வணக்கம்,
புலிப்பயங்கரவாதிகள் மக்களை மனிதக்கேடயங்களாக - Human Shields வைத்து இருக்கின்றார்கள் என்று வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் கூறப்பட்டது. சர்வதேசம், சர்வதேச அமைப்புக்க்கள் மக்களை புலிப்பயங்கரவாதிகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடாது, அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று உரக்ககுரல் கொடுத்தன. சிறீ லங்கா இனவாத அரசு தனது பரப்புரையில் வெற்றி பெற்றது.
இப்போது, சிறீ லங்கா அரசு தான் மனிதநேயத்திற்கான போர்செய்து விடுவித்த மக்கள் (?) என்று கூறப்படும் மனிதக்கேடயங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது. சிறீ லங்கா இனவாத அரசு தற்போதும் தனது பரப்புரையில் வெற்றி பெற்று வருகின்றது.
மூன்றுமாதங்களின் முன்னர் புலிகளினால் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்கள் இப்போது சிறீ லங்கா அரசின் கூற்றின்படி அவர்கள் விடுவிக்கப்பட்டபின்னர் பயங்கரவாதிகளாக ஆகியது எப்படி??