமைதி வழி "தமிழ் தனி அரசு" போராட்டத்தை பெரும் எழுச்சியுடன் தொடர்ந்து கொண்டிருப்போமாக. இப் போராட்டத்தின் முடிவை காலம் நிர்ணயிக்கும். அதுவரை உலக நாடுகளின் கைகளில் தான் தற்போது உள்ளது. அதனால் இவர்கள் உண்மையை உணர்ந்து நல்ல தீர்ப்பை தருவார்கள் என்று நம்புவோமாக. அப்படி நடக்காவிடின் அதன் விளைவுகளுக்கு உலக நாடுகளே பொறுப்பாவார்கள்.

"ஒற்றுமையின் பலம் ஓங்குக"

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அன்புடன்,
புலனாய்வுப் போராளி,
இளங்கோ...

தமிழின அடையாளத்தை அழிக்கமுற்படும் சிங்களத்தை நிராகரிக்கத்துணிந்துள்ள தமிழ் மக்கள்


சிறுபான்மை அரசியலை சுதந்திரக் கட்சிக்குள் சிறைப்படுத்த முயலும் புதிய தேர்தல் சட்டம் இனப்பிரச்சினைக்கான இராணுவத்தீர்வின் மற்றுமொரு அம்சம்

அரசாங்கத்திதினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் இன, மத பெயர்களில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கட்சிகள் பாதிப்பினை எதிர்நோக்கவுள்ளன. ஏதாவது கட்சியொன்று இவ்வாறான முறையில் பெயர் கொண்டிருக்குமாயின் ஓராண்டுக்குள் கட்சியின் பெயரை மாற்றி மீள பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இன அடையாளத்தினை வெளிப்படுத்தும் கட்சிகளில் பெரும்பாலானவை சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகும். தற்போதைய அரசாங்கமானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுள் அல்லது சுதந்திரக் கட்சியினுள் சிறுபான்மை மக்கள் தமது அரசியலை நடத்த வேண்டும் என்ற கொள்கையினை கொண்டிருக்கின்றார்கள். யாழ் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தலைமைத்துவம் கொண்ட கட்சி அரசாங்கக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு போட்டியிட்டமை இதற்கு உதாரணமாகும். புலிகளிடமிருந்த விலகிய முரளிதரனுக்கும் இதே நிலை ஏற்பட்டதுடன் பிள்ளையானின் கட்சிக்கும் அவ்வாறு செய்வதற்கான அழுத்தங்கள் பலமாகப் பிரயோகிக்கப்பட்டன. தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் பலருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அழுத்தம் வழங்கப்படுவதுடன் மலையகத்தின் பிரதான கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளன.

கட்சிகளின் பதிவினை நீக்கி விடும் அதிகாரம் தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு இச்சட்டமூலத்தினால் கிடைக்கின்றது. இதன்படி தொடர்;ச்சியாக இரண்டு தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகளை நீக்கி விடும் அதிகாரமும் அவருக்கு கிட்டுகின்றது. இந்த புதிய சட்டம் அரசியலமைப்பில் 10வது சரத்தினையும், 14ம் சரத்தினையும் அப்பட்டமாக மீறுகின்றது.

இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர், பொதுச்செயலாளர், தவிசாளர், பிரதமர் வேட்பாளர், ஜனாதிபதி வேட்பாளர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு இதுவரை சிறுபான்மையினர் எவரும் நியமனம் பெற்றதே இல்லை. இந்த பின்னணியின் கீழ் தான் சிறுபான்மை கட்சிகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் உள்ளடக்க முனைகின்றது.

புலிகளின் புதிய தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட கே.பியினை கைது செய்ததன் ஊடாக சீர்திருத்தத்திற்கான வாய்ப்பினை அரசாங்கம் குறைத்து விட்டது. தமிழீழத்தினை மட்டுமன்றி அனைத்து சிறுபான்மையினத்தவர்களும் தமது தேசியத்தின் அடிப்படையில் அதிகாரத்தினை கோரும் போக்கினை அடக்குமுறைக்குட்படுத்தி, சிறுபான்மை அரசியலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற சிறைக்குள் தள்ள முயற்சிப்பதானது இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கப்போகும் இராணுவத்தீர்வில் ஓரு அம்சமாகும்.

அரசாங்கத்தின் கண்களைத் திறப்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த யாழ் வவுனியா தேர்தல் முடிவுகள் போதுமானதாகும். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அமைச்சர் டக்ளசும் அதிருப்தியினை வெளியிட்டிருந்தார். தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் யாழில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு லட்சத்திற்கு அதிகமான மக்கள் சமூகமளித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் ஆகஸ்ட் 8ம் திகதி வாக்களித்தவர்கள் சதவீதம் 22 ஆகும். இவர்களில் அரசாங்கத்திற்கு வாக்களித்தது 10,602 பேராகும். தமிழ் மக்களின் அவலங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்று அரசாங்கம் குறிப்பிடும் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு யாழில் 8008 வாக்குகள் கிடைத்துள்ளன. வவுனியாவில் இவர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். எனினும் ஒரு விடயத்தினை மட்டும் புறக்கணித்து விட முடியாது. அது என்னவெனில் பயங்கரவாதத்திலிருந்து தமிழ் மக்களை விடுவித்து விட்டதாகக் கூறும் அரசாங்கத்தினை வட பகுதி தமிழ் மக்கள் நிராகரித்து விட்டுள்ளனர். புலிகளின் கைப்பொம்மைகள் என்று கூறப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பு இன்னும் புலிகள் இல்லாத பின்னணியில் பலமாக இருக்கின்றது என்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள சிங்கள மக்கள் முயற்சிக்க வேண்டும். சிறுபான்மை அரசியற் கோரிக்கைகளை அடக்குமுறைக்குட்படுத்தி வைத்துக்கொள்ளும் நடைமுறையை நீண்ட காலத்திற்கு தொடர முடியாது. அடக்குமுறையின் அழுத்தம் வெடித்து சிதறி பிரிந்து செல்லும் போக்கினை முனைப்புச் செய்யும் என்பதனை 90களில் சோவியத் பிரிந்ததன் ஊடாக நாம் அவதானிக்கலாம்.

இனங்களை பலாத்காரமாக கலந்து விட முடியாது. அரசாங்கம் எதிர்பார்ப்பதனைப் போன்று இன வேறுபாடுகள் அற்ற அரசியல் நாட்டில் ஏற்பட வேண்டுமாயின் முதலில் சிங்கள அடிப்படை வாதப்போக்கினை அரசாங்கம் கைவிட வேண்டும்.

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் புதிய போக்கு

இந்தியாவின் இந்த புதிய போக்கினை தமிழர்தரப்பு எவ்வாறு கையாளப்போகிறது என்பதில்தான் ஈழவிடுதலைப்போராட்டத்தின் அடுத்த அங்கம் தங்கியிருக்கிறது.


ஈழத்தமிழரின் அரசியல் வாழ்வுரிமை தொடர்பில் இந்தியா புதிய போக்கொன்றைக் கடைப்பிடிக்கும் நோக்குடன் தனது இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் தனது புதிய நகர்வினை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எடுத்துக்கூறி அதன் ஊடாக புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களுக்கும் அந்த செய்தியை எடுத்துக்கூறும்படி இந்தியா கோரியிருப்பதாகவும் கொழும்பிலிருந்து பேசவல்ல சில தரப்புக்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் இல்லாத ஒரு வெற்றிடத்தில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தம்மால் இறங்கிவந்து பணிபுரிய முடியும் என்றும் ஈழத்தமிழர்களது போராட்டத்தை பிரபாகரனுக்கு முன், பிரபாகரனுக்கு பின் என்ற ரீதியில் தாம் அணுகவிரும்புவதாகவும் இன்றைய காலகட்டத்தில் தம்மை முழுமையாக நம்பலாம் என்றும் தமிழர்களின் அரசியல் விடிவுக்காக தாம் எந்தப் பணியையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் இந்தியா உயர்மட்டம் தமிழர் தரப்புக்கு எடுத்துக்கூறியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த மாத முற்பகுதியில் இந்தியா சென்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்திய உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்நிலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தையும் சிங்கள தேசத்திடம் பேரம்பேசும் தளத்தை ஏற்படுத்தும்வகையில் தமிழர்கள் வசமிருந்த ஆயுதபலம் முற்றாக அழிந்துவிட்டதையும் இனி என்ன பாதையில் தீர்வை நோக்கி நகர்வது என்பது குறித்தும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியத் தலைவர்களிடம் பேசினர்.

தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படைக்கோட்பாடுகளை விட்டு ஈழத்தமிழர்கள் என்றுமே கீழிறங்கப்போவதில்லை என்றும் இணைந்த வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகமாக இருக்கின்றபோது அதனை சிங்கள தேசம் பிரித்து வைத்திருப்பதையும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இந்தியத் தரப்பினரிடம் விரிவாக எடுத்துக்கூறியிருந்தார். தமிழ்மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அரசியல் உரிமைகள் என்பவை அடங்கிய விரிவான வரைவு ஒன்றைத் தயார் செய்து கூட்டமைப்பினர் இந்தியத் தரப்பிடம் கையளித்திருந்தனர்.

இது தொடர்பாக பரிசீலித்த இந்திய அரசின் உயர்மட்டத்தினர், வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து சிறிலங்கா அரச அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தமது நாட்டின் உயர் நீதிமன்றம் வழங்கிய வடக்கு கிழக்கு பிரிக்கப்படவேண்டும் என்ற தீர்ப்பை தன்னால் மீற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், தமிழ்மக்களுக்கான இறுதி அரசியல் தீர்வு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்த - முன்னர் வழங்கிய வரைவுடன் கூடிய விடயங்களை உள்ளடக்கிய - வரைவை இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசி அவரிடம் கையளிக்கவேண்டும் என்று கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டபோது, இந்தியப் பிரதமரைச் சந்திப்பது இப்போதைக்கு கடினம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, யாழப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத் தேர்தல்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தியா செல்வது என்ற முடிவோடு கூட்டமைப்பினர் நாடு திரும்பினர்.

(இந்தியப் பிரதமர் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றிருந்தபோது அவரை கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். அப்போது இந்தியப் பிரதமரிடம் பல்வேறு விடயங்களை எடுத்துக்கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பநதன், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர் நாராயணனுடனான சந்திப்பில், இந்தியாவின் போக்குக் குறித்து காரசாரமாக விமர்சித்திருந்தார். பிரதமருடனான சந்திப்புக்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.)

கூட்டமைப்பினரின் வரைவு தொடர்பாக விரிவான பரிசீலனையை மேற்கொள்ளும் பொறுப்பை இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலராக பதவியேற்றிருக்கும் நிருபமா ராவிடம் இந்திய உயர்மட்டம் வழங்கியிருந்தது. சீனாவுக்கான தூதுவராக பணியாற்றிய நிருபமா ராவ் கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக பதவியேற்றிருக்கிறார். சிறிலங்காவில் முன்னர் தூதுவராக கடமையாற்றியவர் மட்டுமல்லாமல் சீனாவிலும் கடமையாற்றித் திரும்பியுள்ளவர் என்ற ரீதியில் நிருபமா ராவ் அவர்கள் இந்த விடயத்தை ஆழமாகப் பரிசீலித்து இந்தியாவின் நலனுக்கு ஏற்றவகையில் பிரதமருக்குக் தக்க ஆலோசனை வழங்குவார் என்று இந்திய உயர்மட்டம் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் புதிய நிலைப்பாடு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குத் தெரிவிக்கப்பட்டு அதன் ஊடாக புலம்பெயர்ந்துவாழும் தமிழர் தரப்போடும் இது தொடர்பில் ஆலோசனைகளைக் கேட்குமாறு இந்தியத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பேச்சு நடத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தற்போது லண்டன் விரைந்திருப்பதுடன் அங்கு, நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு தாம் எடுத்துள்ள முடிவுகளை அவர்களுடன் கலந்தாலோசித்திருப்பதாகவும் தெரிகிறது.



இந்தியாவின் ஊடாக தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வினைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்காக இந்தியாவின் முயற்சிகளுக்கும் ஆக்கபூர்வமான பணிகளுக்கு ஆதரவையும் அனுசரணையையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ்மக்களுக்கு எப்போதும் இருக்கின்றபோதும் விடுதலைப்புலிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வு கொடுக்கவேண்டும் என்ற இந்தியாவின் நழுவல் போக்கிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறவே உடன்படவில்லை.

தமது இந்த நிலைப்பாடு இந்தியாவிற்கு தெரியும் என்றாலும் நடைபெறப்போகின்ற அடுத்த சந்திப்பில் இந்தியத் தரப்பினருக்கு தாம் தெளிவாக எடுத்துக்கூறவிருப்பதாக கூட்டமைப்பின் உயர்மட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.
"ஈழவிடுதலைப்போராட்டத்தின் ஓர் அங்கமான ஆயுதப்போராட்டத்தை சிறிலங்கா அரசுடன் சேர்ந்து அழித்தொழித்த இந்தியா, விடுதலைப்புலிகள் என்ற தமிழ்மக்களின் ஆன்மாவையே அழித்துவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தேசிய இனமொன்றின் விடுதலைக்காகப் போராடி அவர்களின் உரிமைகளுக்காக முப்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் உயிர்களைத் தியாகம் செய்த தமிழர் சேனையின் அந்த ஒப்பற்ற தியாகத்தை, பிரபாகரனுக்கு முன் பிரபாகரனுக்கு பின் என்ற குறுகிய வாய்பாட்டிற்குள் அடக்கிவிடமுடியாது. அடக்கவும் கூடாது.

" நடந்து முடிந்த யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா தேர்தல்களில் தமிழ்மக்களின் கொள்கையை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருக்கிறது என்றால், மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமல்ல விடுதலைப்புலிகளுக்குமான தமது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள் என்றே அர்த்தம். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கோ விடுதலைப்புலிகளுக்கோ தனித்தனியே வேறுபாடான எந்தக் கொள்கையும் கிடையாது. இரண்டு அமைப்புக்களுமே தமிழர்களின் கொள்கைகளை முன்னெடுத்து வந்தவையே ஆகும்." - என்று இந்தியாவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்துக்கூறும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதுஇவ்வாறிருக்க இந்தியா திடீரென தமிழ்மக்கள் பக்கம் தனது பார்வையைச் செலுத்தக் காரணம் என்ன என்று கேட்டபோது -

"விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்ற விடயத்தில் இந்தியாவைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திய சிறிலங்கா, தற்போது சீனாவின் ஆதரவுடன் கூடிய அரசியல் நிகழச்சிநிரலின்படி தனது காரியங்களை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. தமிழ்மக்களுக்கு என்ன கொடுத்தாலும் அது தான் நினைத்த தீர்வாகவே அமையவேண்டும் என்ற மிதப்பில் உள்ள மகிந்தவுக்கு ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தம் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், இந்தியாவின் பிரசன்னத்தை சிறிலங்காவினால் துடைத்தெறியவேண்டும் என்ற கட்டுக்கடங்காத கோபத்தில் மகிந்த அரசு, இந்தியாவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நாட்டிலேயே பல வேலைகளில் இறங்கியிருக்கிறது. இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும் தாக்கியது, கிழக்கில் பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்துவந்த இந்திய வியாபாரிகளை அனுமதியின்றி வாணிபம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து வெளியேற்றியமை போன்றவை இதற்குச் சில உதாரணங்களாகும். கிழக்கிலே இதுவரை காலமும் நடந்துவந்த ”துணிவியாபாரம்” இப்போது கசக்கத் தொடங்கியிருப்பது ஏன் என்பது பல வினாக்களுக்கான விடைகளைத் தரக்கூடும்.

"சிங்களதேசத்தின் இந்தத் திமிரை அடக்குவதற்கு எண்பதுகளைப் போல மீண்டும் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையில் தூக்கியுள்ளது இந்தியா. கடந்ததடவை ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கையைச் சுட்டுக்கொண்டதால், இம்முறை அரசியல் ரீதியில் காய்களை நகர்த்துவதற்குத் திட்டம் தீட்டிக் களமிறங்கியுள்ளது. கள யதார்த்தத்தை வைத்துப்பார்த்தால் நடைபெற்றுக்கொண்டிருப்பது இதுதான்" - என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை சிறிலங்கா இவ்வாறு எடுத்தெறிந்து நடக்கப்போகிறது என்று இந்தியாவுக்கு முன்னரே தெரிந்திருக்க போதிய வாய்ப்புக்கள் இருந்தனவே, ஏன் அப்போது எல்லாம் கூடிக்குலாவி நட்பு பாராட்டிவிட்டு இப்போது முறுகிக்கொள்கிறது என்று கேட்டதற்கு -


"சிறிலங்கா இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எதிர்காலத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும் தன்னை தூக்கியெறிந்துவிட்டு சீனாவின் பக்கம் சாய்ந்துகொள்ளும் என்றும் சிறிலங்காவுக்கும் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே இந்தியாவுக்கு தெரியும். ஆனால், இந்தியா இரண்டு விடயங்களில் அவதானமாக செயற்பட்டது. அதாவது,

மேற்குலகம் முண்டுகொடுப்பது போல தென்படும் விடுதலைப்புலிகளை அழித்துவிடுவதில் சிறிலங்காவுக்கு எப்படியாவது ஆதரவளிப்பது.

மற்றையது, அவ்வாறான போர் இடம்பெறும்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்புக்கு செவிசாய்த்து - தனது நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின் மக்கள் புரட்சியால் - மத்திய அரசு பயந்து தனது முடிவை மாற்றிக்கொண்டது என்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது.

"சீனா, சிறிலங்கா பிரச்சினை வெளிவிவகார விடயங்கள். ஆனால், விடுதலைப்புலிகள், தமிழ்நாடு ஆகியவை இந்தியாவை பொறுத்தவரை உள்நாட்டு விவகாரங்கள். ஆகவே, வெளிவிவகாரத்தைவிட உள்விவகாரத்தை நிதானமாக கையாளவேண்டும் என்பதில் இந்தியா உன்னிப்புடன் செயற்பட்டது. இந்த முடிவிற்கு முன்னால் எத்தனை ஆயிரம் மக்களின் பேரழிவு ஏற்பட்டாலும் தனது நிலைப்பாட்டில் மாறுவதில்லை என்ற உறுதியுடனேயே இந்தியா செயற்பட்டது." - என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்தியாவின் இந்த புதிய போக்கினை தமிழர்தரப்பு எவ்வாறு கையாளப்போகிறது என்பதில்தான் ஈழவிடுதலைப்போராட்டத்தின் அடுத்த அங்கம் தங்கியிருக்கிறது. ஏனெனில், இந்தியா எனப்படுவது தமிழர்களின் போராட்டத்தில் பிரிக்கமுடியாத அங்கம். ஆனால், அதற்காக இந்தியாவின் நலனுக்காக தமிழினத்தின் ஒட்டுமொத்த இலட்சியத்தையும் அடகுவைத்துவிட்டு விடுதலையைப் பெற்றுவிடமுடியாது. அவ்வாறு தமிழினம் செய்யத்தலைப்படுமாயின்,

தமிழினம் தோல்வியின் பாதையிலேயே பயணப்படுவதாய் அர்த்தப்படும். ஆகவே, இந்தியாவினூடாக சாதுரியமாகக் காய்களை நகர்த்தி அதன் ஆதரவை எவ்வாறு தமிழினம் முழுமையாகப் பெற்றுக்கொள்வது அல்லது அதன் ஆதரவை தமிழினம் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பதில்தான் தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

அமெரிக்காவில் தொடரும் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைப் போராட்டம்

சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்குமாறு அமெரிக்க மக்களையும் விற்பனையாளர்களையும் கோரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக நியூயோர்க் - மன்ஹற்றன் நகரில் அமெரிக்கா வாழ் தமிழர்களால் கடந்த சனிக்கிழமை பெரும் பரப்புரைப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கலந்துகொண்ட இந்தப் பரப்புரைப் போராட்டம் 'அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை'யின் [United States Tamil Political Action Council - USTPAC] முன்முனைவோடு மேற்கெள்ளப்பட்டது.
இந்தப் பரப்புரைப் போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் - நியூயோர்க், மன்ஹட்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது போராட்டம் இதுவாகும்.




ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்காவின் முதன்மையான ஆடை விற்பனை நிறுவனங்களான GAP, MACY’S, Victoria's Secret போன்றவற்றின் பெரிய சில்லறை விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையங்களில் சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் மிகப் பெருமளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளை கொள்முதல் செய்யவேண்டாம் என அந்தக் கடைகளுக்குச் சென்ற வாடிக்கையாளர்களிடமும், மன்ஹட்டன் நகர நடைப் பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகளிடமும் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வர்த்தக நிலையங்களின் முகாமையாளர்களைச் சந்தித்த தமிழ் பரப்புரையாளர்கள் - அவர்களிடமும் அதே கோரிக்கையை முன்வைத்தனர்.




சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்துவரும் இன அழிப்பின் பரிமாணங்களை விளக்கிக் கூறியபோது - அந்த வர்த்தக முகாமையாளர்கள், வீதியோர நடைப் பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகள் ஆகியோர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
குறிப்பாக - ஏறக்குறைய 3 லட்சம் தமிழ் மக்களை ஹிட்லரின் 'நாசி' பாணி வதைத் தடுப்பு முகாம்களில் சிறிலங்கா அடைத்து வைத்திருக்கின்றது என்ற ஒரு பெரிய விடயம் அங்கு இருந்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகளில் 50 வீதம் வரையானவை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆடைத் தயாரிப்பு தொழிற்துறை மூலமாக சிறிலங்காவுக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானம் தமிழ் இனத்தை அழிப்பதற்கான தேவைக்கே முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.


தமிழ் பரப்புரையாளர்கள் வழங்கிய விளக்கங்களைத் தொடர்ந்து - "இது ஒரு இனப்படுகொலையே தான்" என்று ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகாமையாளர் தன்னிடம் மிகச் சினத்துடன் கூறினார் என இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட - அமெரிக்க தமிழ் அரசியல் செயலவையின் ஒரு செயற்பாட்டாளரான சிவாநாதன் தெரிவித்தார்.

கோபத்துடன் கருத்துத் தெரிவித்த ஒரு அமெரிக்க வாடிக்கையாளர் - "இது ஒரு கலப்படமில்லாத அடிமைத்தனம்" என்றார்.

இந்தப் போராட்டத்தின்போது பல நூற்றுக்கணக்கான பிரசுரங்கள் சாதரண பொதுமக்களுக்கும், வர்த்தக நிறுவன வேலையாட்கள் மற்றும் முகாமையாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

"இந்த முழுப் போராட்டத்தினதும் - அந்த துண்டுப் பிரசுரங்களினதும் தகவல் மிகச் சுருக்கமானது; ஆனால் மிகப் பலமானது" என்று சிவாநாதன் தெரிவித்தார்.

"தயாரிக்கப்பட்ட ஆடைகளை வாங்குவதற்கு முன்னர் அதன் விபரப் பட்டையைப் பாருங்கள். இந்தப் பொருள் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்டது என அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தால் - அவற்றை வாங்காதீர்கள். ஏனெனில் அந்த நாடு இனப்படுகொலையைச் செய்கின்றது; உங்கள் பணம் அந்த இன அழிப்புக்கே பயன்படுத்தப்படுகின்றது." என்பது தான் அந்தத் தகவல்.
அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை முன்னெடுத்துள்ள இந்தப் பரப்புரைப் போராட்டம் - தொடர்ந்தும் - விரைவாக - அமெரிக்காவின் ஏனைய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த புலித்தலைமை ???

என்ன கேள்வி இது? கோபம் வருகிறதா?


இன்று ஊடகங்கள் ஆனாலும் சரி சில தமிழர்களானாலும் சரி , பத்தி, பகுத்தறிவு , இராணுவ, புலனாய்வு ஆய்வாளர்கலானாலும் சரி விடுதலைப்புலிகளின் தலைமையை “யார் இந்த புலித்தலைமை” என்று விழிப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனவே எந்த இலட்சியமோ கொள்கையோ இல்லா ஊடகங்குக்கும் அதன் மேதிலிகளுக்கும் “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அடம்பிடிக்கும் தமிழர்களுக்கும் ஒரு விளக்கம்? ஒன்றே ஒன்றுதான்



தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தமிழர் தாயக,தேசிய சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் தகமையுள்ள ஓரே தலைமை ஒட்டுமொத்த தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழத் தேசியத்தலைமைதான் மேற்சொன்ன கேள்விக்கான பதிலாகும்!

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியான பின்னடைவை அல்லது இழப்பை சந்தித்துள்ளார்கள் என்பதற்காகவும் போர்காலத்தின் இறுதிக்கால ஒருசில துன்பியல் சம்பவங்களை மேற்கோள்களாகக் கொண்டு 37 வருடகால விடுதலைப்புலிகளின் தியாகத்தை அர்பணிப்புக்களை உன்னதமான உயிர் தியாகங்களை, நம்பிக்கையுடன் நடந்துவந்த இலட்சியப் பயனத்தில் உழைத்தவர்களை கொச்சைப் படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் கேலி செய்வதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என்பதை மேற்சொன்னவர்கள் அறித்தலும் புரிதலும் அவசியமாகின்றது

அத்துடன் இராணுவ பலம் சிதைக்கப்பட்டது என்பதற்காக புலிகள் அரசியல் இராஜதந்திர பலம் இல்லாதவர்கள் என்கின்ற முடிவும் தவறானதாகும்
தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும் உண்மைகளை ஆதார பூர்வமாக எடுத்து சொல்வதற்கும் எல்லோற்கும் உரிமையுண்டு என்பதை கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் புலிகள் என்பதையும் இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .

காரணம் தமிழீழ தேசியத்தின் தலைமை மீது எம் மக்களுக்கு இன்றும் இருக்கும் அசையாத நம்பிக்கையின் அடிப்படையில் பயணித்தலே மிகமுக்கியமானதுமாகும்.


புலித்தலைமை முடிவுக்கு வந்தது, புலித்தலைவர் கொல்லப்பட்டர், புலிகளின் மாற்றுத்தலைமையும் கடத்தப்பட்டார். எனவே புலித்தலைமை மாற்றப்பட வேண்டும்,

புலித்தலைமையால் எதுவும் செய்ய முடியாது.

என்று கூக்குரலிட்டு எகத்தாளமிடுபவர்கள் வேறு யாருமல்ல

சில இலங்கை இந்திய ஊடகத்தினரும், சில ஈழத்தமிழினத்தின் முற்போக்குவாதிகள் என்ற போர்வைக்குள் இருக்கும் பிற்போக்கு வாதிகளும்,

வருமானத்தை நோக்காகக்கொண்ட சில பத்தி எழுத்தாளர்களுமே.
அதாவது வரலாற்றின் நல்ல பக்கங்கள் அனைத்தையும் கழுவித்துடைத்து விட்டு வரலாற்றில் எங்கெல்லாம் வடு இருக்கின்றதோ, வரலாற்றில் எங்கெல்லாம் சில தவறுகள் இடம் பெற்றுள்ளதோ அவற்றை மட்டும் தம் மடியில் கட்டிக்கொண்டு அலைகின்றது சில “முற்போக்கு சிந்தினையாளர்கள் வட்டம்”

இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் அரோக்கியமானதல்ல என்பதை உணர்ச்சி வசப்படும் அவர்களால் உணரமுடியாது. நாளும் பொழுதும் இந்த இனத்தின் விடுதலைக்காய் போராடி வீழ்ந்த 35000க்கு மேற்ப்பட்ட போராளிகளின் கல்லறைகள் மீது இவர்கள் கறைபூசாத குறை!

அந்த போராளிகள் எந்த தலைமை நேசித்தார்களோ, அவர்கள் எந்த தலைமையால் வளர்க்கப்பட்டார்களோ அவர்களை புறந்தள்ளும் இந்த வட்டத்தினால் அதிக பட்சம் சாதிக்க கூடியது புலிகளை இன்றும் விமர்ச்சிப்பது என்ற பெயரில் தங்களை தாங்களே விமர்சிப்பது. தங்களுக்கான இருப்பை நிலைநிறுத்துவது.




முள்ளிவாய்க்காலில் கடைசிவரை நின்று வந்த மக்கள் இன்றும் தலைமைபற்றி நன்மதிப்பை வைத்துள்ள அதே நேரம் மக்களுகாகவே மரணத்தை தழுவுதல் என்ற தலைமையின் இலட்சிய உறுதியையும் பெருமையாகவே பேசுகின்றனர்.

புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் நான் மாற்றுக்கருத்து என்ற வட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இவர்களின் மாற்றமில்லா கருத்துக்களை ஏற்க்கொள்ள முடியாதபடி அவர்களின் செயல்கள் இருப்பதை உணர்கின்றேன் .

இன்றும் தலைமைச் சண்டைக்கு இவர்கள் தயார் எனினும் தடை முகாம்களில் இருக்கும் மக்களை பற்றி கரிசனை அரிதாகவே இவர்கள் மனதில் படமாகின்றது. முகாம்களில் குடிநீரே இல்லாத போதும் அங்கு ஒழுங்காக உணவு கிடைக்கின்றது, அது கிடைக்கின்றது இது கிடைக்கின்றது என்று தமது வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர்களாக இவர்கள் வந்து விட்டார்கள்.



ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட முடியாதவர்கள், மாற்றுக்கருத்து என்ற பெயரில் எம் மானத்தையும் தமது தன்மானத்தை விற்க்கும் செயல் வருந்தத்தக்கது.

கால ஓட்டத்தில் இன்று அனைவரும் புலித்தலைமை என்று விழிக்கும் நிலைக்கு வந்திருப்பதும் அதனிலும் வருத்ததக்கது.
புலித்தலைமை என்று இவர்கள் கூறும் போது “இது எங்கோ கேட்ட குரல் என்று எனக்கும் புரிகின்றது” அதே குரல்கள் இன்று புலத்தில் ஒலிப்பது ஆரோக்கியமானதல்ல. தமிழீழ தேசியத்தலைமை ஒன்றை தவிர புலித்தலைமை என்ற ஒன்றை நான் அறியவில்லை. முள்ளிவாய்க்காலில் மூண்ட தமிழின அழிப்பு தமிழ் தேசியம் மீதான கறையாகவே பலரும் கருதுகின்றனர்

முட்டாள் தனமான சிந்தனைகள், முடிவெடுக்க முடியாது புலம் தேடி ஓடி வந்தவர்களின் இயலாமை எல்லாம் புலிகள் என்ற தமிழீழ தேசிய தலைமை மீதான கோபமாக மாறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவை ஆதரிக்கும் இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவில் காலில் விழ்ந்து மடிப்பிச்சை கேட்க வேண்டும் என்று கோருகின்றனரே தவிர தமிழீழ விடுதலைப்போரில் நாம் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்று பட்ட தமிழினமாய் ஒன்றுபட இவர்கள் எப்போதுமே தயாராய் இருந்ததில்லை.

இவர்களின் இந்தச் செயலால் கடந்த ஆறு மாதங்களாக ஈழமண்ணில் நடைபெற்று வரும் கொடிய நிகழ்வுகளாலும் அதை முன்னிறுத்தித் தமிழக மண்ணில் அரங்கேறிவரும் நாடகங்களாலும் மிகுந்த மனநெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் சமீப காலமாகத் தமிழகத்தில் தமிழர் போராட்டத்தை சாட்டி அரசியல் நடத்தி வந்த தமிழக தலைமைகள் சில உலகத்தமிழருக்கான ஈழப்பிரகடனம் என புதிய ஏமாற்று வேலைகளில் களமிறங்கி தமிழீழ மக்களுக்கும் தாமே தலைமை என்பதை நிலை நிறுத்த முற்படுகின்றனர்

அதே சமயம் ஈழத்துப்போரில் மிக முக்கியப் பங்கு வகித்துத் துரோக நாடகம் ஆடிய இந்தியர்கள் வெறும் ஆதரவு என ஒரு குறுகிய நோக்கத்தோடு சந்தர்ப்பவாத அரசியல் புரிவதுவும். மக்களின் மரணத்துக்கும் அவர்கள் மீது நடைபெற்று வந்த கொலைவெறித் தாக்குதல்களுக்கும் தமிழகப் புலி ஆதரவு அரசியல்வாதிகள் முக்கியக் காரணமாயிருந்திருக்கிறார்கள் என தமிழகத்தின் தமீழீழ ஆதரவு நிலைப்பாட்டைக்கொண்ட மக்கள் நம்புகின்றனர்

ஒரு நெருக்கடியான பின்னடைவை ஈழப்போர் சந்தித்த பின்னரும், ஒரு தற்காலிகத் தோல்வியை ஏற்று மக்களைக் காப்பாற்ற ஈழத்தமிழினத்துக்கு யோசனை கூறுவதை, அதற்கான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் அளிப்பதை விடுத்துத் தம்வீர வசனங்களால், வாய்ச்சவடால்களால், போலியான ஆருடங்களால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை குறிப்பாக எமது நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் சமுதாயத்தையும் ஏமாற்றி அவர்களின் உண்மையான உணர்வுகளை கட்டுப்படுத்தி கொம்புசீவி விட எத்தணிப்பதையும் நாம் மறந்துவிட முடியாது?

பத்தாயிரம் பேரைத் திரட்டிக்கொண்டு வன்னிக்குச் செல்வோம், கடலை நீந்திக் கடந்து போரில் பங்கேற்றுத் தமிழீழத்துக்கான போரில் ஈடுபடுவோம் என தமிழக தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டியவர்களால் தாக்கத்தை ஏற்படுத்தும்படியான எந்தவொரு அர்த்தமுள்ள போராட்டத்தையும் நடத்த முடியாமல் போனது.
வேதனையானது அப்பாவிகளான இளைஞர்களில் பலர் ஈழத் தமிழர் படும் துயர் தாளாமலும் இந்திய அரசின், சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈழத் தமிழர் பக்கம் ஈர்க்கவும் செயல்பட வைக்கவும் தீக்குளித்தது நினைவுக்கு வருகிறது.

அந்த இழப்புகளை அரசியலாக்குவதற்கும் பின்னர் தேர்தலில் வாக்குகளாக்கவும் அவர்கள் பட்டபாடு நினைவுக்கு வருகிறது. புலிகளின் பெயரால் தமிழீழ ஆதரவாளர்கள் பலர் தமிழக மண்ணில் நிகழ்த்திய அரசியல் துரோகம் இது. இதை உணராத புலம்பெயர் தமிழர்களும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களும் அவர்களை காக்குக் இரட்சகர்களாக கருதுதல் மடமையானது

போரில் விலை மதிப்பற்ற தளபதிகள் போராளிகள் கொல்லப்பட்ட பின்னரும் நான்கே நாட்களில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் ஆயிரக் கணக்கான மக்களை சிங்கள இராணுவம் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையிலும் தமிழகத்தின் தலைவர்கள் புலி நாமம் போடும் ஆதரவாளர்கள் பிரபாகரன் சாகவில்லை எனவும் அவர் உயிர்த்தெழுவார் எனவும் ஆருடம் கூறிக்கொண்டிருந்தார்கள்.

கொல்லப்பட்ட மக்களைப் பற்றியோ முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களைப் பற்றியோ இவர்கள் யாரும் பேசவில்லை. குறைந்தபட்சம் கைதுசெய்யப்பட்ட புலித் தலைவர்களைப் பற்றியும் உயிர் தப்பிக் காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகளைப் பற்றியுங் கூட அவர்களால் பேச முடியவில்லை.

புலிகளுக்கும் ஈழப் போருக்கும் ‘பேராதரவு’ கொடுத்துவந்ததமிழகப் புலனாய்வு இதழ்கள் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக வந்த செய்திகளைமுன்வைத்துத் தம் விற்பனையைப் பெருக்கிக்கொள்வதில் தீவிரம் காட்டின.
பிரபாகரன் கொல்லப்படவில்லை, அவர் தப்பிவிட்டார், விரைவில் மீண்டு வரப்போகிறார் என கிராபிக்ஸ் பட ஆதாரங்களோடு ஒரு வார இதழ் செய்திக் கட்டுரைகளை வெளியிட அதற்கு எதிரிடையாக அவர் கொல்லப்பட்டுவிட்டார் என மற்றொரு வார இதழும் ஆதாரங்களோடு செய்திக் கட்டுரைகளை வெளியிட்டது.
போர் திடீரென முடிந்துபோனதால் ஏற்பட்ட இழப்புகளை இவ்வகையான ‘புலனாய்வு’க் கட்டுரைகள் மூலம் அவை ஈடுகட்டிக்கொண்டன. அரசியல் நீக்கம் செய்யப்பெற்ற ஆயுதந்தாங்கிய போரைத் தம் அரசியல் ஆதாயங்களுக்காக ஆதரித்த பக்தர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

இவர்களின் இந்த கூத்துக்களை அப்படியே கொப்பியடிக்கும் சில புலத்துப் புல்லுருவிகள் தமிழகத்தின் கனவுலக கற்பனைகளையே புலத்து மக்களிடமும் திணிக்க முற்பட்டனர் அத்தோடு உறுதியோடு வாழ்ந்த மக்களை நிலைகுலையச்செய்தனர்

புலிகளின் வீரவரலாறு, புலிகளின் போராட்ட வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் தமிழ்ரின் உண்மையான வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கருவறைகளச் சுமக்கும் அந்த மாவீரர் கல்லறைகளில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது.

ஒரு விடுதலை இயக்கத்தின் போர்கள தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டிவந்த படையணிகளை, மனித பேரவலம் என்கின்ற மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் அடக்கி தாயக விடுதலை என்ற இலட்சிய பயணத்துக்காய் போர்முனை சென்ற சூரியப் புதல்வர்களை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.

பிராந்திய நலன், நாடுகளுக்கிடையிலான இராணுவபொருளாதார உறவுகள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் இவ்வுலகைப் புரட்டிப்போடும் பெருங் கனவொன்றுக்கான நியாயங்கள் உள்ளவரை சுயநலமற்றவர்களாய்ப் புரட்சிகர இயக்கங்களில் அணி சேரும் இளைஞர்களின் தியாகங்களுக்கான தேவைகளும் நியாயங்களும் இருந்து வரும்.

அதே நேரத்தில் எந்தவொரு நியாயத்தின் பெயராலும் ஒரு சர்வாதிகாரத்தைக் கட்டமைக்க, ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட யாருக்கும் உரிமையில்லை. காணாமல் போனவர்களின் நிலையைக் கண்டறிவதில் சட்டப்படியும் நியாயப்படியும் அக்கறை காட்டாத சிங்களப் பேரினவாத அரசின் சட்டங்களும் நீதிமன்றங்களும் இன்றைய வன்னி முகங்களில் சிறைபட்டும் வதை பட்டும் கிடக்கும் எம் மக்களை போன்றவர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் சொல்லப்போவதில்லை.
சிறைச் சுவர்களின் பின்னால் நீளும் அந்த இருள்வெளியில் நிகழக்கூடிய அபாயங்கள் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் உள்ள சிங்கள இன வெறியர்களுக்கான கொண்டாட்டங்களாக மாறியிருப்பது நிலைமையை மிகப் பயங்கரமானதாக்கியிருக்கிறது. இது போன்ற ஒரு சூழலில் தமிழகத்தில் நடப்பவற்றைப் பற்றி தாயகத்து மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இப்போது தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்காது

கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தன்னெழுச்சியான போராட்டங்கள் நிகழ்ந்தன. இவற்றில் பங்கேற்றவர்களில் பலர் ஈழத் தமிழரின் மேல் உண்மையான அக்கறை கொண்டவர்கள். பெண்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், அரவானிகள் ஆகிய பல்வேறு பிரிவினரும் ஈழத் தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்குமுறைகளுக்கெதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இவர்களது உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

ஆனால் தமிழகத்தில் ஈழத்தமிழருக்கான அவர்களின் குரலாய் ஓங்கி ஒலிக்கக்கூடிய நம்பிக்கையான ஒரு நேர்மையான தலைமை இல்லாமல் போனதால், தலைமையேற்றவர்கள் பலரின் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளால் அப்போராட்டங்களால் ஈழத் தமிழரின் மீதான சிங்கள ராணுவத்தின் கொடூரமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவோ சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவோ முடியாமல் போனது என்ற உண்மை எத்தைபேருக்கு தெரிந்திருக்கும்.

இதே வேளை அங்கும் சரி இங்கும் சரி ‘தமிழீழ ஆதரவாளர்கள் மனநிலையில் இப்போதுகூட மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை.இப்போதிலிருந்தே நவம்பர் மாதம் மாவீரர் நாளை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டமிட்டுவருவதாகச் செய்தி.யாரை அழைப்பது? ‘தம்பி’ சீமானையா, பாரதிராஜாவையோ இல்லை வை.கோ அண்ணாச்சியையோ வேறு யாரையுமா என்னும் குழப்பத்திலிருக்கிறார்கள். போரில் வெற்றிபெற்றால் என்னவெல்லாம் நடக்கும் எனக் கனவுகளில் மிதந்துகொண்டிருந்தவர்களுக்குத் தோல்வியைப் பற்றிச் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்ப்பது சிரமமாய்த்தானிருக்கிறது.

ஆனால்

இவர்களின் பின்னால் ஈழ மக்களின் பால் அக்கறைகொண்ட அவர்களது நிலையறிந்து கொதிப்புற்றிருக்கிற எண்ணற்ற தமிழ்மக்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள்.

கொடுஞ்சிறைகளிலும் இலங்கையின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள காடுகளுக்குள்ளும் சிதறுண்டு கிடக்கிற போராளிகள் வாழ்வை எண்ணி புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தவறுகளை ஆராய்ந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலையில் யாருமே இல்லை.



எனினும் இவர்களால் தமது இனப்பெருமைகளையும் வீராவேசத்தையும் தற்காலிகமாகவேனும் துறந்துவிட்டு ஈழத்தமிழர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிற மனிதஉரிமை, வாழ்வியல் நெருக்கடிகள் பற்றியும் இனச் சிக்கலுக்கான தீர்வைக் குறித்தும் தொலைநோக்குடன் அர்த்தமுள்ள வகையில் எதையாவது யோசிக்க முன்வருவார்களா என்பது கேள்விக்குறிதான்.
தமிழனின் வீரம் பற்றிய புறநானூற்றுக் கால வசனங்களுமே இன்னமும் அவர்களிடம் எஞ்சியிருப்பவை.படிக்கவும் திருமாவளவனின் உரையினை இதற்கு காரணம் புலிகள் அல்ல… *தகவல் பிரேமா ரேவதி

மாற்றுக்கருத்துடையவர்கள் என்போரின் மற்றும் உண்மையான மாற்றம் மிக்க தமிழீழ தலைமைத்துவத்தை ஏற்க முடியாத அவர்களது விட்டுக்கொடுத்து இனத்தின் வாழ்வு தொடர்பாக சிந்திக்க முடியாத மனது!



இப்போதும் இவர்கள் தம் இனத்தைவிட தமிழீழ தேசிய தலைமை மீதான தமது வசைபாடல்களை தொடர்ந்து செய்வதால் இவர்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் என்பது திண்ணம்.

தேசியப் போராட்டத்தை முன்னெடுத்து மக்களுக்கான விடிவை ஏற்ப்படுத்த வேண்டியவர்கள், தாம் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் மற்றவர்களை கேள்வி கேட்பது மடமை!


இன்றைய இளைஞர்கள் மீது இந்த விடுதலைப்பாரத்தை சுமத்திய பாரிய பொறுப்பு இவர்களையும் சாரும் என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

37 வருடம் இந்த ஆயுதப்போராட்டம் இலக்கை அடையாமல் தொடர்ந்தது என்றால்

அதற்கு ஒற்றுமைப்படாத எமது இனம் காரணமே அன்றி விடுதலைப்புலிகளோ, அல்லது தேசியத்தலைவரோ அல்ல!


இருந்தாலும், மீண்டும் இவர்களுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கின்றது, முயன்று பார்க்கட்டும் சிங்களவன் காலில் வீழ்ந்து கிடக்கட்டும், இந்தியாவின் செருபாகட்டும், மேடைபேச்சில் மயங்கி போதித்தனம் பண்ணும் தமிழகதலைவர்களை நம்பியே காலத்தை ஓட்டட்டும்
ஆனால் தமிழகளுக்கான தாயகம் ,தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளை இவர்களால் பெற்றுத்தர முடியுமெனில்…
இந்தியாவிற்காக வக்காலத்து வாங்கும் இவர்களால் அவர்கள் காலடியில் தான் நாம் கிடக்க வேண்டும் என விரும்பும் இவர்களால் தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோக்கி நகரும் எனில்……….

ஆனால் ஒடுக்குமுறைகள் உள்ளவரை போராட்டம் இருக்கும். நம்முடைய தவறுகளுக்கும் கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறுதான் தீர்ப்பெழுதும்
இது இவர்களுக்கான காலம்…என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA