விடுதலைப் புலிகள் அணு ஆயுதங்களைக் கொள்வனவுசெய்ய இருந்ததாகவும், அதனைப் பாவிக்கும் விதிமுறைகளை அறிந்திருந்ததாகவும் கே.பி கூறியதாக, பல ஆங்கில ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இது திட்டமிட்ட வகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் ஒரு பரப்புரை என்பது நன்கு புலனாகிறது. விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க்கும் இலங்கை அரசு, தற்போது அப்படி ஒரு அமைப்பு இனி மீண்டும் எழ வாய்ப்பில்லை எனக் கூறிவருகிறது.
இதனிடையே அவ்வமைப்பை அரசியல் பாதையில் நகர்த்த கே.பி திட்டமிட்டிருந்தார். அதனைத் தடுக்கும் நோக்கில் அவரையும் கைதுசெய்த இலங்கை அரசிற்கு தற்போது, புதுத் தலைவலி ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் புலிகளை பல உலக நாடுகள் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இட்டிருந்தன, தற்போது புலிகள் மீதுள்ள தடையை அகற்ற புலம்பெயர் தமிழர்கள் பல நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதால் சில நாடுகள் அதனைக் கருத்தில் எடுக்கும் சூழ் நிலை உருவாகியிருக்கிறது.
அதனைத் தடுக்கும் நோக்கில் ஜரோப்பிய மற்றும் மேலைத்தேய நாட்டவர் வெறுக்கின்ற செயல்களுள் ஒன்றான அணு ஆயுதம் என்னும் கருவியைப் பயன்படுத்த இலங்கை அரசு முயல்கிறது. இந்தவகையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முனைந்த தீவீரவாத இயக்கம் என்ற முத்திரையைக் குத்தி தொடர்ந்தும் உலக நாடுகள் புலிகளைத் தடைசெய்யவேண்டும் என்ற கருத்தை ஊக்குவிக்க முனைகிறது மகிந்தவின அரசு.
முன்னர் பரப்புரையாக மேற்கொள்ளப்பட்டுவந்த சிறுவர் படையணி, மற்றும் தற்கொலைத் தாக்குதல், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளை இப்போது புலிகள் இயக்கத்தின் மீது கூற முடியாத காரணத்தால், புதுக் காரணிகளை கண்டுபிடிக்க முணைகிறது, மகிந்தவின சிந்தனைகள்...