காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கு மதுரை சட்டக்கல்லூர் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்து கைதான சம்பவம் தமிழக காங்கிரஸ் கட்சியினரையும், மத்திய, மாநில போலீசாரையும், அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இளைஞர்காங்கிரஸ்பிரிவிற்கு உறுப்பினர் சேர்க்கைபணியை வேகப்படுத்தவும் ராகுல் காந்தி தமிழகம் முழுவதும் 3 சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று நாகர்கோவில் வந்துள்ள ராகுல் அங்கிருந்து பாளையங்கோடை வழியாக மதுரை வருகிறார். ராகுல் காந்திக்கு பாதுகாப்பு கொடுக்க 5 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மதுரையில் குறிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரையில் ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தத்தொடங்கியுள்ளனர்.
இன்று காலையில் நீதிமன்றம் முன்பு திரண்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் ராகுல்காந்தியின் வருகைக்கு எதிராகவும், இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் நிலையை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாரும் எதிர்பாராத நிலையில் சட்டக்கல்லூர் மாணவர்கள் மேற்கொண்ட இந்த போராட்டத்தின் காரணமான தமிழக போலீசாரும் மத்திய சிறப்புப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராகுல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள முதல் நாளே இப்படி ஒரு எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக ராகுல் காந்தி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள மதுரை மாணவர் போராட்டம் போல் வேறு எங்கு நடைபெறவுள்ளதா என்றும் உளவுத்துறை மூலம் போலீசார் கண்காணித்துவருகின்றனர்.
தமிழகத்தில் 3 நாள் தங்கி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் ராகுல்காந்திக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.