விசேட மருத்துவ சிகிச்சையொன்றுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (10) மாலை அவசரமாக சிங்கப்பூர் சென்றதாக அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில காரணங்களுக்காக ஜனாதிபதியின் நோயைக் குறிப்பிட முடியாதெனவும், அவரது பாதுகாப்பைக் கருதி அவர் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலையின் பெயரைக் கூறமுடியாதெனவும் அலரிமாளிகையின் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
செப்டம்பர் 17ம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு கிரக நிலை சரியின்மை மற்றும் நோய்வாய்ப் படக்கூடிய வாய்ப்பிருப்பதாக இலங்கை மற்றும் இந்திய சோதிடர்கள் அநேகர் அபாய எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால், ஜனாதிபதி மிகவும் கலக்கமடைந்திருந்ததுடன், மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அலரிமாளிகையின் தகவல்கள் மேலும் தெரிவித்தன.