காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நடிகர் விஜய் விரும்புகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் மூன்றாம் நாளான இன்று, கிருஷ்ணகிரி, சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனியார் விமான தளத்துக்கு ராகுல் வருகிறார்.
சேலம்,கோவையில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் கலந்துரையாடிக்கொண்டிருக்கிறார்.
இச்சந்திப்பில், ’’நடிகர் விஜய் காங்கிரஸின் கொள்கைகளை விரும்புகிறார்’’என்று தெரிவித்தார்.