முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கொழும்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர்,
’’மயிலாடுதுறை தொகுதியில் நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி அடைந்து மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது.
என் தோல்விக்கு ஏதாவது ஒரு காரணத்தை கூற நான் விரும்பவில்லை. இலங்கை அதிபர் ராஜபக்சே என மகள் திருமணத்தில் பங்கேற்ற சி.டி.யை வைத்து எதிர் பிரச்சாரம் செய்ததால் தான் நான் தோற்றேன் என்பதையும் ஏற்க மாட்டேன். என் தோல்விக்கு ராஜபக்சே காரணம் அல்ல’’என்று தெரிவித்தார்.