அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் வி உருத்திரகுமாரனுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் பாலித கோஹன, இது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தில், தமது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றின் நடவடிக்கை குறித்து அமெரிக்க அரசாங்கம் சட்டநடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
அண்மையில், உருத்திரகுமாரன் உட்பட்ட அமெரிக்காவில் வாழும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் ரொபட் ஒ பிளக்கை சந்தித்த வவுனியா முகாம்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியமையை அடுத்தே இந்த கருத்தை பாலித கோஹன வெளியிட்டுள்ளார்.
ரொபட் ஓ பிளக்கின் இந்த நடவடிக்கை குறித்து அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.