சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்வதற்கு, பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாடாளுமன்ற வெளிவிவகார குழு தெரிவித்துள்ளது.
அதன், 2008 க்கான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் :
அடுத்த ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் 'கவலைக்குரிய நாடுகளின்' பட்டியலில் சிரிலங்காவையும், சேர்த்துக்கொள்ள்ள வேண்டும் என்ற எமது முடிவினை, அந்த நாட்டில் நடைபெற்று வரும் தொடர் சம்பவங்கள் நியாயப்படுத்தி வருகின்றன.
மே 27 ஆம் திகதி, ஐ.நா பாதுகாப்பு சபையில் வருத்தமளிக்க கூடிய வாக்களிப்பு இடம்பெற்ற போது ஆதரவாக பிரித்தானியா இருக்காமல், அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க, பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க, அந்நாட்டு அரசை ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானியா தனது உதவி வழங்கும் வல்லமையை ஒரு நெம்புகோலாக பயன்படுத்த வேண்டும்.
சிறிலங்கா விவகாரம் குறித்து தனது கவனத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும், உரிமையும் அனைத்துலக சமூகத்திற்கு உண்டு.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மீதான பகைமை உணர்வு ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் அதிகரித்து வருகின்றது. இதற்கு சான்றாகவே அண்மையில், சூடான் நீதிமன்றத்திற்கு ஒத்துழைக்க முடியாது என மறுத்துள்ளதும், சிறிலங்காவில் அனைத்துலக தலையீட்டை ஐ.நா பாதுகாப்பு சபை நிராகரித்திருந்ததும் ஆகும்.
இப்போக்கு தொடர்ந்து வருமானால், மேற்குலக நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளும் இடையில், தெளிவான பிளவை அதிகரிக்க செய்கிறது.
எனவே, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக அடிப்படைகளுக்கும், அனைத்துலக நாடுகளின் ஆதரவை அதிகரிக்க, பிரித்தானியா முயற்சிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறோம் என கூறப்பட்டுள்ளது.