Monday 31 August 2009

தமிழீழம் தெரிகிறது...!


ஆம் தமிழீழம் தெரிகிறது...!


பார்வையின் வேகம்
படைத்தவன் கண்ணிற்கு....
புரியாவிட்டாலும்.
எம்மை வாழவைப்பவன்
கண்ணிற்கு புரிகிறது.

அடைந்த காட்டில்
அதிசய மனிதன்.
தாய் மண்ணை மீட்க.....
தனி இராஜ்சியம் அமைக்க.....
தன்னைத் தயார் படுத்துகின்றான்.

அயல் நாட்டு மூளை
இவனுக்குத் தேவையில்லை.
உடம்பெல்லாம் மூளை
இவனுக்கு உதயமாகியுள்ளது.

யார் யாரோ படைத்த.....
போர்க்கருவிகளை
தன் வல்லமையால்
வெடிக்கவும் வைப்பான்.
செயல் இழக்கவும் வைப்பான்.

இவனின் பாதச் சுவடுகளில் - இன்று
எந்தனையோ ஒளிச்சுடர்கள்.
ஆணிவேராய்.......அத்திவாரமாய்......
எம் நாட்டிற்கே பெருமையல்லவா.....?

அகவை அடுத்தடுத்துத் தாண்டினாலும்.
இவனின் இலட்சியக் கனவுகள்.....
இன்று நனவாகி....... நாலாபக்கமும்.
ஒளி விட்டுப் பிரகாசித்து வருகின்றது.
ஆம் தமிழீழம் தெரிகின்றது.......!!!

களத்தில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளாகிய நாம் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றோம் – தளபதி ராம் அறிவிப்பு

29/08/2009 அன்று தளபதி ராம் அவர்கள் அனுப்பிவைத்த அறிக்கையொன்று கிடைக்கப்பெற்றது. அவ்வறிக்கையில் களத்தில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகள் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்கள் என ராம் அவர்கள் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையின் முழுப்பிரதி பின்வருமாறு:

மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை --என்ன செய்யப்போகிறோம்???

நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு இன்றோடு மூன்று மாதங்களுக்கு மேலாகின்றது.இப்போதும் அவர்களின் வாழ்க்கை கிழிந்த கந்தல் துணியாக முட்கம்பி வேலிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது.


அவர்களின் கண்ணீர், மழை வெள்ளமாக மாறி அவர்களையே மீண்டும் அதில்
மூழ்கவைத்தகொடுமை சில வாரங்களுக்கு முன்நடந்தேறியது. இனியும்தொடரும்.

இதைக்காண்பாரும் இல்லை.கேட்பாரும் இல்லை.குரல் கொடுப்பாரும் இல்லை.

இதுதான் மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை.

இது இப்படியிருக்க,சிறிலங்கா பாசிச ராணுவ அரசின் திரைமறைவு படுகொலை
அவலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.

உலகெங்கிலும் இதுவரை நிகழ்ந்திராத கேவலமான போர்க்குற்றங்களை புரிந்த
"சிறிலங்கா இன அழிப்பு இராணுவம்" இப்போது "பயங்கரவாதத்தை" எப்படி
ஒழிப்பது என்று உலகின் சில வல்லாதிக்க ராணுவங்களுக்கு பாடம்
நடத்துகிறது.

சாத்தான் வேதம் ஓதுகிறது.

சிறிலங்கா பாசிச ராணுவக்கும்பலோடு கைகோர்த்து "தமிழினப்படுகொலை" புரிந்த உலக வல்லாதிக்க சண்டியர்கள் சில இப்போது "உலக மனித நேய குரல்களின்" கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் வாய்பொத்தி நிற்கிறது.



மூன்று சகாப்தங்களுக்கு மேலாக தன் "சுயநிர்ணய" உரிமைக்காக போராடிய இனத்தினை முற்றாக சிதைத்து விட்டு "பயங்கரவாதத்தினை" ஒழித்துவிட்டதாய் சிங்கள தேசம் வேற்றிக்களியாட்டம் போடுகிறது.

தமிழனின் "இரத்த ஆற்றில்" தலை முழுகி சீவிச் சிங்காரிக்கிறது சிங்களம்.



உலக வல்லாதிக்கம் இதை வேடிக்கை பார்க்கிறது.இதே கதி ஒரு வெள்ளையினத்துக்கு நிகழ்ந்திருப்பின் என்ன நடந்திருக்கும்?

உலக மனித நேய அமைப்புக்கள் கத்திக் குழறியிருக்கும்.
ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் செய்து உடனடியாக நடவைக்கை எடுத்திருக்கும்.

சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்ற வழக்கு தொடர்ந்திருக்கும்.
ஒபாமா ஒப்பாரி வைத்திருப்பார். இந்தியா அமைத்திப்படை அனுப்பியிருக்கும்.

இது ஒன்றும் பாவப்பட்ட தமிழனுக்காய் நிகழவில்லையே இன்னும்.

ஏன்? ஏன்? ஏன்?

ஏனெனில் ஈழத்தமிழன் ஒரு இனம் இல்லை.
ஈழத்தமிழனுக்கு உணர்வுகள் இல்லை.

ஈழத்தமிழன் சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடாது.
ஈழத்தமிழனுக்கு இனமான உணர்வு இருக்கக்கூடாது.

மொத்ததில் அவன் அவன் மனிதனே இல்லை.
அவன் மிருகங்களை விட கேவலமான பிறவி.

அவன் சபிக்கப்பட்ட பாவப்பட்ட எந்தவித மனித உணர்வுகளும் இல்லாத மரக்கட்டைகள்.

ஒருகாலத்தில் இந்த சபிக்கப்பட்ட இனத்தின் வளர்ச்சியை,

அதன் விடுதலை உணர்வை அதன் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தினை பார்த்து இந்த உலகம் வியந்திருக்கிறது.


குறுகிய காலத்தில் உலகில்எந்தஇனத்திலும்,விடுதலைப்போராடாட்டத்திலும்
கண்டிராத அதீத வளர்ச்சியை இந்த "ஈழத்தமிழனினம்" கண்டபோது மூக்கில் விரலை வைத்த காலமும் இருந்தது.


ஈழத்தமிழனின் "தமிழீழம்" மலர்ந்தால் அதுதான் இந்த உலகில் உள்ள
ஆட்சியாளர்களுக்கும்,நாடுகளுக்கும்,ஆட்சியமைப்புக்கும்,கட்டுமானங்களுக்கும்,போரியல்
தொழில்னுட்பங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று மேற்கத்தையவன் பெருமூச்சுவிட்டான்.


அதுவே வினையானது.

தன்னைவிட தம் இனத்தினை விட "தமிழன்" என்ற ஒரு இனம் தலைதூக்குமாக இருந்தால்

எதிர்காலத்தில் தங்களின் வல்லதிக்க சண்டித்தனக்களுக்கு ஆப்பு வைப்பான் தமிழன் என்று கணக்குப்போட்டார்கள். முதலில் மூக்கு வேர்த்தது பாழாய்ப்போன பாரத தேசத்துக்கு.

அவர்களின் "பிராந்திய நலனுக்கு கேடு" என்ற கேவலமான சிந்தனையின்
அடிப்படையில் சிங்களதேசத்தோடு கைகோர்த்தார்கள்.

இதற்கு தமிழனின் வளர்ச்சி கண்டு வயிறெரிந்த மேற்கத்திய வல்லாதிக்க சதிகளோடு கூட்டுச்சேர்ந்தார்கள்.இவையெல்லாம் திரைமறைவில் நடந்தேறியது.


வெல்வதே குறிக்கோள் எனக் கூட்டுச்சேர்ந்த கும்பல்களுக்கு தமிழனின்
உரிமைக்குரலோ இல்லை அவனது உயிர்களோ கண்களுக்கு தெரியவில்லை.

கொன்று குவிப்பதே அவர்களின் குறிக்கோள்.இது இப்போது மனித நேயம் பற்றிப்பேசும் அமைப்புகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெளிவாகத்தெரியும்.



ஆனால் உலக மக்களுக்கு இந்த "இனப்படுகொலை" நாடகத்தின் உண்மை வடிவம் தெரியவே தெரியாது. அதுவே உண்மை.

புலம்பெயர் தமிழர்களின் போராட்ட வடிவங்கள் அவர்களுக்கு கொஞ்சம் புரியவைத்திருக்கும். அதுவும் சில தவறான வழிகாட்டல்களால் சொல்லப்பட வேண்டிய விசயங்கள் மழுங்கடிக்கப்பட்டது.

அது தமிழினத்தின் சாபக்கேடான உண்மை. ஆனால் அது இப்போது தெளிவாக
உணரப்பட்டிருக்கிறது.

நடு வீதியில் நாய் செத்தால் நாலுபக்க அறிக்கை நாடாளுமன்றத்தில் வாசிக்கும் மேற்கத்திய மனித நேய கனவான்களுக்கு "தமிழினத்தின் அவலம்"கண்களுக்கு தெரியாது.

ஒரு மிருகத்துக்கு காட்டும் பரிவு கூட நம் இனத்துக்கு இல்லை.அவர்களுக்கு இது பத்தோடு பதினொன்றான விடயம். இதுதான் யதார்த்தம்.

ஆனால் சாதாரண "மனிதநேயம்" கொண்ட மக்களுக்கு அவர்களின் நிலையில் இருந்து விளங்கப்படுத்தினால் எம் நிலை புரியும்.

இன்று எல்லோராலும் கைவிடப்பட்ட ஈனப்பிறவிகள் ஆனது "ஈழத்தமிழினம்".

சகாப்தங்களாய் வலி சுமந்து ரணப்பட்டு விடுதலை பெற்ற இனங்களுக்கு கூட எம்
இனத்தின் அவலங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை.

அழிவுகளை கடந்து வலிகளைச்சுமந்து விடுதலைபெற்ற இனத்தினால்த்தான் இன்னொரு இனத்தின் விடுதலை உணர்வை இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.

பஞ்சு மெத்தைகளிலும்,பகட்டு வாழ்க்கையிலும்,குளிர் அறைகளிலும் துயில் கொள்ளும் "மனித நேய கனவான்களுக்கு" ஈழத்தமிழனின் வலியை உணரமுடியாது.

அவர்களுக்கு அறிக்கை அனுப்புவதிலோ, இல்லை எடுத்துச்சொல்வதிலோ எதுவும் நடந்துவிடப்போவதில்லை. இது கடந்த காலத்தின் ஊடான யதார்த்தம்.
எப்போது நமக்காக இந்த உலகில் போராடி விடுதலை பெற்ற ஒரு இனம்,
ஈழத்தமிழனுக்காய் ஆத்மார்த்தமாக குரல் கொடுக்கிறதோ அன்றுதான் எங்களின்
"வலிகள்","விடுதலை வேட்கை","சுயநிர்ணய உரிமை" இந்த உலகுக்கு
தெரியப்படுத்தப்படும்.நியாயப்படுத்தப்படும்.

அதுவரை சிங்கள வெறியாட்டம் தொடரும் பாரத தேசத்தின் பரிவோடு.

இரத்த ஆறு ஈழ மண்ணில் ஓடிய போது,புலம்பெயர் தமிழன் வீதியில் இறங்கி
உலகின் மனச்சாட்சிகளை ஓங்கித்தட்டினான்.உலகின் மனித நேய மையத்தின்
வாசலில் தீக்குழித்தான் தமிழன்.பட்டினியிருந்து கெஞ்சி மண்ணாடினான்.

பாரத தேசத்தில் பார்க்கும் இடமெல்லாம் பற்றியெரிந்தார்கள் தமிழக
சகோதரர்கள்.ஓயாது குரல் கொடுத்தோம்.என்ன நடந்தது.எதுவுமே இல்லை.

தமிழகத்தினை நம்பியிருந்தோம் என்று சொல்வதை விட நம்மில் சிலர்
தமிழகத்தின் தறுதலை அரசியல் வாதிகளை நம்பியிருந்தோம் என்று சொன்னால் சரியாகவிருக்கும்.நம்பிக்கெட்டதுதான் மிச்சம்.

பதவிக்கும் பகட்டுக்கும் கதிரைக்கும் ஆட்சி செய்யும் பரதேசிகள் உள்ளவரை எல்லாம் பகற்கனவே.

படையைத்திரட்டி "தமிழீழம்" அமைப்போம் என்று கூவியது எல்லாம் பொய்வேசம்.

ஒரு நேர உணவு விடுத்து "உண்ணாவிரதம்" இருந்தது ஒரு கருங்காலி.இப்படிப்பலவற்றை ஞாபகப்படுத்தலாம்.

ஆனால் அடிமட்ட தமிழக உறவுகள் இபோதும் உணர்வோடுதான் இருக்கிறார்கள்.இல்லையென்றால் எமக்காக பதினைந்து உறவுகள் உயிர்கருகி இருப்பார்களா?

ஆனால் இன்று அவர்களின் சிந்தனைகளையும் செயல்களையும் இந்த அரசியல் பரதேசிகள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.உண்மையில் "ஈழத்தமிழனுக்காய்" குரல் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சக்தி,ஒரேஒரு இனம் "தமிழக உறவுகள்" தான்.

ஆனால் தூரதிஸ்ட வசமாக இப்போதும் அவர்கள் மெளனமாகவே இருக்கிறார்கள்.

தன் உடன் பிறந்த உறவுகளுக்காக ,இனத்துக்காக குரல் கொடுக்காமல் ஆறு கோடி தமிழனும் வேடிக்கை பார்க்கும்போது வெள்ளைக்காரன் வந்துதான் விடுதலை பெற்றுத்தருவான் என நினைப்பது கேவலமே.

தன் உறவுகளுக்காய் வலி சுமந்து வீறுகொண்டு எழுந்த இன்னொரு பெரிய சக்தி
"புலம்பெயர் ஈழத்தமிழினமும்" ஆறு கோடியோடு ஒரு கோடியாக உறங்கிக்கிடப்பது கேவலமானது.

வெற்றிகளையே கண்டு பழகிப்போன நமக்கு சில பின்னடைவுகளும் தோல்விகளும் இழப்புகளும் மனம் சோரவைத்துவிட்டது.

சில நிகழ்வுகளையும்,அழிவுகலையும் சாதாரணமாய் ஜீரணிக்கமுடிவில்லை.முடியும்,நடக்கும்,அடைந்துவிடுவோம் என்ற
மனனிலையோடு போராடிய "புலம்பெயர் தமிழினம்" இன்று
துவண்டுபோய்க்கிடக்கிறது.


கடந்த காலங்களை பற்றி அலசி ஆராய்வதிலும்,தோல்விகளுக்கான காரணங்களை கண்டு பிடிப்பதிலும்,அவற்றை யார் தலையில் வைக்கலாம் என்ற கண்டுபிடிப்புகளிலும் காலம் போய்க்கொண்டிருக்கிறது.

வீணான விவாதங்களிலும்,வேண்டாத ஆராய்ச்சிகளாலும் கைகளில் இருந்தவற்றையும் களவுகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.


தேவையான பொழுதுகளில் குரல் கொடுத்த நாம் இப்போது அதைவிட ஆயிரம் மடங்கு தேவை உள்ளபோது அமைதியாய் இருப்பது அவமானம்.நாளை வரலாறு கேவலமான இனமாக எம்மை பதிவு செய்யும்.

எங்கள் உறவுகளின் கண்கள் கட்டப்பட்டுள்ளது.

அவர்களின் நாக்குகள் அறுக்கப்பட்டுவிட்டது.

அவர்களின் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்படுள்ளார்கள்.

அவர்களின் கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்டுவிட்டன.

அவர்களின் பிடரிவளியே துப்பாக்கி ரவை துளைத்து குருதி கொப்பளிக்கிறது.

என் தங்கையின் மார்புகள் அறுக்கப்பட்டு விட்டன.

என் தம்பியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு விட்டது.

என் தாயின் கற்பு களவாடப்பட்டு விட்டது.

என் தந்தையின் தலை அறுக்கப்பட்டுவிட்டது.

இதையெல்லாம் பார்த்தும் இன்னும் நாம் வாய்பேசாமல் இருந்தால், இந்த உலகம்
சொல்வது போல அவர்கள் நினைப்பது போல "ஈழத்தமிழினம்" என்பது ஒரு மனித இனமே இல்லை.ஆகக்குறைந்தது ஜீவ காருண்யம் காட்ட "மிருக இனம்" கூட இல்லை.

ஆதலால் முதலில் எமக்குள்ளே சில முடிவுகளை திடமாய் எடுப்போம்."புலம் பெயர் தமிழினம்" ஒன்று படவேண்டும் என்கிற கூக்குரலை நிறுத்தி ஒன்றுபட்டிருக்கும் தமிழன் திடமாய் நடந்தால் அவர்களின் வழிதொடர ஆயிரம் பேர் வருவார்கள்.

இன்று ஒவ்வொரு நாடுகளிலும் "தமிழர் பேரவை" என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.இப்போது அது பலமான ஒரு சக்தியாக பரிணமித்திருக்க வேண்டும்.ஆனால் இப்போதும் முளைவிட்ட விதையாக இருப்பது வேதனை.தமிழினத்துக்கு நேர்ந்திருக்கும் சோதனை.

இந்த நிலை மாறவேண்டும்.ஒன்றுபடுவதுக்கு ஒன்பது மாதங்கள் வேண்டுமெனில் ஒரு உயிர்களையும் காப்பாற்ற முடியாது.முதலில் நாம் எங்களின் மனச்சாட்சிகளை தட்டி திறவுங்கள்.

அதன் பின் உலகத்தின் மனக்கதவுகளை உரிமையோடு தட்டுவோம்.

உன்னைத்திருத்திக்கொள்.உலகம் தானாகவே திருந்தும்.

-தமிழ்ப்பொடியன்-

ஐக்கிய நாடுகளின் கடப்பாடு பற்றி புலிகள் விசனம்


நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் ராணுவத்தினரை வீடியோவில் பார்த்த பின்னரும் கூட ஐக்கிய நாடுகள், பிற சர்வதேச அமைப்புகளின் மௌனம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் உருத்திரகுமார்.

நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியால் உலக மக்களே அதிர்ச்சியாகியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் எந்த வித நடவடிக்கைக்களுமே இன்னமும் எடுக்கவில்லை.

இந்த அமைப்புகள் இருப்பதன் கடப்பாடு, நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் காட்டும் நேர்மைபற்றி புலிகளின் உத்தியோகத்தராகக் கருதப்படும் வி. உருத்திரகுமாரன் விசனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களுக்காக தாம் பயன்படுத்தப் போவதாக உருத்திரகுமாரன் கூறியதாக இந்தியா டுடே என்ற பிரபல சஞ்சிகை கூறியுள்ளது. இதுவரை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்காமல் உள்ளமை தமிழர்களைப் பழிவாங்கும் செயலாக உள்ளதோடு மட்டுமல்லாமல், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் சட்டதிட்டங்களைப் பலவீனப்படுத்துவதோடு, அவற்றின் நேர்மைக்கும் பங்கம் விளைவிக்கிறது என்று தொடர்ந்து கூறியுள்ளார் உருத்திரகுமாரன்.

இதுபற்றிய விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தாமாகவே செய்யும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு சபைக்கு இதுபற்றி அறிவிக்கும் எனவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகளைத் தொடங்குவதற்கு பாதுகாப்புச் சபையின் அனுமதியைப் பெறும் எனவும் தாம் மேலும் நம்புவதாகக் கூறியுள்ள இவர் அவற்றுக்கெல்லாம் இந்தியாவின் ஆதரவு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசை அச்சுறுத்தும் போர்க் குற்றச்சாட்டுக்கள்


முள்ளிவாய்க்கால் வரை சுற்றி வளைத்து, வன்னி பெருநிலப்பரப்பின் சகல பாதைகளினூடாகவும் படை நகர்வினை மேற்கொண்ட இராணுவம் சந்தித்திராத நிலக்கண்ணிவெடிகள், திடீரென எங்கிருந்து முளைத்தன என்கிற அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார் மனோகணேசன்.

இதில் தப்பேதும் இல்லை போல் தெரிகிறது. மீட்டெடுத்ததாகச் சொல்லப்படும் மக்களை மீளக் குடியேற்றும் அக்கறை அரசாங்கத்துக்கு இல்லை என்பதே இக் கேள்விக்கான பதிலாக அமையும்.

இந்த மீட்பு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்த சரியான தரவுகளை பெறக் கூடிய அனைத்து பாதைகளையும் அரசு மூடி விட்டது. போரில் வெற்றி பெற்றவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லையென்று வரலாற்று விளக்கமொன்றினை அளிக்கிறார் ஒருவர்.

வென்றவர்கள், விமர்சனத்திற்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்ட சக்திகள் என்பதே புதிய உலகின் ஜனநாயக மரபாக இருப்பது போல் தெரிகிறது.

அதேவேளை வன்னியின் 85 சதவீதமான நிலப்பரப்பில் சிங்கள மக்களைக் குடியேற்றி, இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வன்னி மக்களின் மனித உரிமை, ஜனநாயகம் போன்றவை, வவுனியா முகாம்களிற்குள் நிரந்தரமாக முடக்கப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக பல மனிதாபிமான ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

வர்க்க முரண்பாடுகளும் இன ஒடுக்குமுறைகளும் நிலவும் ஒரு சமுதாயக் கட்டமைப்பில் மக்கள் ஜனநாயகம் என்கிற கோட்பாடு எவ்வாறு செயலாக்கம் பெறும் என்பது கேள்விக்
குரிய விடயமே.

இத்தகைய ஒடுக்குமுறைகளை தக்க வைத்தபடி, ஜனநாயகம், சோசலிசம் என்கிற வார்த்தைப் பிரயோகங்களை தமது அதிகார நிலைநிறுத்தலுக்கு எவ்வாறு இந்த நவ காலனித்துவ அரச கட்டுமானங்கள் பயன்படுத்துகின்றன என்கிற விவகாரத்தை மக்கள் உணர்ந்து கொள்வதில்லை.

அவை உணரப்படாதவாறு இனக் குரோதங்களும் திறந்த பொருளாதார கட்டமைவுக்கு ஏற்ப கலாசாரத் திணிப்புகளும் தமது இனமே உயர்ந்தது என்கிற மேலாதிக்க சிந்தனை பூச்சுகளும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. ஆனாலும், முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத வகையில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேற்றுக் கிரக வாசிகள் போல் வாழ்வது மிகக் கொடுமையானது.

தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதில், தமக்கிடையே நிலவும் முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்ட சிவப்புகளும் ஜனநாயக பிரம்மாக்களும் கடன் அடிப்படையில் கூட இந்த முகாம் மக்களுக்கு தற்காலிக ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வரவில்லை.
புலி எதிர்ப்புக்குள் ஜனநாயக மறுப்புகள் சங்கமமாகி விட்டன. மாற்றுச் சிந்தனைகளை முன்னிறுத்தி மக்கள் வாழ்வில் ஜனநாயக ஒளி வீசிடப் பரப்புரை செய்தவர்கள் மௌனமாகி விட்டார்கள். அதனைப் பேரினவாதச் சக்திகளே பொறுப்பேற்று விளக்கேற்ற வேண்டுமென விலகி விட்டார்கள் போல் தெரிகிறது.



முள்ளிவாய்க்காலில் மக்கள் எறிகணைகளால் சூழப்பட்ட போது ஆர்ப்பரித்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கடந்த மூன்று மாத காலமாக தமக்குள் மோதியவாறு முகாம் மக்களின் விடுதலை குறித்துப் போராடாமல் வேறு விவகாரங்களில் தமது கவனத்தை திசை திருப்பியுள்ளார்கள்.


போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபைக்கும், மனித உரிமைக் கண்காணிப்பகத்துக்கும் சில மேற்கு நாட்டு ஊடகங்களுக்கும் இருந்த கரிசனையில் சிறிதளவேனும் இப்புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இருக்கவில்லையென்பது மிகவும் சோகமானது.


கடந்த வாரம் லண்டன் தொலைக்காட்சியொன்றில் வெளியான காணொளிப் பதிவில், குரூரமான முறையில் நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மனிதர்களின் உடலங்கள் உலகை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்தது.

புனையப்பட்ட காட்சிப் பதிவு இதுவென்று அரசு அதனை மறுத்தாலும் அதை வெளியிட்டோர், ஜனநõயக ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தினால் மறுத்துரைப்புகளும் நிராகரிக்கப்படுகின்றன.
பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற புனைவுகள், இன்னமும் நீடிப்பதற்கான காரணிகள் எதுவும் இல்லாத நிலையில் கரும்புலிகளின் அங்கிகள் கண்டெடுக்கப்படுகின்றனவென்றும் அம்பாறையில் இரண்டு புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்களென்றும் செய்திகள் வெளிவருகின்றன.

அதேவேளை அழிக்கப்பட்டாகி விட்டதென்று அரசால் அறுதியிட்டுக் கூறப்படும் விடுதலைப் புலிகள் மீது, மேலும் 5 வருடத்திற்கு தடை விதித்து, நிழல் யுத்தம் புரிகிறது ஒபாமாவின் அமெரிக்க அரசு.

கடந்த 3 வாரங்களாக அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கை கலந்த அறிக்கைகளையும் அவதானிக்க வேண்டும்.

முகாமில் முடங்கியுள்ள 3 இலட்சம் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு என்பவற்றை கருத்தில் கொள்ளாவிட்டால் மறுபடியும் விடுதலைப் புலிகள் துளிர்த்தெழுந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பார்களென இலங்கை அரசுக்கு அமெரிக்கா எதிர்வு கூறுகின்றது.

ஆகவே இதிலிருந்து ஒரு விடயத்தை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது, அமெரிக்க கூற்றின் மறுதலையானது, இதுவரை நடந்தேறிய ஆயுதப் போராட்டம், வெறுமனே பயங்கரவாதமல்ல என்கிற விடயத்தை உறுதிப்படுத்துகிறது.

அரசியல் தீர்வொன்று வழங்கப்படாமல் நீண்ட கால ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மைத் தேசிய இனமொன்று, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததை பயங்கரவாதமென்று கூற வேண்டிய சர்வதேச நிர்ப்பந்தம், அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியா, சீனா போன்ற பிராந்திய வல்லாதிக்க நாடுகளுக்கும் உண்டு.

தமிழ் மக்களின் அவலங்களை அம்பலப்படுத்துவோர் சிங்களப் புலிகளாகவும் வெள்ளைப் புலிகளாகவும் சித்திரிக்கப்படும் போக்கு வெறும் விதண்டாவாதங்களாக பார்க்கப்படும் தன்மை தற்போது எழுந்து வருகிறது.


சர்வதேச சுயாதீன ஊடகங்களை, போர் நிகழ்ந்த இடங்களுக்குச் செல்ல விடாது அனுமதி மறுத்து, குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளலாமென அரசாங்கம் கருதுகின்றது.திரண்டு வரும் போர்க் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்வதற்கு இந்தியப் பேரரசின் உதவி, நிச்சயம் இலங்கை அரசிற்கு இருக்குமென்று நம்பலாம்.


புலம்பெயர் தமிழ் மக்களின் உளவுரணைச் சிதைப்பதற்கும், தாயகச் செய்திகள் அவர்களைச் சென்றடைய விடாமல் தடுப்பதற்கும் மறைமுகமான பல நகர்வுகளில் இந்தியா ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது.

-சி.இதயச்சந்திரன்
நன்றி -வீரகேசரிவாரவெளியீடு

தெற்காசிய பிராந்தியத்தின் பூகோள அரசியலில் தமிழ் மக்களின் பங்களிப்பு என்ன?

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட படு கொலையின் ஒரு காட்சியை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த வாரம் துணிச்சலாக வெளிக்கொண்டுவந்துள்ளது.


"இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. எனினும் அதனை இலங்கை அரசு மறுத்துள்ளது.

காண்பவர்கள் கண்கலங்கிப் போகும் அளவுக்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் இளைஞர்கள் ரீ56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளன. இந்தப் படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தபோதும் அது ஜூன் மாதம் 18 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டதாக ஒளிப்படவியல் மற்றும் கணனித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல ஆதா ரங்களை மேற்குலக ஊடகங்கள் தற்போது துணிச்சலாக வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் எத்தனையோ பல ஊடகங்கள் உள்ள போதும் அவை தமிழ் இனத்தின் பேரவலம் தொடர்பாக தனித்துவமாக செய்திகளை சேகரித்து வெளியிட முடியாத நிலையில், மேற்குலக ஊடகங்கள் தமிழ் மக்களின் பேர வலங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவது மிகவும் போற்றத்தக்கது.



தமிழகத் தொலைக்காட்சிகள் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, தமிழ் மக்களை ஒரு மாயைக்குள் தள்ளிவருகையில் மேற்குலகம் இலங்கைத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது எமக்குள் ஒரு சிறிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி வருகின்றது.

மேற்குலக ஊடகங்கள் மட்டுமன்றி மேற்குலகத்தின் இராஜதந்திர நகர்விலும் சில மாற்றங்கள் தென்படுகின்றன.

இலங்கைத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சி னைகளுக்கு இலங்கை அரசு நியாயமான அரசி யல் தீர்வு ஒன்றை முன்வைக்காது விட்டால் இலங்கையில் மீண்டும் ஆயுத மோதல்கள் உரு வாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக இலங் கைக்கான முன்னாள் அமெரிக்க துõதுவரும்,

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக் கான துணை அமைச்சருமான ரொபர்ட் ஓ பிளெக் கருத்து தெரிவித்த பின்னர் கடந்த வாரம் அமெரிக்கா மீண்டும் ஒரு எச்சரிக் கையை விடுத்துள்ளது.

அதாவது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்களை அரசாங் கம் விரைவாக மீளக் குடியமர்த்தாது போனால் அனைத்துலகத்தின் ஆதரவுகளையும், உதவிகளையும் இழப்பதற்கு நேரிடும் என அமெரிக்கா தெரிவித் துள்ளது.

அமெரிக்கா தனது பூகோள அரசியல் நலன் கருதி சில நட வடிக்கைகளை மேற் கொள்ள முற்பட்டு வருகின்ற போதும், அப்பாவித் தமிழ் மக்களின் மறுவாழ்வு தொடர்பாக அது தெரிவித்து வரும் கருத்துகள் அநாதரவாக விட ப்பட்டுள்ள இலங்கைத்தமிழ் மக்களுக்கு ஒரு ஆதரவான குரலாகவே நோக்கப் பட வேண்டும்.

விடுதலைப் புலிகளை தாம் ஆதரிக்கப் போவதில்லை என்ற கோட்பாடுகளை வரைந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியுடன் உறவு களை வளர்த்துக் கொண்டு தமது அரசி யல் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக ஈழத்தமிழ் மக்களை முற்றாக புறந்தள்ளி யிருந்தது.

தற்போது விடுதலைப்புலிகள் அற்ற ஒரு நிலை உருவாகியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையிலும், முட்கம்பி வேலிகளுக்குள் தினம் தினம் மரண வேதனைகளை அனுபவித்து வரும் மக்கள் தொடர்பாக தமிழகத்தின் தி.மு.க. அரசாங்கம் பராமுகமாகவே உள்ளது.

இந்திய மத்திய அரசினதும் அதன் தோழமை கட்சியான தி.மு.க.வினதும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான போக்குகளுக்கு அப்பால் தென்னாசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் பூகோள அரசியல் முனைவாக்கங்களை மேலும் வலுப்படுத்தி, தமது அரசியல் உரிமைகளை அதனுõடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடி ப்பு இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின் றது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்ட பல்முனைவு தன்மையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படு த்தி கொண்டதோ அதனை போலவே இந்த முனைவுத்தன்மையை இலங்கைத் தமிழ் மக்களும் தம க்கு சாதகமாக பயன் படுத்த வேண்டும் என்ற கட்டாயத் திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை தனது பிராந்திய சுயநலன்க ளுக்கு பயன்படுத் துவதன் மூலம் இலங்கை யைத் தனது ஆளுமைக்குள் கொண்டுவர முடியும் என்ற இந்தி யாவின் தத்துவம் 1987 களில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து இந்தியா இலங்கை மக்களுக்கு எதிரான விரோதப்போக்கை வளர்த்துக் கொண் டதே தவிர அதற்கான மாற்று வழியை தேட வில்லை.

ஆனால், இந்தக் காலப்பகுதியை சீனா தனக்கு சாதகமாக மிகவும் தந்திரமாக பயன்படுத்திக்கொண்டது. தென்னிலங்கை சீனாவிடம் பறிபோன நிலையில் வடக்கு, கிழக்கில் கால்பதிப்பதன் மூலம் தென்னிலங்கையில் கால்பதித்துள்ள சீனாவின் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என இந்தியா நம்பியது. ஆனால், இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியாவை 26 நாடுகளாக உடைப்பது எப்படி என்பது தொடர்பான சீனாவின் கொள்கைகள் இந்தியாவை ஆட்டங்காண வைத்துள்ளன.

மேலும்
இலங்கை தனது ஆளுமையில் இருந்து முற்று முழுதாக விலகிவிட்டது என்ற கருத்துக்கள் இந்தியாவை ஆட்கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.


எனவே
தான் மாலைதீவில் கடற்படை தளம் அமைப்பது தொடர்பாக இந்தியா தற்போது சிந்தித்து வருகின்றது.

ஆனால், சீனாவின் கடற்படைப் பலத்திற்கு முன்னால் இந்தியாவின் கடற்படை மிகவும் பலவீனமானது. எனவே மாலைதீவில் நிறுவப்படும் இந்திய கடற்படைத் தளம் சீனாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்பது கேள்விக்குறியானது.

அமெரிக்காவுக்கு அன்றைய ஒரு சோவியத் ஒன்றியத்தை போல சீனாவின் எதிர்கால சோவியத் ஒன்றியமாக இந்தியா மாற்றமடைய போகின்றது என்ற அச்சம் இந்திய கொள்கை வகுப்பாளர்களை ஆட்கொண்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், படைத் தளபதிகள் எனப் பலரையும் சிந்திக்க வைத்துள்ளன.

இந்த நிலையில் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தாவும் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதாவது, சீனாவின் கடற்படைப் பலத்திற்கு ஈடுசெய்யவும் பலத்துடன் இந்தியக் கடற்படை இல்லை என தெரிவித்துள்ளார். எனவே இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தலாக இருக்குமே தவிர சீனாவுக்கு இந்தியா ஓர் அச்சுறுத்தலாக இருக்க முடியாது என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அதன் வெற்றிக்கான முக்கிய காரணம் அதன் வலுவான கடற்படை கட்டமைப்புத் தான். இரண்டாம் உலகப்போரின்போது பேர்ள் துறைமுக கடற்படை தளத்தை ஜப்பான் துல்லியமாக தாக்கிய போதும் அமெரிக்காவின் கடற்படை முக்கிய கப்பல்கள் தப்பியதே இரண்டாம் உல கப்போரின் வெற்றியின் திருப்பு முனையாக அமைந்திருந்தது.

இதனிடையே நேபாளத்தின் உள்விவகாரங்களில் சீனா தலையிட்டு அங்கு ஓர் அரசியல் நெருக்கடியை தோற்றுவித்து வருவதாக இந்தியா கடந்த மே மாதம் குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் நேபாளம் தனது நட்பு நாடு எனவும் அதன் அரசியல் உறுதிப்பாடு, அமைதி, பொருளாதார மேம்பாடு தொடர்பாகவே தாம் செயற்பட்டுவருவதாக சீனா இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சீனா இந்தியா மீது 2012 ஆம் ஆண்டுக்கு முன்னர் தாக்குதலை மேற்கொள்ளலாம் என இந்திய ஆய்வாளர் பாரத் வர்மா தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவுடன் சீனா நேரிடையாக மோதிக்கொள்ளப்போவதில்லை. மாறாக இந்தியாவின் உட்கட்டுமானங்களை உடைத்து பல நாடுகளின் உருவõக்கத்திற்கு மெல்ல மெல்ல வழிசெய்ய போகின்றது என்பதே தர்க்கமானது.

ஏனெனில் இந்தியாவும், சீனாவும் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதையே குறியாக கொண்டுள்ளன. இந்த நிலையில் அவை ஒரு நேரடியான மேதலில் இறங்குவதற்கு துணியப்போவதில்லை. நேரடியான மோதல்கள் இரு நாடுகளினதும் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தலாம்.

எனவே,

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. எவ்வாறு சோவியத்தின் விவகாரங்களை கையாண்டதோ அதனைப் போலவே சீனாவின் அணுகுமுறைகளும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அதாவது, ஆசியாவில் இரண்டு வல்லாதிக்க நாடுகள் இருப்பதை சீனா விரும்பவில்லை. பல இன முரண்பாடுகளை இந்தியா கொண்டிருப்பதனால் அதன் உட்கட்டுமானங்கள் பலவீனமாக இருப்பது சீனாவின் திட்டத்திற்கு மிகவும் அனுகூலமானது.

மேலும் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இலங்கையைப் பொறுத்தவரையில் இந்திய எதிர்ப்புணர்வுகளில் இருந்து சிங்கள மக்கள் சிறிதளவேனும் அசையவில்லை என்றே புலப்படுகின்றது.

அதற்கு சிறிய உதாரணம் ஒன்றை இங்கு குறிப்பிடலாம். இந்து சமுத்திரம் என்ற பெயர் இந்தியாவை குறிப்பதனால் வருங்காலத்தில் இந்து சமுத்திரத்தின் பெயரை ஆசிய சமுத்திரம் (அண்டிச்ண Oஞிஞுச்ண) என மாற்ற வேண்டும் என சிங்கள மக்கள் பலர் தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தெற்காசிய பிராந்தியத்தில் தோற்றம் பெற்றுவரும் இந்த பல்முனைவாக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் பங்களிப்புகள் எத்தகையது என்பதே தற்போதைய முக்கிய கேள்வி.


ஈழத்தமிழ் மக்களை பொறுத்தவரையில் தற்போது அவர்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாகவும் சில நகர்வுகளை மேற்குலகம் மட்டுமே மேற்கொண்டு வருகின்றது.


மேற்குலகத்தின் இந்த நகர்வுகளை நாம் உள்வாங்குவதன் மூலம் எம்மை ஒரு வலுவான சக்தியாக தென்ஆசிய பிராந்தியத்தில் நிலைநிறுத்தி கொள்ள முடியும்.

- வேல்ஸிலிருந்து அருஷ்
வீரகேசரிவாரவெளியீடு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பான் கீ மூன் நடவடிக்கை எடுக்கவில்லை: தி எகனோமிஸ்ட் சஞ்சிகை

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என பிரபல தி எகனோமிஸ்ட் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.


பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் பான் கீ மூன் வெறும் பார்வையாளராக செயற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, நோர்வேயின் சுழல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் நாட்களில் நோர்வேக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், சம்பவங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு வேடிக்கை பார்த்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் மூலம் பான் கீ மூனின் கடமை தொடர்பிலான சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் பான் கீ மூன் இதுவரையில் குரல் கொடுக்கத் தவறியுள்ளதாக அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் நோர்வேக்கு விஜயம் செய்யவுள்ள பான் கீ முனுக்கு எதிராக நோர்வேயிலுள்ள தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் இளையோர்களின் கைகளில் தேசத்தின் விடுதலை: பருத்தியன்

எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.


ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவையெல்லாம் ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த வலிகளின் வடுக்கள் மட்டும் இன்னும் அழியவேயில்லை.

கொஞ்சம் புரியும் வயதிலும் வலிகள் தொடர்ந்தன. ஆனாலும், ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. பின்னர் வந்த காலங்களில்... முழுமையாக தெரிந்து கொண்டபோது, அதுவரைகாலமும் அனுபவித்து வந்த வலிகள் அனைத்தும் சேர்ந்து விடுதலை உணர்வாய் மாற்றம் பெற்றன. இவ்வாறான விடுதலை உணர்வு இன்றைய இளையோர்கள் அனைவர் மனத்திலும் என்றும் அணையாத தீயாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது.

அந்த விடுதலையுணர்வை தலைவன் வழிநின்று களத்தில் காட்டியோர் புலிகள். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை உலகறியக் கொண்டுவந்தது புலிகளின் தீரமிக்க, தியாகம் நிறைந்த போராட்டங்களே. அத்தனை தீரங்களையும் செய்து காட்டியவர்கள் இளையோர்களே.

ஆனால் நடந்து முடிந்திருக்கும் வன்னிச் சமரின் பின் புலிகளை அழித்துவிட்டோம். இனிமேல் புலிகள் என்ற நாமமே இல்லாதொழிக்கப்படும் என சிங்கள அரசு அறிக்கைவிட்டு வருகின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப் போராட்டமானது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது உண்மையே.

சில நாடுகளின் சதிவேலைகளும்,சர்வதேசத்தின் பாராமுகமும், சிங்களத்தின் கொலைவெறித்தனமான போரும் வன்னி மண்ணில் பேரழிவை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பேரழிவுக்குள் தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலுவும் பெரும் பின்னடைவைச் சந்தித்து புலிகளும் அஞ்ஞாதவாசம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதுவரைகாலமும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக, பலமாக இருந்துவந்த புலிகளின் பின்னடைவிற்கு பிற்பாடு , அவர்கள் தொடர்ந்த தமிழினத்திற்கான போராட்டம் கேள்விக்குரியதாக மாறியிருக்கின்றது. ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்கள் நிறைந்த போராட்டத்தின் இலட்சியப்பாதை தடம் மாறிவிடுமோ? என்ற ஐயப்பாடும் தற்போது உருவாகியுள்ளது.

ஆனாலும், முன்னதாகவே தமிழர்களின் போராட்ட பரிமாணங்கள் மாற்றமடைந்து புலம்பெயர் தேசங்களிலும் பரிணமிக்கத் தொடங்கியிருந்தன. தீர்க்க தரிசனமிக்க தமிழீழ தேசியத் தலைவரின் கடந்த மாவீரர்தின உரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களை நோக்கி குறிப்பாக இளையோர்களை நோக்கித் தெரிவிக்கப்பட்ட கருத்தானது, புலம்பெயர் தேசங்களில் இனிவரும் காலங்களில் தொடரப்படும் போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தினையே குறித்து நிற்கின்றது. தாயகத்திலுள்ள இளைய தலைமுறையினரின் போராட்ட உணர்வுகள் அடக்குமுறைகளினால் அடக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இளைய தலைமுறையினரின் முழு அளவிலான பங்களிப்பு அவசியமாகியிருக்கின்றது.

திட்டமிடல்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களில் இளையோரின் பங்களிப்பும் பெரியோர்களின் வழிநடத்தல்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படவேண்டும். இதுவரை நாட்களும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இளையோர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. அவர்களோடு பெரியோர்களும் தங்களது ஒத்துழைப்பினைக் கொடுத்திருந்தார்கள். இளையோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்தினை பெருமளவில் ஈர்த்திருந்தன. அதன் விளைவாக அவர்களினது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில், அறவழிப் போராட்டத்திற்கான புதிய போராட்டப் பாதை திறக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேசத்தினை நோக்கி தமிழர்களது நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வதை முகாங்களில் சிக்கித் தவிக்கும் உறவுகளை மீட்டுக் காப்பாற்ற வேண்டியது நமது கட்டாயக் கடமை. தாயகத்தில் நடந்த படுகொலைகளும், நடந்தேறும் துயரங்களும் அதனாலான வலிகளும் மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் நமக்கு நன்கே தெரியும். அந்த வலிகளும் புரியும். நமது இனத்தின் அவலங்களை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடப்பாடும் கடமையுமாகும். நமது உணர்வெழுச்சிகொண்ட போராட்டங்கள் மூலம் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழினத்தின் தாயகவிடுதலைப் போராட்டம் இளையோர்களின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், போராட்டத்தினை நிலைநிறுத்தி அதை மேலும் வீரியத்துடன் தொடர்ந்து நடத்தவேண்டிய கடப்பாடும் அவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஆயுதப் போராட்டமானது தமிழர்களை மிகவும் பலப்படுத்திய ஒன்றாக விளங்கியபோதும் அதுவே தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை சர்வதேசம் "பயங்கரவாதம்" என பொய்முத்திரை குத்தவும் காரணமாக அமைந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், நாங்கள் "பயங்கரவாதிகள்" இல்லை. அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடும் "விடுதலைப் போராளிகள்" என்பதை அனைத்துலகத்திற்கு எடுத்துக்கூறியும், செயலில் காட்டியும் அதனை நடைமுறையில் கடைப்பிடித்தும் வந்தனர். ஆனால்,சர்வதேசம் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

இன்றுவரைக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதையோ அல்லது சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள், கொன்றொழிக்கப்படுகின்றார்கள் என்பதனையோ முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக ஆதரவுக்குரல் கொடுக்க எந்தவோரு நாடும் முன்வரவில்லையென்பது தமிழர்களின் துரதிஷ்டம் என்றே கருதத் தோன்றுகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்தினைப் பொறுத்தவரையில் அதிகளவான இழப்புக்களைச் சந்தித்ததும் அதிகளவில் பாதிக்கப்பட்டதும் இளம் சமுதாயமே. கடத்தப்படுவோர், காணாமல் போவோர், கைது செய்யப்படுவோர், சுட்டுக்கொல்லப்படுவோர், சித்திரவதைப்படுத்தப்படுவோர் என அனைத்திலும் இளைஞர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் காணொளிக்காட்சியில்கூட அப்பாவித்தமிழ் இளைஞர்கள் படுகோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது. உண்மைகள் எப்பொழுதுமே உறங்கிவிடுவதில்லை என்பதற்கிணங்க... சிங்களக் கொலைவெறியர்களின் அட்டூழியத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்திருந்தது அந்தக் காணொளிப் பதிவு.

இதைப்போன்ற பல ஆதாரங்கள் இன்னும் வரக் காத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற ஆதாரங்களை சாட்சியங்களாக்கி உலகத்தின் கண்முன் நிறுத்தி, தமிழர்களுக்கான நீதி பெறப்படுவதற்கான முயற்சிகள், முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால்தான் சாத்தியப்படக் கூடியனவாக இருக்கும். இளையோரினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம், பரப்புரைப் போராட்டம், நடைப்பயண கவனயீர்ப்பு,சிங்களத்தின் தமிழின அழிப்பினை வெளிக்கொணரும் பிரச்சாரப் போராட்டம் என்பன புலம்பெயர் தேசங்களில் பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி சாதகமான விளைவுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.

செய்தி ஊடகத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என்பவற்றிலும் இளையோரின் பங்கு அதிகமாக இருப்பதனால், போராட்டங்கள் தொடர்பான தகவல்களும் விளக்கங்களும் அனைத்துலகத்திற்கும் இலகுவாக சென்றடையக்கூடியதாக அமைந்திருக்கின்றது.கல்வியறிவு, செயற்திறன், வேகம், விவேகம், விடுதலையுணர்வு என அனைத்திலும் மேலோங்கி நிற்கும் இளந்தமிழ் சமுதாயத்திற்கு அனுபவமிக்க,பக்குவமிக்க, விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆழ்ந்த சிந்தனையுள்ள பெரியவர்களினது ஆதரவும் வழிகாட்டலும் கிடைக்குமாக இருந்தால் அனைத்துமே சாத்தியப்படக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எங்கள் செல்வங்களே! ஈழத் தமிழ் இளையோரே!

உங்கள் ஈழத் தமிழினத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்கள் உணர்வெழுச்சிமிக்க போராட்டமும்தான்.

ஆயுதமேந்தி போராட வேண்டிய அவசியம் இப்போதில்லை. உங்களால் முடிந்தவரைக்கும் அறவழிப் போராட்டத்தினை உணர்வெழுச்சியோடு அறிவுவழி கொண்டு முன்னெடுங்கள். தற்போதைய காலத்தின் கட்டாயத்தில், இதனை மட்டும்தான் நாம் மேற்கொள்ளமுடியும். இத்தருணத்தில், இதை சரிவர மேற்கொள்வோமானால் எம் விடுதலைக்கான காலம் வெகுதொலைவில் இருக்காது.

உறவுகளே! உங்கள் சகோதரங்களின், மாவீரர்களின் இலட்சியக் கனவினை வீணாக்கி விடாதீர்கள். அவர்களின் தியாகங்கள் உங்களுக்கானதே. உங்களுக்காக, உங்களின் உரிமை தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் பண்ணியவர்கள் இந்த மாவீரர்கள். அந்த தன்னலமற்ற ஆன்மாக்களின் தாயகக் கனவினை ஈடேற்ற வேண்டிய கடமை நம் முன்னே வைக்கப்பட்டுள்ளது. நம் தாய் மண்ணுக்காக நம்மால் முடிந்தளவுக்கு தாயகக் கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதையும் நாம் தவற விடுவோமானால் "நான் தமிழன்" என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவர் ஆகிவிடுவோம். அவர்களை விதைத்த அந்த புனித பூமியில் கால் வைக்கக்கூட உரிமையற்றவர்கள் ஆகிநிற்போம்.

இனிவரும் காலங்களை எமக்குரியதாக மாற்றிக்கொள்ளவேண்டும். இப்பொழுதும் போராடாமல் இருப்போமானால், எம் உறவுகள் எதிரியின் கைகளினால் சின்னாபின்னமாக்கப்பட்டு அழிக்கப்படுவதையோ, இவ்வளவு காலமாய் செய்த அத்தனை தியாகங்கள்,போராட்டங்கள் அனைத்தும் வீணடிக்கப்படுவதையோ, தமிழர் தாயகம் சிங்கள வல்லூறுகளின் கூடாரமாகுவதையோ யாராலும் தடுக்க முடியாததாகிவிடும். உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக் கொடுத்து போராடுவோம்.

இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்!

துவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்!

உறவுகளைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் !

இறுதிவரை... போராடுவோம்!

தமிழரிற்கு நிரந்தரமான விடுதலை கிடைக்கும் வரைக்கும்... இலட்சியமான ஈழ தேசத்தினை அடையும் வரைக்கும்... நமது போராட்டம் தொடரும், அதுவரைக்கும் ஈழத் தமிழினம் ஓயாது என்பதனை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்துவோம்!

இறுதியில்.... வெற்றி எமக்கே!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

- பருத்தியன் -

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA