ஆகஸ்ட் 15 அன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சோனியாகாந்தியின் படமும் காங்கிரஸ் கொடியும் எரிக்கப்பட்டுக் கிடந்தது. காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் இறையாண்மை கெட்டு விட்டதாகவும் எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் திமுகவிற்கு அழுத்த்ம கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பருதிவாணனைகாவற்துறையினர் நேற்றுக் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பருதிவாணன், தமிழர் கழக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். தமிழ் உணர்வாளர் கூட்டங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுபவர் பருதிவாணன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் என பெயர் வைத்தால் கைது செய்ய முடியுமா? ‐ வைகோ :
நேற்று புரசைவாக்கத்தில் பெரியார் திராவிடர் கழத்தின் பிரமாண்டப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கோவையில் இராணுவ வாகனத்தை தாக்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய வைகோ உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவரான பிரபாகரனை ஆதரித்தும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.