Thursday 10 September 2009

இறுதிப்போரில்’ தப்பிய மருத்துவப் பணியாளரின் திடுக்கிடும் தகவல்கள்


பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஆயிரத்திற்கும் அதிகமான குழிகளை வெட்டி அதிலிருந்து மண்ணோடு கலந்த தண்ணீரை எடுத்து பிறகு வடிகட்டி அந்த மக்களுக்கு அளித்தனர்.

கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு கண்ணில் கண்ட தமிழர்களையெல்லாம் சுட்டுப் படுகொலை செய்த சிறிலங்க ராணுவம், பதுங்கு குழியில் இருந்த மக்களை டாங்கிகள் ஏற்றியும், பதுங்கு குழிகளுக்குள் கையெறி குண்டுகளையும் வீசிக் கொன்றதென நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழர்கள் மீது சிறிலங்க ராணுவம் நடத்திய இனப்படுகொலையை மே 12 ஆம் தேதி வரை அங்கிருந்து கண்டு பிறகு காயமுற்று, சிறிலங்க ராணுவத்தின் பிடியில் இருந்து சமீபத்தில் தப்பித்து வெளியேறி வெளிநாட்டிற்கு வந்துள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் தான் கண்ட காட்சிகளை விளக்கியுள்ளார்.

கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு முன்னேறிய சிறிலங்க ராணுவம், தர்மபுரம், வடக்கச்சி, விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை கடந்தபோது, ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்துகொண்டு முன்னேறியது என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியை எட்டுவதற்கு முன்னரே 8,000 பேர் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர் என்று தொண்டு நிறுவனத்தின் மருத்துவ ஊழியராகப் பணியாற்றிய அந்த நபர் கூறியுள்ளார்.

அவர், தனது மொழியில் அளித்த குறிப்புகளை நார்வே தமிழர் நல அமைப்பு தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளது.

அவர் அளித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வருமாறு :

முள்ளிவாய்க்கால் பகுதியில் தஞ்சமடைந்திருந்தபோது அவர்கள் மீது சிறிலங்க ராணுவத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தியபோது தாங்க முடியாமல் வெளியேறிய மக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஊடுருவிய சிறிலங்க அரசின் கைப்பாவைகளே காரணம் என்றும், அவர்களின் நடவடிக்கை கண்டு விடுதலைப் புலிகளின் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கிளிநொச்சியை பிடித்த பிறகு மருத்துவமனையை குறிவைத்து சிறிலங்க படைகள் தொடர்ந்து எறிகணை வீசி தாக்குதல் நடத்தியவண்ணம் இருந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றிய பிறகு உடையார்கட்டு பகுதியில் இருந்த ஒரு பள்ளியில் தற்காலிகமாக மருத்துவமனை இயங்கியது. அதன் மீது மட்டும் 2,000 எறிகணைகள் வீசப்பட்டன. இதனைக் கண்டு பொதுநல ஊழியர்களும், மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த 3 லட்சம் மக்களுக்கு வெறும் 30,000 பேருக்கு மட்டுமே போதுமான அளவு உணவை ராணுவம் அனுமதித்தது.

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகத் தேவைப்படும் மயக்க மருந்துகளோ உயிர் காக்கும் மருந்துகளோ அனுப்பப்படவில்லை.

குழந்தைகளுக்கான பால் உணவுகளைப் பெறுவதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மக்களின் மீது சிறிலங்க ராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை இழந்தனர். பல குழந்தைகள் தாய்களை இழந்தனர்.

இதேபோல, உணவுப் பொருட்களுக்காக காத்து நிற்கும் மக்களின் மீது சரியாக குறிவைத்து எறிகணை வீச்சு நடத்தப்பட்டது. ஆளில்லா விமானம் அளிக்கும் விவரங்களைக் கொண்டு இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பொதுமக்களுக்கு போதுமான உணவு இல்லாதபோது, போராளிகளுக்கு சேமித்து வைத்திருந்த உணவுகளை மக்களோடு பகிர்ந்துகொண்டனர் விடுதலைப் புலிகள்.

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஆயிரத்திற்கும் அதிகமான குழிகளை வெட்டி அதிலிருந்து மண்ணோடு கலந்த தண்ணீரை எடுத்து பிறகு வடிகட்டி அந்த மக்களுக்கு அளித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அம்மக்கள் இருந்தபோது தொற்று நோய் ஏதும் அங்கு இல்லை. ஆனால், அப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனைகளுக்கு எறிகணைத் தாக்குதலால் காயமுற்ற கருவுற்றப் பெண்களும், குழந்தைகளும் வந்தவண்ணம் இருந்தனர்.

காயம்பட்டவர்களை கொண்டுசெல்ல சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் கப்பல் வந்தபோதெல்லாம் எறிகணைத் தாக்குதல் அதிகமாக நடந்தது.

பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மாத்தளன், பொக்கனை ஆகிய இரண்டு பகுதிகளையும் சிறிலங்க ராணுவம் கைப்பற்றிய அன்று (ஏப்ரல் 20) ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

மே 12 ஆம் தேதி எறிகணைத் தாக்குதலில் நான் காயமடைந்தேன்.

மே 15, 16 தேதிகளில் பல நூறு ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு சிறிய நிலப் பகுதிக்குள் சிறிலங்க ராணுவம் நுழைந்தது. அப்பொழுது வெளியேற முயன்ற நான், 300க்கும் அதிகமான உடல்களை தாண்டிச் சென்றேன். காயங்கள் பட்டு பலரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தை சிறிலங்க படையினர் கைப்பற்றியதற்குப் பின்னர் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்.

சிறிலங்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் அந்த மக்களை வெயிலில் நிற்க வைத்து தாகத்தால் தவிப்பதை சிறிலங்க ராணுவத்தினர் ரசித்தனர்.

அங்கிருந்த பலர் அவர்களின் உறவினர்களின் கண்களுக்கு எதிரே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போரின் இறுதிகட்டத்தில் சில நாட்களில் மட்டும் 18,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். 7,000 பேர் படுகாயமுற்றனர். 5,000 பேர் ஏதாவது ஒரு அங்கத்தை இழந்து ஊனமுற்றுக் கிடந்தனர். பல்லாயிரக்கணக்கான பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆனார்கள். நூற்றுக்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

சிறிலங்க தரப்பில் வறுமையின் காரணமாக அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்கள்தான் பெரும்பாலும் உயிரிழந்தனர்.

பாதுகாப்பு கருதி தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

சோனியா,கருணாநிதிக்கும் மன்னிப்பே கிடையாது


தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா?

இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்..fullpost{display:inline;}

இவர்களுக்கும், இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று

காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை..

" கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எனவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசு க்கு இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது என்பது தேவையற்ற வாதம்" என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளது நல்ல பகிடி.

பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், துணைப் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் சிறிலங்காவிற்கு ஹெலிகாப்டர்கள், ராடார்கள், உளவு, புலனாய்வு, வட்டியில்லா நிதி கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அவற்றை வைத்துத்தான் சிங்கள பவுத்த வெறிபிடித்த மகிந்த ராசபக்சே கும்பல் 25,000 பொது மக்களைக் கொன்றொழித்தது.

அண்மையில் சானல் 4 ஒளிபரப்புச் செய்த காணொளியை நீங்கள் பார்க்கவில்லையா? கண் துணியினால் கட்டப்பட்டு கைகள் பின்னால் பிணைக்கப்பட்டு தரையில் வைத்து முதுகுப் புறமாக பலப் தமிழ் இளைஞர்கள் சிங்கள ராணுவ வெறியர்களால் பத்தடி தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை அந்தக் காணொளி காட்டியது.

சிறிலங்கா சிங்கள -பவுத்த இனவெறி ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய இனப் படுகொலைக்குப் பொறுப்பாக இருந்த இனத் துரோகிகளையும் பேரினப் படுகொலைக்காரர்களையும் வரலாறு பதிவு செய்யும்.

ஷேக்ஸ்பியர் கூறுவது போன்று ஏழேழு கடல் அளவு நீர் கொண்டு கழுவினாலும் இவர்களின் கைகளில் படிந்த குருதிக் கறையைப் போக்க முடியாது.


இந்த ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனிதவுரிமை அவையில் சிறிலங்கா மீது போர்க்குற்றம் சாட்டி மேற்குலக நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்துப் பேசியதும் அல்லாமல் எதிர்த்து வாக்களிக்கவும் செய்தது.

திருகோணமாவட்டத்தில் உள்ள சம்பூரை சிங்கள ராணுவம் 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் மூலம் சம்பூர் உட்பட முதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூதூர் கிழக்கில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 23 ஊர்களைச் சேர்ந்த 17,000 மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.

எனினும் மே 30, 2007 ஆம் ஆண்டு ராசபச்சேயினால் வெளியிடப்பட்ட அதி சிறப்பு அரச அரசாணை மூலம், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புப் கொண்ட மூதூர் (கிழக்கு) மற்றும் சம்பூர் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதில் ஜூன் 16, 2007 அன்று மூதூர் கிழக்கையும் சம்பூரையும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசு அரசாணை மூலம் அறிவித்தது. அதே அரசாணையின் மூலம் முதலீட்டு சட்ட அவைச் சட்டததின் கீழ் 675 ச.கிமீ (260 ச.மைல்அல்லது 500 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஒரு சிறப்பு பொருளாதார வலயமும் உருவாக்கப்பட்டது.

அரசினால் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த பூர்வீகப் பகுதிகளினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 500 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பகுதியில் இந்தியாவின் 100 மெகாவாட் மின் உற்பத்தி அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கான அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்திய அரசு சம்பூரில் 500 மெகாவாட் ஆற்றலுடைய ஒரு அனல்மின் உலையை கட்ட ஸ்ரீலங்கா அரசோடு உடன்பாடு செய்துள்ளது.

இந்தியா சார்பாக இந்திய அரச நிறுவனமான தேசிய அனல் மின் கழகமும், (National Thermal Power Corporation (NTPC) ஸ்ரீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார கழகமும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 5-50 விழுக்காட்டில் இரண்டு நாடும் முதலீடு செய்யும். அமெரிக்க டாலர் 500 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை 2012 இல் முடிவு பெறும்.

சம்பூர் நகரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் கடலடி கம்பிவடங்களை அமைக்கும் திட்டம் என்பன தொடர்பிலான ஒப்பந்தங்கள் அடுத்த கிழமை இந்தியா - சிறிலங்கா இடையே கையெழுத்திடப்படவுள்ளது.

இதன் மூலம் இடம்பெயர்ந்த 2000 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்லாது தடுக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக வாழ்ந்த வாழ்விடங்கள் அநீதியான முறையில் பறிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நிலத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

மூதூர் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு சிங்கள – பவுத்த பேரினவாதியான ராஜபக்சே செவிசாய்க்க மாட்டார் என்பது தெரிந்ததே.

காலம் காலமாக வாழ்ந்த நிலத்தில் மூதூர் கிழக்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படாதது மட்டுமல்ல அவர்களது நிலம் அனல் மின்உலை கட்டுவதற்கு இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா தாரைவார்த்துக் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த மின் உலைத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தமிழ்மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை பணவருவாய் தான் தனது குறிக்கோள் என்று இந்தியா சொல்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்ற மாதிரி ஏழைகளின் கண்ணீரில் இந்தியா பணம் ஈட்டப் பார்க்கிறது.

தமிழ்மக்களுக்கு எதிராக இந்தியா செய்யும் இந்த இரண்டகம் "தமிழின விரோதப் போக்கு" இல்லையா? இதைவிடப் பச்சை இரண்டகம் வேறு இருக்கமுடியுமா?

இதுதொடர்பாக மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது ...

கடந்த 2006 ஆம் அண்டு ஏப்ரில் மாதம் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது மீள்குடியேற்றத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதேசமயம், கடற்கரைச்சேனை சம்பூர் கிழக்கு சம்பூர் மேற்கு கூனித்தீவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கணிசமான நிலப்பரப்பினை இந்தியாவிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அக்கிராமங்களைச் சேர்ந்த எம்மை பள்ளிக்குடியிருப்பு இறால்குழி ஆகிய பிரதேசங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அறிகின்றோம்.

முற்றுமுழுதாக விவசாயமும் கால்டை வளர்ப்புமே எமது தொழில்களாகும். நாம் வாழ்ந்த பிரதேசம் அதற்கேற்ற நீர்வளம் நிலவளம் மேய்ச்சல் தரைகள் சந்தை வாய்ப்பு என்பனவற்றைக் கொண்டுள்ளன.

ஆனால் தற்போது எம்மைக் குடியமர்த்த தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசம் இந்த வாய்ப்புக்கள் அற்ற பிரதேசம் ஆகும்.

'வெறும் குடியிருப்புக்கள் மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானதல்ல" என்ற அடிப்படையில் எமது சம்மதம் இன்மையை ஏற்கனவே அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

எனினும் இம் முயற்சிகள் கைவிப்படாத சூழ்நிலையில் நாட்டின் தலைவர் என்ற வகையில் எமது நியாயபூர்வமான கோரிக்கைகளை தங்களிடம் தெரிவித்து அதற்கான பரிகாரத்தினை எதிர்பார்க்கின்றோம்.

1) இழந்த எமது இயல்பு வாழ்வை மீட்டுத்தந்து எமது சொந்தக் கிராமங்களிலேயே மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்

2) எமது கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு பரிசீலனை செய்யுங்கள்

3) எமது கிராமங்களை உள்ளடக்காத வகையில் அல்லது எமது குடியிருப்புக்களாவது பாதிக்கப்படாத வகையில் அடையாளம் கண்டு நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்

4) மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசத்தில் எம்மைக் குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்

5) எமது மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் வாழ்வுக்கும் எதிர்கால நன்மைக்கும் ஏற்றவிதத்தில் மீள்குடியேற்றத்தினை தொடர நடவடிக்கை எடுங்கள்.

காலம் காலமாக அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு நீண்ட துயரத்தினைச் சந்தித்து இன்று இயல்பு வாழ்வைப் பறிகொடுத்து நிர்க்கதியாகியுள்ள எமக்கு தங்களால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இக் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பெருமை மிக்க புத்த மதத்தினைப் பின்பற்றும் உத்தம தலைவன் என்ற வகையிலும் தங்களிடம் இருந்து ஒரு நியாயபூர்வமான முடிவுக்காய் காத்திருக்கின்றோம்."

இப்போது நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்?

இவை தமிழர்களுக்கு எதிரான பச்சைத் துரோகம் இல்லையா?

தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா?

இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும் இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று கூறியுள்ளார் நக்கீரன்.

ஈழத் தமிழரின் துயரத்திற்கு காங்கிரஸே காரணம்


எந்த வகையிலும் தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதும் இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது என்பது தேவையற்ற வாதம்” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க ராஜபக்ச அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு ராடாரை அளித்தும், அதனை இயக்க இந்திய இராணுவத்தின் பொறியாளர்களை அனுப்பியும், மறைமுகமாக ஆயுத உதவி, பயிற்சி, ஆலோசனைகளை வழங்கியும் இலங்கை இராணுவத்திற்கு முழுமையாக உதவியது மத்திய காங்கிரஸ் அரசு என்பதை ஒரு முறைக்குப் பலமுறை இலங்கை அமைச்சர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே உறுதிபட கூறியுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, வன்னி மக்கள் மீது முப்படைகளையும் ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்தியபோது, புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் காயமுற்ற இலங்கை இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துப் பொருட்கள் இல்லை என்று கூறப்படுகிறதே என்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இலங்கை அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் நிமல சிறீபால டி சில்வா, காயம்பட்ட இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்கத் தேவையான அனஸ்தீசியா உள்ளிட்ட முக்கிய மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அது விரைவில் வந்துவிடும் என்று பதிலளித்தார்.

மருந்துப் பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் பெற வேண்டுமா என்று அந்த உறுப்பினர் கேட்டதற்கு, “இந்தியா நமக்கு செய்துவரும் உதவிக்கு இந்த அவையின் உறுப்பினர்கள் நன்றி காட்ட வேண்டு்ம். அவர்களின் உதவி இல்லாவிட்டால் நம்மால் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று சிறீபால டி சில்வா கூறினார்.

இலங்கை அமைச்சர் இவ்வளவு ‘நன்றி’யுணர்வுடன் பேசிய அந்த நேரத்தில்தான், மக்கள் பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட மிகக் குறுகிய நிலப்பரப்பில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் கொடூரத் தாக்குதலிற்கு ஆளாகி, ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். அந்த மக்களின் துயரம் மத்திய காங்கிரஸ் அரசிற்கு தெரியவில்லை, ஆனால் அவர்களை கொன்று குவித்த இலங்கை சிப்பாய்களின் காயங்களை ஆற்ற மருந்து அனுப்பி வைத்ததது. இதற்குத்தான் ‘நன்றி’யைக் காட்டுமாறுக் கூறினார் இலங்கை அமைச்சர்.

இன்று, “எந்த நிலையிலும் தமிழர்களை தனிமைபடுத்தி, அவர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டதில்லை” என்று அறிக்கை விடும் சுதர்சனம் நாச்சியப்பன், மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு இழைத்த இந்த துரோகச் செயலை தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம்.

நீடித்த அரசியல் தீர்வு என்ன ஆனது?

இராணுவத் தீர்வுகளின் மூலம் தமிழர் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் சாத்தியக்கூறு பிறந்துள்ளது” என்று கூறி தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு 2007ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்க அதிபர் ராஜபக்ச தீவிரப்படுத்தியபோது அதனைக் கண்டித்தது இந்திய அரசு. “இலங்கை இனப் பிரச்சனைக்கு அந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நீடித்த அரசியல் தீர்வை பேச்சுவார்த்தையின் மூலம் எட்ட வேண்டு்ம்” என்ற தனது நிலைப்பாட்டைக் கூறி, ராஜபக்ச மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு காட்டியது.

வெளிப்படையாக இவ்வாறு அறிவித்துவிட்டு, இரகசியமாக அது இலங்கை இராணுவத்திற்கு உதவி வருவது, அனுராதபுரத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த ராடார் தளம் சேதமுற்று, அதனை இயக்கிய இரண்டு இந்திய பொறியாளர்கள் காயமுற்றப் பின்னர்தான் தெரியவந்தது.

தனது குட்டு வெளிப்பட்டதும் குரலை மாற்றிப் பேசியது மத்திய காங்கிரஸ் அரசு! சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத்தான் தாங்கள் உதவுவதாகவும் தமிழர்களை கொல்வதற்கு உதவவில்லை என்றும் கதை விட்டது.

தமிழக முதலமைச்சர் தலைமையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று கூடி (கடந்த ஆண்டு அக்டோபரில்), இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இரண்டு வார காலத்தில் போர் நிறுத்தம் செய்யவில்லையெனில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று தமிழக கட்சிகள் விடுத்த மிரட்டலையடுத்து, சென்னைக்கு பறந்துவந்து தமிழக முதல்வரைச் சந்தித்த (அன்றைய) அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசின் பாதுகாப்பிற்குத்தான் இந்தியா உதவுவதாகத் தெரிவித்தார்.

தமிழர்களின் பாதுகாப்பிற்காக போர் நிறுத்தம் ஏன் கோரவில்லை என்று கேட்டதற்கு, அதனை ஒருதலைப்பட்சமாக சிறிலங்க அரசிடம் வலியுறுத்த முடியாது என்று சாக்குக் கூறிவிட்டு (தமிழக முதல்வரும் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டதால்), ஆட்சிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை உறுதி செய்துக் கொண்டு டெல்லிக்குப் பறந்தார்.

போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் பலத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கொழும்புவிற்குப் பறந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசாதது மட்டுமின்றி, இலங்கை இராணுவ நடவடிக்கையில் அப்பாவித் தமிழர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் (!) போர் நடத்திவருவதாக ராஜபக்ச கூறியதைக் கேட்டுக் கொண்டு, அந்த பதில் ‘திருப்தியளிக்கிறது’ என்றும் அறிக்கை விட்டார்.

அன்று இரவே டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், போரைத் தீவிரப்படுத்தும்போது ராஜபக்ச என்ன கூறினாரோ அதையே தனது அறிக்கையில் பிரணாப் முகர்ஜியும் கூறினார்!

“23 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போரில் பெற்ற வெற்றியின் விளைவாக வடக்கில் அமைதி ஏற்பட்டு, இயல்பு நிலை திரும்புவதற்கான சாத்தியம் தோன்றியுள்ளதாக” பிரணாப் முகர்ஜி அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். என்னே ஒத்த சிந்தனை!

இலங்கை அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை வடக்கில் (ஈழத்தில்) இயல்பு வாழ்க்கை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளதாம்! இப்போது போர் முடிக்கப்பட்ட நிலையில் அங்கு உருவாகியிருப்பது இந்த காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை இயல்பு நிலை!

இந்தப் பயணத்திற்குப் பின் தமிழர்களிடமிருந்து எழுந்த எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் (கருணாநிதியும் பொருட்படுத்தவில்லை) இலங்கை இராணுவத்திற்கு எல்லா வகையிலும் உதவியது மத்திய காங்கிரஸ் அரசு.

பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை மே 17 அன்று கொன்று குவித்து, போரை வெற்றியுடன் முடித்துவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்த பின்னர், இலங்கை நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் செயலரும், போரை நடத்தியவருமான கோத்தபாய ராஜபக்ச, போர் நடைபெற்றபோது ஒவ்வொரு நாளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவுடன் கலந்தோலோசித்த பின்னரே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

தானும், இலங்கை அதிபரின் ஆலோசகரான பசில் ராஜபக்சவும், அதிபரின் செயலர் லலித் விக்ரமதுங்காவும், இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவுச் செயலர் சிங் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஒவ்வொரு நாளும் கலந்துபேசியே போரை நடத்தியதாகவும் தெரிவித்தார். இதனை மத்திய காங்கிரஸ் அரசு ஒரு தடவை கூட மறுக்கவில்லையே?

“தமிழர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டு்ம்” என்று ஈழப் பிரச்சனை தொடங்கிய காலம் முதல் பாடி வந்த பாட்டை இன்று ராஜபக்சவிடம் வலியுறுத்திப் பாட மத்திய காங்கிரஸ் அரசு தயாரா?

சொந்த நாட்டு மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அரசிற்கு எதிராக போர்க் குற்றம் செய்ததா இல்லையா என்று விசாரிக்க வேண்டு்ம என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அந்த தீர்மானத்தை தோற்கடித்தது மட்டுமின்றி, இலங்கை அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட தற்புகழ்ச்சி தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியது மத்திய காங்கிரஸ் அரசு.

உதவி நிதி யாருக்குப் போகிறது?

இந்தியா செய்த உதவியால் தமிழர்களையும், அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்த விடுதலைப் புலிகளையும் கொன்றொழித்த இலங்கை அரசு, இன்றைக்கு முள் வேலிக்குள் மூன்று இலட்சம் தமிழர்களை முடக்கி வைத்து பட்டினி போட்டு சாகடித்துக் கொண்டிருக்கிறதே. ஏன் என்று கேட்டதா மத்திய காங்கிரஸ் அரசு? ஏன் கேட்கவில்லை? இது தமிழனுக்கு எதிரான எண்ணமில்லாமல் வேறென்ன?

வன்னித் தமிழர்களின் மறுவாழ்விற்கென்று ரூ.500 கோடி அளித்தது மத்திய காங்கிரஸ் அரசு. அது யாருக்கு சென்று சேர்ந்தது? எந்த விதத்தில் அது தமிழர்களுக்கு செலவு செய்யப்பட்டது? சொல்ல முடியுமா மத்திய காங்கிரஸ் அரசால்?

தமிழர்களின் மறுவாழ்விற்காகவே உலக நாடுகள் பலவும் நிதியளிக்கின்றன. அவையனைத்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கென்று கூறி, போரில் உயிர் நீத்த இலங்கை இராணுவத்தினரின் குடும்பங்களுக்கும், காயம்பட்ட இராணுவத்தினரின் மறுவாழ்விற்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது என்பது இந்திய அரசிற்குத் தெரியாதா? எல்லோரும் சிறிலங்க மக்களே என்று கூறிக்கொண்டு சிங்களவர்களை தமிழர் பகுதிகளில் குடியேற்றம் செய்வதை சற்றும் கண்டு கொள்ளாமல் மத்திய காங்கிரஸ் அரசு உள்ளதே என்ன காரணம்? இதையும் தாண்டி மேலும் ரூ.500 கோடி அளிக்க முன்வந்துள்ளதே, ஏன்?

ஏனென்றால் அதற்குத் தேவை, தமிழர்களின் நலன் அல்ல, சிங்கள இலங்கை நாட்டுடனான உறவு. இது தமிழருக்கு விரோதமான நடவடிக்கை இல்லையா?

வன்னியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்ற 500 இந்திய இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனரே, இந்த வன்னிப் பகுதியை கடந்து சென்றுதானே சிங்கள இலங்கை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால், வட்டுவாகலுக்குள் நுழைந்து பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். அப்போதெல்லாம் அந்த கண்ணி வெடிகள் மெளனம் காத்தனவா? போகும் போது வெடிக்காமல் திரும்பி வரும்போதும் வெடிக்காமல், மக்களை குடியேற்றம் செய்யும் போது மட்டுமே கண்ணி வெடிகள் வெடிக்குமா?

மீனவர்களை காப்பாற்றாத காங்கிரஸ்

ஈழத் தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும். தமிழக மீனவர்களைக் காப்பாற்றியதா மத்திய காங்கிரஸ் அரசு? எல்லைகளை மதித்து நடக்க நமது மீனவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினாரே! கடலில் எப்படி எல்லையைக் காண்பது என்று அங்கிருந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர் எவராவது கேட்டனரா? பன்னெடுங்காலமாக தமிழர்கள் மீன்பிடித்தனரே, இன்று எப்படி அந்த உரிமை பறிக்கப்படலாம் என்று எந்த காங்கிரஸ் உறுப்பினராவது கேட்டனரா? இரு நாட்டு கப்பல்களும் சென்றுவரும் பாரம்பரிய உரிமை மட்டும் ஒப்புக் கொள்ளப்பட்டதே, மீனவர்களின் பாரம்பரிய உரிமை எப்படி விட்டுத் தரப்படலாம் என்று கேட்டனரா காங்கிரஸ் உறுப்பினர்கள்?

ஈழப் பிரச்சனை உருவான காலத்திற்கு முன்னரே தமிழர்களின் நலனை உதாசீனப்படுத்தியதுதான் காங்கிரஸ் அரசுகள். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, 150 ஆண்டுக்காலம் அந்நாட்டின் தேயிலைத் தோட்டங்களில் உழைத்து, அந்நாட்டின் தேயிலைக்கு உலக அளவில் சந்தையைத் தந்து, உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளப்படுத்திய மலையகத் தமிழர்களின் குடியுரிமையை இலங்கை அரசு பறிக்க ஒத்துழைத்தது மத்திய காங்கிரஸ் அரசு. இந்த புண்ணியத்தை செய்தவர் இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்த்திரி.

தமிழனுடைய - அது ஈழத் தமிழன் ஆனாலும், மலையகத் தமிழன் ஆனாலும், தமிழ்நாட்டின் மீனவன் ஆனாலும், தமிழ்நாட்டின் நலமே ஆனாலும் - நலனை முன்னின்று பறித்து அவனுக்கு துரோகம் செய்ததுவரும் கட்சி காங்கிரஸ். துரோகமிழைக்கும் அரசு மத்திய காங்கிரஸ் அரசு.

மத்திய காங்கிரஸ் அரசினையும், காங்கிரஸ் கட்சியையும் தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்திய நலன் வேறு, தமிழனின் நலன் வேற்றுமைப்படுத்தி, ஆட்சியைப் பிடிக்க மட்டும் தமிழன் தேவை என்பதற்காக, ஏதாவது ஒரு திராவிட கட்சியைத் தொற்றிக் கொண்டு அரசியல் நடத்தி வருகிறது காங்கிரஸ் கட்சி. தமிழ்நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் இக்கட்சியை தூக்கி நிறுத்த காங்கிரஸார் நினைத்தால் முதலி்ல் தமிழக மக்களின் எண்ணங்களையும், உணர்வையும் புரிந்துகொண்டு, நேர்மையான அரசியல் நடத்த முன்வர வேண்டு்ம். அதை விட்டுவிட்டு இராஜ தந்திர வித்தையெல்லாம் செய்து தமிழர்களை ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது.

அரசியல் என்பது தூய்மையான நல்லாட்சியே. அதைதான் பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 9 ஆண்டு காலம் இருந்து சாதித்துக் காட்டினார். அவரிடம் இருந்த அந்த நேர்மை இன்றைய காங்கிரஸாரிடம்...

புலிகளிடம் இருந்து பணம் பெற்றேனா? சுப்ரமணியசாமிக்கு விஜயகாந்த் கண்டனம்


ஈழத்தமிழர்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து தாம் எதையும் பெற்றதில்லை என்றும் தமிழக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பட்டியலில் விஜயகாந்த் பெயரையும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழின படுகொலையை நிகழ்த்தியதால் உலக நீதிமன்றத்தின் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. உட்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த அரசின் சார்பில் தகவல்கள் பெறும் சுப்ரமணிய சாமியின் நிலையை கண்டு பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை பற்றிய விசாரணையில் தமது பெயர் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டாலே சுப்ரமணிய சாமிக்கு போதுமானது.

அரசியலில் இருப்பதை காட்டிக்கொள்ள சுப்ரமணிய சாமி வீண் விளம்பரம் தேட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மேலும் கூறியுள்ளார்.

பாலித கோஹனவிற்கு விஸா வழங்க பிரித்தானியா உயர்ஸ்தானிகரகம் மறுப்பு


இலங்கையின் வெளியுறவுச் செயலராக இருந்து இலங்கைக்கான ஐ.நா. சபையின் வதிவடப் பிரதிநிதியாக பதவியேற்கவுள்ள கலாநிதி பாலித கோஹனவிற்கு விஸா வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடத் தூதுவராக இவ்வாரம் பதவியேற்கும் நிலையில் கலாநிதி பாலித கோஹனவின் விஸா விண்ணப்பத்தை இன்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் நிராகரித்துள்ளது.

எனினும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் வெளியுறவுச் செயலரின் விஸா விண்ணப்பம் போதிய கால அவகாசத்துடன் கையளித்திருக்கவில்லை என காரணம் கூறி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது வெளியுறவுச் செயலருக்கு விஸா வழங்க மறுத்திருப்பதன் மூலம் இராசதந்திர மரபுகளை பிரித்தானியா மீறியிருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக கொழும்புக்கான பிரித்தானிய தூதுவர் கலாநிதி பீற்றர் ஹேய்ஸ் அவர்களை நேரில் அழைத்து விளக்கம் கோருவதற்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA