தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை இன்று இலங்கை நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் 2.5 மில்லியன் சொந்தப்பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை இருவரும் நாட்டில் இருந்து வெளியேறக்கூடாது என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது
வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் தயா மாஸ்டரும் ஜோர்ஜ் மாஸ்டரும் படையினரிடம் சரணடைந்தனர்.
இதன் பின்னர் அவர்கள் கொழும்பு பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் தயா மாஸ்டர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மரணமானதாக கூறப்பட்ட போது அவரை அடையாளம் காட்டுவதற்காக வன்னிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.