இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அதிகாரங்கள் பகிரப்படாவிட்டால் அது மீண்டும் தமிழீழ புலிகளின் தமிழீழ போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலாளர் ரொபட் பிளக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் ஆயிரக்காணக்கான மக்களை விரைவில் மீள் குடியமர்ந்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காகவே அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி அளித்துவருவதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் அரசியல் இணக்கம் ஒன்று காணப்படாமைக் குறித்து மேற்குலக நாடுகள் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கைக்குள் உள்ள தமிழர்களுடன் மாத்திரம் அல்லாது, இலங்கைக்கு வெளியில் உள்ள தமிழர்களுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.