முதல்வர் கருணாநிதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கை பிரச்சனை இதொடபான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட பொருள்கள் போய்ச் சேர்ந்து விட்டதா? போய்ச் சேர்ந்து விட்டது.
போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று இலட்சம் தமிழர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலையில் வாடிநிற்கின்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா?
நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்.
இப்போது செலுத்தப்படுகிற கவனம் போதுமானதாக இல்லை என்று அதாவது இலங்கையிலே முள்வேலிக்கு இடையிலே சிக்கி, மழை தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கின்ற அப்பாவி தமிடிந மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதையும் இன்னும் போதுமான அளவிற்கு அரசு நடவடிக்கை தேவை என்பதையும் தெரிவித்து வருகிறார்கள்.
அதை நானும் மத்தியிலே உள்ள பிரதமர், மற்றும் வெளி உறவுத் துறை அமைச்சர் போன்றவர்களுக்கு உடனுக்கு உடன் தெரிவித்து வருகின்றேன். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் சார்பாக மத்தியிலே அமைச்சர்களாக இருப்பவர்கள் வாயிலாகவும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாயிலாகவும் வலியுறுத்தி தெரிவித்து வருகிறேன்.
உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த வாக்குறுதியை விரைவிலே நிறைவேற்றி இலங்கையிலே இன்னமும் அவதிப்படுகின்ற தமிழர்கள் நிம்மதியாக வாடிநவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
டெல்லியிலே ஒரு பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் போர் நடைபெற்ற போது, இந்திய அரசு மறைமுகமாக கெலிகாப்டர் உட்பட பல ஆயுதங்களை இலங்கை அரசுக்கு அனுப்பியதாக எழுதியிருக்கிறதே?
ஆயுதங்களோ, போருக்குத் தேவையான கருவிகளோ எதையும் இந்திய அரசு அனுப்பவில்லை என்று பல முறை மத்தியிலே உள்ள பிரதமர் உட்பட அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்.