Thursday 13 August 2009

ராஜபக்சேவை கொல்லவந்த மனித வெடிகுண்டு!

இலங்கையின் தெற்கு மாகாண கவுன்சிலர் டேன்னி ஹிதித்தேதியாகே கொலை தொடர்பாக மதுஷா லட்சுமணன் என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.


இவர் அதிபர் ராஜபக்சேயின் சொந்த ஊரான அங்குனாகோலபெலீசாவில் மனித குண்டாக செயல்பட்டு ராஜபக்சேவை கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து, லட்சுமணனை விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இலங்கை அரசு கோர்ட்டில் விசேஷ மனுதாக்கல் செய்துள்ளது.


இதை ஏற்ற மாஜிஸ்திரேட்டு வருகிற 17-ந்தேதி லட்சுமணனை கோர்ட்டில் ஆஜர் செய்யும்படியும், அதன் பின் அவரை போலீஸ் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.


இது குறித்து மூத்த வக்கீல் திலீபா பெய்ரிஸ் கோர்ட்டில், `ராஜபக்சேயை கொல்வதற்காக அதிபரின் ஊரில் உள்ள ஒருவர் உதவியுடன் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு லட்சுமணன் செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA