ஈழத்தமிழர்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து தாம் எதையும் பெற்றதில்லை என்றும் தமிழக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பட்டியலில் விஜயகாந்த் பெயரையும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழின படுகொலையை நிகழ்த்தியதால் உலக நீதிமன்றத்தின் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. உட்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த அரசின் சார்பில் தகவல்கள் பெறும் சுப்ரமணிய சாமியின் நிலையை கண்டு பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை பற்றிய விசாரணையில் தமது பெயர் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டாலே சுப்ரமணிய சாமிக்கு போதுமானது.
அரசியலில் இருப்பதை காட்டிக்கொள்ள சுப்ரமணிய சாமி வீண் விளம்பரம் தேட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மேலும் கூறியுள்ளார்.