இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னை, இனிமேல் செய்ய வேண்டிய புனரமைப்பு திட்டங்கள் போன்ற பல விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இலங்கை தமிழர்கள் சார்பாக 16 பேர் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை செயலர் ராபர்ட் பிளாக் இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் சார்ஜ் மோரும் இதில் கலந்து கொண்டார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து இம்மாதிரியான கூட்டம் ஒன்றை அமெரிக்க அரசு நடத்தியிருப்பது இதுவே முதல்முறை.