Saturday 5 September 2009

சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம்


சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "ஈழமுரசு" இதழ் தெரிவித்திருக்கின்றது.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:



அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் போர் முடிந்த மறுநாள் (ஐ.நா.) சபையின் பொதுச் செயலாளர் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டு உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.


தமிழ் மக்களின் அழிவினைக் கூடப் பொருட்படுத்தாமல், தான் சர்வதேச ரீதியில் புகழ் பெறுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்திருந்த பான் கீ மூன் இந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட தமிழர்களை அரசியல் ஆறுதலை வழங்குவதன் மூலமும், கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுவிப்பதன் மூலமும் இந்த புகழை அடைவதற்கு சிறீலங்காவின் இனப்படுகொலையை மூடி மறைக்கும் பெரும் திட்டத்தை வகுத்துள்ளார்.


அந்தத் திட்டத்தின் பிரகாரம் வன்னி மக்களை விடுவித்தால், அதற்கு பிரதி உபகாரமாக சிறீலங்கா மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு கொண்டுவரும் பட்சத்தில், ஐக்கிய நாடுகள் சபை அந்த விசாரணைக்கான ஆதரவினை வழங்காது எனவும், அத்துடன், சர்வதேச விசாரணைகள் இன்றி, போர்க் குற்றங்களை புரிந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீது சிறீலங்கா அரசாங்கமே விசாரணைகளை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் எனவும் தான் அறிவிப்பதாக அந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.


இந்த உடன்படிக்கை கொடுத்த துணிவிலேயே ஐ.நாவின் உயர் அதிகாரிகளும், மனித உரிமைவாதிகளும் உருவாக்க முனைந்த போர்க் குற்ற விசாரணைகளை சிறீலங்காவின் இராஜதந்திரிகளும், அரச உயர்மட்டத் தலைவர்களும் திமிருடன் அவற்றை உதாசீனம் செய்து புறக்கணிக்கும் துணிவைப் பெற்றிருந்தார்கள்.


இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம், உலகின் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தவறிவிட்டார் என அமெரிக்காவில் வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தனது செய்தியில் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


இதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஐ.நா. உயரதிகாரிகளையும் மனித உரிமை அதிகாரிகளையும் இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டாம் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.


அதற்காக அவை நம்பகத்தன்மை அற்றவை என்ற நொண்டிச்சாட்டையும் பான் கீ மூன் உருவாக்கினார் என அவருடன் நெருங்கிப் பணிபுரிந்து ஐ.நா. அதிகாரிகளே இப்போது குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இத்தனையையும் மறைத்து இவரால் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியவில்லை எனவும், இருநாள் போர் இடைவேளையையே அவரால் பெற முடிந்தது எனவும் கூறியுள்ள அவர்கள், இந்தப் படுகொலைகளை மறைத்ததன் மூலம் 20 ஆயிரம் தமிழர்களை அழிக்கும் அளவிற்கு மகிந்த ராஜபக்சவிற்கு இவர் துணைபோயுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.


இதேவேளை, சிறீலங்கா இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றார்கள் என்றொரு குற்றச்சாட்டினை சர்வதேச ரீதியில் பலமாக முன்வைத்து சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தியதுடன், ஊக்கிவித்தும் உள்ளார் என குற்றச்சாட்டுக்கள் தற்போது அவரைச் சூழ உள்ளவர்களாலேயே எழுப்பப்பட்டு வருவதுடன், அவரது ஆளுமை பற்றிய சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.


பான் கீ மூனின் இந்தச் செயற்பாடுகளானது, ஐ.நா. இராஜதந்திரிகள் இடையே இவரின் இரண்டாவது பகுதி சேவைக்காலம் எதையும் சாதிக்க இயலாத பிரயோசனமற்ற சேவைக்காலமாகவே கருதுகின்றனர்.


இதுஇவ்வாறிருக்க, அதிகாரமற்ற மற்றும் நேர்மையற்ற தனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு சாட்சியாக இருந்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தை போர்க் குற்றவாளியாக்க தவறியதன் மூலமும் ஐ.நாவின் கட்டமைப்பையும் ஐ.நாவின் கொள்கைகளையும் பான் கீ மூன் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என நோர்வேக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மோனா யூல் பகிரங்கமாக கண்டித்துள்ளார்.

9 வயது சிறுமியை கடத்தி கொலைசெய்து அவரின் உடலை அப்படியே சாப்பிட்ட சீனநாட்டவர்கள்(படங்கள் இணைப்பு )




தொடர்ச்சியான வாந்தி காரணமாக துபாய் வைத்திய சாலைக்குச் சென்ற நன்கு சீனர்களை பரிசோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் காரணம் நான்கு பேரும் மனிதமாமிசம் சாப்பிட்டிருப்பது தெரிய வந்ததுதான் .
போலிஸ் விசாரணை வீடில் ஒன்பது வயதுச் சிறுமியின் தலையும் எலும்புப் பாகங்களும் கண்டு பிடிப்பு , என்ன கொடுமை !

அமார்க்ஸியத்தின் இறுதி - அறத்திற்கு ‘மாற்று’ அரசியல் சந்தர்ப்பவாதம்

‘அவதூறு செய்கிறார்கள், என்னைத் திட்டுகிறார்கள், அறிவில்லாமல் எழுதுகிறார்கள், சதி செய்கிறார்கள்’. அ.மார்க்ஸ் தன்மீதான விமர்சனங்களை இப்படித்தான் எதிர்கொள்வார்.

பிறர் மீதான விமர்சனங்களை எவ்வாறு மேற்கொள்வார்? முதலில் எதிரியின் சாதி கண்டுபிடிப்பார்; வரவு செலவு பற்றிப் பேசுவார். தனது புகலிட பரப்புரையாளர்களான ஷோபா சக்தி, சுகன் இன்னபிற சிலபல தமிழகப் பரப்புரையாளர்களையும் வைத்து எதிரிகள் பற்றி நரகல் நடையில் எழுதச் சொல்வார். இவர்கள் அ.மார்க்ஸின் விமர்சகர்களை மிரட்டவும் செய்வார்கள். இதுதான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தனது கருத்துக்களை எதிர்கொள்பவர்களை அ.மார்க்ஸ் அணுகும் முறை.

அ.மார்க்ஸ் தமது பரப்புரையாளர்கள் செய்கிற அனைத்துத் தகிடுதித்தங்களையும் மௌனமாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். அ.மார்க்ஸின் மேற்கோள்களை முன்வைத்து அவரது பரப்புரையாளர்கள் செய்கிற விளையாட்டுக்களை முதன்மையான தத்துவம் எனச் சான்றிதழ் கொடுப்பார்.

அ.மார்க்ஸின் மேற்கோள்களை அவரது பரப்புரையாளர்கள் காவித் திரிய, அதே மேற்கோள் பரப்புரைகளைத் தமிழக இதழ்களில் உரையாடல்கள் என்றும் கட்டுரைகள் என்றும் அவர்கள் முன்வைப்பார்கள். இவ்வாறாக அ.மார்க்ஸின் மேற்கோள்கள் தமிழகம் - புகலிடம் - புகலிடம் - தமிழகம் எனச் சுற்றுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

நாகார்ஜூனன் மார்க்சியத்தை வறட்டுத்தனம் எனச் சொன்னார் என்பதனைப் ‘புதுவிசை’யில் போய் அ.மார்க்ஸ் சொல்வார். புதுவிசையைப் படிக்கிற மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் அ.மார்க்ஸ் மார்க்சியத்திற்காகப் பேசுகிறார் என மகிழ்வார்கள்.

மார்க்சியம் ‘பெருங்கதையாடல்’ என அ.மார்க்ஸ் புதுவிசையில் போய் சொல்ல மாட்டார். மார்க்சியம் பெருங்கதையாடல், இது குறுங்கதையாடல்களின் காலம் என்றால் என்ன அர்த்தம்? ‘மார்க்சியம் காலாவதி ஆகிவிட்டது’ என்று அர்த்தம். ஆதவன் தீட்சண்யாவுக்கு இது தெரிய வேண்டுமானால், மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளரான இஜாஸ் அஹமதுவை அவர் படிக்க வேண்டும்.

நாகார்ஜூனன் மாவோயிஸ்ட்டாக தன்னைக் காட்டிக் கொண்டால் அ.மார்க்சுக்கு என்ன நஷ்டம்? எவரும் இனி அ.மார்க்சிடம் சான்றிதழ் வாங்கிவிட்டுத்தான் அவரவர் ஈடுபாடு பற்றிப் பேச வேண்டும் என்கிறார். என்னே அறிவுத்துறை அதிகாரம்? அ.மார்க்சுக்கு இந்த அதிகாரத்தை எவர் கொடுத்தார்?

அ.மார்க்சும் சரி அ.மார்க்சின் பரப்புரையாளர்களும் சரி பற்பல விசயங்களை ஒழுங்காக வாசிக்கக் கூடமாட்டார்கள். சின்னதான எடுத்துக்காட்டு வளர்மதியின் கீற்று தொடர்கட்டுரை குறித்த அ.மார்க்சின் அவதானம். கதிர்காமர் எனும் பெயர் தகவல் பிழையாகிவிட்டால், வளர்மதி எழுதும் கட்டுரை முழுக்கவும் நம்பகத்தன்மையற்றதாக ஆகிவிடும் என்பது அவர் வாதம். இது அ.மார்க்சின் அற்பமான தந்திரம். இதனையும் கூட வளர்மதியின் கட்டுரையைப் படித்துவிட்டு அ.மார்க்ஸ் சொல்லவில்லை. அவரைத் ‘திட்டுவதாக’ எவரோ சொன்னதன் அடிப்படையில் எழுதுகிறார்.

வளர்மதி அவரது கட்டுரையில் ஐரோப்பிய அரசு உருவாக்கம், வரிவிதிப்பு, அரசு உருவாக்கத்தில் எதிரியைச் சுட்டி பீதி உருவாக்குதல், வெகுமக்களை அச்சுறுத்தல் என எத்தனையோ விடயங்களை எழுதிச் செல்கிறார். கட்டுரையின் இருபகுதிகளை வாசித்தவர்கள், அந்தத் தகவல் பிழை, கட்டுரையின் தர்க்க நீட்சியில் எந்த விததிலும் 'உடைவை' (logical break) உருவாக்கவில்லை என்பதனை அறிந்து கொள்ளவது சுலபம்.

கட்டுரை ஒரு தொடர் கட்டுரை. அது முடியட்டும். அதன்பின் கட்டுரையுடன் முரண்படலாம் அல்லது உடன்படலாம். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. அதைவிட்டுவிட்டு, கட்டுரையையும் முழுமையாகப் படிக்காமல், எவரோ சொன்னதை வைத்துக் கொண்டு, அதனது நம்பகத்தன்மையை, ஒரு சின்ன தகவல் பிழையை (அந்தத் தகவல் பிழையை வளர்மதி ஒப்புக் கொண்டிருக்கிறார்) வைத்துக் கொண்டு, நிராகரிக்க முற்படுவது என்னவிதமான அறிவிஜீவி அறம்? அறிவுஜீவி பெயரிலான வக்கிரமான தனிநபர் அற்பத்தனம் என்பது இதுதான்.

வளர்மதியின் கட்டுரையைத் தகவல் பிழையின் அடிப்படையில் நிராகரிப்பதற்கான குறைந்தபட்ச தகுதி கூட அமார்க்சுக்கும் அவரது பரப்புரையாளர்களான சுகனுக்கும் ஷோபா சக்திக்கும் கிடையாது.

எடுத்துக்காட்டு சொல்கிறேன் :

பின்நவீனத்துவ விஞ்ஞானம் எனும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையை ஷோபா சக்தியும் சுகனும் தொகுத்த ‘கறுப்பு’ நூலில் அவர்கள் பிரசுரித்தார்கள். அமெரிக்க விஞ்ஞானியான அலன் சாக்கலின் அக்கட்டுரையை ‘பிரணவன்’ என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தப் பிரணவன் யார் என்கிற மர்மம் இதுவரைக்கும் தொடரும் மர்மம்.

அ.மார்க்ஸ் ஒரு விஞ்ஞானப் போதனை செய்கிற பேராசிரியர் என்பதை மட்டும் நாம் இப்போதைக்கு ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். ஷோபா சக்தி, சுகன் முன்வைத்த அந்தக் கட்டுரை தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவ விஞ்ஞானம் தொடர்பாக வந்த ஒரு மோசடிக் கட்டுரை.

பின்நவீனத்துவவாதிகள் எவ்வளவு மேம்போக்காகவும் அர்த்தமற்றும் விஞ்ஞான சூத்திரங்களைத் தமது எழுத்துக்களில் பாவிக்கிறார்கள் என்பதைக் காண்பிப்பதற்காக அலன் சாகல் எழுதிய ஒரு ‘எள்ளல்’ (parody) கட்டுரை அது. அலன் சாகலின் இதே தர்க்கத்தின் அடிப்படையில் இந்து விஞ்ஞானம் பற்றிப் பேசுபவர்களை விமர்சித்து இந்தியச் சூழலில் மீரா நந்தா எழுதியிருக்கிறார்.

கடந்த இருபது ஆண்டுகளாக அலன் சாகலின் கட்டுரையைப் பற்றி உலகெங்கிலும் அறிவுத்துறைகளின் மட்டத்தில் விவாதங்கள் நடந்து வருகிறது. பின்நவீனத்துவ விஞ்ஞானம் எனப்படும் போலிக் கோருதலை விமர்சித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரை சுகன் ஷோபா சக்தியால் பின்நவீனத்துவக் கட்டுரை எனத் தமிழ்ச் சூழலில் வைக்கப்படுகிறது. இவர்களது தத்துவ ஆசான் அ.மார்க்ஸ் அதே தொகுப்பில் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

சுகன் ஷோபா சக்திக்கு ஆதரவாகத் தமிழ்ச்சூழலில் எழுதுகிறவரும் அ.மார்க்ஸ்தான். மட்டுமல்ல அ.மார்க்சும் தானாகவே ஒரு பின்நவீனத்துவ விஞ்ஞானக் கட்டுரையையும் அதிருஷ்டவசமாக எழுதியிருக்கிறார். அலன் சாகல் தொடர்பான பச்சை அறிவு மோசடிக்கு இதுவரையிலும் பதிலிறுக்காமல் அ.மார்க்சும் அவரது இரு பரப்புரையாளர்களான சுகனும் ஷோபா சக்தியும் மௌனம் காப்பது மட்டுமல்ல, அதனைச் சுட்டிக்காட்டுகிறவர்களை அவதூறு செய்வதையும் மிரட்டுவதையுமே அறமாகக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன கொடுமை என்றால், இவ்வளவு பெரிய அறிவுத்துறை மோசடியைச் செய்த அ.மார்க்ஸ் குழுவினர் ஒரு தகவல் பிழையின் அடிப்படையில் வளர்மதியின் ஒரு முழுக்கட்டுரையையும் வாசிக்காமல், செவிவழிக் கேள்வியின் வழி நிராகரிப்பது வேடிக்கைக் கதையன்றி வேறென்ன? பிற தமிழ் எழுத்தாளர்கள் குறித்து அ.மார்க்ஸ் செய்கிற அதே எள்ளல் அ.மார்க்ஸ்க்கும் அவரது நடத்தைக்கும் பொருந்தும்.

எழுதிக் குவித்திருக்கிற அவரது எல்லா எழுத்துக்களையும் எவரும் படித்திருக்க மாட்டார்கள் என்கிற அலட்சியம் அவருக்குள் அதிகம் இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அ.மார்க்ஸ் கீற்று இணையதளக் குழுவினர் பற்றிச் சொல்கிறார் பாருங்கள்:

சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வரும். பொதுப் பிரச்சினைகள் குறித்து நம் பொதுமக்கள் அறிந்த அளவையும் விடக்குறைவாகக் தெரிந்தவர்கள்தான் இவர்கள். (அ.மார்க்ஸ் : ஈழப் பிரச்சினையும் தமிழக எழுத்தாளர்களும் : புதுவிசை: 2009).

ஈழம் குறித்தும், தமிழக எழுத்தாளர்கள் குறித்தும் சொல்வதற்காக சாருவின் மேற்கோளை எடுத்துக் காட்டியதைவிட வேறு அபத்தம் இருக்க முடியாது.

இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்று சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது என்கிற ‘அறிவை’ வைத்துக் கதை எழுதியவர் சாரு. அதனாலேயே சிங்களவர் தமிழர்களைக் கொல்ல இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தமிழரைக் கொன்றனர் எனவும் ‘அறிவுடன்’ கதை எழுதியவர் சாரு. அதனைத் தமது 'சமதருமபோதினி' தொகுப்பில் பிரசுரித்தவர்கள் அ.மார்க்சின் வழித்தோன்றல்களான ஈழ ‘அறிவுஜீவிகளான’ சுகன் மற்றும் ஷோபா சக்தி.

வெறும் புனைவு என்றும் அதற்கான கற்பனா சுதந்திரம் எவருக்கும் இருக்கிறது எனவும் சாருவின் இந்த ‘அறிவுக்கு’ அ,மார்க்ஸோ அல்லது அவரது ‘வழித்தோன்றல்களோ’ சப்பைக் கட்டுக் கட்டிக் கதை விட முடியாது. அப்புறம் அவர்கள் பேசுகிற பிரதிக் கட்டுடைப்பு ‘பணால்’ ஆகிவிடும். புதுமைப்பித்தனில் சாதி பார்க்கிற அவர்தம் பின்நவீனத்துவமும் ‘பணால்’ ஆகிவிடும்.

ஈழத்தில் இந்திய ராணுவம் 'சிங்களப் பெண்களை' வன்புணர்ந்தது என எந்த அறிவிலியும் கூட சொல்ல மாட்டான். இந்திய அமைதிப்படை ஈழத் தமிழ்ப் பெண்களைப் பாரிய அளவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது. ராஜீவ்காந்தியின் படுகொலைக்கான உணர்ச்சிவசமான காரணமாகவும் அது ஆகியது. இது வரலாறு.

சாரு என்ன ‘அறிவுடன்’ தன் ‘உன்னத சங்கீதம்’ கதையை எழுதியிருக்கிறார்? அ.மார்க்சின் வழித்தோன்றல்களான சுகன், ஷோபா சக்தி அதை என்ன ‘அறிவுடன்’ பிரசுரித்தார்கள்? சரி, இதுவெல்லாம் போகட்டும், அ.மார்க்ஸ் என்ன ‘அறிவுடன்’ ஈழம் குறித்துப் பேசும்போது, ஈழம் குறித்து மிக மோசமான ஒரு ‘வரலாற்றுப் பிழையை’ எழுத்தில் பதிந்த சாருவை, பிற தமிழக எழுத்தாளர்களை நக்கல் பண்ணத் தேர்ந்து கொள்கிறார்?

ஈழப் பிரச்சினை குறித்து நம் சக எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? பிரச்சினையின் ‘பன்முகப் பரிமாணங்களை’ இவர்கள் புரிந்து கொண்டு இருப்பார்களா? குறைந்த பட்சமான சில அடிப்படைத் தகவல்கள் - எடுத்துகாட்டாக இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 சதமுள்ள தமிழ் முஸ்லிம்கள் தம்மைத் தனித் தேசிய இனமாகக் கருதக் கூடிய நிலை உள்ளது - என்பது போன்றவற்றைக் கூட நம் எழுத்தாள நண்பர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் (அ.மார்க்ஸ் : ஈழப் பிரச்சினையும் தமிழக எழுத்தாளர்களும் : புதுவிசை) என்கிறார் அமார்க்ஸ்.

இந்தியாவில் முஸ்லீம் மக்களது பிரச்சினையும், தலித் மக்களது பிரச்சினையும் மிகவும் உணர்ச்சிகரமான, உக்கிரமான அரசியல் பிரச்சினை. ஈழப் பிரச்சினையை அறிவுவழிப்பட்ட வகையில் அணுகமுடியாமல் செய்வதற்காக அமார்க்ஸ் உடனடியாகப் பாவிக்கும் தந்திரோபாயம் இது.

பாலஸ்தீனப் பிரச்சினைக்கும் ஈழப் பிரச்சினைக்கும் நிறைய ஒப்புமைகள் உண்டு. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ராணுவம். இலங்கையில் சிங்கள ராணுவம். இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனர்களில் ஹமாஸ் அல்லது பதா அல்லது பாலஸ்தீனக் கிறித்தவர்கள் எனப் பிரித்துப் பார்த்துக் குண்டுபோடுவதில்லை.

பாலஸ்தீனர்களில் சியா, சன்னி, கிறித்தவர் என இன வேறுபாடுகள் உண்டு. அடிப்படைவாதிகளான ஹமாஸினர் பதாவினரைப் படுகொலை செய்கிறார்கள். ஹமாஸை மஹ்மத் தர்வீசும், எட்வர்ட் ஸைத்தும் கண்டிக்கிறார்கள். பாலஸ்தீனத்திலும் குழுச் சண்டைகளும் பன்முகப்பட்ட போக்குகளும் உண்டு. பாலஸ்தீனப் பிரச்சினையைப் பேசும்போது இந்தப் பன்முகப்பட்ட பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணவேண்டும் என அ.மார்க்ஸ் விரும்புகிறாரா?

காஸாப் பிரதேசத்தின் சன்னி இஸ்லாமியர்களான ஹமாசுக்கு தனித்துவமான கலாச்சார மரபு உண்டு. எனில் அ.மார்க்ஸ் அவர்களுக்கான தனி அலகை பாலஸ்தீனப் பிரச்சினையின் முன்பாகத் தீர்க்கவேண்டிய பிரச்சினை என முன்மொழிகிறாரா?

அ.மார்க்ஸ் தெளிவாகச் சொல்கிறார்: பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறி, முழுமையான இறையாண்மை உள்ள நாடுகள் உருவாகும் வரை அங்கே அமைதி சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம் (அ.மார்க்ஸ் : ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் - சுனாமி முதல் ஒபாமா வரை : புலம், 2009).

ஈழப் பிரச்சினைக்கு வருவோம். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 சதமுள்ள தமிழ் முஸ்லிம்கள் தம்மைத் தனித் தேசிய இனமாகக் கருதக் கூடிய நிலை உள்ளது என எழுதுகிறார் அமார்க்ஸ். முரண்பட எந்த முகாந்திரமும் இல்லை. அதே அளவு நியாயம் அங்கு வாழ்கிற தமிழ்க் கிறித்தவர்களுக்கும், இந்துத் தமிழர்களுக்கும் உண்டுதானே?

இலங்கை இராணுவம் குண்டுபோட்டுக் கொல்லும்போது தமிழ் முஸ்லீம், தமிழ் இந்து, தமிழ் கிறித்தவன், தமிழ் தலித்துகள் என வித்தியாசம் பார்த்தா குண்டுபோடுகிறான்? அல்லது முகாம்களில் இலங்கை அரசினால் அடைக்கப்பட்டுள்ள மக்களை - தமிழ் முஸ்லீம் - தமிழ் கிறித்தவன் - தமிழ் இந்து - தமிழ் தலித்துகள் என வித்தியாசப்படுத்தியா கொடுமை செய்கிறான்? தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இலங்கை அரசு அவர்களை இவ்வாறு நடத்துகிறது. இது நிஜமா இல்லையா?

பின் ஏன், அமார்க்ஸ் அவர்களே, ‘முழுமையான இறையாண்மை உள்ள நாடுகள் உருவாகும் வரை அங்கே அமைதி சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்’ என்று ஈழப் பிரச்சினை பற்றி உங்களால் சொல்ல முடியவில்லை?

விடுதலைப் புலிகள் கடுமையான தவறுகள் செய்திருக்கிறார்கள். ஈழவிடுதலைப் போராட்டம் இவ்வளவு பின்னடைவுக்கும் அவர்களது நடத்தைதான் காரணம். நெடுமாறன், வைகோ, ராமதாஸ், சீமான் போன்ற தமிழக விடுதலைப் புலி ஆதரவு அரசியல்வாதிகளின் உணர்ச்சிவசமான பேச்சுக்களும், புகலிடத் தமிழர்களின் அரசியல் விவேகமற்ற ஆலோசனைகளும்தான் பிரபாகரனதும் ஈழத்தமிழ் மக்களினதும் பேரழிவுகளுக்குக் காரணம் என்ற புரிதலுடனேயே இதனைச் சொல்ல முடியும். பிரபாகரனது ஏகப்பிரதிநிதித்துவம் ஈழத்தில் சீரழிந்த அரசியலின் துவக்கம் என்ற புரிதலுடனேயே இதனைச் சொல்ல முடியும்.

நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற சுசீந்திரன் இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்கிறார். நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற ஷோபா சக்தி, அவ்வப்போது பக்கம் மாற்றிப் பேசினாலும், இலங்கை அரச ஆதரவாளர்களுடன்தான் மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர்களுடன்தான் அவர் அரசியல் ரீதியில் நட்பு பாராட்டுகிறார். நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற சுகன் சிங்கள அரசும் - இலங்கை பௌத்தமும் பற்றி புனிதப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார்.

சுகன் தமிழ்க் கவிஞர் சந்திப்பில் பேசியதைப் பாருங்கள்:

பௌத்தம் அன்பையும், கருணையையும் போதிப்பது, சிங்களப் படையின் பின்னால் உள்ளது பௌத்தவெறி என்று சொல்வது மிகவும் தவறானது. விகாரமான இந்திய இந்து மனத்தின் தட்டையான புரிதலே பௌத்தம் குறித்த இந்த புரிதல் என்று கூறியவர், இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடிக் காண்பித்தார். காசி ஆனந்தன், சேரன் உள்ளிட்டவர்கள் போரை ஆதரித்துப் பாடினார்கள். இன வெறுப்பை வளர்த்தவர்கள் இப்படித்தான் தலைமுறைக்கும் போர் காணிக்கையிடப்பட்டது. போர் அனைத்தையும் அழித்துவிடும். ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது இன்றுவரை அங்கு தலித்துகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை (கவிதை - ஒன்றுகூடல் - உரையாடல் : தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை : 2009 : லீனா மணிமேகலை - செல்மா பிரியதர்ஷன்).

சிங்களப்படைகளின் பின்னால் உள்ளது பௌத்த வெறி அல்ல என்கிறார்; ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது என்கிறார் சுகன்.

[Rajapakse] ஸ்டான்லி தம்பையா ஈழ இந்து இல்லை. ஈழக் கிறித்தவர். கல்வியாளர். அவருடைய Budhdhism Betrayed : Religion, Politics, And Violence In Sri Lanka (1992) எனும் புத்தகம் புத்த பிக்குகள் எவ்வாறு இலங்கையில் அரசியல் சக்தியாகப் பரிமாணம் பெற்றார்கள் என்று சொல்கிறது. புத்தத்தின் பெயரிலிலேயே புத்தமதப் போதனைகள் எவ்வாறு மீறப்படும் என்று சொல்கிறது. இலங்கைப் புத்தமத பிக்குகள் பௌத்தத்திற்கு துரோகம் இழைத்தார்கள் என்று அப்புத்தகம் சொல்கிறது.

தமது போர்வெற்றியின் பின் ராஜபக்சேவும் முப்படைத் தளபதிகளும் இலங்கையின் உச்சபட்ச பௌத்தமதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்டார்கள். சிங்கள இனவாதத்தை தமிழர்களுக்கு எதிராகக் கக்குவதில் அங்குள்ள பிக்குகளின் அமைப்பு முன்னணியில் இருக்கிறது. இலங்கை பௌத்த உயர்பீடம் நடந்து முடிந்த உயிர் அழிவுகள் பற்றிப் பேசவில்லையே? நாட்டை ஒன்றுபடுத்தியதற்காக முப்படைத் தளபதிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுக்கும் ஆசி அல்லவா வழங்கியிருக்கிறது?

பிற்பாடு இலங்கைப் படையையும் இலங்கை பௌத்தத்தையும் தொடர்புபடுத்தக் கூடாது என சுகன் சொல்வது என்னவிதமான பின்நவீனத்துவத் தத்துவம்?

இலங்கை பௌத்தத்திற்கும் இலங்கை அரச அமைப்புகளுக்கும் அதனது ராணுவத்தினருக்கும் இருக்கும் திட்டவட்டமான உறவை பொதுப்புத்தி மட்டத்தில் இருக்கும் ஒருவராலேயே புரிந்து கொள்ள முடியும். 'சிங்கள ராணுவம் - பவுத்தம் - பாலுறவு - திரைப்படம் - அதிகாரம்' என இலங்கைப் பேராசிரியர் நிலுபர் டீமெல் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அ.மார்க்ஸ் அதனை வாசிப்பது நல்லது.

அம்பேத்கரின் 'கோட்பாட்டு பௌத்தத்தை' (theoritical budhdhism) முன்வைத்து இலங்கையிலுள்ள பௌத்தத்தின் குணத்தை அறிய முடியாது. ‘விகார இந்து மனம்’ என்று சுகன் விமர்சிப்பது அம்பேத்கரினது கோட்பாட்டு பௌத்தத்தின் அளவில் பொருத்தமான சொற்றொடர். இலங்கையின் குறிப்பான பௌத்த மரபிற்கு அது பொருந்தாது.

ஷோபா சக்தி, சசீந்திரன், சுகனுக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதுகிற அ.மார்க்ஸ் இவர்களது இந்தத் ‘தத்துவ நிலைபாடுகளுக்கும், அரசியல் நிலைபாடுகளுக்கும்’ என்ன விளக்கம் வைத்திருக்கிறார்?

யாழ் பகுதியினருக்கும், கிழக்கு மாகாணத்தினருக்கும் உள்ள கலாச்சார அரசியல் வேறுபாடுகள் முதலானவற்றையோ, யாழ் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை குறித்தோ கூடவும் அவர்கள் (தமிழக எழுத்தாளர்கள்) கிஞ்சித்தும் அறியார்கள் என்கிறார் அ.மார்க்ஸ்.

இலங்கையில் நான்கு பிரதேசங்களில் தமிழர்கள் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு. வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, கொழும்புத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையிலும் கூட வித்தியாசங்கள் இருக்கிறது.

யாழ் சமூகத்தில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை என்று தனித்துக் காட்டுகிறார் அமார்க்ஸ். (அப்போதுதான் விடுதலைப் புலிகளை இவரால் தலித் அரசியலின் வழி ஓரம் கட்ட முடியும்). இந்த தனித்த சுட்டுதலே முதலில் அபத்தமானது.

நான்கு பிரதேசத்திலும் வாழும் தமிழர்களுக்கிடையிலும் தீண்டாமை உண்டு. விடுதலைப் புலிகளுக்கு முன்னும் தீண்டாமை உண்டு. அவர்கள் காலத்திலும் இருந்தது. அதனை அவர்கள் தடை செய்தார்கள். எனினும் தடை செய்வதானலோ அல்லது சட்டம் போடுவதானாலோ மட்டும் தீண்டாமையை முழுக்க ஒரு சமூகத்தின் மத்தியிலிருந்து ஒழித்துவிட முடியாது.

விடுதலைப் புலிகளின் அரசு அமைந்திருந்தாலும் கூட அப்போதும் தீண்டாமை இருந்திருக்கும். எனில் அதற்கெதிரான தமது நடவடிக்கைகளை அந்தச் சமூக அமைப்பில் அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்திருப்பார்கள். சாதி தொடர்பாக அதுவே அவர்களது அரசியல் நிலைபாடு என்பது மட்டுமல்ல, இது ஒரு தொடர்போராட்டம் என்பதனை இந்திய அனுபவத்திலிருந்து எவரும் அறியமுடியும்.

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்களவர்கள் மத்தியிலும் சாதிப் பிரிவினைகளும் சாதிய ஒதுக்குதலும் உண்டு. இலங்கைப் பௌத்தத்திறகு பட்டுக் குஞ்சலம் கட்டுவது சுகனின் அறியாமை என்பதை அ.மார்க்ஸ் அறிந்து கொள்ளட்டும்.

எதற்காக இந்தக் கலாச்சார வேறுபாடுகளையும் தனித்தன்மைகளையும் பன்மைத்துவ அடையாளத்தையும் அ.மார்க்ஸ் இப்போது பேசுகிறார்?

வடக்கு கிழக்கு ஒற்றுமை இல்லை என்கிறார் ராஜபக்சே. வடக்கு கிழக்கு ஒற்றுமை தேவை இல்லை என்கிறார் கருணா. சிறுபான்மையினர் என்ற பேச்சே இனி இல்லை என்கிறார் ராஜபக்சே. தமிழ் என்ற சொல்லோ அல்லது எந்தக் குறிப்பிட்ட மத அடையாளம் சார்ந்த சொல்லோ அரசியல் அமைப்புக்கு வைத்தால் அதற்குத் தடை என்கிறார் ராஜபக்சே.

இந்தத் தருணத்தில் அ.மார்க்ஸ் வடக்கு-கிழக்கு அடையாள அரசியல் பேசுகிறார். தமிழில் சிங்கள தேசிய கீதம் பாடுகிறார் சுகன். இலங்கை பௌத்தம் புனிதமானது என்கிறார் அவர். இலங்கை அரசு இனக்கொலை அரசு அல்ல என்கிறார் சசீந்திரன். எனில் எவரிடம் அ.மார்க்சும் அவரது ஈழவழித்தோன்றல்களும் பன்மைத்துவத்தையும் கலாச்சாரத் தனித்துவ அடையாளத்தையும் கோரப் போகிறார்கள்?

இந்தக் கேள்வியைத் தமிழகச் சூழலில் கேட்டுப் பார்ப்போம்.

கன்னியாகுமரி நாடார்கள் தனிமாவட்டம் கேட்கிறார்கள். மருத்துவர் ராமதாஸ் தமிழகத்தைத் தனது வன்னியர் சாதி அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கக் கேட்டார். கொங்கு வேளாளர்கள் கோவையைப் பிரித்துக் கேட்பார்கள். இதுவும் பன்மைத்துவம் மற்றும் அடையாள அரசியல்தான்.

இம்மாதிரியான போக்கு குறித்து அமார்க்சின் பின்நவீனத்துவக் கோட்பாடு என்ன சொல்கிறது?

அ.மார்க்ஸ் முன்வைக்கிற பன்மைத்துவ அரசியலின் பேரில் மூன்று தலித் சாதிகள் தனித்தனியே பிரிந்திருக்கிறார்கள். பன்மைத்துவம் நிலைநாட்டப்பட்டுவிட்டது. அ.மார்க்ஸ் அவர்களே ‘அப்புறமாக’ உங்கள் பின்நவீனத்துவமும், பன்மைத்துவ அரசியலும் என்ன சொல்கிறது? ‘தலித்தியம் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்று அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்தது போதும், பன்மைத்துவ அரசியலின் அடுத்த நகர்வு என்ன? அடையாள அரசியல் நிலைநாட்டப்பட்ட பின், அடுத்த நகர்வு என்ன?

எந்தக் குறைந்தபட்ச பன்மைத்துவத்தினையும், அது சாதி அடையாளமோ மத அடையாளமோ எதுவாயினும் அடையாள அரசியலின் ஒரு துளியையேனும் ஒப்பாத சிங்கள இலங்கை அரசின்பாலான உங்களது அணுகுமுறை என்ன? இந்தப் புள்ளிதான் நீங்கள் தமிழகத்தில் தொடுவதற்குத் தயங்கி நிற்கும் புள்ளி; நீங்கள் யார் யாரையெல்லாம் ஜனநாயகவாதிகளாக உயர்த்திப் பிடிக்கிறீர்களோ அவர்களெல்லாம் ஒன்றுபடும் புள்ளியும் இதுதான்.

உங்களதும், உங்களது தத்துவ அடிப்படைகளைக் காவித்திரியும் உங்களது ஈழ-தமிழக வழித்தோன்றல்களதும் சிந்தனையமைப்பு இரு தளத்திலானது. முதல் தளம், பின்நவீனத்துவ காலத்திலான - நவீனத்துவ யுகத்தின் மீதான விமர்சனம், மார்க்சிய நெருக்கடி, அரசியல் மொழியில் பின் சோவியத், பின் செப்டம்பர், தொழில்நுட்ப யுக, உலகவயமாதல் கால - யதார்த்தங்களைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது தொடர்பானது.

இரண்டாவது தளம், நீங்கள் அறுதியாக முன்வைக்கும் பன்மைத்துவ அரசியல் தொடர்பானது.

பகுப்பாய்வுக் கட்டத்தில் நீங்கள் பேசுகிற பல விடயங்களில் குறைந்தபட்ச அறிவுள்ள எவரும் முரண்பட நியாயமில்லை.

உதாரணமாக பின் புரட்சிகர சமூகங்கள் குறித்த விமர்சனங்கள், விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநித்துவம், பன்மைத்துவப் பிரச்சினைகள - முஸ்லீம் மற்றும் தலித்தியப் பிரச்சினைகள், பால்தன்மை குறித்த பிரச்சினைகள் - விடுதலைக்கான முன்நிபந்தனைகளாக ஏற்பது குறித்தமை போன்றவற்றில் உங்களோடு மார்க்சியர்களுக்கோ அல்லது இலங்கை அரசை எதிர்ப்பவர்களுக்கோ, விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கோ எந்த முரண்பாடும் இல்லை.

முரண்பாடு எங்கு வருகிறது? தலித்தியத்தின் பெயரிலும், முஸ்லீம் மக்களின் பெயரிலும் நீங்கள் உயர்த்திப் பிடிப்பவர்கள் இலங்கை அரசு இனக்கொலை செய்யவில்லை என்கிறார்கள். இலங்கைப் பௌத்தம் பவித்திரமானது என்கிறார்கள்.

இந்துத்துவத்தையும் சாதியையும் ஒழிப்பதை நீங்கள் ஒரு மக்கள் கூட்டமெனும் அளவில் ஈழத்தின் இந்துக்களை அழிப்பது எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ என்றே தோன்றுகிறது. ஈழத்தின் இனப்படுகொலைகளைப் பற்றிப் பேசுகிறபோது நீங்கள் சாதியைப் பற்றியும்; அடையாள அரசியலைப் பற்றியும் வித்தியாசப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

என்ன துயரம், இந்தவிதமான எந்த வித்தியாசப்படுத்தலும் இல்லாமல்தான் இலங்கை அரசு தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது.



வெறுமனே தமிழக புலி ஆதரவாளர்களை எதிர்த்துக் கொண்டிருப்பது மட்டுமே விடுதலை அரசியல் இல்லை. அதனைத்தான் நீங்களும் நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற மூவரும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
திசைக்கொன்றாக, நூறு நூறு முரண்களுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிற அரசியலினிடையில், அவர்கள் ஒன்றுபடும் புள்ளி அரச ஆதரவாளர்களுடன் அவர்கள் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதுதான்.

இவர்களுக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு பதிலிறுத்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து, இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கான ஆதரவு அரசியலை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதைப் பேசத் துவங்குங்கள்.

பல்லாயிரம் மக்களின் படுகொலைக்குப் பின், மூன்று இலட்சம் மக்கள் இலங்கையின் சித்திரவதை முகாம்களில் அடைபட்டிருக்கிற சூழலில், ஒரு மனித உரிமையாளராக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பணி இதுவாகத்தான இருக்கும்.

அ.மார்க்ஸ் ஆதரித்துக் கட்டுரை எழுதியிருக்கிற மூவரில் சுகன் இலங்கை பௌத்தத்தின் புனிதம் குறித்துப் பேசுகிறார். இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட லசந்தாவின் கொலையும் புலிகளால் செய்யப்பட்டதாக ஏன் இருக்கக் கூடாது என பாரிசில் சந்தேகம் எழுப்பியிருக்கிறார் சுகன். பத்திரிக்கையாளர் திசைநாயகத்திற்கு இலங்கை நீதியமைப்பு 20 ஆண்டு கடூழியத் தண்டனை விதித்திருக்கிறது.


இலங்கை அரசு செய்ததாகச் சொல்லப்படுகிற எல்லாக் கொலைகனையும் அவர்கள் செய்திருப்பார்களா எனச் சந்தேகம் எழுப்பிக் கொண்டேயிருக்கிறார் சுகன்.

‘வாழ்க நீ அம்மான்’ எனக் கருணாவுக்காக 'கவித்துவ அறம்' தோன்ற அவர் வாழ்த்துப் பாவும் எழுதியிருக்கிறார்.

சுசீந்திரன் இலங்கையில் இனக்கொலை நடக்கவில்லை என்கிறார். திருவனந்தபுரத்தில் அரசுடன் நேரடியாக உறவு கொண்டிருப்பவர்களுடன் இணைந்து கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கிறார்.

ஷோபா சக்தி, இலங்கை அரசின் கொலைகளை சுகன் சந்தேகத்துக்கு ஆட்படுத்துவதையிட்டு, எம்மீது 'இரத்தப் பழி வந்துவிடும்' எனச் சுகனுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

சுசீந்திரன் சொல்வதற்கு மாறாக இலங்கையில் இனக்கொலை நடக்கிறது எனத் திட்டவட்டமாகச் சொல்கிறார்.

ஷோபா சக்தியின் வலைத்தளத்தில் சுசீந்திரனின் நேர்காணலும், சுசீந்திரனின் வலைத்தளத்தில் ஷோபா சக்தியின் கட்டுரைகளும் நேர்காணலும் வருகிறது.

அ.மார்க்ஸ் ஆதரித்து எழுதுகிற மூன்றுபேரும், விடுதலைப் புலிகளின் அழிவின் பின் 'இன்று' மூன்று அரசியல் நிலைபாடுகளில் நிற்கிறார்கள். இதனை வெறுமனே 'பன்மைத்துவம்', 'மாற்றுக் கதையாடல்கள்' என வழமைபோலக் கதையடித்துக் கொண்டிருக்க முடியாது.


புகலிடத்தில் ஷோபா சக்தி, சுகன் பேசிவந்த தலித்தியம் என்பது, தமது புலி எதிர்ப்பு முகத்தை மறைத்துக் கொள்ள, மூடிக்கட்டிய ஒரு சந்தர்ப்பவாத போலிக் கோட்பாட்டுப் படுதா என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது.

கருணாவிடமோ அல்லது பிள்ளையானிடமோ அல்லது மகிந்த ராஜபக்சேவிடமோ தலித்தியப் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசுகிற நிலைமையில் அ.மார்க்ஸ் பரப்புரையாற்றுகிற எவரும் இன்று இல்லை.

தமிழகத்தின் புலி ஆதரவாளர்களின் அரசியல் பற்றி அ.மார்க்ஸ் பேசியது போதும், அவர்களது யதார்த்தமற்ற புனைவு அரசியல் பற்றிப் பேசியது போதும். இன்னும் அமார்க்ஸ் தனது வெற்றுப் புலியெதிர்ப்பையும் பன்முகத்துவத்தையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடியாது.

இலங்கையின் இஸ்லாமிய மக்கள் இனி புலிகளிடம் எந்தவிதமான பிரதிநிதித்துவமோ, புரிதலோ கோரிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் புலிகள் ஒரு அரசியல் சக்தியாக ஈழமண்ணில் இல்லை.

அ.மார்க்சும் சுகனும் ஷோபா சக்தியும் தாம் தொடர்ந்து கோரிவந்த தலித்தியப் பிரதிநிதித்துவம், இஸ்லாமிய மக்களின் உரிமைகளை அவர்கள் உரத்துப் பேச வேண்டிய தருணம் இது. இம்முறை புலிகளுக்காக அவர்கள் காத்திருக்கத் தேவையில்லை.

அ.மார்க்ஸ், சுகன், ஷோபா சக்தி, சுசீந்திரன் போன்றவர்களால் ஜனநாயக வேஷம் கட்டப்படுகிறவர்கள்தான் இன்று இலங்கையில் ஆட்சியில் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் உரிமைகளை, அவர்தம் மனித உரிமைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்பதற்கான திட்டம் குறித்து அவர்கள் பேச வேண்டிய காலம் இது.

மண்டேலா சொன்னபடி, மன்னிக்கலாம், மறக்க முடியாது என்பது சரியான நிலைபாடு. சந்தேகமில்லை. அதையும் தாண்டிய அரசியல்தான் இன்று பேசப்பட வேண்டியது.

இலங்கைச் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள், அதினிலும் சிறுபான்மையினரான தமிழர்கள், அதனிலும் சிறுபான்மையினரான தலித்தியர்கள், அதனிலும் சிறுபான்மையினரான ஆதிவாசி மக்கள் குறித்துப் பேச வேண்டிய ‘சமாதான’ காலம் இது.

திசைக்கொன்றாக நிற்கிற ஷோபா சக்தி, சுகன், சசீந்திரன் என மூவரையும் தாண்டி, அ.மார்க்ஸ் இது பற்றிப் பேசவேண்டும்.

பேசுவாரா அ.மார்க்ஸ்?

- யமுனா ராஜேந்திரன் -

ஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்

மண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. "நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்" - சீன வெளியுறவுத் தொடர்பாளர் ஜியாங் யூ (22.4.2009).

இன்னொரு நாட்டின் மக்களைப் பற்றி கவலை கொள்ளாது, அவர்களை பல்வேறு சூழ்ச்சிகளால் அடக்கியாளும் ஆளும் வர்க்கக் குழுக்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற சீன நோக்கம் தெளிவாகிறது. இலங்கையில் ஆயுதப் புரட்சியை 1971-ல் மேற்கொண்ட அப்போதைய கம்யூனிஸ்ட் புரட்சிகர இளைஞர்களான ஜனதா விமுக்தி பெரமுனாவை அடக்க இந்தியா படை உதவி உள்ளிட்ட எல்லா உதவியும் வழங்கியது. ஜே.வி.பி.யினர் அப்போது சீன ஆதரவுக் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். ஆனால் அந்த இளைஞாகளின் எழுச்சியை அடக்க இலங்கை அரசுக்கு சீனா படை உதவி வழங்கியது.

புவியியல் அமைப்பில் சீனா, இலங்கையிலிருந்து மிகத்தொலைவில் உள்ளது. இந்தியா தன் வாலைச் சுழற்றி வாய்க்குள் விழுங்குவதற்கு ஏதுவாய் இருக்கிறது இலங்கை. இந்திய மலைப்பாம்புக்கு தேவைப்பட்ட தீனியாய் தன்னை தந்து கொண்டிருக்கிற போது, அதற்கு ஈடாய் தமிழினத்தை துடைத்தொழிப்பதற்கான அனுமதியை, உதவியை அடைந்து கொள்கிறது இலங்கை. அந்த வகையில் ஒரு சாமர்த்தியமான இனவெறி விரியன் குட்டி இலங்கை. தேர்தலுக்கு முந்திய ஒரு கவிதை கவிஞர் தமிழ்நதியின் கவிதை இவ்வாறு பேசுகிறது.
" ஒரு வழியாய் நண்ப்பர்களே,உங்கள் கவனத்தை சவப்பெட்டிகளிலிருந்து வாக்குப் பெட்டிகளுக்குக் கடத்தி விட்டார்கள்"

இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் லக்ஸ்மண்யப்பா 2008 இறுதியில் சொன்னார் "இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள சூழலில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை தேர்தல் முடிவடைந்தபின் தணிந்து விடும். இதைக் கண்டு கொள்ளத் தேவையில்லை".

தமிழக அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு செய்த முயற்சியின் பெருவிளைவாக, அவர் சொன்னது உண்மையாகி விட்டது. ஈழப்பிரச்சினை எனும் போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்த அனைவரும், தேர்தல் வெயில் அடிக்கத் தொடங்கியதில் போர்வையை வீசி எறிந்தார்கள். ஈழப்பிரச்சினை தொடர்பான ஆர்ப்பரிப்பை மௌனிக்கச் செய்தார்கள். அந்த மௌன கணங்களில், ராசபக்சே இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களுடன் போர்க்களத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். 2009 சனவரி முதல் மார்ச்சு முடிய 8000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மன்றம் காட்டியது.

தமிழக அரசியல்வாதிகள் மௌனித்துவிட்ட அந்த நாட்க்களில், ஓராயிரம் ஆண்டு்டுகள் ஓய்ந்து்து கிடந்த்த பின்னர் வாராது போல் வந்த்த மாமணியைத் துடைத்தொழிக்க ராசபக்சே திட்டமிட்டு முன்னேறிக் கொண்டி்ருந்தான். இந்திய அரசு கருணாநிதியைப் பற்றி தெளிவாகக் கணித்திருந்தது. நவீன போர்க்கருவிகள், போர்ப் பயிற்சி, இராணுவ வல்லுநர்களைக் கொடுத்து இலங்கை அரசு வழியாக ஈழப் போராளிகளை அடக்கிவிடத் திட்டமிட்டது போல், தமிழக மக்களின் எழுச்சியைக் கருணாநிதி மூலம் திசை திருப்பிவிடலாம் என அவர்கள் அறிந்திருந்தார்கள்.



அவர்களின் வழிகாட்டுதல் படியே கருணாநிதியும் நாடகக் காட்சிகளின் ஒவ்வொரு படுதாவையும் இறக்கி விட்டுக் கொண்டிருந்தார். பதவியில் நீடிப்பதற்காக எதையும் பலியாக்கத் தயாராகும் இந்த முதிய கருணாநிதியை அவர்கள் அறிவார்கள்.

அப்படித்தான் ஆயிற்று நண்பர்களே! தேர்தல் முடிவு வெளிப்பட்டது. இந்தியாவில் தயார் நிலையிலிருந்த வாக்குப் பெட்டிகள் ஈழத்தமிழினத்தின் சவப்பெட்டிகளாய் உருவம் கொண்டன.

"ஒரு வழியாய் நண்பர்களே,
உங்கள் கவனத்தை
வாக்குப் பெட்டிகளிலிருந்து
சவப்பெட்டிகளுக்குக் கடத்தி விட்ட்டார்கள்"
தேர்தலுக்குப் பிந்திய கவிதை இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மே 16-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின. முல்லைத் தீவை பிண மண்டலமாக்கியிருந்த இலங்கை ராட்சசன், கடைசி விசையைத் தட்டிவிட்டான்.

ரேடார் கருவிகள், போர் விமானங்கள், ஆளில்லா உளவு விமானங்கள், செயற்கைக்கோள் உதவிகள், 2004-ல் கொடுத்த கிளஸ்டர் கொத்துக் குண்டுகள், ரேடியல் பாம்ப்ஸ், வன்னிமக்கள் மீது இவைகளை வீச இராணுவ வல்லுநர்கள், களத்தில் நின்ற இந்தியச் சிப்பாய்கள் என இந்தியா இதுவரை வழங்கிய உதவிகளை விட, அதிக வீரியம் கொண்ட பேரழிவு ஆயுதமாக இருந்தது தேர்தல் முடிவு.

16-ந் தேதி தேர்தல் முடிவைத் தந்தது இந்தியர் நன்றியாக, பிணங்களை வழங்கினான் இலங்கை ராட்சசன்.
இந்தியா வாக்குப் பெட்டிகளை சவப் பெட்டிகளாய் மாற்றித்தர, அவன் அதைப் பிணங்களால் நிரப்பினான் கடைசி நாளில் 25 ஆயிரம் பேரைக் கொன்ற அடையாளம் தெரியாமல் செய்ய, இந்தியப் பெட்ரோல் ஊற்றி எரித்தான். மண்ணில் புதைத்தால் நாளை நிலைமை மாறுகிற கணங்களில் உலக மனித உரிமை நாய்கள், தோண்டி வெளியே எடுத்த வீசி விடுமென்று அவன் அறிவான்.

II

ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குள் நடத்தும் கொள்ளைக்கு பொருளாதார வளர்ச்சி, வணிக ஒப்பந்தம், திட்டமிடல் எனப் பல நாகரீகமான பெயர்கள் உண்டு. இந்தப் பெயர்களில் முதலில் கொள்ளைக்காரர்கள் நுழைவார்கள். பிறகு கொலைகாரர்களாய் மாறுவார்கள். கொள்ளைக்காரர், கொலைகாரர் என்ற இருபாத்திரங்ககளையும் தனித்தனியாய் அவர்கள் வகிப்பதில்லை.

ஈராக் மீது அமெரிக்கா கால்பதித்து மனிதக் கொலைகள் நடத்திய போது, பெட்ரோல் கொள்ளைக்காக நடத்தப்பட்ட கொலைகளே என்பதை அனைவரும் அறிவர். 2002ம் ஆண்டு நார்வே போன்ற நாடுகளின் முன்னெடுப்பால் உண்டான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, ராசபக்சே தன்னிச்சையாக முறித்துக் கொண்டான். நார்வே நாட்டையும் வெளியேறச் செய்தான். உடனடியாக, திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்தி வெளியேற்றினான்.

புலிகள் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் வெளியேற்றப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்குத் திறந்த வெளி தயாராக்கப்பட்டது் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதே, இப்பகுதியில் 672 சதுர கி.மீ. பரப்பில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுமென இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அங்குள்ள 14 கிராமங்களிலிருந்த தமிழர்களை வெளியேற்றி, அதைச் சுற்றி அதி உயர் பாதுகாப்பு வளையம் உருவாக்கிய பகுதியில் 2006ல் இந்திய எரிசக்தித் துறையும், சிலோன் மின்வாரியமும் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்க 350 மில்லியன் டாலர் திட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது் எந்தக் கொள்ளையையும் அனுமதிப்பேன் தமிழினத்தை நான் அழிக்க்க உதவி செய்த்தால் போதும் என்ப்பது இனவாத அரசின் நிபந்த்தனை.

பொருளாதார வேட்டைக்குப் பொருத்தமாய் மனித அடக்கு முறைகள் வருகின்றன. ஏற்கெனவே இந்தியா-இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. "சார்க் நாடுகள்" என்ற பெயரில் அந்த அமைப்புக்கு அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாய் தலைமைப் பீடமாய் செயல்படும் இந்தியா இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்குள் தடையற்று நுழைய முடிந்தது் இந்தியாவின் தனியார் மூலதன நிறுவனங்கள் என 50-க்கு மேற்பட்டவை இலங்கையில் உள்ளன. துணி ஆலைகள்(Textiles), பெட்ரோல் நிறுவனங்கள். வாகன உற்பத்தி போன்றவைகளில் 50 விழுக்காடு இந்திய முதலாளிகள் கையில். 1991ல் 740 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள 23 இந்தியத் தொழில் திட்டங்கள் 2000த்தில் 125பில்லியன்(Billion) இலங்கை ரூபாய் மதிப்புள்ள 150 தொழில் திட்டங்களாகப் பெருக்கெடுத்தன.

உருக்கு, ரப்பர், சிமெண்ட், கணினி மென்பொருள், மின்னணுத் தொழில்நுட்பப் பயிற்சி, மருத்துவம், பொறியாளர் பயிற்சி போன்ற தொழில்களில் இந்தியாவின் முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் காலடி பதித்துள்ளன என்பது மட்டுமல்ல. இலங்கைப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தலையாரிகளாக ஆகியுள்ளன. இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தனக்குத் தேவைப்பட்ட தருணங்களில் தேவையான அளவு தீர்மானிப்பதாகவும் இந்தியத் தலையாரி ஆகியுள்ளான்.

இனவாதத்தால் உள்நாட்டு மக்களை ஏமாற்றியும், நாட்டின் இன்னொரு இனமக்களை ஒடுக்கியும் செயல்படுகிற ஒருவன் புத்தனைக் கொன்றவன். இன்னொருவன் காந்தியைக் கொன்று புதைத்து பேரெடுத்தவன். தத்தம் நாட்டினது, ஆதிக்கக் குழுக்களின் நலன்களுக்காக செயல்படும் இருவரும் இருபெரும் ஆக்கிரமிப்பாளர்களே. இன ஒடுக்கு முறையை உலகநாடுகளின் ஒத்துழைப்போடு நடத்திக் கொண்டிருந்த போதும், இந்தியாவை நிரந்தரமான துணையாக ஆக்கிக் கொண்டது இலங்கையின் பலம். இது பற்றி தெளிவாகத் தெரிந்த பின்னும், இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் என்று போராளித் தலைமைகள் பேச வேண்டிய நிலையிலிருந்தது தான் தமிழினத்தின் பலவீனம்.

2007ல் புலிகளின் வான்படை, இலங்கை கட்டுநாயக இராணுவ விமானங்களைத் தாக்கியழித்த போது, "இந்திய பாதுகாப்புக்குப் பெரும் ஆபத்து் இந்திய வான எல்லையையும், கடலோர எல்லையையும் பாதுகாக்க, கூடுதல் பலத்துடன் எச்சரிக்கையைhக இருப்போம்" என இந்தியத் தளபதிகள் அறிவித்தார்கள்.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் "இலங்கை இராணுவத்துக்கும் எங்களுக்கு மிடையிலான யுத்தம் இது. புலிகளின் வான் படை இந்தியப் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக இருக்காது" என உறுதிமொழி தந்தார்.

கடைசியாய் மரண எல்லையிலிருக்கிற வேளையிலும், "நாங்கள் இந்தியாவின் நண்பர்கள், இந்தியாவை ஒரு போதும் எதிரி நாடாய் கருதவில்லை" என்று தான், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

"இலங்கையை ஒரே தீவாய் வைத்துச் சுரண்ட, அடக்கி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எமது விருப்பம். இரு நாடுகளாக்கி அழகு பார்த்தால், இந்தியாவிலுள்ள தமிழினம் தனியாகப் போய், இந்தியாவின் கட்டமைப்பு உடைந்து போய் விடும்" என்பது மட்டும் இந்தியாவின் மறைத்து வைக்கப்பட்ட, இன்னும் வெளிப்படுத்தப்படாத உள்நோக்கமாகும்.

ஒற்றைத் தீவாய், ஒற்றைச் சுரண்டலாய், தனக்கு உள்ளடக்கமாய் இலங்கையை வைத்திருக்க வேண்டுமென்ற இந்திய ஆளும் வர்க்கக் கோட்பாடுகளே, ஈழத்துக்கு எதிர் வினைகளாய் உருவாகின.

III

"இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட ஐ.நா. உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டம் தேவையற்றது" .


ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் மே 26ல் இந்தியப் பேராளர் கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். (கோபிநாதன் ஒரு மலையாளி. இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கரமேனன், தேசிய பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணன், ஐ.நா.வின் தூதர் விஜய் நம்பியார் இவர்களனைவரும் மலையாளிகள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது)
"ஒரு பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்பினால் நடத்தப்பட்டு வந்த துன்பமான, நீண்டகால மோதலுக்கு இப்போது தான் இலங்கை முடிவு கண்டிருக்கிறது. நல்லிணக்கதை ஏற்படுத்துதல், காயங்களை ஆற்றுதல், துன்பமான இந்த மோதலின் விளைவுகளை வெற்றி கொள்ளுதல் என்ற நடைமுறைகளுக்கு ஊக்கம் அளிப்பதில் கவனம் செலுத்துவதே உலக சமுதாயத்தின் குறிக்கோளாகவும் முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும். மாறாக சில நாடுகள் இந்தச் சிறப்புக் கூட்டத்தைத் திணித்திருப்பதன் மூலம் மனித உரிமை மன்றத்தின் பணிகளையே அரசியல் ஆக்கிவிட்டன. இது வருந்தத்தக்க நிகழ்வு" என்று கோபிநாதன் ஐ.நா.மன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஐ.நா.வில் தமிழினப் படுகொலையை ஆதரித்து, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா கொடி தூக்கியது இது முதல் முறையல்ல் இந்த கோபிநாதன் அச்சங்குளங்கரேயின் இடத்தில் 1983இல், சையத் மசூத் என்பவர் இருந்தார். 1983இல் இலங்கையில் 5000 தமிழர்கள் கொன்று வீசப்பட்ட இனப்படுகொலையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாகியிருந்த பலரும் கண்டித்துப் பேசினார்கள். "

ஆனால் இந்தியக் குரல் மட்டும், இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா. அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என வித்தியாசமாய் ஒலித்தது"

(Syed Masud from India supported the suggestion that the subcommittee should not hastily act in with regard to the situation on the Sri Lanka Island)
- The Hindu 23.8.1983

அதுபோலவே, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் ஐ.நா.வில் வாய் திறக்கவில்லை. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, எல்லாப் பிரச்சினை பற்றியும் பேசினார். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி மட்டும் பேசவில்லை. இது வருந்தத்தக்கது".

எம்.ஜி.ஆர். முதலமைச்ச ராயிருந்த போது, வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் வருத்தப்பட்டது மட்டுமல்ல் 1983ல் இவ்வாறு இனப்படுகொலையின் போது பாதிக்கப்பட்ட கொழும்புத் தமிழர்கள், அகதிகளாய் மன்னாருக்கும், யாழ்ப்பாணத்துக்கும் ஏற்றிச் செல்ல இந்தியா கப்பலை அனுப்பியது் அதைக் குறிப்பிட்டு எஸ்.டி.எஸ். "பயணிகள் கப்பலை அனுப்பிப் பயனில்லை. படைக் கப்பலை அனுப்ப வேண்டும்" என்றார்.

இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்தவில்லை. எனவே, இந்தியாவைத் தாண்டி ஐ.நா. மன்றத்துக்குச் செல்வதென எதிர்க்கட்சித் தலைவராயிருந்த கலைஞர் கருணாநிதி முடிவெடுத்து, ஒரு கோடிக் கையெழுத்துகளைத் திரட்டினார். 29.8.1983 அன்று சென்னைக் கடற்கரைச் சீரணி அரங்கில் ஒரு கோடிக் கையெழுத்துப் படிவங்களை பார்வைக்கு வைத்து உரை நிகழ்த்தினார்.

"இப்படிப்பட்ட கோரக்காட்சி களையெல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? இந்தியா வேறு, தமிழ்நாடு வேறு என்றில்லாமல், இந்தியா தான் தமிழ்நாடு - தமிழ்நாடு தான் இந்தியா என்று நாங்கள் கருதிக் கொண்டிருக்க நீங்கள் தமிழர்களுக்குச் செய்தது என்ன?"

"உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்?

உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால் நின்றுவிடுவது ஏன்?" கோபம் கொப்பளிக்கக் கேள்வி எழுப்பியவர் கருணாநிதி.

அப்போது இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கும் காங்கிரசுக்கும் - ஓரு வேண்டுகோள் வைத்தார். "நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். நாளைக்கு ஜெயவர்த்தனேயை மிரட்டுகிற அளவுக்கல்ல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுகிற அளவுக்கு இந்தியப் படை இலங்கைத் தீவிலே நுழைந்து, அங்கே தமிழர்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தருமேயானால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் இன்னும் பத்தாண்டு காலத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே ஆட்சிக்கு வர முயற்சி எடுக்காது. நீங்களே வேண்டுமானால் தமிழகத்தையும் சேர்த்து ஆளுங்கள். உங்கள் காங்கிரஸ் கட்சியே ஆளட்டும்.

நாங்கள் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியிலே ஈடுபடவில்லை. தமிழன் வாழ வேண்டும், தமிழ் இனம் வாழ வேண்டும். செத்துக் கொண்டிருக்கும் தமிழனை வாழ வைக்க வேண்டும்".

1984ம் ஆண்டு டெலோ மாநாட்டில் கருணாநிதியின் சொற்பொழிவு, "இப்போதே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். எடுத்த முடிவை உடனே செயல்படுத்த வேண்டும்" என்பதாய் அமைந்திருந்தது.

"இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலில் ஓடுகின்ற ரத்தம் தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கும் துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ், தமிழ் என்று துடிப்பது உண்மையானால், அந்தத் தமிழன் சிந்திக்கட்டும். இனி பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில இறங்க வேண்டும்". "என்ன செயலில், எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தை தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது."

"இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம். ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காதது போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத்திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை".

"எனவே தான் சொல்லுகிறேன். இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக, அதற்குத் தயாராகி விட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித்தமிழ் ஈழநாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழநாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்".

கருணாநிதியின் நியாயமான இந்தப் பேச்சு் அவரின் அன்றைய உரை முதல்வரான இன்றைய கருணாநிதிக்கு உடன்பாடற்றதாய், எதிர்நிலையாய் ஆனது தான் அவலம். வீரதீரனாக நடிக்கும் கதாநாயகனின் வெற்றுத் திரைப்பட வசனம் போல் ஆகிவிட்டது. இன்று அவர் சொல்வதென்ன?

"இந்தப் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடே எனது நிலைப்பாடு... ஈழம் கிடைத்தால் எதிர்க்கப் போவதில்லை. மகிழ்ச்சியடைவேன்." கலைஞர் கருணாநிதியின் கடந்தகாலங்கள் அவரின் நிகழ்காலத்தை கேள்விக்குட்படுத்துகின்றன. அந்தந்த காலத்திற்கு அவர் பேசும் வீரவசனங்களை அந்தந்த காலத்திற்குரிய தனித்தனி கல்லறைகளில் புதைத்து விடுகிறார். பழையவற்றைப் புதைத்த கல்லறைகளின் அருகே புதிய கல்லறைகளை உண்டாக்கி வருவதற்கு, அதிகார நிலையோடு ஒன்றாய்க் கலந்து விட்ட அவரது வாழ்வியலே காரணம்.


"தமிழீழ மக்களின் எதிர்காலத்துக்காக போர்க்களத்தில் தன் மகனையே சாகக் கொடுத்தான் ஈழத்துப் போராளி் மகன்களின் அமைச்சர் பதவிக்காக டெல்லிக்கு அலைந்து கொண்டிருந்தார் இங்குள்ள கருணாநிதி"

என்ற புதிய ஒப்புமைச் சொல்லாடலை அவரது வாழ்வியல் தான் உருவாக்கியது. எழுச்சிகரமாகத் தொடங்கி வார்த்தை ஜாலமாக முடிந்து போன அவரது வாழ்க்கைதான் அடிப்படை. கருணாநிதியைப் போல், தமிழினத்தை நம்பச் செய்தவரும் இல்லை. அவரைப் போல் தமிழனத்தை மோசம் செய்தவரும் இல்லை.

அக்.14இல் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் கலைஞர். "15 நாட்களுக்குள் போர் நிறுத்தம் செய்ய இந்தியா முயற்சி செய்யவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள்" என்ற தீர்மானம் - அனைத்துக் கட்சிகளின் முடிவாக வந்தது. டெல்லிக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசுக்கு நெருக்கடியைத் தருமென போர் முடிவுக்கு வருமென அனைத்துத் தரப்பும் எதிர்பார்த்திருந்தது.

ஏனென்றால்
இந்தப் போரை இந்தியா தான் நடத்துகிறது என்பது கலைஞருக்குப் புலனாகியிருந்தது போலவே எல்லோருக்கும் வெளிச்சமாகியிருந்தது.

ஒரு வாரத்தில் இலங்கையிலிருந்து, ராசபக்சேயின் தம்பி பசில் ராசபக்சே அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விட்டு, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கான சூழலே இல்லையென விளக்கிவிட்டுப் போனார் போரைத் தொடருங்கள் என்று அவருக்குச் சொன்ன பிரணாப் முகர்ஜி கலைஞரிடம் வந்து பேசினார். என்ன பேசினார்கள் என்று தெரியாத மூடு மந்திரமானது. "அனைத்துக் கட்சிகள் கூடி எடுத்த முடிவு இது.

எனவே மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நீங்கள் சொன்னதை பரிசீலிக்கிறோம்" என கலைஞர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மற்ற கட்சிகளை மதிக்க வேண்டுமென்ற குறைந்த பட்ச ஜனநாயகப் பார்வை கூட இல்லாமல், பிரணாப்முகர்ஜியின் பேச்சு எனக்குத் திருப்தியளிக்கிறது என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் நாடகம் போலவே பல நாடகங்களைத் தொடர்ந்து, அரங்கேற்றிக் கொண்டிருந்தவர் - திடீர் உண்ணா நோன்பு நாடகத்தையும் நடத்திக் காட்டினார். வங்கக் கடலின் இந்த முனையில் அவர் உண்ணா நோன்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, கடலின் இன்னொரு முனையில் ஈழத்து உறவுகள் சொல்லொணாத் துயரத்து்க்குள்ளும் மரணத்துக் குள்ளும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அக்டோபர் 14 துரோகத்தின் பின் ஐம்பதாயிரம் தமிழ் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன. மே 16ல் முள்ளிவாய்க்கால் நெடுக 25 அயிரம் பிணங்கள் ஒரே நாளில் விழுந்தன. கடைசியாய் ஒரு லட்சம் பேரைக் காவு எடுத்து தீவிர வாதத்தை ஒடுக்கியாயிற்று என்று ராசபக்சே குலுக்கிய கரங்களுக்குள் சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் கரங்கள் மட்டுமல்ல் கருணாநிதியின் கரங்களும் இருந்தன.

"உங்கள் யுத்தத்தை நாங்கள் நடத்தினோம்" என்ற ராசபக்சேவின் எக்காளம், இந்தியாவுக்குச் செலுத்திய காணிக்கை மட்டுமல்ல் கருணாநிதிக்குச் செலுத்திய காணிக்கையும் தான்.
ஈழப்போர் இந்தியாவின் துரோகத்தினால் வீழ்ந்தது் அந்த துரோகத்தின் வேர் தமிழகத்தில் இருந்தது.

-சூரியதீபன்-

ஜூனியர் விகடன் ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!


தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும்,......
சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.

தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.

இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.

தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.

ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘ என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.

எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.

ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.

எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.

நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.

தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்

பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.

இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA