Friday, 4 September 2009

முகாம்களில் இருந்து தப்பியவர்கள் விடுதலைப்புலிகளா?: வவுனியாவில் வீடுகள், வீதிகளில் படையினர் சோதனை அதிகரிப்பு


இடம்பெயர் முகாம்களில் இருந்து தப்பியவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களா என்ற சந்தேகத்தில், வவுனியா நகரிலும், நகரைச் சூழ்ந்த பகுதிகளிலும், வீடுகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நகர வீதிகளில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பன வீதித்தடை முகாம்களில் மறித்து சோதனையிடப்படுகின்றன. அத்துடன் சைக்கிள்களில் செல்வோரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், அந்த சைக்கிள்களின் இலக்கங்களும் பொலிஸாரினால் சில வேளைகளில் பதிவு செய்யப்படுகின்றன.

சோதனைக்கு உள்ளாக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்படுவதுடன், மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணங்களும் சாரதி அனுமதிப்பத்திரமும் பொலிசாரினால் பரிசீலனை செய்யப்படுகின்றன.

பிரதான வீதிகளில் பத்தடிக்கு ஒரு பொலிஸார் என்ற வீதத்தில் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நகரத்தைச் சூழவுள்ள புறநகர்ப்பகுதி குடியிருப்புக்களிலும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பட்டுள்ளன. கிராமங்களுக்குச் செல்லும் இராணுவத்தினரும் பொலிஸாரும் வீடுகளுக்குச் சென்று, குடும்ப அட்டையைப் பெற்று, அதற்கமைய அங்கு குடும்பத்தினர் உள்ளனரா எனப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இடம்பெயர் முகாம்களில் இருந்து தப்பிச் சென்றவர்கள் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் மறைந்திருக்கின்றார்களா என்பதைக் கண்டறிவதற்காகவே வீடுகள் சோதனையிடப்படுவதாகக் கூறப்படுகின்றது.

எனினும் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் குறித்து பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment

AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA