Wednesday 9 September 2009

காந்தியும், நேருவும் இன்றைக்கு இருந்திருந்தால் ஈழம் மலர்ந்து இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சிறுபான்மையான இசுலாமியர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று சின்னா சொல்ல. அப்படி எல்லாம் இல்லை என்று காந்தியும், நேருவும், மற்ற அரசியல் தலைவர்களும் எவ்வளவு உத்திரவாதம் கொடுத்தும் நில்லேன் என்று தனி நாடாக போகின்றோம் என்று அடம் பிடித்து நின்ற சின்னாவால் தனி நாடாக பாக்கிட்த்தானம் மலர்ந்தது.

இப்படி ஒரு பிரிவினை பிறக்கப்போகிறது என்ற பேச்சுகள் எழுந்த உடனேயே வடக்கிலே கலவரம் தலைவிரித்தாடியது. கடைசியாக சரி போய் சேருங்கள் என்று காந்தியின் தலைமையில் முடிவு எட்ட நேருவும் அதை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தார்.

அந்த பிரிவினையும் ஈழம் போல் இரத்த பிரிவினையாகத்தான் இருந்தது. ஆனால் அன்றைக்கு தனி நாடு கேட்ட மக்களின் மீது இப்படி காந்தியின் தலைமையில் உள்ள அரசியலர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடவில்லை.
மாறாக அந்த பயத்தை போக்கும் விதத்திலும் நம்பிக்கையும் பிறக்கும் விதத்திலும் நடந்து காட்டியும், மேலும் நடந்து காட்டவும் முற்பட்டார்கள்.

ஒன்றாகவே இருந்து பிரச்சனைகளை கொண்டு நகருவதற்கு பதில் பிரிந்து நிம்மதியாக இருக்கலாம் என்ற முன்னோசனை அவர்களுக்கு இருந்தது.

மேலும் நம்பிக்கை இல்லாத இடத்தில் இனியும் நம்பகமாக நடந்து காட்டினாலும் அவர்கள் நம்புவதற்கு இல்லை என்று தெளிவாக பாக்கிட்த்தானத்தை தனியாக செல்ல அனுமதித்தார்கள் அந்த பழுத்த அனுபவம் உள்ள அரசியலர்கள்.

ஆனால் இன்றைக்கோ ஈழம் மலர்ந்தால் இந்தியாவுக்கு தீங்கு என்று எவனோ சொன்ன ஆரூடத்தை கையில் வைத்துக்கொண்டு வரிசையாக அரிதாரம் பூசி கதகளையை ஆடி நிற்கிறது அதே பேராயத்தில் வந்த அரசியலர்கள்.

அன்றைக்கு நேருவுக்கும், காந்திக்கும் இந்தியாமீது கொண்ட நம்பிக்கையை இன்றைய அரசியலர்கள் கொள்ள பயம் கொள்வதேன் என்று விளக்குவார்களா.

இலங்கையில் அவர்களது மண்ணில் விளைந்த பிரிவினை. அதை சிங்களர்களாவே விதைத்தார்கள், அவர்களாகவே தான் அறுவடை செய்யவேண்டும். இதில் இந்தியாவுக்கு என்ன பங்கு இருக்க முடியும். தனது மூக்கை ஏன் இப்படி தானா கொண்டு நுழைக்கவேண்டும்.

பிறகு மூக்கறுபட்ட சூர்ப்பனகை போல் ஓலமிட்டு இப்படி ஒட்டு மொத்த தமிழர்களையும் அழித்து, மூக்கறு பட்டதிற்கு பழி தீர்த்துக்கொண்டோம் என்று பெருமையாக ஏன் சொல்லவேண்டும்.

மூக்கை நுழைத்தது இந்தியாவின் தவறு, அப்படி நுழைத்தற்கு தான் மூக்கறு பட்டீர்கள், பிறகு ஏன் குய்யோ முறையோ என்று ஏன் கதர வேண்டும்.

ஒரு வேளை காந்தியும், நேருவும் இன்றைக்கு இந்திய அரசியலை கட்டுப்படுத்தும் நிலையில் இருந்திருந்தால், ஒன்றாக இருக்க முடியாவிட்டால் தனியாக இருந்துவிட்டு போங்கள் என்று தான் தைரியமாக முடிவு எடுத்து வாழ்த்தி அனுப்பி இருப்பார்கள். இப்படி முதுகில் குத்தும் செயல்கள் எல்லாம் செய்திருக்க மாட்டார்கள் அந்த மாவீரர்கள்.

ஏன் இப்போது சீனா வடக்கில் தனது இரணுவத்தை உள்ளே நுழைத்து பொப்பொபே அடி காட்டுகிறதே போய் காட்டவேண்டியது தானே உங்கள் இந்திய வீரத்தையும் சூரத்தையும். எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால் போட்டு அடியோ அடி என்று அடிப்பார்கள். அடி விழும் என்று இருந்தால் எல்லை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது, இராணுவம் வந்தால் என்ன, விமான படை வந்தால் என்ன. எல்லை நன்றாக பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை விடுவார்கள் இந்த மானம் கெட்ட பேராய அரசியலர்கள்.

Panimalar

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA