வவுனியா இடைத்தங்கல் முகாம் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து சொல்லத் தேவையில்லை. வெளிநாட்டுத் தொடர்பில்லாத, மற்றும் வெளி உதவியில்லாத மக்கள் பெரும் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும் முகாமிற்கு வருவதில்லை. ஒரு அக்கா முக்கியஸ்த்தரின் மனைவி என்ற வகையில் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் இன்னும் திரும்பி வரவேயில்லை. அவரது இரண்டு பிள்ளைகளை ஒரு அம்மா தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறார். அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில்.
நான் மே 16 ஆம் திகதி வந்தேன் வரும் வழிகளில் 500ற்கு மேற்பட்ட சடலங்களைக் கண்டு வந்தேன். நந்திக் கடலினூடாக வந்தவர்கள் கூறினார்கள் நடந்து வந்த போது பெருமளவிலான சடலங்கள் கால்களில் மிதிபட்டதாக. நான் நினைக்கிறேன் குறைந்தது 35000 ற்கு மேற்பட்ட மக்கள் அங்கே கொல்லப்பட்டு இருப்பார்கள்.
புலிகள் வன்னியில் இப்போதும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அங்கே கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்கிறார் GTBC.FM விழுதுகள் நிகழ்ச்சிக்கு செவ்வி தந்த முகாமில் வாழும் ஒருவர். கேட்டுப் பாருங்கள்.